காரக்குழம்பு
எதையாவது மீள் பதிவு செய்யலாம் என்று யோசித்ததில் காரக்குழம்பு கூடவே இருந்தது. பிரமாதமானது இல்லை. ஒரு மாறுதல். நீங்களும் சற்று மாறுதல் செய்து கொள்ளுங்கள். அன்புடன்
சமையல் எழுதியும் வெகு நாட்களாயிற்று. ஏதாவது எழுதுவோம்
என்றுத் தோன்றியது.
சென்னையிலிருந்தபோது என் பெண்ணின் சினேகிதி ஒருவர்
வந்திருந்தாள்.
இது எப்படி,செய்வீர்கள், அது எப்படிச் செய்வீர்களென்று பல வித
குறிப்புகளைக் கேட்டுக் கொண்டே இருந்தாள்.
எனக்கும் கேட்ட விஷயங்களில், சில வித்தியாஸமான அவளின்
சமையல் குறிப்புகளையும் சொன்னாள்.
நமது வழக்கமான குறிப்புகளில் அவர்களது சின்ன வித்தியாஸம்.
நான் காரக்குழம்பு என்ற பெயரில் செய்ததில்லை. மற்றும்
ஹோட்டலில் சாப்பிடப் போனால் கூட இப்படி ஒரு வகையும்
கொடுப்பது தெரிந்தது.
ஸரி இதையும் செய்ததில், நல்ல சுவையுடன் விரும்பிச்
சாப்பிடுவதை பார்க்க முடிந்தது.
ப்ரமாதம் ஒன்றுமில்லை. வெங்காயப்,பூண்டு சேர்மானம்.
பிடித்தவர்களுக்கு ருசி.
வாருங்கள். செய்து ருசியுங்கள். சின்ன அளவில்ச் செய்தது.
அதையே நீங்களும் செய்து பாருங்கள்.
கொதிக்கத் தயார்நிலையில்க் கலவை
வேண்டியவைகளைப் பார்ப்போம்.
அரைப்பதற்கு
வெங்காயம்—-ஒன்று. ஸாம்பார் வெங்காயமானால் எண்ணிக்கையில்
ஏழு அல்லது எட்டு. தோல் நீக்கவும்.
தக்காளிப்பழம்—-ஒன்று
உரித்த பூண்டு இதழ்கள்—5
மிளகு—8.
கரைக்க— புளிஒரு பெரிய நெல்லிக்காயளவு
பொடிகள்
ஸாம்பார்பொடி—1 டீஸ்பூன்
வெந்தயப்பொடி—கால் டீஸ்பூன்.
தாளித்துக் கொட்ட
கடுகு,உளுத்தம் பருப்பு—சிறிதளவு
பெருங்காயம்—சிறிது
மிளகாய் வற்றல்—1
நல்லெண்ணெய்—-4 டீஸ்பூன்.
வாஸனைக்கு—கரிவேப்பிலை
ருசிக்கு—உப்பு.
செய்முறை.
புளியை நன்றாக ஊற வைத்து ஒரு கப் அளவிற்குக் கரைத்துக் கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் தண்ணீர் விடாது அரைத்துக்
கொள்ளவும்.
புளித் தண்ணீரில் அரைத்ததைச் சேர்த்துக் கரைக்கவும்.
திட்டமாக உப்பு சேர்க்கவும்.
ஸாம்பார்பொடி,வெந்தயப் பொடியையும் சேர்க்கவும்.
View original post 43 more words
அன்னையர் தினப்பதிவு–17
அப்பா பூஜையில் உபயோகப்படுத்திய சங்கைப் பார்த்ததில் ஒரு ஆனந்தம். அதனை ஒட்டியே இந்தப்பதிவு நீள்கிறது. அம்மாவின் அந்த ஒருவருஷம். டாக்டரின் ராசி என்று செல்கிறதுஇந்தப் பதினேழாவதுப் பதிவு. நேற்று அன்னையர்தினப்பதிவு முதலாவதை வேர்ட்பிரஸ்ஸே ஞாபகப்படுத்தி இருந்தார்கள் விசேஷப் பதிவினில், படியுங்கள். அன்புடன்
வெள்ளி வேலைப்பாடுகளுடன் கூடிய அப்பாவின் புராதன சங்கு
தாமதமாகத் தொடர்ந்தாலும், ஒரு சங்கின் தரிசனம் பற்றி
எழுதுகிறேன்.
