மாங்காய் இஞ்சி பிசறல்.
இந்த மாங்காய் இஞ்சி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னை
வந்த பிறகு மாங்காயிஞ்சியை ஸ்மரிக்காமல் இருக்க முடியுமா?
கேட்பதற்கு முன்னாடியே எனக்கு பிடிக்கும் என்ற முறையில் மாஇஞ்சியை
என் பெண் வாங்கி வந்து விட்டாள். ஸரி, எதையும் தேடிப் போகாமல்
இருப்பதைவைத்து ஒரு பதிவு போடலாம் என்று தோன்றியது.
ஸாதாரணமாக பொடியாக மாஇஞ்சியை நறுக்கி, உப்பு சேர்த்து,
எலுமிச்சை சாறு சேர்த்து , கடுகு தாளித்து, பச்சைமிளகாயையும்
துளி வதக்கிப் போட்டால் அதுவே மிக்க ருசியாக இருக்கும்.
எனக்கு எப்படி செய்தால் பிடிக்கும்,செய்தேன் என்பதையும்தான்
நீங்களும் படியுங்களேன். பிரமாதமொன்றுமில்லை. இருந்தாலும்
எழுதுகிறேன். படியுங்கள்.
வேண்டியவைகள்—–
நல்ல கேரட்—பெறியதாக ஒன்று
திட்டமான நீளம் கொண்ட மாங்காயிஞ்சி—4 துண்டுகள்
கேப்ஸிகம்—1 பச்சைநிறம்.
பச்சைமிளகாய் பாதியோ அல்லது ஒன்றோ
பூண்டு இதழ்—ஒன்று.பிடித்தவர்கள் உபயோகிக்கவும்.
வெங்காயம்—-1
உப்பு—ருசிக்கு
சர்க்கரை—ஒரு துளி
கடுகு, சீரகம்—மொத்தமாக அரை டீஸ்பூன்.
உளுத்தம் பருப்பு—-சிறிது
எண்ணெய்—-துளி. தாளிக்க
சின்ன எலுமிச்சம் பழம்—1
கொத்தமல்லித்தழை—மேலே தூவ
செய்முறை—இஞ்சி,கேரட்டைத் அலம்பித் தோல்
சீவிப் பொடியாக நறுக்கவு்ம்.
காப்ஸிகத்தையும் அதே அளவில் நறுக்கவும்.
ஒரு கரண்டியில் துளி எண்ணெயில் கடுகு,சீரகம் உ.பருப்பு,தாளித்து
பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சைமிளகாயை வதக்கி வைக்கவும்.
எலுமிச்சை சாற்றில்,,உப்பு, சர்க்கரை சேர்த்து நறுக்கிய துண்டங்களின்
கலவையில் சேர்த்துக் கலக்கவும்.
தாளிதத்தைச் சேர்த்து கொத்தமல்லி தூவவும். உரிகானோ இருந்தலும்
ஒரு துளி போடலம்.
வாய்க்கு ருசியானது. பார்க்கவும் அழகாக இருக்கு. சாப்பாட்டுடன்,
ருசிதான். வெங்காயத்தை பிடித்த முறையில் வதக்கியோ,
பச்சையாகவோ நறுக்கிச் சேர்க்கலாம்.
வினிகர் சேர்த்தும் செய்யலாம்.
மக்னி அல்லது மகானா.makhana
நான் மஃக்னி யைப்பற்றி இங்கே எழுதுகிறேன். மும்பையில்
மக்னி என்று சொல்வது பெரும்பாலான இடங்களில் மகானா
என்று அதுவும் வட இந்தியாவில் சொல்லப்படுகிறது. அதைப்பற்றி
விவரம் கேட்டு எழுதியதில் ஏராளமான விவரங்கள் அறிய
முடிந்தது. எனக்கு தெறிந்ததில் சிலவற்றை எழுதுகிறேன்.
மகானா. makhana இங்லீஷ் பெயர் foxnut
இது ஒரு தண்ணீரில் வளரும் தாவரம்.
