எழுதாத குறிப்பின் படங்கள்.

இப்படியும் சமையல் நடக்கிறது. மேலும்
அரிசி உப்புமா

அரிசி உப்புமா[/capt
[caption id="attachment_12098" align="aligncenter" width="455"]
உப்புமா குக்கரில்
தீபாவளி வாழ்த்துகள்.
.
அன்புள்ளம் கொண்ட சொல்லுகிறேன் அபிமானிகள் யாவருக்கும் என்னுடைய அன்பு கனிந்த நல்வாழ்த்துகளும், ஆசிகளும். ஸந்தோஷம் பொங்கும் தீபாவளியாக இருக்க வாழ்த்துகள். Happy deepavali.
வாழ்த்துகள்

யாவருக்கும் ஸரஸ்வதி பூஜை,அடுத்துவரும் விஜயதசமி நன்நாளிற்கு இனிய வாழ்த்துகளும், மனமுவந்த ஆசிகளும். அன்புடன்
எடுத்துக் கொள்ளுங்கள்.
மும்பைப்பிள்ளையார்கள்.
வழக்கம் போல மும்பைப்பிள்ளையார்களை உங்களுக்கு தரிசிக்கப் போட்டு இருக்கிறேன்.
மூலமே கணத்திற்கெல்லாம் முதல்வனாம் என்னப்ப காஞ்சி
ஆலடிப் பிள்ளையாரே அடியேனுக்ககு அருள் செய்வாயே.
வணங்குவோம் . வாழ்த்துவார்.
புல்லாங்குழல் வைப்பதற்கு முன்படமா? அதனாலென்ன?
இன்னும் இரண்டொரு வினாயகரையும் தரிசிப்போம்.
அல்லல் போம் வல்வினை போம்.அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம் போம் நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்தில் வீற்றிருக்குங்
கணபதியைக் கைதொழுதக்கால்.
யாவருக்கும் வினாயக சதுர்த்தி வாழ்த்துகள்.
அன்புடன்
வாழ்த்துகள்
வரலக்ஷ்மி பூஜை வாழ்த்துகள் அனைத்துப் பெண்களுக்கும், பெண்குழந்தைகளுக்கும். ஆசியும்,அன்பும் சொல்லுகிறேன்.

காவிரி இல்லையிது.
பதினெட்டாம் பெருக்கெல்லாம் கொண்டாடிய காவிரி இல்லையிது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவைத் தாண்டி பயமுறுத்திய தில்லி யமுனை சீற்றம் குறைந்து காணப்பட்ட ஒரு படம் இது. நதிக்கரையில் வசித்த மக்களெல்லாம், திரும்ப வர ஆரம்பித்து உள்ளனர். யமுனையில் அதிக அளவு தண்ணீரே பார்க்க முடிந்ததில்லை. ஐந்து,ஆறு வருஷங்களுக்குப் பிறகு, தொடர் மழையும்,யமுனையில் வெள்ளமும் என்று சொல்லக் கேட்டேன்.
பாருங்கள் யமுனையை!!
மக்களெல்லாம் ஒருபுறம் திரும்ப ஆரம்பித்த பிறகோ முன்போ வளர்ப்புச் செல்லங்களின் நிலையும் எப்படி இருந்திருக்கும்?
நான் எதையும் நேரில் பார்க்கவில்லை. நீங்களும் பார்க்கலாமே என்ற ஒரு எண்ணம். நமக்கு உதவுவது செய்தித் தாள்கள்.
மதில்மேல்ப் பூனயாக என்று சொல்வார்களே? நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். என்னை வளர்த்தவர்கள் வந்து விடுவார்கள். வீட்டுப் பக்கம்தான் இது.
நன்றியுள்ள நாங்களும் திரும்புகிறோம். எங்கள் எஜமானர்களும் வந்திடுவார்கள். எங்கள் வீடுதான் அருகில் இருப்பது. நான் இன்னும் குழந்தை,குட்டிங்களுக்கு இடம் தேடணும். புரிதுங்களா?

நானும் எவ்வளவு தண்ணியிலே வரேன் தெரியுமா? தண்ணியெல்லாம் வடிஞ்சுடுங்கோ!என்னிடம் பேசுவது போன்ற ஒரு கற்பனை. அவ்வளவு தான்.
மஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA

எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேறாக இருந்தாலும், கொண்டாடும் ஸமயம் வேறாக இருந்தாலும் கதை, புராணங்கள் ஒத்துப் போகும்.
வருஷப்பிறப்பைக் கொண்டாடுவதில், ஆந்திர கர்னாடக மானிலங்கள் கொண்டாடும் யுகாதி என்ற அதே தினத்தில்தான் மராட்டியரும் GUDI PADWA குடி பட்வா என்று வருஷப்பிறப்பைக் கொண்டாடுகிறார்கள்
குதி என்ற பதத்திற்கு மராட்டியில் வெற்றிக் கம்பம் என்ற பொருளாம். ராவண வதத்திற்குப்பின், வனவாஸம் முடிந்து ஸீதையுடன் ராமர் அயோத்தி திரும்பிய அந்த நாளை, மக்கள் வெற்றிக்கம்பம் நாட்டிக் கொண்டாடியதாகவும், அதன் ஞாபகார்த்தமாகவே மராட்டிய மக்களும், தங்கள் இல்லந்தோறும் வெற்றிக் கம்பங்களை நட்டு, இவ்வருஷப்பிறப்பைக் கொண்டாடுவதாகவும் சொல்கிரார்கள். இந்நாள் மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் ஒரு நன்னாள்.
சத்ரபதி சிவாஜி மஹாராஷ்டிரத்தை ஜெயித்த நன்னாளாகவும் இதைக்கொண்டாடுகிரார்கள்.
ரங்கோலி அலங்கார மத்தியில்
வீட்டின் முன்பாக ஒரு மூங்கிலில் மாவிலை,புஷ்ப அலங்காரங்கள் செய்து, உச்சியில் செப்புக் கலசத்தைக் கவிழ்த்து ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டிருக்கும்.
அதனடியில் வெற்றியின் ஞாபகார்த்தமாக காவிநிறத்துணி கட்டப்பட்டிருக்கும். மற்றும் அலங்காரங்களுடன் இருக்கும் அந்தக் கம்பமே வெற்றிக் கம்பம்.

அதற்கு வீட்டிலுள்ளவர்கள் பூஜை செய்கிறார்கள்.
வருஷப்பிறப்பன்று அதிகாலையிலேயே பெண்கள் நீராடி, அவர்கள் வழக்கப்படி ஒன்பது கெஜ சேலைகளை பின்கச்சம்போட்டு முறைப்படி அணிந்து மூக்கில் நத்து என்ற அணிகலனையும்,மற்றும் கழுத்து,கை என்று எல்லா அணிகலன்களையும் அணிகின்றனர்.
ஆண்கள் குர்தா,பைஜாமா ,தலைக்குக் குல்லா
போன்ற உடைகளையும் அணிகின்றனர். சிறுவர்,சிறுமிகளைப்பற்றி கேட்கவே வேண்டாம். வண்ணவண்ண உடைகள்தான்.
விசேஷ உணவுகள் தயாரிக்கப்படுகிறது யாவர் வீட்டிலும்.
ஸ்ரீகண்ட்,பூரண்போளி, மாங்காயில்தயாராகும் பன்னா இவைகள் முக்கியமானவை. விதவிதமான இனிப்புகள். வெற்றிக்கம்பத்திற்குப் பூஜை செய்கிரார்கள்.சிறுவர்,சிறுமிகள்,படிக்கும் வித்யார்த்திகள் ஸரஸ்வதி பூஜையும் இன்றே செய்கிரார்கள்.
உற்றார்,உறவினர்,நண்பர்கள் என யாவரும் கூடிக்களிக்கிரார்கள்.
புதிய வீட்டு கிரஹப்ரவேசம்,வாகனங்கள் புதியதாக வாங்குதல், ஆபரணங்கள் வாங்குதல் என இதைப்போன்ற முக்கிய பொருட்கள் வாங்கஉத்தமமான தினம்.
அன்று கசப்பான வேப்பிலையும் துவையல்போன்று சிறிது உண்பார்கள் என சொல்வது ஸுக துக்கங்களைக் கலந்து அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்வதுபோல இருக்கிறது. யுகாதி,குடி பட்வாவை 18–3–2018 அன்று நாமும் கொண்டாடுவோம்.
