Archive for மே, 2011
கார சாரமான பூண்டுப் பொடி
இதைச் சின்ன அளவில் செய்து பாருங்கள். ஊறுகாய் போலவும்
சட்னிக்குப் பதிலாக அவசரத்திற்கும் உபயோகப்படும்.
இதுவும் கிராமங்களில் செய்யும் ஒரு ருசியான அவசர
தயாரிப்பு.
வேண்டியவைகள்
வேர்க் கடலை—3 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள்—3 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல்— 3, அல்லது 4.
உறித்த பூண்டு இதழ்கள்—கால் கப்
ருசிக்கு உப்பு
பெருங்காயம்—வாஸனைக்கு
ஆம்சூர்—ஒரு டீஸ்பூன் அல்லது துளி புளி
ஒரு துளி எண்ணெய்
செய்முறை.
வெறும்வாணலியில்தனித்தனியாகஎள்ளையும்,வேர்க்கடலையையும்
சிவக்க வறுக்கவும்.
வேர்க் கடலையை கையினால் தேய்த்து தோலை நீக்கவும்.
துளிஎண்ணெயில் மிளகாயையும் சிவக்க வறுக்கவும்.
இவைகளைப் பெருங்காயம்சேர்த்துமிக்ஸியில்கரகரப்பாகப்
பொடிக்கவும்.
உறித்த பூண்டைதுண்டுகளாக்கி அரைத்த சாமான்களுடன்
உப்பு சேர்த்து சற்று மசியும்படி 2 சுற்று சுற்றவும்.
சேர்ந்தாற் போல வரும்.
ஆம்சூர். சேர்த்து சிறிய உருண்டைகளாகச் செய்துசிறிதுநேரம்
வெளியில் வைத்து பாட்டிலில்எடுத்துவைத்துஉபயோகிக்கவும்.
புளிப்புக்காக புளியோ, ஆம்சூரோ உபயோகிக்கவும்.
எள், வேர்க் கடலை உபயோகிப்பதால், எண்ணெய்ப் பசையுடன்
சேர்ந்தாற்போல இருக்கும். ஜலம் உபயோகிப்பதில்லை.
நீண்ட நாட்கள் கெடாது.
எள்மட்டிலும் சேர்த்தும், செய்யலாம்.
அதேபோல் வேர்க்கடலை மட்டும் சேர்த்தும் செய்யலாம்..
லின் ஸீட் சேர்த்தும் செய்யலாம். நான் நினைத்துக்
கொண்டேன் அக்ரூட், பாதாம், முந்திரி, ஸன்ப்ளவர் ஸீட்
என ஏதாவது வீட்டிலிருப்பதையும் ஏதாவதொன்றை சிறிது
சேர்த்தும் செய்து பார்க்க வேண்டுமென்று.
பூண்டை பச்சையாகவே வதக்காமல் போட வேண்டும்.
சற்று ஊற,ஊற பொடி சற்று உதிர் பதத்தில் வரும்.
காரம் வேண்டிய அளவிற்கு கூட்டவும். நான்
செய்தது,எள்,வேர்க்கடலை சேர்த்து செய்ததுதான்
சாப்பிடும்போது தனியாக சிறிது எடுத்து தயிர் கலந்தும் உபயோகிக்கலாம்.
பாகற்காய் இனிப்புப் பச்சடி
கசப்பு காயாக இருந்தாலும் செய்யும் விதத்தில்
பச்சடி ருசியாக இருக்கும்.
பாகற்காய் பிடித்தவர்களுக்கு இது சுலபமாக தயாரிக்க
முடியும். கிரேவியைச் சுருக்கி கெட்டியாகத் தயாரித்தால்
ரொட்டியுடன் எடுத்துப் போக மிகவும் ஸௌகரியமானது.
எண்ணெய் சற்று கூட விட்டால் 2, 3, நாட்கள் வரை கெடாது.
வேண்டியவைகள்
திட்டமான நீளத்துடன் கூடிய பாகற்காய்—2
பச்சை மிளகாய்—–3
தோல்நீக்கி பொடியாக நறுக்கிய இஞ்சித் துண்டுகள்– –2
-டேபிள்ஸ்பூன்
புளி—ஒரு பெறிய நெல்லிக்காயளவு
வெல்லம் பொடித்தது–4,5 டேபிள்ஸ்பூன்
தாளிக்க—-கடுகு, அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு—ஒருடேபிள்ஸ்பூன்
பெருங்காயம்—சிறிது
ரஸப்பொடி—ஒருடீஸ்பூன்
கரிவேப்பிலை–சிறிது
எண்ணெய்—5, 6 டீஸ்பூன்
உப்பு—-ருசிக்கு
விருப்பப் பட்டால்–ஏலக்காய்-1
பாகற்காயை அலம்பி இரண்டாகப் பிளந்து விதைகளை நீக்கி
மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
சிறிது உப்பு சேர்த்துக் கலந்து கசக்கின மாதிரி பிசறி ஒரு
பாத்திரத்தில் அழுத்தி வைக்கவும். புளியை ஊறவைத்து ,
2, 3 ,முறை ஜலம் விட்டு கெட்டியாகசாரு பிழிந்து வைத்துக்
கொள்ளவும். பாகற்காயை ஒட்டப் பிழிந்து ஒரு டீஸ்பூன்
எண்ணெய் விட்டுப் பிசறி மைக்ரோவேவில் ஹை பவரில்
5, நிமிஷங்கள் வைத்து எடுக்கவும். காய் நன்றாக வெந்து விடும்.
