Posts filed under ‘Uncategorized’
தொட்டில்—14
இது ஒரு புதிய தொட்டில். பாருங்கள்
என்னடி இவ்வளவு நேரமா பேசறே யார் என்ன ஸமாசாரம்?
இரு வந்து சொல்றேன். என்ன விசேஷம் என்று சொல்லாமல் டிக்கெட் ரிஸர்வ் பண்ணி அனுப்பிச்சா அம்மாவுக்கு சொல்ல வேணாமா? அதெல்லாம் ஒண்ணும் வாணாம். அக்காங்களுக்கும் இவரு டிக்கட் புக் பண்ணி அனுபிச்சாச்சுன்னு சொல்ராரு. நீங்களும் எல்லாரும் வந்திடுங்க. எல்லாம் ரிஸர்வ் டிக்கட்டுங்கதான்.
என்னடி உனக்கு தெரியாம என்ன விஷயம் இருக்கும். ஒரு விஷயமும் இல்லே. எல்லாரும் கும்பலா கோவிலுக்குப் போய் பிரார்த்தனை செலுத்துவதாக வேண்டுதலாம். சும்மா வேடிக்கைக்குச் சொல்ராருன்னு நெனச்சா டிக்கட்டெல்லாம் காமிச்சுதான் அனுப்பிச்சாரு. தெரியுமே உனக்கு. இவரு மனஸுலே பட்டதை உடனே செஞ்சாகணும். நான் சொன்னேன் என்னங்க இது. அவங்க என்னவோ ஏதோ என்று நினைப்பாங்க என்று.
கோயிலுக்குப் போக அவங்க நெனைக்க என்ன இருக்குது? உனக்குதான் ஏதாவது நினைப்பு.இப்படிதான் அவங்க சொல்ராரு. வாங்க எனக்கும் ஸந்தோஷமாயிருக்கும். அத்தையும் இதையே சொல்ராங்க. வந்திடுங்க என்ன
இத்தனைநேரம் பேசரையான்னு ஸுலபமா கேட்டா போதுமா. ஒம் பொண்ணுதான் பேசிச்சு. அவுங்க வீட்லே சாமி கும்பிட போவதற்கு நாமெல்லாம் வரணுமாம். டிக்கட் அனுப்பிச்சு கூப்புடரா?
ஏதாவது விசேஷம் இல்லாங்காட்டி இப்படிச் செய்வாங்களா?
அவங்க வூட்லேதான் எல்லாமே மூடு மந்திரம்தான். கடைசிலேதான் என்னான்னு சேதியே தெரியும். ஒரு புது ஸாமான் வாங்கினா கூட திருஷ்டி பட்டுடும்னு ,சினேகிதங்க வைச்சுட்டுப் போயிருக்காங்கன்னு சொல்லுவாங்க. அப்புறமா, இல்லே நாங்களே வாங்கிட்டேன்னு சொல்லுவாங்க. எல்லாமே அப்படிதான் அவங்க ஊட்டு வழக்கமே…
View original post 493 more words
தொட்டில்—13
தொட்டில் 13 முததாய்ப்பு வைத்தமாதிரி நிகழ்ச்சிகள். அரசுக்கல்யாணம்,தொட்டில்கள் என பல நிகழ்ச்சிகள். அழகுதான். பாருங்கள். வாருங்கள். அன்புடன்
முகூர்த்தம் பாத்தாச்சு. வெளியில் சொல்லவில்லை. ராஜுவின் சித்திதானே ஸூத்ரதாரி.
முகூர்த்தம் பார்த்த தினத்தில்தான் குளத்தங்கரையிலுள்ள வேம்பிற்கும்,அரசிற்கும் கல்யாணம். மரங்கள்தான் அவைகள். வனபோஜனம். ஊரே கோலாகலமாக இருக்கும். குளக்கரையில் விவாகம் முடிந்த பின்னர் ஊரில் பெரிய வீட்டில் சாப்பாடு. வைதீகர்கள் அந்த வரும்படியில் இருப்பார்களே!
இம்மாதிரி நல்ல காரியங்கள் பார்த்துப் பார்த்துச் செய்யும் பாட்டி ஒருவர் இருந்தார்.
