Posts filed under ‘Uncategorized’
ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும் 4
இன்று என் கணவரின், தமிழ்மாத காலண்டர்ப்ரகாரம் 5மாதங்கள் முடிவுறுகிறது. இந்தப் பதிவில் முக்தி நாத்திலிருந்து சாளிக்கிராமங்களுடன் வீடுவந்து சேர்ந்த விஷயமும் வருகிறது.நல்லது. அடுத்த பதிவில் பகிர்ந்துவிட்டு முடித்துவிடுகிறேன்.படியுங்கள் அன்புடன்

முக்திநாத் போனவர்கள் நல்ல முறையிலேயே வழியைக் கடந்து
நல்ல குளிர் உள்ள போதும் ஸரியான ஸமயத்தில் கோவிலில்
தரிசனம் செய்து கொண்டு அவ்விடம் தாராக்களில் வரும், தண்ணீரில்
குளித்தார்களா, அப்படியே தண்ணீரை ப்ரோக்ஷணம், செய்து
கொண்டோ எப்படியோ கையில் ப்ரஸாதங்களையும் வாங்கிக்கொண்டு
முக்கியமாக அவ்விடம் தெரிந்த நபர் பெற்றுக் கொடுத்த,சாளக்ராமங்கள்
கொஞ்சமாக இல்லை!!! வாரிக் கொடுத்து வழியனுப்பினர்.
நிறைய பைகள் கொள்ளாது ஒவ்வொருவருக்கும், நாமா சுமக்கப்
போகிறோம். நம்முடன் வரும் குதிரை சுமக்கப் போகிறது என்று
சொல்லிக் கொண்டே யாவரும் மிக்க ஆனந்தத்துடன் வரும் வழியில்
கூட துணைக்கு வந்தவர்கள் காட்டிய இடங்களில் கண்டகி நதியில்
சாளக்ராமங்களையும பொருக்கிக் கொண்டு, ஜன்ம சாபல்யம் அடைந்தோம். நினைத்துப் பார்க்க முடியாத ஒரு இடம்.
முக்திநாத் பெயர் தெரியுமே தவிர அவர் விஷ்ணுவா, சிவனா என்று
கூட தெரியாது. அதிருஷ்டம் இருந்து இவ்விடம் வந்து போகிறோம்
என்று நினைத்துப் பேசியதை, பிறகு சொன்னதை இந்த வரிஎழுதும்போதுஞாபகப் படுத்திக் கொள்கிறேன்.
இங்கே காட்மாண்டுவில் ஒரு பழைய விங்கை செங்குத்தாக
ஹெலிகாப்டரில் தொங்கும் படியாக பொருத்திக்கொண்டு
கன்ட்ரோலரின் ப்ளைட் மேலே,மேலே போய்க்கொண்டிருக்கிறது.
ஹெலிகாப்டரிலிருந்து ஆபத்துக் காலங்களில் கீழே உள்ளவர்களைக்
காப்பாற்றுவதை எல்லாம் பார்த்திருப்பீர்களே!!
எந்த ஒரு பொருளையும் நான்கு புறமும் ஸபோர்ட் செய்து
ஊஞ்சல் மாதிரியோ, தராசு மாதிரியோ கட்டித் தூக்கினால்தான்
அலைக்கழியாது இருக்கும். ஒத்தையாக இருந்தால் மனம் போன போக்கில் ஊசலாடுமே தவிர ஒத்து வராது…
View original post 415 more words
பஜனை நினைவுகள்.
பாரக்பூரில் நடந்த 2012 வருஷத்திய ஒரு பதிவு இது. மலரும் நினைவுகள். நீங்களும் பங்கு கொள்ளுங்களேன் அன்புடன்
வயதானவர்களுக்கு பக்தி ஸம்பந்தப்பட்ட நினைவுகளும்,பாராட்டுகளும்
அன்பின் மூலம் கிடைத்ததையும், எல்லோருக்கும் வேண்டியவர்களாக
ஒரு சிநேகக் கூட்டம் கிடைத்ததையும், ஒரு கனவாக எண்ணமிடும்
அளவிற்கு காலங்கள் கடந்து ஓடிவிட்டாலும் பசுமையான
நினைவுகளை
உங்களுடன் அசை போடுவதில் ஒரு மன நிறைவு ஏற்படும் என்ற
எண்ணத்தில் இதைப் பகிர்ந்து கொள்கிறேன்.கேளுங்கள்
பக்தி வலையிற் படுவோன் காண்க.