நான்ஸ்டிக்பேனில்,எண்ணெயைககாயவைத்து,கடுகு,
பெருங்காயம், பருப்பைத் தாளித்து மிளகாய், கரிவேப்பிலை
இஞ்சி சேர்த்து வதக்கவும். வெந்த காயையும் உடன் சேர்த்து
வதக்கி புளி ஜலம் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம்,உப்பு
,ரஸப்பொடி சேர்த்து நிதானமாகக் கொதிக்க விடவும். ஏலக்காய்ப்
பொடி, மஸாலாப்பொடி வேண்டியவர்கள் துளி சேர்க்கலாம்.
குழம்பை நன்றாகக் கொதிக்க விடவும்.
குழம்பு திக்காவதற்காக ஒரு ஸ்பூன் அரிசி மாவைக்
கடைசியில்சிறிதுஜலத்தில் கரைத்துச் சேர்த்து ஒரு
கொதிவிட்டு இறக்கவும்.
காய் அதிகம் சேர்த்துச் செய்தால் சுருளக் கிளறினாலே போதும்.
மாவு அவசியம் இல்லை
.டிபனுடன் எடுத்துப்போக சௌகரியமாக இருக்கும்.
உப்பு காரம்,மற்றும் யாவும் காய்க்குத் தக்கபடி அதிகம்
சேர்க்கவும்.
-
- இனிப்பு, புளிப்பு கசப்பு, எல்லாம் கலந்த அறுசுவைப்
- பச்சடி. வாஸனையுடன் கூடிய பச்சடி.
- பாகற்காய்பிடித்தவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- நான்வீட்டிலசெய்ததால்உங்களுக்கும் பிடித்தவர்கள்
- செய்யட்டுமே என்று எழுதியிருக்கிறேன். பெருஞ்சீரகமும்
- பிடித்தவர்கள் தாளிப்பில் சேர்க்கலாம்.
மஸாலாபொடி
வேண்டியவைகள்
சீரகம்—–100 கிராம்—-
மிளகு—50கிராம்
லவங்கம்—-15
பெறிய ஏலக்காய்—-8
வெந்தயம்—-100கிராம்
லவங்கப் பட்டை—-2அங்குல அளவு
வெறும் வாணலியைச் சூடாக்கி
மேற்கூறியவைகளை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
சுக்கு—-2அங்குல நீளத்திற்கு 2துண்டுகள் சிறிது அதிகமோ,
குறைவோ ஆனாலும் பரவாயில்லை
.சின்ன ஏலக்காய்—12
ஜாதிக்காய்—–1
மஸாலா இலை—பிரிஞ்சி இலை–2
வறுத்த சாமான்களுடன் இவைகளையும் துண்டுகளாகச்
சேர்த்து மிக்ஸியில் நன்றாகப் பொடித்து வைத்துக் கொண்டால்
வேண்டியபோது, இதில் சிறிது போட்டால் சமையல்
மஸாலா வாஸனையுடன் ருசியாக இருக்கும். பொடியை
காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
வீட்டில் பொடி இருந்தால் சமயத்திற்கு உதவும்.
பகோடா மோர்க் குழம்பு
இதுவும் நம்முடைய மோர்க்குழம்பு வகைபோல செய்தேன்
சென்ற ஆகஸ்ட்டில் அமெரிக்காவில் தயானந்த ஸரஸ்வதி
ஸ்வாமிகள்ஆசிரமத்தில்பென்ஸில் வேனியா குருகுலத்தில்,அவருடையஸதாபிஷேகக்கொண்டாட்டத்தில்
கலந்துகொண்டு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இந்த
மோர்க்குழம்பு சற்று வித்தியாஸ முறையில் ருசித்தது.
அப்போதே இதை மனதில்க் கொண்டு எழுதப் ப்ளான் மனதில்
தோன்றியது. நேரம் இப்போதுதான் என்று நினைக்கிறேன்.
