நெல்லிக்காய்ப் பச்சடி.
வேண்டியவை—புளிப்பில்லாத தயிர் ஒருகப். கொட்டை நீக்கியநெல்லிக்காய் இரண்டு. மிளகாய்வற்றல் ஒன்று, தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள்ஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன்,
தாளிக்க கால்டீஸ்பூன் கடுகு, துளி பெருங்காயம், எண்ணெய் ஒரு டீஸ்பூன் பச்சைக் கொத்தமல்லி சிறிது,ருசிக்கு உப்பு.
செய்முறை——நெல்லிக் காயை சிறிது வதக்கிக் கொண்டு மிளகாய் தேங்காய், சீரகம் சேர்த்து
கெட்டியாக அரைத்து உப்பு சேர்த்துத் தயிரில் கலக்கவும்,. காயம் ,கடுகை தாளித்துக் கொட்டி கொத்தமல்லியைத் தூவவும். பச்சடி தயார். மிகவும் நல்ல மருத்துவ குணமுள்ள பச்சடி.
வெங்காயம் விரும்புவர்கள் எந்தப் பச்சடியிலும் சிறிது எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
வாழைத் தண்டைப் பொடியாக நறுக்கி மோரில் போட்டுப் பிழிந்து எடுத்து தயிர்ப் பச்சடி செய்யலாம்.
இஞ்சியைப் பிரதான பாகமாகச் சேர்த்தால் இஞ்சிப் பச்சடி.
கத்தரிக் காயை சுட்டு தோல் நீக்கிப் பிசைந்து தயிரில் போட்டுச் செய்யலாம்.
காரட் ,முள்ளங்கியையும் துருவிப் போட்டு செய்யலாம்.
பழ வகைகளைத் துண்டுகளாகச் சேர்த்துத் தயிரில்க் கலந்து சாட் மஸாலா சேர்த்தும் பச்சடி செய்யலாம்.
சௌ,சௌ, பாலக், புடலங்காய் உருளைக் கிழங்கு முதலான வற்றையும் பொடியாக நறுக்கி வேகவைத்தோ, அல்லது வதக்கியோ தயிரில்க் கலந்து பச்சடி செய்யலாம்.
இன்னும் எது எது தோதுபடுகிரதோ வகைவகையாகச் செய்யலாம்.
வறுத்த உளுத்த மாவு சேர்த்து ஓமம், பச்சை மிளகாய் தாளித்து டாங்கர் பச்சடி தயிரில் செய்யலாம்.
வடைமாவைக் கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுத்தும் தயிர்ப் பச்சடி செய்யலாம்.
பூண்டு வதக்கிப் போட்டும் செய்யலாம். பிடித்த ருசிக்குத் தக்கவாறு பொருள்களைத் தேர்வு செய்து அசத்துங்கள்.
சேனைக் கிழங்குத் துண்டை வேகவைத்து அரைத்தும் கலக்கலாம்.
எல்லாப் பச்சடிக்கும் இஞ்சி, தேங்காய் , உப்பு, பச்சை மிளகாய் கூட்டிக் குறைத்து ருசிக்கு ஏற்ப தயாரிக்கவும்.
வெள்ளரிக்காய் தயிர்ப் பச்சடி
வேண்டியவை——தோல் நீக்கித் துருவிய வெள்ளரிக்காயத் துருவல் ஒருகப்.
கெட்டியான கடைந்த தயிர் ஒருகப்,—-பச்சை மிளகாய் இரண்டு, இஞ்சி ஒரு துண்டு.
தாளிக்க அரைஸ்பூன் எண்ணெய், கடுகு சிறிது, ருசிக்கு உப்பு,
மேலே தூவ ஐந்தாறு நறுக்கிய பொதினா இலை , சில தக்காளி வில்லைகள்.
செய்முறை——தயிரைக் கடைந்து, சற்றே பிழிந்தத் துருவலுடன் இஞ்சி, பச்சை மிளகாயை
அரைத்துக் கலந்து உப்பு சேர்த்துக் கலக்கவும், கடுகு தாளித்து பொதினா இலையையும், தக்காளி வில்லையையும், மேலே சேர்த்து உபயோகிக்கவும். காரட் துருவல் தூவிநாலும் கலர்க் கலராக அழகாக இருக்கும்,
நன்றி சொல்லுகிறேன்
அன்பு மிக்கவர்களே சொல்லுகிறேன்1000
புள்ளியைக் கடக்க காரணமான உங்களுக்கு நன்றியைச் சொல்லுகிறேன். காமாட்சி.