ஜானகீ காந்தஸ்மரணம்.ஜெய்ஜெய் ராம ராம
நமப் பார்வதி பதயே–ஹரஹர மகாதேவா
கோபிகா ஜீவன ஸ்மரணம்.கோவிந்தா கோவிந்தா
வரிசையாகச் சொல்லி ஹரி நாராயணவும் பாடியாயிற்று.
சுக்லாம்பரதரம் முதல் ஸ்லோகங்கள் சொல்லி
ஆரம்பமாகிவிட்டது பஜனை.
மும்பை வினாயக சதுர்த்தி வினாயகர்.
மூஷிக வாஹன மோதக ஹஸ்தா சாமரகர்ண விளம்பிதசூத்ரா
வாமனரூப மஹேச்வர புத்ர விக்ந விநாயக பாத நமஸ்தே
ஜயஜானகீ ரமண ஜய விபீஷண சரண ஜயஸரோருஹ சரண
ஜயதீன கருணா ஜயஜய
தொடர்ந்து
சரணு சரணு ஸுரேந்திர ஸன்னுத சரணு ச்ரீஸதி வல்லபா தேவ
சரணு ராக்ஷஸ கர்வ ஸம்ஹார சரணு வேங்கட நாயகா
ஸ்வாமி ச்ரீ ரகு நாயகா சரணு சரணு ஹரே
தோடய மங்களங்கள் காதில் ஒலிக்கிறது.
அடிக்கடி நாமாவளிகள்
மனது பறக்கிறது.
கோல்க்கத்தாவை அடுத்த பாரக்பூர். 24 பர்கானாவில் ஒன்று.
பூரா H.A.L. இல் வேலை செய்யும் பஜனைக்கு வரும் பக்தர்களின்
கூட்டம்.தம்பதிகள்,குழந்தையுடன், குடும்பத்தை விட்டு கருமமே
கண்ணாயினார்கள்,சற்றுப் பெரியவர்கள், இளைஞர்கள், என
எல்லோரும்…
View original post 565 more words
ராயல்ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.3
நிகழ்வுகள் எழுதுவது நான் இல்லையா!அந்த கால கட்டத்தில் என் எண்ணங்களின் போக்கும் கூடவே வருகிறது. பாருங்கள். படியுங்கள். வேறு நான் என்ன சொல்லப் போகிறேன். அன்புடன்
நமக்கு ஜும்ஸும் போனவர்கள் திரும்ப வந்தால்ப் போதுமென்றாகி
விட்டது. ராயல் ஃப்ளைட் கன்ட்ரோலருக்கோ அவ்விட விபத்துக்கு
ஆளான விமான பாகங்களைக் கொண்டு வரவேண்டும். அதற்காக
பின்னும் பட்ஜெட் போடாமல் இருப்பவர்களை அங்கேயே மேலும்
சில நாட்கள் தங்கவைத்து, மராமத்துப் பணிகளுக்கு அவர்களை உபயோகித்து
காப்டரை பாதுகாத்து மேலும் சில ட்ரிப்புகள் செய்து ராயல் ஃப்ளைட்டுக்கு
ஆதாயம் கொடுக்க தீர்மானம் செய்து விட்டார்.
ஸரி யாருக்கு முக்திநாத் போகவேண்டுமோ நான் ஏற்பாடு செய்கிறேன்.
போய்வாருங்கள் என்று சொல்லி விட்டார்.
குஷிக்கு கேட்க வேண்டுமா?
அப்பொழுதெல்லாம், குதிரையோ,இல்லை,இல்லை கோவேரி கழுதைன்னு,மட்டக் குதிரை என்று
தான் சொல்ல வேண்டும். அதனுடன் ஒரு ஆள் வருவான். சில இடங்களில்
அதன்மேல் உட்கார வைத்தும், கூட துணையாகவும் வந்து எல்லா இடங்களுக்கும் அழைத்துப் போய் திரும்ப மாலை வந்து சேர்ந்து விடுவார்கள்.
இப்படிக்,கும்பல்,கும்பலாக ஆட்கள் முக்திநாத் சென்று வருவார்களாம்.
