Archive for ஜூன், 2022
வெஜிடபிள் மோமோவும் கோல் பேடாகோ அசாரும்.
இன்று கிடைத்தது நேபாலதேசத்து மோமோ என்ற சிற்றுண்டி. கூடவே அசார் என்ற சாஸ் வகையும்.பாருங்கள். படியுங்கள். அன்புடன்.
பெயரைப்பார்த்து மலைக்க வேண்டாம். இது ஒரு நேபாளத்துச் சிற்றுண்டிவகை. செய்வதுகூட சுலபம்தான். திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் இந்தச்சிற்றுண்டியை ரஸித்து எழுதியிருந்தார். அவர் ப்ளாகில் படித்த உடனே இதைப்பற்றி எழுத நினைத்தேன். ஆனால் எதையும் செய்து படம் பிடித்து எழுதுவதுதானே என்னுடைய அசல் பதிவு. உடல் நலமின்மையால் எல்லாம் எங்கேயோ விலகிப் போய்க் கொண்டே இருந்தது. வீட்டில் சமையலுக்கு ஒத்தாசைக்கு ஒரு நபரை ஏற்பாடு செய்திருப்பதாக மருமகள் சொன்னாள். எனக்கில்லை. எங்கள் குடும்பத்திற்கு., யாரோ இவர் யாரோ என்ற எண்ணம் மனதில ஓடியது. எங்கள் வீட்டுப் பெரியவருக்கு உதவிக்கு புதியதாக ஆள் வந்து மூன்று மாதமாகிறது.
மருமகள் டான்ஸ் ப்ரோக்கிராம் அஸ்ஸாமில் செய்யப் போகப்போவதால் எதற்கும்,யாவருக்கும் செய்ய ஒரு நபர் புதிய உதவி நபரே சிபாரிசு செய்யவே உதவி ஆளும் வந்து சேர்ந்தாகி விட்டது. இந்தக் கதையெல்லாம் எதற்கா?
உங்களுடனெல்லாம் வார்த்தைகள் பேசி நிறைய நாட்களாகி விட்டது. என்னுடைய ப்ளாகின் உலகமல்லவா நீங்கள். வந்து சேர்ந்தது யார் தெரியுமா?
நேபாலைச் சேர்ந்தவர்கள். எனக்கு டில்லியில் ஒரு பெயருண்டு. நேபால்மாமி. என்றுதான் என்னை அடையாளம் சொல்வார்கள் கனராபேங்க்மாமி,குவாலியர் மாமி, இல்லாவிட்டால் பத்தாம் நம்பர்மாமி,, இருபதாம் நம்பர்மாமி, கைதிகளின் நம்பர் மாதிரி வீட்டு நம்பருடன் மாமி சேர்ந்து விடும். இதெல்லாம் லலிதா ஸஹஸ்நாம க்ரூப். மிகவும் ஸந்தோஷமாக திருப்புகழ் முதலான வகுப்புகளுக்கும் போகும் க்ரூப். மிகவும் இனிமையான காலம் அது.
எங்கோ…
View original post 316 more words
கோஸ்வடை
கல்லுரலில் அரைத்துப் பழக்கமானதை மிக்ஸியிலரைத்துச் செய்தேன்போல உள்ளது. இதுவும் பழைய குறிப்புதான். செய்து பாருங்கள். அன்புடன்
பழக்கமாகிவிட்டால் எதையுமே சுலபமாகச் செய்யலாம்.
இதுவும் அப்படிதான்.
முழு உளுத்தம் பருப்பு—1 கப் தோல் நீக்கியது
துவரம்பருப்பு—1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்—4
இஞ்சி—சிறிய துண்டு
பெருங்காயம்—சிறிது
பொடியாக நறுக்கியமுட்டைகோஸ்-1கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி–அரைகப்
ருசிக்கு—உப்பு
பொரிக்க—வேண்டிய எண்ணெய்
8 மிளகு.—பொடித்தது
செய்முறை—–பருப்புகளை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற-
வைத்து வடித்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி மிளகாயையும் சேர்த்து அரைத்து விடலாம்.
லேசாக துளி ஜலம் தெளித்து அரைக்கவும்.
நல்ல மெத்தென்ற பதத்தில் மாவு இருந்தால் நல்லது.
உப்பு,கோஸ், கொத்தமல்லி, பெருங்காயம் கலந்து கொண்டு
வடைகளை தயாரித்து, எண்ணெயைக் காயவைத்து
வடையைப் போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும்.
கையை ஈரப்படுத்திக்கொண்டு மாவை எடுத்து உருட்டி
பாலிதீன் பேப்பர்மேல் வைத்து ,வட்டமாக சமன் செய்து,
நடுவில் ஒரு பொத்தலுமிட்டு மாவை காயும் எண்ணெயில்
நழுவ விடவேண்டும். திருப்பிவிட்டு இருபுறமும் சிவக்க-
-விட்டு எடுத்து வடிக்கட்டவும்.
ருசியானது. அரைப்பது சற்று முன் பின் இருந்தாலும்,
ஜலம், அரைப்பதில் அதிகமாகக் கூடாது
வாஸனைக்கு மிளகுப் பொடி சேர்ப்போம்.
இதையே பெரிய அளவில் உருட்டிப் போட்டும் சிவக்க
வேகவைத்தும் எடுக்கலாம்.
மிக்ஸியில் அரைக்கும்போது சீக்கிரமே சூடாகிவிடுவதால்
சற்று இடைவெளி கொடுத்து அரைப்பது அவசியமாகிறது.
