Archive for செப்ரெம்பர், 2022
ஜெனிவா கொலுக்களில் சில
இதுவும் ஒரு மீள்பதிவுதான். ஆறு வருஷங்களுக்குப் பிறகு நவராத்திரிப் பதிவாகப் போடுவதை வெள்ளிக்கிழமையான இன்றே போடலாம் என்று தோன்றியது. கொரானோவிற்குப் பிறகு எல்லாம் சிறிய வட்டத்திற்குள் போய்விட்டது போலும். யாவருக்கும் ஆசீர்வாதங்கள். கண்டு களியுங்கள் அன்புடன்
ஜெனிவா நவராத்திரி. எங்கள் வீட்டில் ஸ்வாமி ஷெல்ப்பில் தான் நித்யகொலு.
ஸ்வாமி ,ஷெல்ப் நித்யகொலு. ஜெனிவா.
இவ்விடமும் ஏராளமான குடும்பங்களில் நவராத்திரி பொம்மைக் கொலு வைக்கிரார்கள். மிகவும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். விதவிதமான பட்டுப் புடவைகளும், அதற்கேற்ற நகைகளும், மற்ற குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துப் பேசி மகிழ்ச்சியாகப் பகிர்ந்துண்ணலும், மஞ்சள் குங்கும, அன்பளிப்புகளுடன் பக்திக் கொண்டாடலும் மிகவும் அழகாக இருக்கிறது.
நல்ல குளிர் களை கட்டுகிரது.என்னைப்போன்ற வயதானவர்களுக்கு.
நான் சில அருகிலுள்ள வீடுகளுக்குத்தான் போனேன். என்னுடைய மருமகளும் கொலு என்ற பெயர் வைக்காமல் நித்தமும் கொலுவாகவே விளங்கும் ஸ்வாமி அறையில் மஞ்சள் குங்குமம் கொடுத்துக் கொண்டாடுகிறாள். பேத்தி விலாயினியும் மருமகள் ஸுமனும்.
நான் ஐந்து வருஷங்களுக்குப் பிறகு இவ்விடம் வந்திருந்ததால் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது.
நான் கண்ட சில கொலுக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கீதா கிருஷ்ணமூர்த்தி மாமியின் கொலு.
மாமி வீட்டில் எல்லாமே ,ஸ்பெஷல்தான். அங்கு போயிருந்தபோது ஏராளமானவர்களைப் பார்க்க முடிந்தது. பாட்டுகள் அவ்விடம் பாடியவர்கள் மறக்க முடியாதவர்கள். ஸ்ரீ சக்ரராஜ,பாக்யாத லக்ஷ்மிபாரம்மா.சேர்ந்து அருமையாகப் பாடியவர்கள் பாட்டு இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.விருந்தோம்பலுக்குப் பெயர் போனவர்கள். மற்றும்
ஒவ்வொருவரும் மிக்க அழகாக கொலு வைத்திருந்தனர். எங்கோ தமிழ்நாட்டில் உள்ளது போல அவர்களும்,அவர்களின் பெண் குழந்தைகளும் பங்கு கொண்டு,பேசி,மகிழ்வித்தது மனதைவிட்டு அகற்ற முடியாத காட்சிகள்.
பிரபா வீட்டுக் கொலு. அம்மாவும் பெண்ணுமாக உபசரித்தது மறக்க முடியாதது.
பிரபாவின் மாமியாரும் ஓர்ப்படியும் அயலூரில் இருக்கிரார்கள். மாமியின்…
View original post 184 more words
எங்களைப் படம் போட்டிருக்காங்கோ பாருங்கோ.
இது தினமும் காணும் மும்பையின் காட்சி. ஏதோ ஒரு கற்பனை. அதற்கு சில படங்கள். அந்த காக்கைகளுக்கும் மிகவும் ஸந்தோஷம். ஒரு நிமிஷம் நீங்களும் பாருங்கள். நன்றி. தினம்தினம் பார்க்கலாம். அன்புடன்
எங்க க்ளாஸ் பாத்தீங்களா?