ஒருமாதத்திற்கு முன்னர் என்பிள்ளையின் குடும்பத்தினருடன் புனே போய்
வந்த போது,அவ்விடம்தங்கிய என்னுடையஅம்மா வழி மூன்றுதலை
முறையிலானநெருக்க உறவுகுடும்பத்தினருடன் ஒருநாள் தங்கி இருந்தேன்.
பேச்சுக்கள் எங்கெங்கோ சென்று அப்பாவின் பூஜையில் உபயோகித்த
சிறியஉருவிலான பழமை வாய்ந்த சங்கின் ஞாபகம்வந்தது.
அம்மா, அதை அவர்கள் அப்பாவை பூஜையில் உபயோகித்துக் கொள்ளுங்கள்
எனக் கொடுத்திருந்தார். அதைப்பற்றி விசாரித்தேன்.
அதை பூஜையில் உபயோகிப்பதாகவும், இவ்வளவு பழமை வாய்ந்தது
எனத்தெரியாதெனவும் சொல்லி அதை எடுத்துக் காட்டினார்
.அவரப்பாவின்பூஜையது.
எங்கள் வரவேற்பரையில்
நடராஜருடன் பித்தளைச் சங்கு.
கணவன் மனைவி இருவரும் உத்தியோகத்திலிருந்தாலும், ஆசார சீலமான
குடும்பம்,
அந்தச் சங்கின் தரிசனம் மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. அந்தக் குடும்பமும்
அவர்களின் அன்பும் சொல்ல முடியாத ஆனந்தத்தைத் தந்தது.
பளிங்குக் கல்லிலான
நானும் இருக்கிறேன்.
சங்கை படமெடுத்து வந்தேன். பொக்கிஷமான தரிசனம் அல்லவா?
பின்னாடி வரும் டாக்டரும் பரிச்சயமானதும் அவரின் தாத்தாவிற்கு
வைத்தியம் செய்த போதுதான்.
இது ஒரு ஐம்பது வருஷக் கதை. உன் அப்பா பூஜையில் உபயோகித்தது,
என் அப்பாவின் பொக்கிஷம் என்றுசொல்லிவிட்டு வந்தேன்.
இனி அம்மாவைப் பார்க்கலாம்.
அம்மாவிற்கு எங்கும்,போகவர முடியாத அந்த வொரு வருடம் எப்படிக்
கழிந்தது என்ற போது அதுவும் ஸரியான முறையில்தான்க்
கழிந்தது. என் பெண் அவர்களுடன் இருந்தவளைத் தொடர்ந்து
படிக்க…
View original post 467 more words
சீஸ்பால்ஸ்
சற்று உலர்ந்த Bபிரட்டைப் பொடி செய்து தயாரித்த சிற்றுண்டி இது. சீஸ் யாவரும் விரும்பும் பொருளாகவும் ஆகிவிட்டது. செய்துதான் பாருங்களேன். அன்புடன்
மேலே இருப்பது சீஸ் பால் செய்யஉபயோகப்படுத்திய சில ஸாமான்கள். நல்ல மழை,குளிர் போன்ற ஸமயங்களில் யாவரும் காபி,டீயுடன் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
செய்வது ஸுலபம்தான். இக்காலங்களில் சீஸ் சேர்த்த பண்டங்கள் யாவரும் விரும்பிச் சாப்பிடும் பொருளாகவும் ஆகிவிட்டது. பிரட்,உருளைக்கிழங்கு, சீஸ்,காய்கறிகள்,எண்ணெய் இவை யாவுமே முக்கியப் பொருட்கள். வாங்க நீங்கள் யாவரும். எப்படிச் செய்வதென்று பார்ப்போம். அப்படியே அளவுகளையும்.பார்ப்போம்.