கோஸ் மட்டிலும் சேர்த்து தயாரித்த வடையிது. சமயத்தில் சிறிது
ஜலம் அதிகம் என்று தோன்றினால் ஒரு டீஸ்பூன் கடலை மாவோ,
உளுத்தம் மாவோ கலந்து செய்யவும். முழுப் பருப்பு விழுது காணும்.
வடையும் …
View original post 2 more words
வெஜிடபிள்ப் பன்னீர்க் கறி
மிகவும் எளிதாகக் செய்யக் கூடிய இதைச் செய்து பாருங்கள். வெஜிடபில் பன்னீர்க் கறி. இதுவும் மீள் பதிவுதான். அன்புடன்
தயார் நிலையில் வெஜிடபிள் பன்னீர்
பாலக் பன்னீர், மட்டர்பன்னீர்,மாதிரி, இதுவும் காப்ஸிகம் சேர்த்த
பன்னீர்க்கறி. இதுவும் மிக்க ருசியுடனிருக்கும். ரொட்டி, சாதம்
முதலானவைகளுடன் தொட்டுக்கொள்ள மிகவும் உபயோகமாக
இருக்கும். அவஸரமாக காய்கள் ஒன்றுமில்லாவிட்டால் இதை
உடனே செய்து விட முடிகிரது. பன்னீர் உடம்பிற்கும் நல்ல ஊட்டம்
கொடுக்கும் பொருள். செய்வோமா? வேண்டிய ஸாமான்கள்.
வேண்டிய பொருள்கள்
விஜிடபிள் பன்னீருக்காக
வேண்டியவைகள்.
பன்னீர்——250 கிராம்
கேப்ஸிகம்—-பெரியதாக ஒன்று
தக்காளிப்பழம்—ஒன்று
பச்சைமிளகாய்—ஒன்று.
வெங்காயம்—-பெரியதாக ஒன்று.
எண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு உப்பு.
–இஞ்சி, கொத்தமல்லி இலை, வேண்டியருசியில் துளி மஸாலா
செய்முறை
பன்னீரைக் கையினால் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.
கேப்ஸிகம்,வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய் எல்லாவற்ரையும்
தனித்தனியே சிறியவைகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியிலோ, நான் ஸ்டிக் வாணலியிலோ எண்ணெய்
விட்டுக் காயவைத்து முதலில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
காப்ஸிகம்,மிளகாயையும் சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து
வதக்கவும்.உப்பு,சேர்த்து சுருள வதக்கி, உதிர்த்த பன்னீரைச் சேர்த்து
அடிக்கடி கிளறிக் கொடுக்கவும். கொத்தமல்லி தூவவும்.
முதலிற் சற்று சேர்ந்தாற்போல யிருந்தாலும் நிதான தீயில்,வதக்க
வதக்க ஸரியாகும்.
ஜீரா ,தனியாப் பொடியோ, அல்லது பிடித்த அதாவது மஸாலாப்
பொடியோ ஒரு துளி சேர்க்கலாம்.
நல்ல ருசியான கறி இது.
எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்துச் சாப்பிடலாம்.
விருந்து சமையலில்கொறடா.
மீள் பதிவிற்கு வசமாக சிக்கியது கொறடா. நல்ல காரஸாரமான சட்னிதான் இது என்று சொல்கிறீர்களா?ஆமாம் இல்லையா. ருசியுங்கள். அன்புடன்
கொறடா என்ற பெயரைப் பார்த்தால் இடுக்கி மாதிறி ஏதோ இரும்பு ஸாமான் என்று தோன்றும். ஆனால் இதுவும் ருசியை இடுக்கிப் பிடிப்பதால் இதற்குக் கொறடா என்ற பெயர் போலும்!!!!!
செய்வது மிக எளிதுதான். இதை தோசை,இட்லி,அடை வடை என்று யாவற்றினும் சேர்த்துச் சுவைக்கலாம். எங்கள் ஊர் விசேஷ சாப்பாடுகளில் ஒரு ஓரத்தில் இதுவும் இருக்கும்.
இப்போது சாப்பாடே வேறு விதமாக மாறி விட்டது. மெனுவும் மாறி விட்டது. அதனால் என்ன? என்ன பிரமாதம்,துவையல் மாதிரி தானேஎன்று சொல்வதும கேட்கிறது. சமையல் எழுதி ஏராளநாட்களாகிவிட்டது. எதையாவது எழுதுவோம் என்றால் வகையாக கொறடாப் பிடியில் சிக்கியது.
வேண்டியவைகள்—நல்ல நிறமான புளி ஒரு எலுமிச்சையளவு. பச்சை மிளகாய்–8, வற்றல் மிளகாய்– 3, தோல் சீவிய இ்ஞ்சி–2 அங்குல நீளம் [ கூடக் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை], சுத்தம் செய்த பச்சைக் கொத்தமல்லி 2,அல்லது,3 பிடி. காம்புகள் உட்பட போடலாம். பெருங்காயம் பிடித்த அளவு, உப்பு தேவையானது. நல்லெண்ணெய்–3 டேபிள்ஸ்பூன், கடுகு வேண்டிய அளவு.
செய்முறை–வற்றல் மிளகாயைக் கிள்ளியும்,புளியைப் பிய்த்துப் போட்டும் சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும். புளி நீரை உறிஞ்சும் அளவு தண்ணீர் போதும். புளி ஊறியவுடன், சிறியதாக நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய், பச்சைக்கொத்தமல்லி இவைகளைச் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாது அறைக்கவும்.
களிம்பு ஏறாத வாணலியில், நல்லெண்ணையைக் காயவைத்து கடுகை வெடிக்க விட்டு பெருங்காயத்தையும் சேர்த்து அறைத்த கலவைையைச் சேர்த்துக்…
View original post 39 more words