Archive for மே, 2022

சுட்டரைத்தத் துவையல்

எனக்கு மைக்ரோவேவ் புதியதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். தவிரவும் கத்தரிக்காய் இதில் சுட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்தேனோ? ஞாபகமில்லை. எதுவோ மீள்பதிவுதான் இதுவும். எப்படி இருக்கு பாருங்கள். அன்புடன்

சொல்லுகிறேன்

நல்ல பெறிய சைஸ் கத்தரிக்காயை

அனலில்    சுட்டு   துவையல்தயாரித்தால்சுவையாக இருக்கும்.
நான் மைக்ரோவேவில் சுட்டுதான் செய்தேன்.

மிகவும் நன்றாகத் தோல்உறிக்க வந்தது.

உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு விஷயமும் வேண்டும்

ஜெனிவா குறிப்புதான் இதுவும்,

கத்தரிக்காய் என்னவோ இந்தியாவினுடயதுதான்.
வேண்டிய ஸாமான்களைப் பார்ப்போமா.
வேண்டியவைகள்–கத்தரிக்காய் துவையலுக்காக—
கத்தரிக்காய்—- பெறிய சைஸாக 2
வெங்காயம்—-திட்டமான அளவு 2
வெள்ளை எள்—–2 டீஸ்பூன்
புளி—–ஒரு நெல்லிக்காயளவு
பெருங்காயம்—சிறிது
கொத்தமல்லி, கறிவேப்பிலை வேண்டிய அளவு.கட்டாயமில்லை.
உப்பு–ருசிக்குத் தேவையான அளவு.

உளுத்தம் பருப்பு—-4 டீஸ்பூன்
கடுகு—1/4டீஸ்பூன்
வெந்தயம்1/4 டீஸ்பூனிற்கும்   குறைவு
மிளகாய் வற்றல்—-4
எண்ணெய்—நல்லெண்ணெய். 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை—–அலம்பித் துடைத்த கத்தரிக்காயின் மேல் இலேசாகஎண்ணெயைத் தடவவும்.
மைக்ரோவேவில்,   அதன்   பாத்திரத்தில், காயை வைத்து,ஹை பவரில் 3 நிமிஷங்கள்சூடாக்கவும்.

திரும்பவும் காயைத் திருப்பி வைத்து4 நிமிஷங்கள்அதேபோல் சூடாக்கி எடுக்கவும்.
காய் நன்றாக ஆறிய பிறகு தோலை உறித்தெடுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து உ.பருப்பு,மிளகாய்,

வெந்தயம்இவைகளை சிவக்க வறுத்து எள்ளையும் சேர்த்து வறுத்து இறக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தைத் தனியாகச் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும்

.எள்,சுட்ட கத்தரிக்காய், வெங்காயம், மிளகாய்,புளி ,வெந்தயம்

இவற்றை மிக்ஸியில்இட்டுஜலம் விடாமல் கெட்டியாக அறைக்கவும்.

நன்றாக மசிந்த பின்  உளுத்தம்பருப்பைச் சேர்த்துக்  கொரகொரப்பாக  அரைத்துஉப்பைச் சேர்க்கவும்.

கடுகு,  பெருங்காயப் பொடியை,  மிகுதி எண்ணெயில்  தாளிதம் செய்யவும்.

நல்லெண்ணெய்,   நெய்  சேர்த்து  சாதத்துடன்  சாப்பிட  மிகவும் ருசியாகஇருக்கும்.

வெங்காயத்திற்குப் பதில்   தேங்காயும், புளிக்குப் பதில்,வதக்கிய தக்காளியும்சேர்த்து…

View original post 72 more words

மே 30, 2022 at 10:51 முப 2 பின்னூட்டங்கள்

என்ன சமையல்?

பத்து வருஷங்களுக்கு முன்னர் எழுதிய பதிவு. பதிவுகள் ஒரேமாதிரி படிக்க அலுத்து விடும் என்று சற்று வித்தியாஸமாக எழுதினேன். மருமகள் செய்முறையும் இதில். பூண்டா என்றெல்லாம் நினைக்காதீர்கள். அவரவர்கள் விருப்பம். ரஸிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.பார்க்கலாம். அன்புடன்.