அந்தக் கூட்டத்துடன் பாலஸில் வேலை செய்பவர்கள் என்ற விசேஷ
மரியாதைக்குரியவர்களாக இவர்களுக்கு வேண்டியதெல்லாம் வசதி
கொடுத்து, சாளக்ராமங்கள் அவ்விடம் சேகரித்திருந்தால் அதையும் சேர்த்து
கொடுத்தனுப்பும் படி விசேஷ V.I.P.ஆக 4,5 பேருக்கு போவதற்கு ஏற்பாடு
ஆகி விட்டது. விஷயங்களும் எங்களுக்கு சொல்லியனுப்பினார்கள்.
ஆக முக்திநாத் போய் சாளக்ராமம் வரப்போகிறது.
அப்படி என்ன ஸந்தோஷமா?
என்தகப்பனார் பஞ்ஜாயதன பூஜை செய்பவர்.
ஆதித்யம்அம்பிகாம் விஷ்ணும், கணநாதம், மஹேச்வரம் என்று,அபிஷேக
பூஜை,ஆராதனை,நிவேதனம், தீர்த்தம் கொடுத்தல், என முறைப்படி
யாவும் நடைபெறும்,
வயதான…
View original post 257 more words
ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.2
நேபாளத்தின் முடியாட்சியில் நடந்த சூழ்நிலைச் சம்பவங்கள். படித்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள். என்னவரின் ஞாபகார்த்தப் பதிவு இது. அன்புடன்
ஸாதாரணமாக அரசர் வெளியே போய் நேபாலிலேயே மற்ற பகுதிகளில்
தங்கி இரண்டொரு மாதம் அவ்விட முன்னேற்றங்களை மனதில் வைத்து
ஒழுங்கு செய்து விட்டு வருவது வழக்கம். அம்மாதிறி ராஜ ஸவாரிகளின்
போது ஒரு சிறிய காட்மாண்டுவே இடம் பெயர்ந்தாற்போல இருக்கும்.
இம்மாதிரி, ஸவாரிகளின் போதும், அயல் நாட்டுக்குப் பிரயாணம்
செய்யும் போதும் அவர்களுக்கு ஸ்ரீ.பாஞ்ச்,மஹாராஜாதிராஜ் ஸர்கார்
வருகிறார், அல்லது போகிரார் என்று முன் கூட்டி அறிவித்து விடுவார்கள்.
காட்மாண்டுவிலும், நேபாலில் எவ்விடம் போனாலும்
வழியின் நெடுகிலும், யாவர் வீட்டு வாயிலிலும் பெறிய, பெறிய குடங்களில்
காக்ரிஎன்று சொல்லுவார்கள் நீரை நிரப்பி குங்கும, பூக்கள் என
அலங்காரம் செய்து பூரண கும்ப வரவேற்பு, அல்லது வழியனுப்புதல்
கட்டாயமாக கடை பிடிக்கப்படும். மக்கள்
உடலை வளைத்து இரு கைகளினாலும் கையைத் தட்டி ஓசையுடன்
வணக்கம் செய்யும் நிலையில் ஸந்தோஷமாக, வழியனுப்புதலும்,
வரவேற்பும் கொடுப்பார்கள். இப்படியே எந்த வொரு கூட்டங்களுக்குப்
போனாலும், கோவிலுக்குப் போனால் கூட உடல் வளைத்து
கைகூப்பித் தட்டி ராஜாவுக்கு ராஜ மறியாதை.
இப்படிப்பட்ட ராஜாவின் வாயுவிமானம் கூட டாக்ஸி மாதிரி ,கூட்ஸ்
வண்டி மாதிரியும் உபயோகப் படுத்தப் பட்டது.
முடியாட்சியே இல்லை.காமாட்சி அதைப்பற்றி பேசுகிறேன்.
ராயல்ஃப்ளைட்டே பெயரில்லாமல் ஆர்மியில் இணைக்கப்பட்டு,
S.N.S.B.S என்று பெயர் மாறியதும் நடந்தது.
ஷாஹி,நேபாலி,ஸைனிக், பிமான ஸேவா என்று பெயர் மாறிய
ஆர்மியிலும் ஸிவிலியனாக இவர் வேலை செய்வதும் தொடர்ந்தது.
எங்கு திரும்ப …
View original post 281 more words
பிரண்டைத் துவையல்.