லில்லி குடும்பத்தைச் சேர்ந்தது. இலை ரவுண்ட்ஷேப்.
பெறிய அளவு. இலை மேலே பச்சை நிறம். கீழே பர்பல் நிறம்.
பூவும்–பர்பல்நிறம்தான்.
ஒயிட் கலர், ஸ்டார்ச்சி ஸீட். சாப்பிடத் தகுந்தது.
விதைக்காக கல்ட்டிவேட் செய்கிரார்கள்.
விளையும் இடங்கள்—இந்தியா,சைனா, ஜப்பான்.
சீதோஷ்ணம்–ஹார்ட் ட்ரை ஸம்மர்,கோல்ட் வின்ட்டரில்
பயிராகும்.
லேட் ஸம்மரில் கலெக்ட் செய்வார்கள்.
3000 வருஷங்களாக சைனாவில் விளைவிக்கிறார்கள்.
இந்தியாவில் பீஹாரில் மாத்திரம் 96000 ஹெக்டேரில்
தண்ணீரில் பயிராகிரது.
இதை பச்சையாகவும், உணவுகளில் சேர்த்தும் சாப்பிடலாம்.
சைனாபெயர்—- Qian’shi
சைனாவில் மருந்துகளிலும், ஸூப்புகளிலும், மற்றும் பல
விதங்களிலும் உபயோகிக்கிரார்கள்.
ஆண்மை பலப்படும், முதுமை தள்ளிப்போகும் என சைனீஸ்
நம்புகிறார்கள்.
இந்தியாவில் , வட இந்தியாவிலும்,, இந்தியாவின் மேற்குப்
பகுதிகளிலும், அதிக உபயோகமாகிறது.
பீஹாரில் பண்டிகைகளிலும், கடவுளுக்கான நிவேதனப்
பண்டங்களிலும், இது அதிகமாக உபயோகப் படுத்தப்
படுகிரது.
கஞ்சி, பாயஸம்,லட்டு, புட்டிங், சமையல் என பல
விதங்களில் மிகுதியாக உபயோகப் படுத்துகிறார்கள்.
நான் அறிந்து கொண்டதை எழுதியிருக்கிறேன்.
ஜெநிவாவில் என் சம்மந்தி அம்மா அவர்கள் செய்ததையும்,
படம்பிடித்து வைத்திருந்தேன். ஷாஹி மட்டர் மகானா.
இதை வழக்கமான ஸாமான்களுடன் முந்திரி பருப்பையும்
சேர்த்து அரைத்து,மட்டரை வேகவைத்துச் சேர்த்து, மகானாவை
வறுத்துச் சேர்த்துச் செய்தது.
எல்லா கடைகளிலும், வட இந்தியாவில் கிடைக்கிறது.
லோடஸ் ஸீட் என்று சிலரும்,இது வேறு என்று சிலரும்
சொல்கிறார்கள். இப்போது முக்கியமாக தென்நிந்தியாவிலும்
கிடைப்பதாகச் சொல்கிரார்கள்.
சோளப்பொரி மாதிரி சற்றுப் பெறிய சைஸில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.நான் இங்கு இன்னமும்
விசாரிக்கவில்லை. ரொட்டி, பூரி போன்ற வட இந்திய
உணவுகளுடன் நன்றாக இருக்கிரது.
உருளை வதக்கல்
இதுவும் ஸாதாரண வதக்கல் தான். விசேஷமாக மாருதலில்லை.
5 ஸ்டார் ஹோட்டல் குறிப்பு இது சும்மா 4 பெறிய உருளைக் கிழங்கில்
கொஞ்சம் மாற்றி செய்தேன் நான். வறுப்பதற்குப் பதில் வதக்கினேன்
.அவ்வளவுதான். இதையும் பாருங்களேன்.
வேண்டியவைகள்.