நாங்கள் மும்பை வாசிகள்
நாங்க எப்படின்னு இவங்க எங்களையே படம் பிடிக்கறாங்க
நீங்களும் பாருங்க
பறந்துபோன காக்கைகள் ஒவ்வொன்றாய் வருகிறது.
வரிசையாய் உட்காருகிறது. இன்னும் என்ன செய்யும் இதுகள்?
பார்ப்போமா?
எல்லாரும் வந்தாச்சா? கோடிவீட்டு மரத்து அண்ணா, அண்ணி
வந்துட்டாங்களா?
எல்லாரும் வந்து சாயங்காலம் இங்கே கூடலாம்..
அதோ அவங்களுக்கும் சொல்லுங்க.
எங்ளையும் படமெடுங்க.
அங்கே பாருங்க அவங்க ஒரு ஸெக்க்ஷன்.
நீங்களும் வந்துடுஙகோ!!!!!!!!!
எல்லோரும் இரை தேடி தின்னூட்டு இங்கே இதே இடத்தில் காமாட்சிம்மா
படம் பிடிப்பாங்க குளிச்சுட்டு ஜோரா வந்திடுங்கோ என்ன!!!!!!!!!!!!!
அம்மா படம் பிடிக்க வந்துட்டாங்க. வாங்கவாங்க காகாகா
நாங்க அழகாக ஊஞ்ஜல் ஆடுவோங்க பிறகு எல்லோரும் ஓடுவோங்க
காகாகா
அழகான ஊஞ்சல்
எல்லோரும் வந்தாச்சா?
அதுக்குள்ள சிலபேருக்குக் கோவமா ?
என்ன ஆச்சுங்க அதுக்குள்ளே அங்கே போய்ட்டீங்க
நன்றிம்மா நாங்களும் போறோங்க காகாகா.
நன்றி,நன்றி நாங்களும் பரந்து போறோங்க. அழகாக ஊஞ்ஜலில் ஆடினோங்க காகாகா
b
க்வாக்கமோலே guacamole.—அவகேடோவின் ருசி.
இந்த அவகேடோ எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை.கிடைத்தாலும் விலை மிகவும் அதிகம். மீள் பதிவு போட்டபின் இது ஞாபகத்திற்கு வந்தது. ரஸிக்கலாம் அல்லவா? அன்புடன்
இந்த க்வாக்கமோலே என்பது மெக்ஸிகன் பெயர். இதை அடிக்கடி என்
மருமகள் ஜினிவாவில் செய்வது வழக்கம்.
காயாகவும்,இல்லாமல்,மிகவும் பழுத்த தாகவும் இல்லாத பழத்தில்
இதை தயாரித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
மென்மையான சதைப் பகுதியைக் கொண்டது இந்தப் பழம்.
ஸேலட்களிலும் நறுக்கிச் சேர்ப்பார்கள். சட்னியிலும் போடலாம்.
இந்த அவகேடோ உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
ஆன்டி ஆக்ஸிடெண்டுகளும்,பொட்டாஷியமும் இருக்கிறது.
ஸேன்ட்விச்,மில்க் ,ஷேக் செய்யவும் உதவுகிறது இது.
நம்முடைய,வெங்காயமும் ,தக்காளியும் அனேக மருத்துவக் குணங்களை
உடையது அல்லவா?
எல்லாமாகச் சேர்த்து சுலபமாக ஒரு டிஷ்
கார்ன் சிப்ஸோடு, தொட்டுச் சாப்பிட இதைச் செய்வார்கள்.
இந்த அவகேடோவின் உள்ளே கொட்டை பெரியதாக இருக்கும்.
அதை எடுத்து விட்டு பின்னர் தயாரித்த பண்டத்தின் நடுவே அதை
வைத்து விடுவது வழக்கம்.
அக்கொட்டை உடனிருந்தால் அவகேடோ நிறம் மாறுதலடையாமல்
இருக்கும். என்ன வேண்டும் என்பதைப் படத்தில் காட்டி விட்டு
வேண்டியவை சொல்லவே இல்லை அல்லவா?
வேண்டியவைகள்.