அவரிடமே விஷயங்கள் சொன்ன போது, இதுக்கென்ன விசாரம்? முதல் முகூர்த்தம் இதைப் பண்ணிவிட்டு மாலையும் கழுத்துமா அவர்களையும் அழைத்துக் கொண்டு போனால் போயிற்று. மீதி நாள் பூரா இருக்கே. எனக்கும் கொஞ்சம் நல்ல காரியம் செஞ்சோம் என்ற திருப்தியும் கிடைக்கும்.
எல்லா விஷயங்களும்தான் நீ சொல்லி விட்டாய். கார்த்தாலே ஏதாவது காபிடிபன் போரும். சாப்பாடெல்லாம் நான்தான் செய்யறேனே. அப்புறம்அவாளுக்கு என்ன செய்ய இஷ்டமோ தாராளமாக செய்து கொள்ளுங்கோ. மறுநாள்வரை ஜமாய்க்கலாமே.
செலவு செய்ய முடியாத கஷ்டமெல்லாம் இல்லை அவாளுக்கு.
ஸரி எங்காத்திலேயே பந்தல்போட்டு நான் எல்லாம் செய்யறேன்.
மாப்பிள்ளை ராஜு போய் அவன் அண்ணாவிடம் சொன்னான். ஆகாசத்திற்கும்,பூமிக்குமாக குதிக்காத குறைதான்.
பெண் ஒண்ணு இருக்கு, இதெல்லாம் அவசியமா? என்ன இருக்கோ எல்லாவற்றையும் அந்தப் பெண்மேலே எழுதி வைச்சுட்டு அப்புறம் எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுப்போ. இவ்விடம் வராதே. என்றனராம்.
எழுதி வைத்திருப்பதும்,இதுவரை நான் கொடுத்திருப்பதும் உங்களிடம் இருப்பதை எண்ணிப் பாருங்கள்.இப்போதும் என்னால் முடிந்ததை நான் கொடுப்பேன்.
வருவதும்,வராததும் உங்கள் இஷ்டம் என்று சொல்லி வந்து விட்டான். ஒரே…
View original post 479 more words
தொட்டில் 12
இந்தவாரம் தொட்டில் 12 வரனின் விவரங்கள் சேகரிப்பாக மேலும் தொடர்கிரது. ஊர்க்கதை என்றாலும் விஷயங்கள் ஸ்வாரஸ்யம் பாருங்கள். அன்புடன்
வீட்டுக்குள்ள நுழைந்தப்புறம் எல்லாம் நமக்குத் தெரிந்தது ஓர்ப்படிக்கும் தெரியும். புதுசா சொல்ல என்ன இருக்கு? நீலாவையே போய்ப்பார்த்து மீதி ஸமாசாரங்களையும் கேட்டு எதை, எப்படிச் சொல்லலாம் என்று அவளையே யோசித்துச் சொல்லச் சொல்லணும்.
என்ன பாட்டி நீவேறெ எனக்குப் மாப்பிள்ளை பார்க்கிறயா என்று கேட்டு விடும்அந்தப் பெண்.
நீலாவாத்து சாப்பாடெல்லாம் ஆகட்டும். யோசனை முடிந்து ஈரப்புடவையை ஓர்ப்படியிடம் கொண்டு கொடுத்து விட்டு மத்தியானமா வரேன். நீலா என்னவோ சொன்னா. ஸரியா கேட்டுண்டு வரேன். நீயும் தினம் கேக்கரே மன்னி.
ஸரி ஏதாவது நல்லதா வரணும்.
என்ன ஒரு வத்தக் குழம்பும்,சுட்டஅப்ளாமும். இரண்டுநாளா தோசை ராத்தரியில். மாவு புளிச்சு வழியறது. ஊறுகாமிளகாயும்,கடுகு பெருங்காயம் தாளிச்சுக்கொட்டி வாணலியில் இரட்டை விளிம்பு தோசையாக இராத்திரி இரண்டு வார்த்தால் மாவும் காலியாகும். எண்ணெய் நிறைய விட்டு வார்த்தால் தானே ருசி கொடுத்துவிடும்.
இரவு ஆகாரத்தையும் கற்பனையில் செய்தாகிவிட்டது.
நன்றி கூகல். படம் ஒரு மாதிரிக்கு.