உருளைக்கிழங்கு—சற்றுப் பெறிதாக 4
வெங்காயம்—பெறிசா 1
பூண்டு இதழ்—4
பச்சைமிளகாய்–1
இஞ்சிவிழுது—அரை டீஸ்பூன்
வெள்ளை எள்—அரை டீஸ்பூன்
கடுகு—கால் டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
எண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்
மிளகாய், மஞ்சள், தனியாப் பொடி வகைகள்–வகைக்கு சிறிது
கறிவேப்பிலை—10 இலைகளுக்குமேல்.
ஒரு துண்டு எலுமிச்சை
செய்முறை.
கிழங்கை த் தண்ணீரில் வேகவைத்து உறித்துத் துண்டங்களாகச்
செய்து கொள்ளவும்.
சிறிது எண்ணெயில் கடுகு,எள்ளை வெடிக்கவிட்டு,நறுக்கிய
வெங்காயம்,பூண்டு மிளகாயை வதக்கி பொடிகளைச் சேர்த்து
இறக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து உறித்த துண்டங்களைச்
உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.
இறக்கிய வதக்கலில் முன்பாக வதக்கிய வெங்காயக் கலவையைச்
சேர்த்துக் கலந்து எலுமிச்சைச் சாறு கலந்து பாத்திரத்தில் மாற்றி
கரிவேப்பிலையை புதியதாக வறுத்துப்போட்டு டேபிளில் வைத்தால்
5 ஸ்டார் வதக்கல்தான்.
வேகவைத்த கிழங்கை எண்ணெயில் பொறித்து எடுப்பதற்குப்
பதிலாக நான் வதக்கி எடுத்து செய்திருக்கிறேன்.
அதுதான் வித்தியாஸம்.
டால்மஃக்னி. ராஜ்மா
ஸாதாரணமாக முழு உளுந்தும், ராஜ்மாவும் சேர்த்து செய்வது
டால்மஃக்னி.
இது சின்னவகை,ராஜ்மாவும், மஃக்னியும் சேர்த்துச் செய்தது.
இதுவும் ருசியானதுதான். ரொட்டி பூரியுடனும், சற்று லூஸாகச்
செய்து சாதத்துடனும் சாப்பிட நன்றாகவே இருக்கிறது.
எனக்குத் தெறிந்ததை நான் எழுதுகிறேன். நீங்களும் செய்து
பாருங்கள். அத்தோடு கொஞ்சம் கருத்தையும் சொல்லுங்கள்.
இப்போது வேண்டிய ஸாமான்களைப் பார்ப்போமா?
வேண்டியவைகள்.
சிரியவகை ராஜ்மா—-1 கப்
மஃக்னி—-அரைகப்
வெங்காயம்—2
தக்காளி—-1
பூண்டு இதழ்—-4
இஞ்சி—-சிறிய துண்டு.
வேண்டிய பொடிகள்
மிளகாய்ப் பொடி –அரைடீஸ்பூன். காரத்திற்கு வேண்டியபடி
மஞ்சள்ப்பொடி—அரை டீஸ்பூன்
தனியாப்பொடி–1 டீஸ்பூன்
சீரகப்பொடி—1 டீஸ்பூன்
எண்ணெய்—1டேபிள்ஸ்பூன்
வெண்ணெய்—1டேபிள்ஸ்பூன்
ருசிக்கு—உப்பு
பச்சைக் கொத்தமல்லி—வேண்டிய அளவு தூவ.
எந்த வகை மஸாலா வேண்டுமோ அந்த மஸாலாப்பொடி சிறிது.
செய்முறை.
1 சிறியவகை ராஜ்மாவைக் களைந்து அமிழ ஜலம் விட்டு
முதல் நாள் இரவே பாத்திரத்தில் ஊர வைக்கவும்.
2இஞ்சி,பூண்டு , வெங்காயம், தக்காளி இவைகளை மிக்ஸியில்
நைஸாக ஜலம்விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
3ராஜ்மாவைக் குக்கரில் ஜலம்வைத்து நன்றாக வேகவைக்கவும்.
4 பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த விழுதைக்-
-கொட்டிக் கிளறவும். தீ நிதானமாக இருக்கட்டும்.
5 .விழுது கெட்டியாகி எண்ணெய்ப் பிறிந்து வரும் போது பொடிகளைப்
போட்டுக் கிளறவும்.
