Archive for ஒக்ரோபர், 2020
தொட்டில்–6
தொட்டில் ஆறாவது ஆடப்போகிறது.நீங்களும் கூட வந்து ஆடுவஎஙகள்தைப் பாருங்கள். பாட்டியின் ஒவ்வொரு சமையல்களும்,ஊறுகாய்களும் மிகவும் பெயர்போனவை.எங்கள் புதுப்பாளையத்தாளையும் பாருங்கள். சொல்லுங்கள். அன்புடன்
பாட்டி வீட்டு வாசலில் புதுப்பாளையத்தா வந்துவிட்டாளா? அதிகாலை ஆறு மணிக்கே வந்து விடும் தயிர்காகாரியைப் பற்றி யாவரும் விஜாரித்துக் கொள்ளும் கேள்வி இது. என்ன புதுப்பாளையத்தா ஏதாவது மாரி அம்மனா என்று தோன்றும். இல்லை. எங்கள் கிராமத்தின் அதுவும் எங்கள் வீட்டு சுற்றுப்புறமுள்ள எல்லோர் வீட்டிற்கும் தயிர் வழங்கும் பெண்மணி. ஒருநாள் விட்டு ஒருநாள்தான் வருவாள். பெரிய கூடையில் சுற்றிலும் அண்டையாக ஏதாவதை வைத்து பெரிய பானையில் தயிர் இருக்கும். தவிர அதன்மேல் வேண்டியவர்களுக்காக சிறியசிறிய மண் கலயங்களில் கெட்டியாக கத்தியால் வெட்ட வேண்டும் என்ற தோற்றத்துடன் தயிரும் எப்படி லாவகமாகச் சுமந்து வருகிராளோ என்று எண்ண வைக்கும்.
பெரிம்மா நான் வந்துட்டேங்கோ. பக்கத்தில் அக்கத்தில் யாராவது இறக்கி விடுவார்கள். தயிர்க்காரி வந்துட்டா,வந்துட்டா செய்திகள் அஞ்சலாகும். யாருக்கும் முதல்லே அவ குடுக்கமாட்டா. ஸரிபோவோம்
என்றுஎல்லார்வீட்டுஈயச்சொம்புகளும்,ஈயக்கிண்ணங்களும்அவரவர்கள் கையில். பெரிம்மா வரும் வரை கூடையை திறக்கமாட்டாள். எங்கே பெரிம்மா வா. ஒங்கையாலே போணி பண்ணு.
ஒரு சின்ன தடியை ஊன்றிக்கொண்டு பாட்டி வரும்போதே அவாளுக்கெல்லாம் கொடுக்கறதுதானே. சின்ன குழந்தைகாரி அவள்.
இல்லே இந்தா பிடி. உள்ளார போயி பாத்திரத்தில் ஊத்திக்கோ என்ற சொல்லுடன் ஒரு சின்ன கலயம் கைமாறும்.
அடுத்தது சுப்பம்மா. இது அவங்களுக்கு.எங்கே அவங்க? இன்னொரு கலயம் கைமாரும். எல்லாம் பாட்டி வீட்டுத் திண்ணையில்தான். பெரிய பானை திறக்கும். எல்லோரும் எனக்கு உனக்கு என்று பாத்திரம் நீளும். நறைய இருக்குது தயிரு. நீ…
View original post 398 more words
வாழ்த்துகள்
யாவருக்கும் துர்கா,லக்ஷ்மி,ஸரஸ்வதி,விஜயதசமி வாழ்த்துகளும் ஆசிகளும் அன்பும். சொல்லுகிறேன்.