சொல்லுகிறேன்

ஸிம்பிலாக   சமைக்கிறேன்  என்று  பிரதீஷா செய்த சமையலை

நீங்களும் தான்  ருசியுங்களேன்.     அஸ்ஸாம் டாலும் சென்னை

ரஸமும்     பொதுவான    கறிகளும்கலந்து  ருசியுங்களேன்.

ஒரு டால்.   பயத்தம்பருப்பும்,   மசூர்  டாலும் கலந்து வேகவைத்து

பொடியாக  நறுக்கிய  வெங்காயம்,ப.மிளகாய்,  இஞ்சி, பூண்டு,

தக்காளியை நன்றாக  வதக்கிச் சேர்த்து  உப்பு, மஞ்சளுடன்

சேர்த்துக் கொதிக்க  வைத்து,   கொத்தமல்லி சேர்த்தது.

மஸாலா போடலை.   துளி  சீரகப்பொடி போட்டது.

உருளைக் கிழங்கை    மெல்லியதாக   நறுக்கி   1ஸ்பூன்

எண்ணெயுடன்   5 நிமிஷங்கள்   மைக்ரோவேவ்  செய்து எடுத்து

வாணலியில்   எண்ணெயில்  கடுகைத் தாளித்து,  உப்பு,காரம்

மஞ்சள்   சேர்த்து  நன்றாக   வதக்கியது.

அடுத்து   நிறைய  தக்காளியை  மைக்ரோவேவில்  வேகவைத்து

எடுத்து துளி  புளி சேர்த்து  கறைத்து   சாறு எடுத்து,  ரஸப்பொடி,உப்பு,

பூண்டு விழுதுடன்   நிதான தீயில்   நன்றாகக்   கொதித்துக்

குறைந்தவுடன்,    துவரம்பருப்பு   வேகவைத்ததைக் கறைத்துக் கொட்டி

ஒது கொதி வந்தவுடன்   இறக்கி,   நெய்யில்   கடுகு,  பெருங்காயம்

பொரித்துக் கொட்டி,    கொத்தமல்லித்தழை  தூவி இறக்கியது.

கமகம ரஸம்.

வீட்டில்  தோய்த்த   புளிப்பில்லாத   தயிர்.

கொஞ்சம்   ஊறுகாய்.

வதக்கிய    வெண்டைக்காய் கறி.

நடுவில்    குட்டி காப்ஸிகம்   பஜ்ஜி அதுவும் சுடச்சுட

பாக்கலாமா,   கேட்கலாமா,  ருசிக்கலாமா

பஜ்ஜியைச் செய்யலாம்.

குட்டி கேப்ஸிகம்

வேண்டிய அளவு–

-கடலைமாவு,துளி அரிசி மாவு

ருசிக்கு  வேண்டிய   உப்பு,மிளகாய்ப்பொடி

துளி   ஸோடா உப்பு

துளி பெருங்காயப்பொடி

கொத்தமல்லி இலை கொஞ்சம்

கேப்ஸிகம் வேண்டியஅளவு.

செய்முறை

மிளகாயை   இரண்டாக  நறுக்கிக்  கொள்ளவும்.

முழுதாகவும்   போடலாம்.

உப்பு…

View original post 76 more words

மே 23, 2022 at 11:25 முப 4 பின்னூட்டங்கள்

ஸீஸன் மோர்க்குழம்பு.

எப்போதோசெய்த ஒரு மோர்க்குழம்பு ரீப்ளாக் செய்யக் கிடைத்தது.கிராமங்களில் நாட்டுப் பழங்கள் என்று மிகவும் மலிவாகக் கிடைக்கும். அதைப்போட்டும் செய்வார்கள். மொத்தத்தில் ஸீஸனில் செய்யும் குழம்பு. ருசியுங்கள். அன்புடன்

சொல்லுகிறேன்

எந்த ஸீஸனா.. மாம்பழ ஸீஸனா. ஆமாம்.

மாம்பழ மோர்க்குழம்பு. மாம்பழ மோர்க்குழம்பு.

தோல் பருமனாக இருக்கிறது. பழுத்த பழம்  நறுக்க வரவில்லை என்றாள் மருமகள். ஸரி அதை வைத்துவிடு நான் உப யோகப் படுத்திக் கொள்கிறேன்என்றேன். சீக்கிரமே செய்து விடுங்கள் என்றாள்.