படங்கள் உதவி இணையத்திற்கு நன்றி.
ஆனந்த ஊஞ்சல்
எவ்வளவு நிம்மதியான ஆனந்தஉறக்கத்துடன் கூடிய அழகு ஊஞ்சல்! பகற்கனவுடன். பொறாமையாக உள்ளதா? பகல் நேரம்.
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள மரத்தில் ஒய்யாரமாகத் தோற்றம் கொடுக்கும் வவ்வால் கூட்டம். நன்றி தினத்தந்தி.
நாங்களுந்தான் வீடு வாசல், குடும்பத்துடன் மழை,காற்று பாராமல் அழகாகத் தொங்குகிறோம். எங்கள் பெயர் தூக்கணாங்குருவி. இது தெரியாதா?
உங்களிடம் சில வார்த்தைகள்—கேட்டால் கேளுங்கள்.
இந்தத் தொடர் பதிவு அவர்கள் உண்மைகள் தளத்தின் மதுரைத்தமிழன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்கள் என்னையும் எழுத அழைக்க , ,நான் இங்கே—- வயதானவர்களின் நினைவலைகள்தான். இது.
ஏன் இதிலும் ஏதாவது நல்லது இருக்கக் கூடும் அல்லவா என்று தோன்றியது. ஏதோ ஒரு சில வார்த்தைகள்தான் இது என்றும் தோன்றியது.
இவ்வளவு பெரிய முதியவள் என்ன ஆசீர்வாதம் செய்வாள் வேறு என்ன வார்த்தைகள் சொல்லப்போகிறாள் என்றுதானே நினைக்கத் தோன்றும்?
எங்கள் காலத்தில் எப்படியெல்லாம் புத்தி சொல்லப்பட்டது என்றும் அதைக் கடைபிடிக்க முடிந்ததா என்றும் பாருங்கள். எங்கள் காலத்திலேயே நாங்கள் ஒரு ஐம்பது வயது உள்ளவரின் மூன்றாம் மனைவியின் வாரிசுகள். எங்கள் பெரியம்மாக்கள் போனபின்தான் எங்கள் அம்மா.குறைவாக மதிப்பிடாதீர்கள். அந்தக் காலத்தில்
அடி அமக்களமெல்லாம் மார்க் குறைவாக வாங்கி விட்டால் பிள்ளைகளுக்குக் கிடைக்கும். நாங்களெல்லாம் பெண்கள். நன்றாக மார்க் வாங்கி விடுவோம்.
பெண்களெல்லாம் உயர்வு. அவர்களை ஒன்றுமே சொல்ல மாட்டார்கள். நாங்கதான்பலி. எங்களைக் கண்டாலே மார்க் கம்மியானவர்கள் கரித்துக் கொட்டுவார்கள். அவங்களைத் தாஜாசெய்ய நமக்குக் கிடைக்கும் எதிலும் போனா போகிறது என்று பங்கு கொடுக்கவேண்டும். அவன் கிட்டிப்புள் விளையாடினாலும் இல்லையே அவன் படித்தானே என்று சொல்ல வேண்டும். இது பெண்களின் பொதுவான நிலை.
அப்பா நன்றாகப் படித்தவர். பழைய காலத்தவர்.பழமை விரும்பிதான். அவர் செய்பவற்றைக் குறைகூற முடியாது. அந்தநாட்களில் மனைவிக்குச் சுதந்திரம் பேச்சில் கூட கொடுக்காதவர்களின் குரூப்பைச் சேர்ந்தவர். மற்றவர்கள் சொல்வார்கள்.
உங்கம்மாவைப் படுத்துகிறார் என்று. எங்களுக்குக் குறைகூற ஒன்றும் தெரியாது. இந்த அம்மாதான் அப்பாவைப் பற்றி வெளியில் ஏதேதோ சொல்கிரார்கள். இதெல்லாம்தான் தப்பு. என்று தோன்றும்.