தொட்டில்-5
இந்த ஐந்தாவது பகுதி வேறு விதமாக முடிகிறது. சில விஷயங்கள் முன்னேற்பாடாக செய்ததும் ஸரியாகவேப் படுகிறது. இன்னும் பதிவுகள் இருக்கிறதே! னான் என்ன சொல்லுகிறேன்? என் பதிவு பார்த்தவர்கள் பதில் எனக்கு ஸந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பதைத்தான்.அன்புடன்
ஸந்தோஷமாகவே வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. ஈரல் குலைக்கட்டி. இப்போது இம்மாதிரி பெயரே கேள்விப்படவில்லை. ஒன்று இரண்டு குழந்தைகளில்லை. எங்கு பார்த்தாலும் இதே வியாதி. சோகமே சோகம் பேரன் போய்விட்டான். பட்ட காலிலே படும் என்பர். வாஸ்தவமாக ஏழை பணக்காரன் யாவரையும் எந்த நோயும் விட்டு வைக்கவில்லை. நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய அழகான, ஆதரவான பெரியவர் மாப்பிள்ளையும் ஃப்ளூவின் கைப்பிடியில் மீளவில்லை. என்ன இப்படி சோகமாகவே எழுதுகிறீர்கள் என்று நினைப்பது புரிகிறது. எங்கள் அப்பாவின் குடும்பத்திலும் எங்கள் பெரியம்மா வேறு ஊரிலும்,எங்கள் சித்தப்பா எங்கள் ஊரிலும் ஒரு வாரத்தில் போய்விட்டார்கள். ஊரில் இதற்கு குடும்பத்தில் ஒருவராவது இரையானார்கள். ஊர் எப்படி இருந்திருக்கும். வைத்தியமே கண்டு பிடிக்காத ஃப்ளூவின் காலம்.எப்போதோ நடந்த விஷயங்கள் ஆனாலும் படிக்கும்போது மனது நெகிழ்கிறது
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது. இதைப் படிப்பவர்கள்கூட ஸாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இதுவும் ஒரு சுனாமி மாதிரிதான். காலம் போகப்போக எல்லாவற்றிற்கும் மாற்று தேடிக்கொண்டும், விடிவுகள் அமைந்து கொண்டும் வாழ்க்கை ஓடிக் கொண்டும்தானிருக்கிறது. எதிர்பார்க்க முடியாத கஷ்டங்கள் வந்த பின் ஏற்றுக்கொண்டு ஓரளவு மாற்று கண்டுகொண்டிருப்பதுதான் வாழ்க்கை.
பெரியவருக்கு வயதாகிக்கொண்டு வருகிறது. பால்ய விதவைபெண். ஓரிரண்டு வயது பெரியவளாக இருக்கக் கூடிய மனைவி. யாருக்காக விசாரப்படுவது. பெண்ணைக் கண்ணின் இமைபோலக் காத்தும்.அன்பு காட்டியும் வருகிறார். தனக்குப்பின் இவர்களுக்கு ஆதரவு யார் கொடுப்பார்கள்? அதுவும் தன் பெண்ணிற்கு. தன்னைப்போல யார் அன்பு கொடுக்க முடியும். மனைவிக்காகிலும் …
View original post 410 more words
நவராத்திரி வாழ்த்துகள்

- பதினேழாம் தேதி நாளை சனிக்கிழமை ஆரம்பமாகும் நவராத்திரி கொண்டாட்டத்ததிற்கு உங்கள் யாவருக்கும் வாழ்த்துகளையும், ஆசிகளையும் இதன் மூலம்தெரிவித்துக் கொண்டு மானஸீகமாக என் மஞ்சள் குங்கும புஷ்ப தக்ஷிணைதாம்பூலத்தை அன்புமிக்க பெண்கள் ஸமுதாயத்திற்கு கொடுக்கின்றேன். இன்று வெள்ளிக்கிழமை ஆதலால் திடீரென்று ஒரு யோசனை. பதிவுகள் போடும் முறையே மாறி இருப்பதால் எதுவும் புதிய பதிவுகள் இடும்போது ஸரிவர வருவதில்லை. எங்கள் வீட்டு மும்பையின் நித்ய பூஜைக் கொலுவிது. உங்கள் யாவரின் மேன்மையைக் கோரி பிரார்த்திக்கிறேன். வாருங்கள் யாவரும் தாம்பூலம் எடுத்துக் கொள்ளுங்கள். அன்புடன் சொல்லுகிறேன்.