இதுவும் பத்து வருஷங்களுக்கு முன்னர் எழுதிது தான். பிடித்தவர்கள் செய்யலாம். பாருங்கள். அன்புடன்
பிரண்டை ஒரு மருத்துவ குணமுள்ள கொடிவகையைச் சேர்ந்த
தாவரம்.
மருத்துவத்தில் பலவகைகளில் உபயோகமாவதை சமையலிலும்
சில வழிகளில் சேர்த்துச் செய்வதுண்டு. சிரார்த்தம் செய்யும் போது
முக்கியமாக பிரண்டை சேர்த்துத் துவையல் செய்வது முக்கிய
வியஞ்ஜனமாகக் கொடுப்பது வழக்கத்திலுள்ளது.
பெண்களிருந்தால் கட்டாயம் பிரண்டைத் துவையல் சமையலில்
இடம் பெறும்.
வாய்வுத் தொந்திரவு ஏற்படாமல் விசேஷ சாப்பாட்டைச்
சீரணம் செய்யும் கருத்தில்தான் இப்பழக்கம் வழக்கத்தில்
இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இதே போல உளுந்து அப்பளாம் தயாரிக்கும் போது பிரண்டையை
அரைத்து உப்புடன் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிக்கட்டி
ஆறினவுடன் உளுத்தமாவில் சேர்த்துப் பிசைந்து இடித்துத்தான்
அப்பளாம் தயாரிப்பது வழக்கம்.
எனக்கு சென்னையில் தொட்டியில் துளிர் விட்டிருந்த பிரண்டையைப்
பார்த்ததும், குறைந்த பட்சம் துவையலும், ப்ளாகும் மனஸில்
வந்து விட்டது.
இப்படி அப்படி பெண்ணைப் பண்ணச் சொல்லி சொல்லிப் படம்
எடுத்து வந்து விட்டேன்.
கொஞ்சம் கூடவே சில மாறுதலும் செய்து செய்தது.
என்ன ஒன்று ? செய்ய முடிந்தாலும் முடியாவிட்டாலும்
இப்படியும் ஒரு துவையல் செய்யலாம்.சொல்லுகிறேனையும்
நீங்கள் யாவரும் ஏதாவதொரு ஸமயத்தில்
நினைக்கலாம் என்ற ஒரு நப்பாசை. பதம் ஸரிதானே?
வேண்டியவைகள்.
வெள்ளை எள்-2-டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-2டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு-1 ஸ்பூன்
குண்டு மிளகாய்-8. வேறு மிளகாய்
ஆனால் காரத்திற்குத் தக்கபடி
தோல் சீவிய நீண்ட அளவு 2இஞ்சி
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
புளி சின்ன எலுமிச்சையளவு.
பெருங்காயம்—சிறிது
உப்பு –ருசிக்கு . மிளகு—6 எண்ணிக்கையில்
View original post 123 more words
ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும். 1
என்னுடைய கணவரின் நினைவாக இதை மீள் பதிவு செய்திருக்கிறேன். கணினி புதியது வாங்கிய பிறகே இதைச் செய்திருக்கிறேன். மிகவும் பின்னோக்கிய வருடங்களின் நினைவுப் பதிவு இது. வசதிகள் குறைந்த காலமது. என் வாசகர்கள் திரும்பப் படிப்பார்கள் என்று நினைக்கிறேன்.எல்லோருக்கும் என் அன்பு. அன்புடன்
சுண்டல் வினியோகம், ஸ்வீட் வினியோகம், ஏழைகளுக்கு புடவை
வேஷ்டிவினியோகம், தற்காலத்தில் ஸ்கூல் பசங்களுக்கு இலவச
லேப்டாப் வினியோகம், எலக்க்ஷன் காலத்தில் என்னென்னவோ
பலவித எலெக்டிரிக் ஸாமான்கள் இலவசம் இதெல்லாம்தான்
எல்லோருக்கும் தெரியும்.
எங்களின் காட்மாண்டு வாஸத்தின் போது வித்தியாஸமான ஸாளக்ராம
வினியோகம் செய்யும்படி ஒரு நேரம் அமைந்தது.
ராயல்ஃப்ளைட்டின் சேவையா, எங்கள் வீட்டுக்காரரின் சேவையா?