வேர்க்கடலைச் சட்னி
வேண்டியவை—–ஒருகப் வேர்க்கடலை, வெறும் வாணலியில் வறுத்துத் தோல் நீக்கிக கொள்ளவும். மற்றும்
தனியா விதை ஒரு டீஸ்பூன்,—-ஒரு சிறிய துண்டு இஞ்சி
வற்றல் மிளகாய் 3,—தேங்காய்த் துருவல் அரைகப்,
புளி, சின்ன எலுமிச்சை அளவு,–ருசிக்கு உப்பு
புதினா அல்லது கறிவேப்பிலை இலைகள் அரைகப்.
எண்ணெய் நான்கு டீஸ்பூன், தாளிக்க தலா கடுகு, உளுத்தம் பருப்பு, அரை டீஸ்பூன்.
புளிக்கு பதில் வேண்டிய அளவு தக்காளிப்பழமும் வதக்கி உபயோகிக்கலாம்.
செய்முறை—-புளியை ஊற வைத்து கெட்டியாகசாறை எடுத்துக் கொள்ளவும்.
தனியா, மிளகாய்,இஞ்சியை எண்ணெயில் வறுத்துக் கொண்டு
புதினாவையும் சேர்த்து இறக்கவும். வறுத்து தோல் நீக்கிய
வேர்க்கடலையுடன் புளி நீர், தேங்காய், வறுத்த சாமான்கள், உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்தெடுத்து எண்ணெயில் தாளித்துக் கொட்டவும். அரை டீஸ்பூன் வெல்லமும் சேர்க்கலாம்.
வேண்டிய சுவைக்கேற்ப வெங்காயம், பூண்டு, என பிடித்த ருசிக்கேற்றவாறு சாமான்களை மாற்றிப் போட்டு ஜமாய்க்கலாம். புளிப்பு காரமும், எப்படி வேண்டுமோ அப்படி மாற்றலாம்.
வெண்டைக் காய் பச்சடி
வேண்டியவை—ஒருகப் தயிர். வெண்டைக்காய் இளசாக 8
ஒருஸ்பூன் தேங்காய்த் துருவல் , மிளகாய் 1, இஞ்சி சிறிது
தாளிக்க -கடுகு கால்ஸபூன், பெருங்காயம் துளி, இரண்டுடீஸ்பூன் எண்ணெய், ருசிக்கு உப்பு
அறிந்த பச்சைக் கொத்தமல்லி. தக்காளி சிறிது.
செய்முறை—–வெண்டைக்காய்களை அலம்பித் துடைத்து மெல்லிய வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி மிளகாய், தேங்காயை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு பெருங்காயத்தை தாளித்து வெண்டைக்காய்த் துண்டங்களைப் போட்டு நிதானமான தீயில் வதக்கவும்.
சுருள வதக்கிய காயில் உப்பு சேர்த்து ஆற வைக்கவும்.
தயிரில் யாவற்றையும் சேர்த்துக் கலக்கி, கொத்தமல்லி தக்காளியால் அலங்கரித்துப் பறிமாரவும்.
பூந்திப் பச்சடி

பூந்திப்பச்சடி
வேண்டியவை
——-இரண்டுகப் தயிரைக் கால்கப் தண்ணீர் சேர்த்து கடைந்து கொள்ளவும்,-தவிரவும்
முக்கால்கப் பூந்தி, ருசிக்கு வேண்டியஉப்பு, மிளகாய்ப்பொடி .அறிந்த பச்சைக் கொத்தமல்லி.
செயமுறை மிகவும் சுலபமானது. கடைந்த தயிரில் யாவற்றையும் கலந்து பறிமாறவும். பூந்தி நீரை இழுக்கும் ஆதலால் சிறிது நீர் கலக்கிரோம் பரிமாறும் சற்று நேரமுன்பு பூந்தியைத் தயிரில் சேர்க்கவும்.
தக்காளித் தயிர்ப் பச்சடி
வேண்டியவை—புளிப்பில்லாத தயிர் ஒருகப்
சிறிய தக்காளிப் பழம் 2,—-திட்டமான வெங்காயம் ஒன்று
பச்சை மிளகாய் இரண்டு,—–சிறு துண்டு இஞ்சி இவைகளைத் தனித்தனியே மேல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
தாளிக்க தலா அரை டீஸ்பூன்கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு.
ருசிக்கு உப்பு,—— எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை— வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி தாளிக்கக் கொடுத்தவைகளைத் தாளித்து வெங்காயம், மிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் தக்காளியையும் சேர்த்து வதக்கி இறக்கி ஆற விடவும்.