6 . வெந்த தண்ணீருடன் ராஜ்மாவைச் சேர்த்து , உப்பையும் போட்டு
நன்றாகக் கொதிக்கவிட்டு இரக்கவும்.
7 .வெண்ணெயைச் சூடாக்கி மஃக்னியை லேசாக வறுத்து
8 .கீழிறக்கின ராஜ்மாக் கலவையில் சேர்த்துக் கலக்கவும்.
பச்சைக் கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
9 . க்ரீமும் சேர்க்கலாம்.
10 .ரொட்டி வகையராக்களுடனும், ஏன் சாத வகைகளுடனும்
சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.
பொங்கல் வாழ்த்துகள்
அன்புள்ள எல்லா ஸகோதர, ஸகோதரி பதிவர்களுக்கும், சொல்லுகிறேன் ஆதரவாளர்களுக்கும் , மற்றும்
எல்லோருக்கும் என் அன்பான பொங்கல் வாழ்த்துகளை இதன்மூலம் தெறிவித்துக் கொள்கிறேன் .
பொங்கலோ பொங்கல். பொங்கும் மங்களம் எங்கும் தங்குக. அன்புடன் சொல்லுகிறேன் காமாட்சி.
கீரை வடை
இது உளுத்தம் பருப்பு வடைதான். இந்த மருமகள் செய்த மாதிரியைப்
படம் பிடித்தேன். ஸரி, பொங்கல் வருகிறது. அரைக்கும் மாவில் இது
மாதிரியும் ஒரு நான்கு செய்து பார்க்கலாமே நீங்களும் என்று
தோன்றியது. ஷேப் முன்னே பின்னே இருந்தாலும் வடை ருசிதானே
முக்கியம். கரகரப்பாக நன்றாகவே இருந்தது வடை.
வேண்டியவைகள்
உளுத்தம் பருப்பு-தோல் நீக்கிய வெள்ளை உளுத்தம்பருப்பு-1கப்
முழு உளுந்து ஆனால் மிகவும் நல்லது. தோல் நீக்கியதைத்தான் .
பாலக் கீரை—-மெல்லியதாக அலம்பி நறுக்கியது 1 கப்பிற்கு அதிகம்.
பச்சையோ சிகப்போ 4 மிளகாய்கள்
துளி இஞ்சி
ருசிக்கு உப்பு
வடை தட்டி எடுக்க வேண்டிய எண்ணெய்
துளி பெருங்காயப் பொடியும். சில கறிவேப்பிலையும்.
செய்முறை
பருப்பை ஊற வைத்து வடிக்கட்டி மிளகாய் சேர்த்து மிக்ஸியில்
கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்து தயாராக நறுக்கிய
பொடிப்பொடியான வடிக்கட்டிய கீரை, பெருங்காயப்பொடி,உப்பு,
கறிவேப்பிலையை சேர்த்துக் கலந்து துளி ஜலத்தைத் தெளித்து
காயும் எண்ணெயில் வடைகளைப் போட்டு கரகரவென்று
வேகவைத்துஎடுத்து பச்சைப் பசேல் என்று வடை தயார்.
அரைத்த பருப்பு கெட்டியாக இருந்தால்தான் ஜலம்
தெளிக்க வேண்டும். இஞ்சியைப் போட்டே அரைக்கலாம்.
பண்டிகை நாட்களில் வெங்காயம் சேர்ப்பதில்லை.
அதையும் சேர்த்து ஜமாய்க்கலாம்.
இளசான எந்தக் கீரையையும் போடலாம்.
2011 in review
The WordPress.com stats helper monkeys prepared a 2011 annual report for this blog.
Here’s an excerpt:
The concert hall at the Sydney Opera House holds 2,700 people. This blog was viewed about 38�000 times in 2011. If it were a concert at Sydney Opera House, it would take about 14 sold-out performances for that many people to see it.
அவல்ப் பாயஸம்.
புது வருஷ ஆரம்பத்தில் ஏதாவது பாயஸத்தோட சமையல்
குறிப்புகளைத் தொடருவோம் என்று தோன்றியது.