எதிர் பாராத விதமான காலகட்டம். எதுவும் நடந்திருக்கலாம்.
இப்பவும் யாராவது கேட்டால் முடிந்தபோது வாங்கிக் கொடுக்க
முயற்சிக்கிறோம். என் வீட்டுக்காரரின் அனுபவம்தானிது.
முதலில் ராயல்ஃப்ளைட்.
என்னுடைய பிள்ளைகள் ஆகாயத்தில் ஃப்ளைட் சப்தம் கேட்டவுடனே
அப்பா -ப்ளைட், ஆவ்ரோ, டகோடா, ஹெலிகாப்டர், பெல் என பார்க்காமலே
அதன் பெயரை நான் ஃபஸ்ட், நீ ஃபஸ்ட் என போட்டி போட்டுக்கொண்டு
சொல்வார்கள். அப்பா வேலை செய்யும் ப்ளேன் அவர்களுடயதாக எண்ணம்.
ராயல்ப்ளைட்டுடா அப்பாது இல்லை. என்ன சொன்னாலும் அவர்களுக்கு
அப்பா ப்ளேன்தான்.
ராஜ குடும்பத்திற்கான ப்ளேன்கள், டகோடD.C 3இ ல் ஆரம்பமாகிஆவ்ரோ,
ட்வின் ஆட்டர்,ட்வின் பைனர்,ஹெலிகாப்டர்கள் எல்யூட், பெல்,பூமா, என
வந்து கொண்டிருந்தது. வருடங்கள் ஸரியாக ஞாபகமில்லை. 1970 என்ற வருஷத்தின் பின்னாக இருக்கலாம்.
அப்பொழுதெல்லாம் முக்தி நாத்திற்குப் போக ப்ரைவேட் ஏர்லைன்ஸ் வசதி
எதுவுமில்லை என்றே நினைக்கிறேன்.
ராஜ குடும்பத்தினர் ஸவாரி, அதுதான் பிரயாணம் செய்யும் போது,எங்கு
போகவேண்டுமானாலும் விமானம், உள்ளே அலங்கரிக்கப்பட்டு விசேஷ
வசதிகளுடன் மாறுதலாகிவிடும்.
ஸவாரி இல்லாத நாட்களில், கார்கோவாக மாற்றி விடுவார்கள்.
View original post 195 more words
கணபதியே வருகவருக.
இவ்வருஷம் வினாயக சதுர்த்தி மும்பை படங்கள் எடுக்க முடியாது கட்டுப்பாடுகள். தடைகள். வழக்கம்போல படங்கள் 2017 ஆம் வருடப் படங்களை மீள் பதிவு செய்து வணங்குகிறேன். உலகம் நன்மையுறப் பிரார்த்திப்போம் யாவரும். வாழ்த்துகள். அன்புடன்
வாக்குண்டாம் நல்ல மன முண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
மும்பை கணபதிகளின் அணி வகுப்பு. அவ்விடமுள்ள என் மகன் அமெரிக்கா போவதால் முன்கூட்டியே படங்கள் கேட்டிருந்தேன். குறைந்தது படமாவது போடலாமே.
வேழ முகத்து வினாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.
வெற்றி முகத்து வினாயகனைத் தொழ புத்தி மிகுத்து வரும்.
அல்லல் போம் வல்வினைகள் போம், அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம் போம் நல்ல குணமதிக
மாமருணைக் கோபுரத்தில் வீற்றிருக்குங்
கணபதிையைக் கொதொழுதக்கால்.
கணபதிியின் அடி பணிந்து யாவருக்கும் நன்மைகள் உண்டாக வேண்டி வணங்குவோம்.
நல் வாழ்த்துகள் யாவருக்கும்.





வெந்தயக்கீரைப் புலவு
மிக்க பழைய பதிவு இது. டில்லியில், அதுவும் டிஸம்பரில் இருந்திருக்கிறேனா? எனக்கே நம்ப முடியவில்லை.ஸிம்பிளான பதிவு. படங்களும் அதிகம் இல்லை. ருசிக்கவும். அன்புடன்
இதுவும் சுலபமாகச் செய்யக் கூடிய ஒன்றுதான்.