தயிரில் உப்புடன் ஆறிய கலவையைச் சேர்த்து அறிந்த பச்சைக் கொத்தமல்லி தூவி உபயோகிக்கவும்.
வதக்காமலே தாளிப்பு மாத்திரம் செய்து தக்காளி வெங்காயத்தைப் பச்சையாகவே தயிரில் சேர்த்தும் செய்யலாம்.
காய்கறி புலவு.VEGETABLE PULAVU
வேண்டியவை—-பாஸ்மதி அரிசி–2கப்
வேண்டிய காய்கறிகள—–தோல்நீக்கி நறுக்கிய உருளைக் கிழங்கு ஒருகப்,——–காரட் ஒருகப். வெங்காயம் ஒருகப் காலிபிளவர் ஒரு கப், பச்சைமிளகாய்மூன்று.
பொடிக்க——-லவங்கம்8—மிளகுஒரு டீஸ்பூன்,-பட்டை1அங்குல அளவு, ஏலக்காய்1. இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
தாளிக்க—–ஜீரகம் ஒரு டீஸ்பூன்,—-பிரிஞ்சி இலை ஒன்று,
இஞ்சி, பூண்டு விழுது தலா ஒரு டீஸ்பூன்,மஞ்சள்பொடி அரை டீஸ்பூன். எண்ணெய்2டேபிள் ஸ்பூன், நெய்3டேபிள் ஸ்பூன்.
ருசிக்கு வேண்டிய உப்பு.
செய்முறை——-அரிசியைக் களைந்து வடிக்கட்டி நிதானமான தீயில் , வாணலியில் இரண்டு ஸபூன் நெய்யை விட்டு ஈரம் போக அரிசியை வறுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய்யும், நெய்யுமாக விட்டு, ஜீரகத்தைத் தாளித்து, வெங்காயம் மிளகாய் ,இஞ்சி,பூண்டுசேர்த்து வதக்கவும். வதங்கியவுடன், காய்கறிகளையும் சேர்த்து லேசாக வதக்கி மஸாலாபொடி மஞ்சள் உப்பு, பிரிஞ்சிஇலை, வருத்த அரிசி, மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து நிதானமான தீயில் வெயிட் போட்டு ஒரு விஸில் வரும் வரை வைத்து எடுக்கவும்.
அவரவர்கள் குக்கரில் அரிசி வேக எவ்வளவு விஸில் என கணக்குத் தெரியும். அதன் பிரகாரம் செய்யவும். தக்காளிப் பச்சடியுடன் பறிமாறலாம் வெங்காயம் ஸாம்பார் வெங்காயமாகச் சேர்த்தால், புலவு ருசியாக இருக்கும்.
பூந்தி boondhi
வேண்டியவை—–ஒருகப் கடலைமாவு
கால்கப் அரிசிமாவு, கேஸரி கலர் ஒருதுளி
ருசிக்கு உப்பு, கால் டீஸ்பூனிலும் பாதியளவு சமையல் ஸோடா இவைகளை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
பொரிப்பதற்கு வேண்டிய எண்ணெய்.
செய்முறை——–மாவுக் கலவையை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான தோசைமாவு போல கரைத்துக் கொள்ளவும்.
குழிவான வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, பூந்தி தேய்க்கும் கரண்டியில் [உபகரணத்தில்] முக்கால் கரண்டி மாவை விட்டு, எண்ணெயினின்றும் தூக்கலாக கரண்டியைப் பிடித்துக்கொண்டு, குழிக்கரண்டியின் அடிப் பாகத்தினால் மாவைத் தேய்க்கவும்.
பூந்திகள் எண்ணெயில் விழுந்து பொரியும். கிளறி விட்டு சல்லிக் கரண்டியினால் பூந்தியை எடுத்து வடிக்கட்டியில் போட்டு எண்ணெய் நீக்கவும். இப்படியே மிகுதி மாவையும் பூந்திகளாகத் தயாரிக்கவும்.
கரகர என்ற பதத்தில் வேகவிட்டு எடுக்கவும்.
வறுத்த முந்திரி, வேர்க்கடலை முதலானவற்றுடன், உப்பு ,காரம், காயம் பொடிகள் சேர்த்து பூந்தியைக் கலந்து கொடுக்கலாம்.
தயிர்ப் பச்சடி செய்யவும் பூந்தியை உபயோகிக்கலாம். மிக்சர் செய்யவும் உபயோகமாகும்.
லட்டு செய்ய தனி கடலைமாவில் பூந்தி செய்ய வேண்டும். அதைப் பிறகு எழுதுகிரேன்.
வாழ்த்துகள்
அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள் சொல்லுகிறேன் காமாட்சி