பிரட்ஸ்லைஸ் —3, பெரிய அளவிலான உருளைக்கிழங்கு –2. காப்ஸிகம்1 துருவின சீஸ் மூன்று டேபிள்ஸ்பூன், சிறிது முட்டகோஸ்,பொரிப்பதற்கு எண்ணெய். ருசிக்கு–உப்பு, மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன். பச்சைமிளகாய் அரைத்த விழுது சிறிதளவு
செய்முறை—–பிரட்டை மிக்ஸியிலிட்டுப் மாவாகப்பொடித்துக்கொள்ளவும்.காப்ஸிகம்,கோஸ் இரண்டையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக் கிழங்கை நன்றாக வேக வைத்து தோலை உறித்து சூடு இருக்கும்போதே நன்றாக மசித்துக் கொள்ளவும். ஆறினவுடன் பிரட் பொடியில் ஓரளவு பாக்கி வைத்துக்கொண்டு மசித்த உருளைக் கிழங்குடன் பொடியைச் சேர்த்துப் பிசையவும்.மிளகாய் விழுது,உப்பு சேர்த்துக் கெட்டியான பதத்தில் பிசையவும். தண்ணீர் விடக் கூடாது. வேகவைத்த உருளைக்கிழங்கின் ஈரப்பசைக்குப் போதுமான ரொட்டித்தூள் போட்டால் போதுமானது.
அடுத்து பொடியாக நறுக்கிய கேப்ஸிகம்,கோஸுடன் சீஸ்,மிளகுப்பொடி,உப்பு சிறிதுசேர்த்துக் கலக்கவும். இதில் உப்பைக் குறைத்துப் போட்டால் நீர்க்காமல் இருக்கும்.
பிசைந்து வைத்திருக்கும் உருளைக்கலவையில் ஒரு சிறிய எலுமிச்சை அளவு எடுத்து சிறிய கிண்ணம் போல விரல்களால் அகட்டிச் செய்து கொள்ளவும்.
அதில் சிறிதளவு காய்கறிக் கலவையை வைத்து பக்குவமாக மூடி, லேசாக உருட்டி பிரட்பொடியில் லேசாகப் பிரட்டவும்…
View original post 44 more words
அன்னையர்தினப்பதிவு—16
போகிறவர்கள் போய்விட்டாலும், காரியங்கள் நடக்க வேண்டுமே! அந்தநாள்க் கதைகள்.அம்மாவினுடயது அலாதிதானே. படியுங்கள். பகுதி 16. அன்புடன்
என்ன எந்தமாதிரி ஒரு இடத்தில்க் கொண்டு நிறுத்தி விட்டுத்
தொடரவில்லை. அந்த அளவிற்கு சுகவீனம் எனக்கு.
இப்போது எழுதத் துவங்க ஆரம்பித்து இருக்கிறேன்.
வாருங்கள். என்னவென்று,
வாசலில் சவுக்கு வண்டி அதாவது விரகுக்கட்டை விற்பனைக்கு
வந்திருக்கு, வாங்கிப்போட்டால்தான் காயும்.
பெரிய காரியம் இருக்கு. நேக்கு எங்கும் போக முடியாது.
நீதான் செய்யணும். பசங்கள் நீ அழுதால் அதுகளும் அழும்.
ஆச்சு ஒருகாரியம்.நல்லபடியா போயாச்சு. மீதியைச்
செய்து கடையேத்தணும். ஒரு பத்து குண்டாவது விரகுவேணும்.
அப்படியே பொளந்தும் குடுத்துடச் சொல்லு. காசு கொடுத்துடரேன்னு
சொல்லு. வேலை சுலபமாகப் போய்விடும். அம்மா.
வாசலில் வந்தவுடனே மத்தவாள்ளாம் வந்துடரா.
நீ போ நாங்க பொளந்து வாங்கி வைக்கிரோம். பணத்தை
வாங்கிக் கொண்டு பொருப்பை ஏற்றுக் கொள்கிரார்கள்.
உங்கப்பா கேட்டாள்னு இந்த சின்ன பையன்கையாலே
மீதி காரியம் எல்லாம் வேண்டாம்.
ஸொத்தா வைச்சிருக்கோம். என் கை பில்லு வாங்கி
உங்க அத்திம்போரோ, மாமாவோ செஞ்சூடட்டும். அது
போதும். மீதி என்ன வேண்டுமோ,வேண்டாதோ அதில்
கவனம் செய். இது அம்மா
பார் எனக்கும் இதெல்லாம் ஒண்ணுமே தெரியாது,அக்காவின்
குறை.