பானுவின் புக்ககம் ஒரு கூட்டுக் குடும்பமாக இருந்தது ஒரு காலத்தில். அவள் மாமனார் இராமாயணம்,பாரதம், பாகவதம் என்று கதை வாசிப்பவர். மனைவி இல்லை. பிள்ளைகள் மூன்று பேர்.
அக்கால முறைப்படி காலாகாலத்தில் பிள்ளகளுக்குக் கல்யாணமாகி ஒரே கூட்டுக் குடும்பம். கடைசி பிள்ளைக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மற்றவர்களுக்கு ஸந்தானம் ஏற்படவில்லை. நாகப்பிரதிஷ்டை,ராமேசுவரம்போய் திலஹோமம், சாந்திகள் எல்லாம் காலா காலத்திலேயே செய்து விட்டனர். அந்தகாலத்து அரசப்ரதக்ஷிணம் என்று எல்லாம் வரிசைக்கிரமாக நடந்தது.
மனதில்…
View original post 397 more words
தொட்டில் 11
இந்தப் பதினோராவதுப் பதிவு தொட்டில் வேறு விதமாக ஆரம்பமாகிறது. நீங்கள் அல்லவா இதைச் சொல்ல வேண்டும். அனுபவித்துப் படியுங்கள். அன்புடன்
பொழுது புலர ஆரம்பித்து விட்டது. இப்பொழுதே போனால் நிதானமாக குளித்து விட்டு, ஆரஅமர துணிகளைப் புழிந்து கொண்டு கரையிலுள்ள மாமரப் பிஞ்சுகள் உதிர்ந்துள்ளதைப் பொறுக்கிக் கொண்டு நிதானமாகக் கதைபேசிக்கொண்டு வரலாம்.முதல்நாள் இரவே யார் யார் வருகிரார்கள் என்று கேட்டுக் கொண்டாயிற்று.
குளத்தில் இறங்கி அமிழ்ந்து உட்கார்ந்து விட்டால் கரை ஏறவே மனம் வராது.
புருஷர்களுக்கு ஒரு பக்கம். பெண்களுக்கு ஒரு பக்கம் படிக்கட்டுகள். புருஷாள் வருவதற்கு முன்னால்ப்போனால் யோசனை இல்லாமல் குளிக்கலாம். இரங்கி விட்டால் முதலில்
துருதுருவென்றுமீன் குஞ்சுகள் காலை கிசுகிசு மூட்டுவதுபோல நெளிந்து,நெளிந்து தொட்டுவிட்டுத் தண்ணீரில் மறையும். கல் படிக்கட்டுகளில் துணியைத் துவைத்துக் கசக்கிக் கசக்கி தண்ணீரில் இரண்டு முறை அலசி விட்டால் பளிச்சென்று எந்தப் புடவை,வேஷ்டி துணிகளானாலும் புதுத்துணியை முதல் முறை தண்ணீரில் நினைத்தது போலத் தோன்றும். ஸோப்பாவது,மண்ணாவது எதுவும் அவர்களுக்குத் தெரியாது.
தனி நபரானாலும் அக்கம்,பக்கம் உள்ள உறவினர்கள்,வயதானவர்களின் துணிகளையும் கேட்டு வாங்கிக் கொண்டு வந்து துவைத்துக் கொண்டு கொடுப்பது வழக்கம்.
ஓர்ப்படி குளத்துக்குப் போறேன். புடவை இருந்தா குடு. நான் கிளம்பிவிட்டேன். நீ வரியா? நான் போயிண்டே இருக்கேன். மீனா, பட்டு எல்லாரும் வந்துட்டா.
நீங்க போயிண்டே இருங்க. ஒரு எட்டுலே உங்களைப் பிடிச்சூடுவேன். கரையில் விபூதி ஸம்படம்,குங்குமச் சிமிழ் மரத்தில்,தேய்த்துக் குளிக்க நல்லதாக குண்டு மஞ்சள்.
யராவது ஒத்தர் எடுத்துண்டா போதும்.
அவரவர்கள் முடிந்த அளவு துணியுடன் பேசிக்கொண்டே குளத்தை அடைவார்கள்.