அவகேடோ—–1
பச்சை மிளகாய்—-1
நல்ல தக்காளிப்பழம்—-1
கொத்தமல்லி இலைகள்—ஆய்ந்தது—சிறிது.
சின்ன சைஸ்– வெங்காயம்—பாதிகூட போதுமானது.
ருசிக்கு– உப்பு
எலுமிச்சை—பாதி பழம். ருசிக்கேற்ப
கடையில் வாங்கிய கார்ன் சிப்ஸ்—-தேவைக்கேற்ப. உடன் சாப்பிட
செய்முறை.
அவகேடோவை தோல் சீவி மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாய், வெங்காயம்,தக்காளியை, மிகவும் பொடிப்பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்.
அவகேடோ நறுக்கினதை, ஒரு குழிவான கிண்ணத்தில் போட்டு
ஒரு…
View original post 71 more words
பலாக்காய் பொடித்தூவல்
பலாக்காய் பொடித்தூவல் காய் கிடைக்கும்போதுதான் செய்கிரோம். விசேஷமானகாய் இது. என்னுடைய பதிவுகளில் மிகவும் விசேஷமாக இன்று கிடைத்தது. வட இந்தியாவில் கோப்தாவும் செய்கிரார்கள்.பாருங்கள் இதையும். அன்புடன்
பிஞ்சு பலாக்காய்—1 அரைக்கிலோஎடை
.பச்சைமிளகாய்—3
இஞ்சி—1சிறியதுண்டு
தேங்காய்த் துருவல்—அரைகப்.
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு—ஒரு டீஸ்பூன்
எண்ணெய்—3டேபிள்ஸ்பூன்
ருசிக்கு—உப்பு
துளி மஞ்சள் பொடி
கொத்தமல்லி, கறிவேப்பிலை—சிறிது
செய்முறை.
காயை 2 துண்டங்களாக வெட்டவும்.
பால்போல பிசின் வெளிப்படும். நிறைய தண்ணீர்விட்டு
காயை அலம்பவும்.
கடைகளிலேயே காயை ஒழுங்காக தோல் நீக்கி துண்டங்களாக
வெட்டியும் கொடுக்கிறார்கள்.
சின்ன காயானால் நாமே பட்டை பட்டையாக தோலைச்
சீவிக் கொட்டிவிட்டு உள் பாகத்தை சற்று பெறியதுண்டுகளாக
நறுக்கி தண்ணீரில் போட்டு அலம்பிக் கொள்ளவும்.
வாணலியில் துண்டுகள் அமிழத் தண்ணீர் விட்டுமஞ்சள்ப்பொடி
சேர்த்து திட்டமான தீயில் வேகவைத்துக் கொள்ளவும்.
காய் முக்கால்பதம் வெந்ததும் இறக்கி வடிக்கட்டவும்.
காய் ஆறியவுடன் மிக்ஸியிலிட்டு வைப்பரில் 2 ,3 முறை
சுற்றி எடுக்கவும்.
இப்பொழுது உதிர் உதிராக காய் பக்குவமாக இருக்கும்.
திரும்பவும் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து
கடுகை வெடிக்கவிட்டு பருப்பை சிவக்க வறுத்து நறுக்கிய
இஞ்சி, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
உதிர்த்த காயைக் கொட்டி உப்பு சேர்த்து வதக்கவும்.
தேங்காயைச் சேர்த்து வதக்கி இறக்கவும்.
கொத்தமல்லி, கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
பொடித்தூவல் தயார். தினப்படி சாப்பாட்டில் இதுவும்
ஒரு கறிதான்.எலுமிச்சை சாறு துளி சேர்க்கலாம்
இது சிரார்த காலங்களில் விசேஷமான ஒருகறிகாயாக
தேடி வாங்கப்படும்.1008 கறிகளுக்கு சமானமான காயிது.
கேரளாவில் இது பரவலாக எல்லோராலும் சமைக்கப்படும்
காய்.
பலா முசு என்று சிறிய வகைக் காய்கள் சமைப்பதற்கு
மிகவும் ஏற்றது.
வட இந்தியாவிலும் …
View original post 17 more words