தானம்,தர்மம், எல்லாம் எது செய்யணுமோ அதெல்லாம்
குறையாதிருக்க ஏற்பாடுகள் நடந்தது.
மெட்ராஸுலே அவளுக்குச் சொல்லிகூட இருக்க மாட்டார்கள்.
இல்லாட்டா அனுப்பி இருக்க மாட்டார்களா. அம்மாவிற்கு
இப்போதாவது பெண் வருவாளா என்ற நைப்பாசை.
அம்மாவுடய உடன்பிறந்தவர், மாப்பிள்ளை என எல்லோரும் வந்தாகிவிட்டது.
ஆளுக்கொரு லக்ஷணமான புடவையுடன்.
உடன்பிறந்தவர்,மைத்துனர், மாப்பிள்ளை,பிள்ளை என…
View original post 462 more words
ஜெவ்வரிசி கிச்சடி
உங்கள் பார்வைக்கு ஜெவ்வரிசிக் கிச்சடி பத்து வருஷங்களுக்கு முன்னர் பிரசுரித்ததைக் கொண்டுவந்து இருக்கிரேன். உங்கள் அபிப்ராயம் சொல்லுங்கள். அன்புடன்
என்னுடைய மருமகள் சுமன் செய்யும் விசேஷமான
சிலவகைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வேண்டியவைகள்——ஜெவ்வரிசி(பெறியவகை)-1கப்
வேர்க் கடலை—-1கப்
எண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்.
நறுக்கிய பச்சை மிளகாய்—-2
ஜீரகம்—–அரை டீஸ்பூன
பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்கு-முக்கால்கப்
நல்லமோர்—அரைகப்
நறுக்கிய கொத்தமல்லி– ஒரு டேபிள் ஸ்பூன்
ருசிக்கு—உப்பு, அரை டீஸ்பூன் சர்க்கரை
செய்முறை——தயாரிப்பதற்கு 5, 6 மணிநேர முன்பே
ஜவ்வரிசியை நன்றாகக் களைந்து தண்ணீரை ஒட்ட
வடித்துவிட்டு மோரைக் கலந்து ஊற விடவும்.
ஊறின ஜெவ்வரிசி உதிர், உதிராகவும்,நன்றாக
ஊறியும் இருக்க வேண்டும்.
வேர்க் கடலையை சிவக்க வறுத்து தோல் நீக்கி
ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி ஜீரகத்தைத்
தாளித்து, பச்சைமிளகாய் ,கிழங்குத் துண்டங்களைச்
சேர்த்து வதக்கவும்.
கிழங்கு வதங்கியதும், ஊறின ஜெவ்வரிசியை
சேர்த்து உப்பும் சர்க்கரையும் கலந்து வதக்கவும்.
தீ மிதமாக இருக்கட்டும்.
நன்றாகச் சூடேறி வதங்கியபின் வேர்க்கடலைப்
பொடியை சேரத்துக் கிளறி சூடாக இறக்கவும்.
விருப்பத்திற்கு ஏற்ப எலுமிச்சை சாறு சேர்த்து
பச்சைக் கொத்தமல்லியைத் தூவவும்.
விரத நாட்களில் அன்னம் சேராத உணவாக இதைக்
கருதி உண்பதால் வெங்காயம் சேர்ப்பதில்லை..
எண்ணெய் வேண்டுமானால் அதிகம் சேருங்கள்.
காரமும் அப்படியே.
அன்னையர் தினம்–15
எல்லாம் அடுத்தடுத்து இல்லாவிட்டாலும் நிகழ்வுகள் முக்யமானதை எழுதுகிறேன். மனம் கலந்த உணர்ச்சிகள் உங்கள் பார்வைக்கு. அன்புடன்
எவ்வளவு ஆசை ஆசையாக குழந்தையை வளர்த்தோம். அந்தக் குழந்தையின்
நலம் குறித்துக் கூட அவர்கள் கடிதம் எழுதவில்லை அம்மா மனக் கஷ்டப்பட்டாலும்
வார்த்தைகளில் சொல்லுவார். என்ன பிரமாதம் போ. ஊரில எத்தனையோ குழந்தைகளிருக்கு.