அவர்கள் காலை   சாப்பாடுகள்  செய்து முடித்த பின் நான் சமையலரைக்குப் போனேன். இரண்டு ஸ்பூன் கடலைபருப்பு,துளி தனியா, சீரகம் ,எல்லாவற்றையும் ஊரவைத்து காரத்துக்கு பச்சைமிளகாய் இஞ்சி சேர்த்து கொஞ்சம் கூடவே தேங்காய்த்துருவலையும் சேர்த்து அரைத்துக் கொண்டேன்

இந்த மாம்பழத்தை 2 ஒரு பக்கம் துளி கீரல் போட்டுவிட்டு , நன்றாகக் கதுப்பை  அழுத்தி எடுத்துக் கொண்டேன்.  இரண்டுகப் கெட்டி மோரில் புளிப்பில்லாதது  எல்லா வற்றையும்   சேர்த்து நன்றாகக் கலந்தேன். உப்பு,மஞ்சப்பொடியும் போட்டேன். என்ன பிரமாதம் என்கிறீர்களா?கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு   கடுகு,வெந்தயம்,பெருங்காயம்,கூடவே நான்கு குடமிளகாயையும் வறுத்துப் போட்டு தாளித்துக் கொட்டி விட்டு, கறிவேப்பிலையையும் அதன் தலையில் போட்டு இறக்கினேன்.

எங்க வீட்டுக்காரர்  சாதம் சாப்பிட்டு நாலு வருஷமாறது.    ராக்கொடிஅளவுஇரண்டுதோசை,ரஸம்,அல்லது இரண்டு இட்லி, பிரட்பால் ,கஞ்சி,  அந்த மனுஷருக்கு தோசையுடன்  இன்று இந்த  மோர்க்குழம்புதான் இரண்டு கரண்டி கொடுத்தேன். பிடித்து சாப்பிட்டதை   உங்களுக்கும் சொல்லலாமே.  நானும் காரமே சாப்பிடறதில்லே. நானும் சாப்பிட்டேன்.    எனக்கு அதில் இரண்டு வேக வைத்த காயைப் போட்டேன்.   குழம்பு சூப்பர்தான்.

என் கதையாகத்தான் இருக்கட்டுமே. நாட்டு மாம்பழமானால் இன்னும் காரம் வைக்கலாமோ என்னவோ?    போட்டோ பாருங்கோ  …

View original post 16 more words

மே 16, 2022 at 11:49 முப 2 பின்னூட்டங்கள்

ஜெயின் கிச்சடியும் பத்லா கடியும்

இந்தக் கிச்சடியும் கடியும் சாப்பிட ருசியாக இருக்கிறது.நானே சொல்வதில் அர்த்தமில்லை.நீங்களும் முந்தியே படித்திருக்கிறேன் என்று சொல்லாமல் படித்தால் செய்து சாப்பிடத் தோன்றும். அன்புடன்

சொல்லுகிறேன்

கிச்சடியும் கடியும் கிச்சடியும் கடியும்

ஜெயின் கிச்சடியும்,பத்லா  கடியும்.

ஜெயின் சமூகத்தினர் செய்யும்  விஜிடபிள்   கிச்சடியும்  அதற்கான நீர்த்த மோர்க்குழம்பும்  ருசியாக இருக்கும்.  இதோடு கூட சுட்ட மிளகு அப்பளாமும்   எல்லோரும் சாப்பிட ஒரு அருமையான ,சுலபமான  உணவு.  வாய்க்கு ருசியாக இருப்பதோடு  பூரா ஸத்துகள் நிரம்பியதாகவும் இருப்பது இதன் விசேஷம். ஸாதாரணமாக பூமிக்கடியில் விளையும், கிழங்கு,இஞ்சி போன்றவைகளை ஆசாரமானவர்கள்  சமையலில் சேர்ப்பதில்லை.   இது அம்மாதிரி முறையில் செய்யப்படவில்லை.யாவும் சேர்த்துச் செய்தது.