அம்மாவுக்கு முன்னரும் அம்மாவின்உறவினர் பெண்தான் அப்பாவிற்கு வாழ்க்கைப் பட்டவர். அது தெரிந்தபின் அவர்களை நான் கேட்பேன். ஏன் முன்னாடியே தெரியும்தானே! பின்னே ஏன் அம்மாவைக் கொடுத்திங்கோ. நீங்களெல்லாம் ரொம்ப மோசம் என்பேன் இது எதற்குச் சொல்கிறேனென்றால் மனைவிகள் ஸாதாரணமாக ஏதாவது சொல்லி இருந்தால் கூட அதை வம்பாக்கிப்பார்க்கும் மனிதர்கள் உண்டு. எதையும் யோசிக்காமல் வெளியில் சொல்வது ஸரியில்லை என்று சின்ன வயதிலேயே தெரிந்து போனது.
நிறைய இதிஹாஸக் கதைகளெல்லாம் சொல்லுவார். புத்தகங்கள் படிக்க ஆர்வமூட்டுவார். விகடன் குமுதம் போன்ற பத்திரிகைகள் கண்ணால் கூடப் பார்க்க முடியாது. சினிமா போகக் கூடாது. ஊரிலுள்ளவர்களையும் கூப்பிட்டு புத்தி சொல்லுவார்.
தினமும் தினஸரிப் பேப்பர்கள் வரும். படித்தால் மட்டும் போதாது. அதைப்பற்றி எழுதியிருந்ததே! என்ன படித்தாய். சின்னதாக நம்மாத்து பூவரச மரத்தைப் பத்தி எழுதினா நீ என்ன எழுதுவாய் என்று கேட்ப்பார்.
இப்படியாக பேச்சுகளின் மூலமே விஷயங்களை உணர்த்துவார். பத்திரிகைகளுக்கு எழுத ஆசையூட்டியவர் அவரே!
காசுபணம் சேர்க்க, ஸொத்து சேர்க்க என்ற ஆசைகளிருந்ததில்லை. உறவினர்கள்,மற்றவர்களுக்கு என நன்றாகச் சிலவு செய்தே பழக்கம். வாழ்க்கையில் நிறைய சோதனைகள்,புத்ரசோகம், நம்பிக்கைமோசம் என பல விதங்களில் அவருக்குக் கஷ்டம் வந்தது. அவர் வேலை செய்தது பென்ஷன் கிடைக்கும்படியான நிறுவனமில்லை.
ஆசார சீலம். பெண்கள் விவாகத்திற்காக பிதுர் ராஜ்ஜியமாக இருந்த நிலங்களையே விற்று பெண்களின் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தார். அப்போதும் அவர் விசாரப்படவில்லை.
ஆனால் சொல்லுவார். பிறர்க்கு உதவ வேண்டும். அதனால் எதுவும் குறைந்து விடாது. உங்களுக்கெல்லாம் ஸரியாகத் தோன்றவில்லை என்றால் நீங்கள் உங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ளலாமே தவிர உதவுவது தவறல்ல என்பார். ராமன் உதவுவார், என்பார். உதவி என்பதை எல்லா விதங்களிலும் நம்மால் செய்ய முடிந்த வகையில் செய்யவேண்டும் என்பார்.
எல்லாப் பெண்களாலும் பெற்றவர்களுக்குச் செய்ய முடிகிறதா? இருந்தும் செய்யமுடியாது தவிப்பவர்கள் அக்காலத்தில்அநேகம்பேர். இக்காலத்தில் பெண்கள் யாவருமே உத்தியோகத்திலிருப்பதால் சற்று முன்னேற்றம் என்று சொல்லலாம். இருந்தாலும் வாழ்க்கையில் சேமிப்பு இல்லாதவர்களின் நிலையை நன்கு உணர முடிந்தது. கஷ்டம் என்ற ஒன்றைப் பார்த்ததால்தானே இதை எல்லாம் உணரவும் இப்பொழுது எழுதவும் முடிகிறது.
பெண்கள் கலியாணத்திற்கு இருந்த நிலங்களை அவர் விற்றதைப் பார்த்ததாலோ என்னவோ அப்படி ஒரு கஷ்டங்களை நாம் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று மனதில் நினைத்ததுண்டு. நான் எதிர்பாராத விதமாக எங்கள் பிள்ளைகளின் விவாகம் அப்படி நடந்தது. எல்லாம் காதல் கல்யாணம். பெண் வீட்டுக்கார்களுக்கு ஒரு நயாபைஸாகூட சிலவில்லாமல் நம்வீட்டில் ஏற்பாடுசெய்து நாமாக நடத்த வேண்டும்.