அதுகளைக் கொஞ்சினால்ப் போகிறது. எங்கேயாவது நன்றாக இருந்தால்ப் போதுமானது
என்று அடிக்கடி சொல்லுவார்கள்.
அன்னையர் தினப்பதிவு ஆரம்பித்து அடுத்த வருடமும் வந்து விட்டது.
என்னுடைய இயலாமையை நினைத்துக் கொண்டேன்.
காலம் முழுவதும் ஏதோ போராட்டங்கள் இருந்தாலும், பொருட் படுத்தாது அதிலிருந்து
மீண்டுகொண்டே காலம் கடத்தினது பொதுஜன உறவுகளும், பிரருக்கு உதவி செய்து
மகிழும் மனப்பான்மையும் இருந்ததால்தான்.
காலங்கள் ஓடிக்கொண்டு இருந்தது. மிகுதி இருந்த நிலத்தையும் விற்று அடுத்த
பெண்ணிற்கும் கலியாணம் செய்து முடித்து காலம் பறந்து கொண்டு இருந்தது.
எவ்வளவோ விஷயங்கள்.
என்னுடைய பெண்ணை தன்னுடன் இருக்க வேண்டும் என்று
சொல்லி அப்பா அழைத்துப் போனது. தனக்குப் பேரன் கையினால் அந்திமக்
கிரியைகள் செய்ய வேண்டுமென்று தான் நன்றாக இருக்கும்போதே உறுதி
மொழி வாங்கிக் கொண்டது போன்றவைகள் அந்த நாளைய பெற்றோர்களின்
ஆசைகள்.
கான்ஸர். இந்த வியாதி வந்தால் , குடும்பத்தின் செல்வ நிலைக்கும் ஏதே வியாதி
பிடித்து விடும் என்று சொல்வார்கள்.
அந்த நோயினால் அப்பா பீடிக்கப் பட்டார். ஆனால் அவர் ஒரு மருந்தும் சாப்பிடவே
மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து ஒரு வலிமருந்து கூட சாப்பிடாமல் இருந்து தான்
அவருடைய வாழ்வை முடித்தார்.
அம்மாதிரி…
View original post 357 more words
அன்னையர்தினம் 14
இன்று சொல்லுகிறேன் என்ற இந்த பிளாகை வேர்ல்ட் பிரஸ்ஸில் ஆரம்பித்து 12 வருஷங்கள் பூர்த்தி ஆகிறது. வாழ்த்து வந்தது. மிக்க நன்றி அவர்களுக்கு.
அன்னையர்தினப் பதிவு 14 உங்கள் பார்வைக்கு வருகிறது. பெண்ணிற்குப் பணிவு இருந்தால்மட்டும் போதாது. அவர்களின் பெற்றோருக்கும் பணிவு வேண்டும். இப்படியும் சில நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு. அன்புடன்
கல்யாணம் ஆகிவி்ட்டது. விசாரம் விட்டது என்பது எல்லோருடைய
வாக்குகளும்.
விசாரங்கள், ஆரம்பம்தானே சிலருடைய வாழ்க்கைகளிில்.
ரிடயரான பின்னும் பெண்கள் பள்ளியில் அப்பாவிற்கு ஆங்காங்கே ஒரு
ஆறுமாத காலத்திற்கு வேலை கிடைத்துக் கொண்டிருந்தது. அப்படி ஒரு முறை
சென்னை வந்தபோது பெண் பாசம் பெண் வீட்டிற்குப் போயுள்ளார்.
இரண்டொருநாள் தங்கி விட்டு தங்க இடம் பார்த்துப் போவதாகச் சொல்லியும்
இருக்கிரார். அப்படி இருக்கையில் அவர்கள், அவ்விடமே தங்கி விடுவாரோ, என்ற
ஐயத்தில், அக்காவிடம் கேள்வி எழுப்பி இருக்கிரார்கள்.
அக்காவிற்கு மனது பொருக்க முடியாமல்,
அப்பா நீங்கள் இவ்விடமே தங்கிவிடுவீர்களோ என்று அச்சப் படுகிரார்கள்
என்று சொல்லி விட்டாள்.
போதுமே கோபக்கார மனிதர்களுள் ஒருவராகிய அப்பாவிற்கு, கிளம்பி விட்டார்.