நினைத்தால் எழுதிடலாம். திடீரெனப் பண்ணியதையே
எழுதலாமென எழுதுகிறேன்.
டிஸம்பர் 8 ஆம் தேதி காட்மாண்டு stஜேவியர்ஸ் காலேஜ்
பிரிஸ்பல் , ஃபாதர் பாம்பே வருகிறார். அப்பாவைப் பார்க்க
நேராக ஏர்போர்டிலிருந்து வீட்டுக்கே வருவார் என மத்யானம்
ஒரு மணிக்கு பெறிய பிள்ளையின் போன் வருகிரது.
4 மணிக்கு அவர் வருகிறார். நாட்டுப் பெண் ஊரிலில்லை.
சட்டுனு ஒரு சட்னியை அரைத்து, உருளைக்கிழங்கு கறி செய்து
மஸால் தோசைக்கு ரெடி. ஸாம்பார் ஆல் ரெடியாயிருக்கு.
ஒரு பாயஸம் அதான் அவில்ப் பாயஸம் வைத்தேன்.
அவர் ஒரு தமிழ்ப் ஃபாதர் .ஃபாதர் அந்தோனிஸாமி.
ரஸித்து சாப்பிட்டுவிட்டு ,சொல்லுகிறேனைப் பாராட்டிவிட்டும்
போனார். எதற்கு சொல்கிறேனென்றால் வயதானவர்களுக்கு
ப்ளான் சற்று முதலில் போட்டால் நிறையவே செய்யலாம்.
அதுஸரி. விஷயத்துக்கு வருவோம்.
பாயஸத்துக்கு வேண்டியவைகள்.
ஒரு பிடிச்ச பிடி அவல்
ஒரு 2 கப் பால்
ஒரு துளி நெய்
அரைகப்புக்கு சர்க்கரை
துளி ஏலக்காய்ப்பொடி
வகைக்கு 5,6 முந்திரி பாதாம் அப்படியே மிக்ஸியில் பொடித்தது.
செய்முறை
பட்டும் படாமலும் நெய்விட்டுப் பிசறி அவலை ஒரு நிமிஷம்
மைக்ரோவேவில் அதன் பாத்திரத்தில் வைத்து எடுத்தேன்.
பாலைக் காய்ச்சி எடுத்து பாதியை எடுத்து வைத்துவிட்டு
அதில் அவலை மிதமான தீயில் வேக வைத்தேன்.
பாதாம் முந்திரிப் பொடியைச் சேர்த்துக் கிளறி சக்கரையைச்
சேர்த்து சற்றுக் கிளறி பாலைச் சேர்த்து ஒரு கொதி விட்டு
இறக்கி ஏலப்பொடி சேர்த்தேன். அவ்வளவுதான்.
அப்படியே வாணலியோடு ஒரு போட்டோவும்.
அவசரக்காரியம் தானே?
வெண்ணெய் போட்ட தோசையும். அவல் பாயஸமும்
தமிழ்ப் பேச்சும் ரொம்ப நாளாச்சு. வீட்டுக்கு போனால்தான்
கிடைக்கும் என்று சொல்லிவிட்டுப் போனார். ஃபாதர் எனக்கு
நன்றி சொன்னார். அவருக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும்.
எனக்கும் ஞாபகம் வந்தது. எழுதினேன் அவ்வளவுதான்.
என் பெறிய பிள்ளை காட்மாண்டு ஸென்ட் ஜேவியர்ஸ்ஸில்
தான் வேலை செய்கிறார்.
வாழ்த்துக்கள்
என் அன்பிற்குறிய சொல்லுகிறேனை ஆதரித்து எழுத ஊக்கம்
கொடுக்கும் எல்லா மதிப்புடையவர்களுக்கும், மற்றும் எல்லா
ஸகோதர ஸகோரிகளுக்கும், அனைவருக்கும் என்னுடைய
மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களையும், அன்பையும்
இதன் மூலம் தெறிவித்துக் கொள்கிறேன். எல்லோருக்கும் இனிதே
செய்க என்று முகமன் கூறி 2012 ஆம் புத்தாண்டே வருகவருக
என்று வரவேர்ப்போம், சொல்லுகிறேன் காமாட்சி.