படமுதவி—-கூகல்…
View original post 401 more words
கார்த்திகை தீபம்
நாளை 29 நவம்பர் ஞாயிற்றுக் கிழமை அண்ணாமலையார் தீபத்தைக் கொண்டாடிமகிழும் யாவருக்கும் என்னுடைய அன்பு வாழ்த்துகள். உலகத்தினர் யாவருக்கும் நல் வாழ்வைத்தர உளமுருக வேண்டுவோம்

தொட்டில்—10
மூன்று குடும்பங்களின் போக்கைப் பின்னிக் கொடுத்ததொட்டிலின் ஸம்பவஙகள் நீண்டுமுடிந்தது. சோகங்கள் அதிகம். பிராப்தம் இப்படியும் இருந்தது
காலங்கள் வேகமாக இல்லாவிட்டாலும் அதன் போக்கில் சுழன்றுகொண்டுதானிருந்தது.
வயதாகிவிட்டது. யாருக்காக இன்னும் ஸொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் ஏற்படுவதில்லை. நான் என்ன எனக்காகவா சேர்க்கிறேன் உங்கள் எல்லோருக்கும்தானே என்ற சொல்தான் யாவரின் தாரக மந்திரமாகவும் இருந்தது.
மெள்ள மெள்ள நம் பையனில் ஒருவனை ஸ்வீகாரம் கொடுக்க நான் முடிவு பண்ணி விட்டேன். இதில் யாரும் ஆக்ஷேபணை சொல்ல நான் அனுமதிக்க மாட்டேன்.என்ற பாணியில் போர்க்கொடி உயரலாயிற்று.
நான் ஸம்மதிக்கவே மாட்டேன். நான் பெற்ற பிள்ளைகள் எனக்குதான். அவர்கள் முன்னுக்கு வந்திருக்கிரார்கள். இருப்பது போதும்.நான் ஸம்மதிக்கமாட்டேன். பதில் பேசியாயிற்று.
போ. இந்த வீட்டை விட்டு. எங்கு வேண்டுமானாலும்போ. என் பேச்சு கேளாது பதில் சொல்ல உனக்கு என்ன தைரியம். பேச்சு வலுத்து, அடி அமக்களத்துடன் வெளியே மனைவியைத் தள்ளும்படியான நிலைக்கு உச்ச கட்டங்கள் நடைபெற ஆரம்பித்து விட்டது.
வீட்டைவிட்டுப் போகும் வயதா? ஆக்கினைகளுக்குக் கட்டுப்பட்டே காலம் கடத்தியவள். ஊர் சிரிக்கும். நாலுபேர் இரண்டு பேருக்கும் நீ சொல்வதுதான்ஸரி என்பார்கள். மூன்று தலைமுறைகளை சபித்துக் கொண்டு ஒரு புருஷன். அழலாம் மனதோடு மருகலாம்.
அம்மா படும்பாட்டைப்பார்த்து பிள்ளை எங்காவது சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டால். அவனுக்கும் இஷ்டமில்லை. இரண்டாம் கெட்டான் வயது.
பிள்ளையை என்ன காக்காயா தூக்கிக் கொண்டு போய்விடும்? அவன் என்ன அவர்கள் வீட்டிற்கா போகப் போகிரான்? வாயடைப்பு.நிர்பந்தம். மௌனம்.
இன்னும் எட்டு நாட்கள் இருக்கு. நாள் பார்த்தாகி விட்டது. ஸ்வீகாரம்,பூணூல் இரண்டும்…
View original post 620 more words
தொட்டில்—9
இந்தத் தொட்டில் எவ்வெப்படி எந்தெந்த விதத்தில் போய்க்கொண்டு ஆடத்துவங்கியது? பாருங்கள் அன்புடன்
வேலைக்குப் போக ஆரம்பிக்கு முன்னர் வீட்டில் இந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் பூணூலை முன்னிறுத்தியே ஆரம்பமாகியுள்ளது. உண்மையில் பூணூலில் ஒருவருக்கும் அக்கறை இல்லை. சொத்து. நம் ஏழ்மை.
இனி இவர்கள் இதைப்பற்றி பேச விடாமல் நாம் அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும். மஹா பெரியவாள் பிறந்த ஊர் அருகிலுள்ளது. அங்கும் ஒரு பெரியவர் ஏழைப் பையன்களுக்குப் பூணூல் போட்டு வைக்கிரார். அவ்விடம் போய் நாம் குடும்ப நிலவரத்தைச் சொல்லிக் கேட்போம்.