எதிரே வந்த மாப்பிள்ளை, பெட்டியை கையில் வாங்கிக் கொண்டு, கொண்டுவிட
எத்தனித்தவரை, உங்கள் மரியாதை உங்களுடன் இருக்கட்டும், என்று சொல்லியபடி
வெளியே வந்தவர்தான்.
எந்தக் காரணத்தைக் கொண்டும், திரும்பப் போகவேயில்லை.
பெற்றவருக்கு இம்மாதிரி வீம்பு உண்டா? பெண்ணைப் படுத்துவதற்கு இதைவிட வேறு
காரணம் வேண்டுமா?
உங்களால் நம்ப முடியாது. இதை வைத்தே எவ்வளவோ நடந்து விட்டது.
அம்மா யார் எதைச் சொன்னாலும், வாவென்ற வார்த்தை சொல்லி, வரவேற்காமல்ப்
போனாலும், அம்மா அங்கு போய்ப் பார்ப்பதை விடவில்லை.
யார் சென்னை சென்றாலும், போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள் என்று சொல்லி
அனுப்புவார்கள். இப்படியே மூன்று வருஷங்கள் கடந்தது.
அப்படிதான் அன்றொருநாள் கோவிலாராத்தில் ராஜி வந்திருந்தாள்.
அவளும் சென்னையில்தான் வாழ்க்கைப்…
View original post 529 more words
ஆசீர்வாதம் வேண்டுதல்
சொல்லுகிறேன் வலைப்பூவின் நட்புகள் all tomy,face book friendsயாவரின் ஆசிகளையும் வேண்டி இந்தப் பதிவு. அன்புடன் kamatchi mahalingam. காமாட்சி மஹாலிங்கம் மும்பை/ / யாவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் 14—4–2021
மும்பை —13—4—2021

அன்னையர் தினம்—-13
கோபக்காரமனிதரை எப்படி எல்லாம் ஸமாளிக்க வேண்டியிருந்தது? இது ஒருமாதிரி ஸமாளிப்பு. பதிவு 13 ஆனாலும் பாருங்கள், இன்னும் வருமே. அன்புடன்
டிஸம்பரில் டில்லி
மாடியில் பூக்கள்
பணத்திற்கு ஏற்பாடுகள் ஒத்துழைக்கும் அது ஒன்றே போதும்
அம்மாவுக்கு. அதுவே ஸம்மதத்திற்கு அறிகுறிதானே.
அதிகம் விமரிசித்தால் வேறு ஏதாகிலும் ஆக்ஷேபத்தில்க்
கொண்டுவிட்டு விடுமென்பது அம்மாவின் கணிப்பு. அத்தை
குடும்பத்தின் நல்லது கோருபவளே . இருப்பினும் சில ஸமயம்
வயதில்ப் பெரியவள் என்ற முறையில் வார்த்தைகள் விழுந்து
விடும்.
சந்தடி சாக்கில் கந்த பொடி வாஸனையாக அப்பா கோபத்திற்கு ஏதுவாக
சில ஸமயம் வார்த்தைகள் அமைந்து விடும்.
அம்மாதிரியாகத்தான் ஆரம்பமானது கால்க்காசு பெராத ப்ரச்சினை.
ஒருகாலத்தில் உனக்கு காங்ரஸ் உசத்தி. இப்போ பிடிக்காது.
உனக்கு வரப்போற மாப்பிள்ளை கதர்தான் கட்டுவானாம்.
போதாதா வார்த்தைகள்.
இதெல்லாம் என்னிடம் சொல்லவில்லை. நான் எதுவும் செய்ய வேண்டாம்.
வேஷ்டியெல்லாம் நான் தொட்டுக் கொடுக்க மாட்டேன்.
எனக்குக் கொள்கைகள் ஒத்து வராது. கன்யாதானம் கூட முடியாது.
கோபவார்த்தைகள். தாம்,தூம்
என்ன அம்மா இப்படி தூபம் போட்டூட்டியே. கதர்,ஸாதாரண வேஷ்டி
இதெல்லாம் கூட வித்தியாஸம் தெரியாத மனிதருக்கு, என்னம்மா
உன்னைச் சொல்ல முடியும்?