வேண்டியவைகள்

வகைகள்வேண்டியவை வகைகள்வேண்டியவை

பெரிய வெங்காயம் —2

பூண்டு இதழ்கள்—3,

பீன்ஸ்—6,   கேரட்—1,தக்காளி—1, காப்ஸிகம்  சிகப்பு,பச்சை –பாதிபாதி. பட்டாணி  உரித்தது  அரைகப். உருளைக்கிழங்கு –1 இரண்டாக் கீறிய பச்சை மிளகாய் ஒன்று.

தாளித்துக் கொட்ட— வற்றல் மிளகாய்—2,  சீரகம்—1 டீஸ்பூன்,மிளகு—1 டீஸ்பூன்,லவங்கம்—6 ,  ஒரு துளி லவங்கப்பட்டை,  இஞ்சி  சிறிது, பிரிஞ்ஜி இலை1 எண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்

அரிசி—பெரியடம்ளரால் ஒரு டம்ளர்.   பயத்தம் பருப்பு   கால் டம்ளர். ருசிக்கு உப்பு.

செய்முறை.   பிரமாதமொன்றுமில்லை.

காய்கள் மஸாலாவுடன் காய்கள் மஸாலாவுடன்

கரிகாய்களை  ஒன்றுபோல் நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி,பூண்டை  தட்டி வைத்துக் கொள்ளவும்.

குக்கரில்   எண்ணெயை விட்டுக் காய்ந்ததும்   தாளித்துக் கொட்டக் கொடுத்தவைகளைப் போட்டு வறுக்கவும் வெங்காயத்தைச்  சேர்த்து வதக்கி,பூண்டு இஞ்ஜியைச் சேர்த்து வதக்கி,  நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கிய பிறகு காய்களையும்,பிரிஞ்ஜி இலையையும் சேர்த்து வதக்கவும். இதனுடன்அரிசிப்,பருப்பை நன்றாகக் களைந்து  அதனுடன் மூன்று பங்கு அளவு தண்ணீரையும் சேர்க்கவும்   துளி  மஞ்சள்ப்பொடி வேண்டிய உப்பு சேர்த்து  குக்கரில்…

View original post 108 more words

மே 9, 2022 at 11:05 முப 3 பின்னூட்டங்கள்

காராசேவு

இதுவும் மீள் பதிவுதான். பதினோரு வருஷங்களுக்கு முன்னர். பூண்டு பிடிக்காதவர்கள் அதை நீக்கிவிட்டுச் செய்யலாம். உங்கள் டேஸ்ட் எப்படியோ? அன்புடன்

சொல்லுகிறேன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு  தீபாவளிக்குள்ளாவது

ஏதாவது எழுதவேண்டும் என்ற நினைப்புடன்

வந்திருக்கிறேன். சுலபமாக  எழுதவும்,  செய்யவும்

காராசேவு ஞாபகத்திற்கு வந்ததால் உடனே செய்தும்,

எழுதியும் போட்டிருக்கிறேன்.  நீங்களும் செய்து பாருங்கள்.

வேண்டியவைகள்.

கடலைமாவு—2 கப்

அரிசிமாவு—அரைகப்

சமையல் ஸோடா–கால் டீஸ்பூன்

மிளகாய்ப்பொடி—1 டீஸ்பூன்

உறித்த பூண்டு இதழ்கள்–3

லவங்கம்–2

ஏலக்காய்–1

கசகசா—2டீஸ்பூன்

வெண்ணெய்–1 டேபிள்ஸ்பூன்

ருசிக்கு–உப்பு

பொறித்தெடுக்க—தேவையான எண்ணெய்

செய்முறை—-மாவுகளைச் சேர்த்துச் சலிக்கவும்.

ஒரு தாம்பாளத்தில் உப்பு,  ஸோடாஉப்பு, வெண்ணெய்

சேர்த்துத் தேய்த்துக் கலக்கவும்.

கசகசாவை ஊற வைத்து வடித்து.  நறுக்கிய பூண்டுத்

துண்டுகள், ஏலம், லவங்கம்,மிளகாய்ப்பொடி சேர்த்து

சிறிது ஜலம் தெளித்து  நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதைக் கரைத்து , மாவுடன் சேர்த்து

கெட்டியாக  முறுக்கு பிழியும் பதத்தில் மாவைப்

பிசைந்து கொள்ளவும்.