இப்படியெல்லாம் நடக்குமா? பிள்ளைகள் அம்மாதிரிக் கொள்கையுடன் இருந்தார்கள். எளியமுறையில் என்பார்கள். அதற்காக பருப்பு தேங்காயும்,பக்ஷணமுமில்லாமலா? அவர்களில்லாத வேளையில் செய்துக் குவித்திருப்பேன்!!!!!!!!!!
நம்பமாட்டீர்கள். ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாக கலப்பு,சுயவகுப்புத் திருமணங்கள். வைதீகமுறையில் ,ஒரு வேளைத் திருமணங்கள்!!முக்கியமாக வேண்டியவர்களைக் கூப்பிட்டு, ஸம்பிரமமான விருந்துடன். பிள்ளைகளின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ததால்தான் இந்த முதுமைக் காலத்திலும் கூடிவாழ முடிகிறது. குறைகள் கூறுவது குடும்ப ஒற்றுமைக்கு உகந்ததல்ல என்னும் தாரக மந்திரம் உதவுகிறதோ என்னவோ? நேஷனல் இன்டிகிரேஷன் என்று சொல்வார்களே அது இப்படிதான் இருக்குமோ என்னவோ?
இவைகளைப்பற்றி எழுத எங்கள் வீட்டு விசேஷத் திருமணங்கள் என்று ஒரு ஆர்ட்டிகலே தனியாக எழுத வேண்டும். இப்போது இது புதியதல்ல! அப்போது அது புதிர்.காமாக்ஷிமாதிரி,காமாக்ஷிமாதிரி என்று உவமை சொல்லும்படி. உன்னை மாதிரி முடியாது. வெளியிலும் ஒன்றும் சொல்வதில்லை. எப்படிதான்மனதை ஸமாளிக்கிறாளோ? என்ன அர்த்தமோ? புரியலே!!!!!
எதற்குச் சொல்லுகிறேனென்றால் அந்தக்காலத்தில் அவர்கள் சொல்லாமலே நம் மக்களைப் பார்த்து சில நடைமுறைகள் நமக்குத் தானாகவே வந்து விடுகிறது.
எங்கள் அம்மா ஒரு உதவும் குணமுள்ள பெண்மணி. யாருக்கு எந்த ஸமயம் என்ன உதவி வேண்டுமோ அதைச் செய்வார். எந்தப்பிரதி பலனும் எதிர்பார்க்கமாட்டார். நாங்கள் வளர்ந்த ஊர் கட்டுப்பாடும்,கண்ணியமும், நற்குணமுள்ளவர்களும் நிறைந்த ஊராக இருந்தது. அதனால் ஊரோடு ஒத்து வாழ் என இப்போதும் எங்கிருந்தாலும் அவ்விட மக்களுடன் அனுஸரித்துப் போக மனம் பக்குவப்படுகிறது.
இன்னும் நிறையபேர் நிறைய சொல்லுவார்கள். நான் சொல்லுவது–
சேமிப்பு,குறைசொல்லாதிருத்தல்,ஒற்றுமை, காலத்திற்கேற்ப மனமாறுதல்கள், இவைகளெல்லாம் அவசியம். இதென்ன பிரமாதமா?
உங்களிடம் சிலவார்த்தைகள் என்பதால் சில வார்த்தைகள்தான் சொல்லி இருக்கிறேன். உங்கள் காலத்திற்கு முன் வாழ்ந்தவர்களுக்கும் இப்பொழுது வரை இருப்பவர்களுக்கு மனதுள் பல வார்த்தைகள் இருக்கும். அதெல்லாம் அப்புறம் பேசலாம், இது போதும் என்று நினைக்கிறீர்கள் அல்லவா? அன்புடன்
தொடர் பதிவிட வாருங்கள். குறிப்பிட்டுச் சொல்லத் தெரியவில்லை. இதே தலைப்பில்.
வலைப்பூ வைத்திருப்பவர்கள் எழுத ஆரம்பித்து விட்டீர்கள் அல்லவா? முக நூலிலும் எழுதலாம். எனக்கு வாய்ப்பளித்த ஸ்ரீராம் அவர்களுக்கும், மதுரைத் தமிழன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
வாழ்த்துகள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். அன்புடன் சொல்லுகிறேன்.