யாருமே வேண்டாம். அவர்களாகவே போட்டு விடட்டும். பிறகு இந்தப் பேச்சே வராது. முடிவெடுத்து விட்டனர்.
நிலம் நீச்சு மேற்பார்வை பார்க்க ஏதோ வேலையும் கிடைத்தது. வீட்டில் இரண்டு சமையலும். பெரிம்மாவை திட்டுதலுமாக எப்போதும் சச்சரவு நீடித்தது.
தியாகு ஒருநாள் பூணூல் போட்டு வைக்கும் பெரியவரைப் பார்த்து பேசிவிட்டு வந்தான். பெற்றவர்கள் வராமல் செய்வதற்கு மறுப்பு தெரிவித்தாலும் வயதையும் வீட்டு சூழ்நிலையையும் உத்தேசித்து நல்ல நாள் ஒன்று குறிப்பிட்டு சொல்லி விட்டார்.
விடியற்காலமே நிலத்தில் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போன இரண்டு பிள்ளைகளும் புது வேஷ்டியும், பூணலும், மாலையும் கழுத்துமாக வீட்டிற்கு வந்து சாயங்காலம் அம்மாவிற்கு நமஸ்காரம் செய்கிரார்கள். என்னடா இது தாய் விக்கித்துப் போய் ஒரு கணம் அப்படியே நிற்கிறாள். அடக்க முடியவில்லை அழுகையை. என்ன அம்மாடா நான். இன்னும் என்ன வெல்லாம் ஆகப்போகிறதோ?
அந்த மனுஷன் கத்துவாரே. நன்னா இருங்கடா. காலம் விடியணும். கதறல்தான்.
View original post 364 more words
தீபாவளி வாழ்த்துகள்
கொரோனா அசுரன் நரகாசுரன் மாதிரி அடியோடு ஒழிய வேண்டும் என்று வேண்டி,சொல்லுகிறேன்,மற்றும் ஸக பதிவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் அபிமானிகள் யாவருக்கும், நாளை 14–11-2020 அன்று கொண்டாடும் இனிய தீபாவளித் திருநாளின் இனிய வாழ்த்துகளை மனமுவந்து இன்றே சொல்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உடன் குழந்தைகளின் தினத்திற்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்.

அன்போடும் , ஆசிகளுடனும் உங்கள் சொல்லுகிறேன் காமாட்சி
நேபாளத்தில் தீபாவளி
எட்டு வருஷங்களுக்கு முன்னர் எழுதிய பதிவு இது. தீபாவளி ஸமயத்தில் ஞாபகம் வந்தது . ஸேல் ரொட்டியின் தீபாவளி இது. அன்புடன்
குளிர் ஆரம்பித்து விட்டாலும் கூட தீபாவளியை ஐந்து நாட்கள்
பலவித பெயர்களைச் சொல்லிக் கொண்டாடுவார்கள்.நேபாளத்தில்
கடவுள் பக்தி அதிகம். முன்பு அரசாட்சியாக இருந்த போது, நவராத்திரி
தொடங்கி, தீபாவளி முடிந்து நான்கந்து நாட்கள் வரை அதாவது ஒரு
மாதத்திற்கதிகமாக ஸ்கூலிற்கு விடுமுறை விட்டுவிடுவார்கள்.
எல்லா பண்டிகைகளின் போதும் டீக்கா வாங்குவது, அதாவது பெறியவர்களிடம்
ஆசி வாங்கி அவர்கள் கொடுக்கும் ரக்ஷையை நெற்றியிலிட்டுக் கொள்வது
அவர்களாகவே நெற்றியிலிட்டு ஆசீர்வதிப்பது முக்கியமான நிகழ்ச்சியாகும்.
டீக்கா என்பது சிறிது தயிரில் அரிசியை ஊறவைத்து அதனுடன் செந்தூர்க்
குங்குமம் சேர்த்து கெட்டியாகக் கலந்த கலவை. நெற்றியிலிட்டால் நன்றாக
ஒட்டிக்கொண்டு பளிச்சென்று பார்வையாக இருக்கும்.