வேண்டியவைகள்
மெல்லியரக பாஸ்மதி அரிசி—1 கப்
தேங்காய்த் துருவல்—-2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்—–2 டேபிள் ஸ்பூன்
நெய்—–1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம்—-1 சிறியதாக நறுக்கவும்
பூண்டு—–2 இதழ்கள் தட்டிக் கொள்ளவும்
பச்சைப் பட்டாணி—அரைகப்
பச்சை மிளகாய்—2 கீறிக் கொள்ளவும்
சற்று பெறியதாக தக்காளிப் பழம்—1 நறுக்கியது
சுத்தம் செய்து நறுக்கிய வெந்தயக் கீரை—-ஒன்றறை கப்
இஞ்சி—-வாஸனைக்குத் துளி
லவங்கம்–2, ஏலக்காய் 1 , பட்டை வெகு சிறியத் துண்டு
இஷ்டத்திற்கிணங்க முந்திரி, திராட்சை
ருசிக்கு—உப்பு
சீரகம்—சிறிது
செய்முறை—- அரிசியைக் களைந்து தண்ணீரை இறுத்துவைக்கவும்
ஒரு கப் செய்ய ப்ரஷர் பேனே போதுமானது.
பட்டை,லவங்கம், ஏலக்காயை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்.
பேனில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து சீரகம் தாளித்து
நறுக்கிய மிளகாய், வெங்காயம்,பூண்டு இஞ்சியை வதக்கவும்
.மசாலாவைச் சேர்க்கவும்
தேங்காயைச் சேர்த்துப் பிரட்டி கீரையைச் சேர்த்து வதக்கி
கீரை வதங்கியபின் பொடியாக நறுக்கிய தக்காளி,பட்டாணி
சேர்த்துக் கிளறி நிதான தீயில் வைத்து அரிசியையும்
சேர்த்து ப் பிரட்டி உப்பும் கால் டீஸ்பூன் சர்க்கரையும்
சேர்த்து ஒன்றறைக் கப் தண்ணீர் விட்டுக் கிளறி மூடி
ப்ரஷர் குக் செய்யவும் ஒரு விஸிலே போதும்.
ஸிம்மில் 2, 3 நிமிஷங்கள் வைத்து இறக்கவும்
முந்திரி, திராட்சையை யும் தாளிப்பிலேயே சேர்க்கவேண்டும்.
தேங்காய்க்குப் பதில் தேங்காய்ப் பால் சேர்க்கலாம்.
சர்க்கரை சேர்ப்பது கலர் மாறாதிருக்க வேண்டியே.
என்ன இஷ்டமோ…
View original post 39 more words
கல்யாண கணேசர்.
வினாயகசதுர்த்தி வருகிறது. அவரைப்பற்றிய கதையாக இருப்பதால் இதை மீள் பதிவு செய்கிறேன். திரும்பவும்தான் ஒருமுறை படியுங்களேன். அன்புடன்

நமக்கெல்லாம் தெரிந்து பல கணேசர்கள் இருந்தாலும் கல்யாண கணேசரைப் பற்றி முதல் முதலாக இப்பொழுது தான் நான் படித்தேன்.
தமிழ் நாட்டைப் பொருத்த வரையில் கணேசர் கட்டை பிரம்மசாரிதான். அதே வடநாட்டில் அவரை விவாகமானவராகத்தான் சொல்லுவார்கள்.
ஸித்தி,புத்தி ஸமேத விக்னேசுவரர்தான்.
கைலாயகிரியில் பார்வதி பரமேசுவரருக்கு,தன் பிள்ளைகள் இருவருக்கும் விவாகம் செய்விக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டதாம்.
இதனையறிந்த கணேசரும்,முருகரும் , தாய்,தந்தையரிடம் போய் தனக்கே முதலில் விவாகம் செய்து வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.
பிள்ளைகளிருவரும் போட்டி இடுவதைப் பார்த்து,இதை நல்ல முறையில் தீர்க்கவேண்டுமென்று சிவன் விரும்பி இருக்கிறார்.
இந்த பூலோகத்தை யார் முதலில் பிரதக்ஷிணம் செய்து வருகிறீர்களோ, அவனுக்கு முதலில் விவாகம் என்று சொன்னார்.
முருகருக்கு ஏக குஷி. கணேஷசருக்கு இவ்வளவு சீக்கிரமாக உலகைச் சுற்றிவர முடியாது. நாம் வேகமாகப்போய் வந்து விடலாம் என்று மயில் வாகனத்தின் மீது அமர்ந்து உலகைச் சுற்றிவரப் போய்விட்டார்.!