சுரைக்காய் கோப்தா
வேண்டியவைகள்
சுரைக்காய்—திட்டமாக –1
மிளகாய்ப்பொடி—1 டீஸ்பூன்
தனியாப்பொடி—1 டீஸ்பூன்
மஞ்சள்ப் பொடி—அரை டீஸ்பூன்
புதியதாய்ப் பொடிக்க
லவங்கம்—4
மிளகு—–அரை டீஸ்பூன்
சீரகம்—-1 டீஸ்பூன்
அரைக்க
வெங்காயம்—2அல்லது 3
இஞ்சி—-சிறியதுண்டு
பூண்டு இதழ்—4
பழுத்தத் தக்காளி—3 திட்டமான சைஸ்
ருசிக்கு உப்பு
கடலைமாவு—கால்கப். வேண்டிய அளவு உபயோகிக்க
மாவு மீதி இருக்கும்.
எண்ணெய்—-பொறிப்பதற்கு வேண்டிய அளவு
பிரிஞ்சி இலை —சிறியது ஒன்று.
செய்முறை
சுரைக்காயைத் தோல் சீவிக் கொப்பரைத் துருவியில்த்
துருவலாகத் துருவிக் கொள்ளவும்.
சற்று நீருடன் கூடியதாகத் துருவல் இருக்கும்.
வெங்காயம், பூண்டு. இஞ்சியை நறுக்கி மிக்ஸியில் தண்ணீர்
விடாமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியையும் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
மிளகு.சீரகம், லவங்கத்தைப் பொடித்துக் கொள்ளவும்.
சுரைக்காய்த் துருவலுடன் திட்டமாகக் கடலைமாவைச் சேர்த்துக்
கலக்கவும்.
துருவலே தண்ணீருடன் இருப்பதால் தண்ணீர் அவசியமில்லை.
வடைமாவு மாதிரி சற்றுத் தளரவே மாவு இருக்க வேண்டும்.
அடுத்து எண்ணெயைக் காய வைத்து கலவையை சிறிய வடை
போலவோ, பகோடாக்கள் மாதிரியோ போட்டுபொறித்தெடுக்கவும்.
இரண்டு பக்கமும் சிவக்க வேகும்படி நிதானமாகத் திருப்பிவிட்டு
எடுக்கவும்.
இதுவே கோப்தாவின் முதல்ப்படி.
அகலமான நான்ஸ்டிக் வாணலியில் 5,6 ஸ்பூன் எண்ணெயைச்
சூடாக்கி பிரிஞ்சி இலையுடன் ,வெங்காய விழுதைச் சேர்த்து
வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறி நன்குவதங்கியபின்பொடிகளைச்சேர்த்து
பிரட்டி தக்காளி விழுதைச் சேர்க்கவும்.
உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
எண்ணெய் பிறிந்து கலவை நன்றாகக் கொதித்துச் சுருண்டு வரும்
பதத்தில் முக்கால்கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
கோப்தாக்களைப் பரவலாக அதில் சேர்க்கவும்.
மிதமான தீயில் இரண்டொரு கொதிவிட்டு ஒவ்வொன்றாகத்
திருப்பிவிட்டு இறக்கவும். கோப்தாவின் அளவிற்குத் தக்கபடி
கிரேவியில் முன்னதாகவே நீரின் அளவை சற்று
அதிகம்செய்யவும்.அதிகம் வேக வேண்டாம்.
ரொட்டி பூரி வகைகளுடன் நன்றாக இருக்கும்.
விருப்பத்திற்கிணங்க காரமும் கூட்டிக் குரைக்கலாம்.
கீழுள்ள படங்கள் யாவும் மாதிரிக்குதான்.
கோப்தா தயார். லௌகிகா கோப்தா இதுதான்.