ஒரு ரூபாயளவிற்கு இதை நெற்றியிலிட்டு வயதில்ப் பெறியவர்கள்
சிறியவர்களுக்கு ஆசி வழங்குவார்கள். தசராவில் இந்த ஆசியை
வாங்க எங்கிருந்தாலும் வீட்டுப் பெறியவர்களிடம் வந்து சேர்ந்து
விடுவார்கள். திஹார் என்றால் நேபாலியில் பண்டிகை என்று அர்த்தம்.
தீபாவளியை ஐப்பசி அமாவாஸையன்று கொண்டாடுகிறார்கள்.
அன்று தீவாலி லக்ஷிம்பூஜாஎன்பார்கள், அன்றே காய் பூஜாஅதாவது
பசுமாட்டிற்கு பூஜையும் செய்வார்கள்.
அமாவாஸைக்கு முதன் வரும் மூன்று நாட்களில் முதல் நாள்
கௌவா பூஜா. காக்கையை கவுரவித்து அன்னமிட்டு பூஜை.
சுற்றுப்புற சூழலுக்கு நன்மை செய்வதைப் போற்றி நடக்கிறது.
மறுநாள் குகுர் அதாவது வீட்டைக் கார்க்கும்,நன்றியுள்ள நாயைக்
கவுரவித்து, பைரவர் எனப்போற்றி நாய்க்கு மாலை அணிவித்து,
திலகமிட்டு, நல்ல சாப்பாடு போட்டு அதைக் கவுரவிக்கிறார்கள்.
லக்ஷ்மி பூஜை பெறிய அளவில் …
View original post 295 more words
ஸேல் ரொட்டி
இந்த பக்ஷணம் நேபாலில் செய்யப் படுவது. தீபாவளி நேபாலத்தில் என்று எட்டு வருஷங்களுககு முன்பான என் பதிவினை மீள் பதிவு செய்யும் முன்னர், அந்த சிற்றுண்டியைப் பற்றி ஒரு குறிப்பு எழுத வேண்டும் என்று தோன்றியது.
நம்முடைய அப்பம் போன்ற ஒரு ருசியுடைய வேறு உருவத்தில் இந்த தின் பண்டம். இது அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. எவ்வளவு செய்வார்கள் தெரியுமா? நிறைய செய்து யாவருக்கும் கொடுப்பார்கள். லக்ஷ்மி பூஜைக்கு மிகவும் அவசியமாக இது வேண்டும். மாவைக் கையில் எடுத்தே இந்த வட்டத்தைச் சுற்றி விடுவார்கள்.
காலி பால்கவரில் ஒரு துளை போட்டும் ஜிலேபி சுற்றுவது போல மாவை அதில் நிரப்பியும் செய்யலாம். பார்க்கலாம்.

வேண்டியவைகள்.1-
ஒரு டம்ளர் -பச்சரிசியை நன்றாக ஊறவைத்து வடிக்கட்டி கரகர பதத்தில் மாவாக பொடித்துக் கொள்ளவும் அடுத்து நான்கில் ஒரு பாகமாக கால் டம்ளர் சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்.ஒரு
டேபிள்ஸ்பூன் நெய்,ஒருசிட்டிகை ஏலப்பொடி ,ஒரு சிட்டிகை சமையல் ஸோடாஉப்பு ,துளி உப்பு சேர்த்து, அகன்ற பாத்திரத்தில் யாவையும் ஒன்றாகக் கலந்து, பாலை விட்டு நன்றாகப் பிசையவும் . ஒரு மணி நேரம் ஊறவிடவும் பிறகு இட்லி மாவு பதத்திற்கு அதை கறைத்துக் கொண்டு தயாரிக்க வேண்டியதுதான்.
வாயகன்ற வாணலியில் எண்ணெயைக் காயவைத்து டோனட் வடிவததில் மாவை எண்ணெயில் வேக வைத்து ,திருப்பிவிட்டு சிவப்பாக எடுபபார்கள். சும்மா ஓரளவு புரிந்தால் ஸரி . யாரும் செய்யப் போவதில்லை. நம்முடைய இனிப்புக்களை விடவா? இதைப் படித்து விட்டு என் மீள் பதிவையும் பாருங்கள்
.எல்லோருக்கும் வாழ்த்துகள். தீபாவளியன்று வாழ்த்த வருகிறேன். அன்புடன்.