கணேசருக்கோ தன்னால் உலகைச் சுற்றிவர முடியாது. என்ன செய்யலாம் என்று ஒரு வினாடி யோசித்தார்.
மளமளவென்று நியமத்துடன் நீராடி,நியம நிஷ்டைகளைக் கடைப் பிடித்துத், தந்தைதாய் அருகிலே வந்தார். அவர்களைப் பார்த்து,
நீங்கள் இருவரும் இப்படி ஆஸனத்தில் வீற்றிருக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார். அவர்கள் முகத்தில் கேள்விக் குறி?
பூமியைச் சுற்றிவரக் கிளம்பவில்லையா? சீக்கிரம் கிளம்பு பணித்தனர் இருவரும்.
உங்கள் இருவரையும் ஒன்றாகப் பூஜிக்க விரும்புகிறேன்.
இருவரும் அமர்ந்தனர்
கணேசர் அவர்களிருவரையும் பூஜித்து…
View original post 308 more words
எப்படியிருக்கு.?
யாவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.
மீள் பதிவு செய்ய பத்து வருஷங்களாகத் தொடர்கதையாகப் போய்க்கொண்டிருக்கும் கதைகளில் இது முதல் அனுபவம். எவ்வளவு உஷாராக இருந்தாலும் அனுபவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.பத்து வருஷங்களாக. அன்புடன்
எங்கே அனில் வந்தாச்சா?
அவன் வந்து பத்து நிமிஷத்துக்கு மேலே ஆச்சே!
என்ன பண்ரான் பாரு. ஃபேன் பலமா சுத்தறது. சாப்டப்றம்
தூக்கம்தான் வரும். தடார்னு ஓசை கேக்கறதே.
ஓடிப் போய்ப் பார்த்தால் நான் ஓடலே. வேலை செய்யும்
மாதவி பார்க்கிறாள்.
அம்மா, அம்மா அந்த அனில்தான் மோடாவோட கீழே
விழுந்துட்டான். தூக்கக் கலக்கம்போல!
விழுந்தவனுக்கு ஒரு உணர்ச்சியுமில்லை.
ஸந்தேகப்பட்டது ஸரியாப் போச்சு. மத்தியானத்திலேயே
ஏதோ குடிச்சிருக்கான்.
ஏஜன்ஸி,ஏஜன்ஸி. எதுக்கெடுத்தாலும் ஏஜன்ஸி.
நல்லவனா அனுப்பு. நல்லவனாகத்தான் கிடைத்திருக்கிறான்
நம்பிக்கையோடு பணம் கட்டி, நல்லவனா நினைத்தவன்
விழுந்து கிடக்கிறான்.
அவன் ஒரு பிஹாரைச் சேர்ந்தவன். ஆறு குழந்தைகள்
அவனுக்கு. வயதானவரைப் பார்த்துக் கொள்ள வந்தவன்.
ஸந்தேகம் ஸரியாக இருக்கு. அவன் இப்படி, இவன் இப்படின்னு
சொன்னால் ஆள் கிடைக்குமா? மனதில் தோன்றியது ஸரி
ஆக இருக்கு. நடு ராத்ரியில் எட்டிப் பாத்தா ஸெல்லெ தாளமாக்கி
அதுவும் பாடரது, இவனும் படுத்துண்டே பாடறான். வெளியில்
யாரோ பாடரதா நினைச்சுண்டு.
இரண்டு வார்த்தை ஜோரா ஹிந்தியிலே கோவமா சொன்ன பிறகு
பேசாத இருந்தான்.
ராத்ரி பத்து மணிக்கு வரச்சே வாயிலே பான் அது இது , கேட்டா
குச் நஹி, தோடா சுபாரி, வாஸனை மறைக்க பாக்காம்.
இன்று ப்ரத்யக்ஷ்க்ஷமாக கண் காட்சி.
ஸரி வேற ஆள் ஏஜன்ஸி அனுப்புவதாக, எல்லாம் ஒண்ணோட
ஒண்ணு கண்ணான கண்ணாக இப்படி.
தேர்வுக்கு வந்தான் ராஜேஷ் கன்னாவோட இருந்த ஆள்.
View original post 351 more words