தேன்குழல் பிழியும் அச்சில்  பெரிய கண் கொண்ட

வில்லையைப் போட்டு  மாவை நிரப்பிப்  பிழிய வேண்டும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மாவை

வட்டமான   வடிவத்தில்  பிழியவும்.

நிதான தீயில், ஓசை அடங்கும்வரை வைத்து

திருப்பிப்போட்டு எடுக்கவும்.

ஆறினவுடன் ,  துண்டங்களாக ஒடித்துக் கொள்ளவும்.

காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து உபயோகிக்கவும்.

சேவு தேய்க்கும் உபகரணம் இல்லாததால் இப்படிச்

செய்வதே வழக்கமாகி விட்டது. நன்றாகவும் சுலபமாகவும்

இருக்கிறது. வேறு என்ன வேண்டும்.

மாவை நன்றாகப் பிசைவது  அவசியம்.

View original post

மே 5, 2022 at 11:10 முப 2 பின்னூட்டங்கள்

வாழைக்காய் பொடித்தூவல்.

இதுவும் எப்போதோ போட்ட குறிப்புதான். தேங்காய் சேர்ப்பதால் எண்ணெய் இன்னும் கூட குறைத்து விடலாம். பொடிவேறு. பொடித்தூவல் வேறுதான். பாருங்கள் அன்புடன்

சொல்லுகிறேன்

வாழைக்காய் பொடித்தூவல்ன்னு பேர். ஆனால் எந்தப்

பொடியும் தூவாமல் செய்ததுதான் இது.

தேங்காய் சேர்த்து செய்வதுதான் இதன் விசேஷம். இதை

வெறும் ஒரு வாழைக்காயில் செய்தேன்.

ப்ளாகையும் பார்த்துவிட்டு வரட்டுமே என்று ஒரு

போட்டோ.!!!!!!!!! பாருங்கள் நீங்களும்.

வாழைக்காய் பொடித்தூவல் வாழைக்காய் பொடித்தூவல்

வேண்டிய ஸாமான்கள்.

நல்ல முற்றிய மொந்தன் வாழைக்காய்.—1

தேங்காய்த் துருவல்—-கால்கப்

பச்சைமிளகாய்—-2 பொடியாக நறுக்கவும்

உப்பு–ருசிக்கு

இஞ்சி சிறிது-தட்டிக் கொள்ளவும்.

எண்ணெய்—-2 டேபிள்ஸ்பூன்

தாளித்துக்கொட்ட—கடுகு,உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு. சிறிது

புளி –சிறிது. காய் கறுக்காமலிருப்பதர்கு

செய்முறை—–வாழைக்காயை,  நடுவில் இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும்.

புளியைக் கரைத்துவிட்டு மேலும் அதிக ஜலம் சேர்த்து-

கொதிக்க வைத்து அதில் நறுக்கிய இரண்டு  துண்டு

வாழைக்காயைச் சேர்த்து வேக விடவும். தோலுடன்தான்.

காய் முக்கால்பதம் வந்தவுடன் ,  காயை வடிக்கட்டி எடுத்து

விடவும் காய் ஆ றியவுடன்,பழம் உரிப்பது போல தோலை

உரிக்கவும்.

சுலபமாக வந்து விடும்.

காயை நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு பருப்பு

வகைகளைத் தாளித்துக் கொட்டி, நறுக்கிய மிளகாய்

இஞ்சியை வதக்கி உதிர்த்த வாழைக்காயை உப்பு சேர்த்து

வதக்கவும்.

தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கி இறக்கவும்.

வேண்டியவர்கள் சிறிது எலுமிச்சைத் துளிகளைச்

சேர்க்கலாம்.

நல்ல ருசியாக இருக்கும். இது ஒருவகை. தேங்காய்

எண்ணெயிலும்.  தாளிக்கலாம்.

கறிவேப்பிலை மறக்க வேண்டாம்.சிலர் வெந்த பருப்பையும்

பிழிந்து போடுவார்கள்.  உங்களுக்குப் பிடித்ததைச்

செய்யலாம்.

View original post

மே 2, 2022 at 11:29 முப பின்னூட்டமொன்றை இடுக


மே 2022
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 547,505 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.