எல்லாம் தெரிந்த நீயே
ஆமாம் அப்புறம் தெரியரைதை விட இப்பவே தெரியட்டுமே.
எவ்வளவு நாள் பயப்படறது. வேணும்னுதான் சொன்னேன்,இது
அத்தை.
ஸரி. விட்டுடு. உனக்கும் சொல்ல முடியாது. இந்தப் பேச்சு இனி
எடுக்காதே. நான் பாத்துக்கறேன்.
ஓ!!!!!!!!!
இதற்கெல்லாம் கூட அணை போட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
மளமளவென்று யோசனைகள். மனதிலுள்ளதைச் சொன்னால் அதை
அப்படியே உணர்த்தி…
View original post 529 more words
தாய்லாந்து ஸ்டைல் நூடுல்ஸ்.
தாய்லாந்துஸ்டைல் நூடல்ஸ் செய்முறைக் குறிப்புகள் இது. இக்காலத்தில் யாவருக்கும் புதுப்புது முறைகள் விரும்புகிரார்கள். ரஸிக்கிரார்கள். அப்படி இதுவும் ஒன்று. பாருங்கள்.செய்யுங்கள் விரும்பினால். அன்புடன்
ஒருமாதத்திற்கு அதிகமாகவே உடல்நலம் ஸரியில்லாததால் எதுவும்
புதியதாகஎழுத முடியவில்லை. ஜெனிவாவிலிருந்து மருமகள் இதைச்
செய்து படங்களும்அனுப்பி இருந்தாள்
நீங்களும் செய்து ரஸியுங்கள்.
தாய்லாந்து வகை நூடல்ஸ் இது. நமக்குக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு
நாம் தயாரிக்கலாம். ஏதாவதொரு ஸாமான் இல்லாவிட்டால் அதற்கு மாற்றாக
ஏதாவதை உபயோகித்தால்ப் போகிறது.
வேண்டியவைகள்.
நூடல்ஸ்—-250 கிராம்.
எண்ணெய்—வதக்க,பொரிக்க—-4 டேபிள்ஸ்பூன்.
வெரும் வாணலியில் வறுத்துத் தோல்நீக்கி ஒன்றிரண்டாய்ப் பொடித்த வேர்க்கடலை கால் கப்.
நல்ல பனீரோ,அல்லது ஸோயா பனீரோ நறுக்கியது—1 கப்
பனீரை ஊறவைக்க ஸோயா சாஸ் —-1டீஸ்பூன்.
அரைப்பதற்கு வேண்டிய ஸாமான்கள்
சிகப்பு மிளகாய்—ஒன்று.பச்சை மிளகாயும் போடலாம்.
லவங்கம்—3
பூண்டு—2 இதழ்
இஞ்சி–தோல் சீவியது ஒரு அங்குல நீளம்.
ஸோயாசாஸ்—3 டீஸ்பூன்
இவைகளுடன் ஒருபாதி எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும்.
மேலே தூவி அலங்கரிக்க, ருசி கொடுக்க வேண்டிய ஸாமன்கள்.
ஸ்பிரிங் ஆனியன், அதாவது வெங்காயத்தாள் மூன்று செடிகள், துண்டுதுண்டாக
நறுக்கியது
அரை கப் பச்சைக் கொத்தமல்லி பொடியாக நறுக்கியது.
பேஸில் என்னும் துளசி இலை விருப்பத்திற்கு சிறிது.
ஒருகப் முளைவிட்ட தானியங்கள், விருப்பத்தைப் பொறுத்து.
ருசிக்கு,உப்பு. காரம் அதிகமாக்க,சில்லி சாஸ்.அல்லது பச்சை மிளகாய்.
மேகி விஜிடபிள் க்யூப் மஸாலாவும் உபயோகிக்கலாம்.
செய்முறை.
பாத்திரத்தில் அதிகமாக தண்ணீர் வைத்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்தபின் , நூடல்ஸைப் போட்டு வேகவைத்து, வடிதட்டில்க் கொட்டி,
அதன்மேல்க், குளிர்ந்த தண்ணீரை தாராளமாக
விட்டு அலசி, வடிக்கட்டித் துளிஎண்ணெய் சேர்த்துக்…
View original post 147 more words