வெங்காயம் நான் சேர்த்து செய்தேன். சாதாரணமாக நாம்
வெங்காயம் மோர்க் குழம்பில் சேர்ப்பது கிடையாது.
இதுவும்.ஒரு தனி ருசிதான்.
பகோடாக்களைச் செய்து கொண்டு மோர்க் குழம்பில் சேர்த்து ச்
செய்வதுதான் இதன் முக்கியம். கடலைமாவைக் கரைத்து
செய்யாமல்அரைத்து செய்திருப்பதுதான் நம்முடைய வழி.
வேண்டியவைகள்
பகோடா தயாரிக்ககடலைமாவு—-6 டேபிள் ஸ்பூன்
பெறிய வெங்காயம் —1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
மிளகாய்ப் பொடி—-கால் டீஸ்பூன்
உப்பு—-கால் டீஸ்பூன்
எண்ணெய்—-பொறிப்பதற்கு வேண்டிய அளவு
மோர்க் குழம்பிற்கு வேண்டியவைகள்
கெட்டியான மோர்——3 கப்பிற்கும் மேல்
கடலைப் பருப்பு—-1டேபிள்ஸ்பூன்
தனியா—-2 டீஸ்பூன்
கடுகு—-1 டீஸ்பூன்
பச்சைமிளகாய்—–3
வற்றல் மிளகாய்—1
தேங்காய்த் துருவல்—1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க—-கடுகு, சிறிது பெருங்காயம்
மஞ்சள்ப் பொடி—–சிறிது
ருசிக்கு—-உப்பு
செய்முறை
கடலைப்பருப்பு,தனியா.கடுகை ஊரவைத்து பச்சைமிளகாய்,
தேங்காய்த்துருவல்,வற்றல் மிளகாய் சேர்த்து மிக்ஸியில்
திட்டமாக ஜலம் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை மோருடன் உப்பு, மஞ்சள்ப்பொடி சேர்த்து
கரைத்து வைக்கவும்.
கடலைமாவுடன், நறுக்கிய வெங்காயம்,உப்பு, மிளகாய்ப்பொடி
சேர்த்துக் கலந்து ஜலம் விட்டுத் தளரப் பிசைந்துகொள்ளவும்.
சற்று லூஸாக இருக்கட்டும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக், கலந்த மாவை
பகோடாக்களாக உருட்டிப் போட்டு பொன்நிறமாகப்
பொறித்தெடுக்கவும். ஷேப்பைப் பற்றிக் கவலை வேண்டாம்.
மோர்க் கலவையை குழம்பு வைக்கும் பாத்திரத்தில் கொட்டி
மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
பொறித்தெடுக்கும் போதே பகோடாக்களைக் குழம்பில் சேர்த்து
விடவும்.
நல்ல பால் பொங்குவதுபோல் நுறைத்து வரும்போது கிளறி
தீயை மட்டுப்படுத்தி இரண்டு நிமிஷங்கள் மேலும்
வைத்திருந்து குழம்பை இறக்கவும்.
கடுகு, பெருங்காயம் தாளித்து மூடி வைக்கவும்.
பகோடா மிருதுவாக ஆகி, குழம்பும் சாப்பிட தயாராகிவிடும்.
இருக்கவே இருக்கிறது கொத்தமல்லி,கறிவேப்பிலை.
மேலே தூவுங்கள். காரம் அதிகரிக்க மிளகாயை தாளிப்பில்
சேர்க்கவும்.
வேண்டுமானவைகளுடன் சேர்த்து உண்ணலாம்.
Introducing-Manasvini, my Granddaughter!
Hey, people! this is chollukireen’s granddaughter manasvini (mannu) here! Sorry i did this without telling you, patti! I like to blog, just like patti! (my blogs are mannu98 and othermannu98) Anyways, just wanted to say to patti- You are a great patti and keep blogging, ‘cuz your recipies are delicious! Come back to Mumbai/Bombay soon! (in time for my BIRTHDAY!) I don’t have your e-mail id and your not on skye EVER, so this is the only way icould say this! Hope you didn‘t mind me blogging on your account! SORRY SORRY SORRY!!! Also- you forgot the diary appa gave you in your cupboard.
LOVE YOU and MISS YOU LOTS!
LOADS OF KISSES FROM,
MANNU ❤
புழுங்கலரிசி சேவை
சேவை என்பது இடியாப்பம். எனக்கு இந்த பெயர் முன்பெல்லாம்
தெரியாது. சேவை என்றே சொல்லி வழக்கம்.
இந்தப் பெயரும் நன்றாகவே இருக்கிறது. இதனுடன் கலக்கும் பொருளைக்
கொண்டு பெயர் சொல்லுவோம். தேங்காய், எள், எலுமிச்சை,வெல்லம்,
தயிர்,காய்கறி, மோர்க்குழம்பு, தேங்காய்ப் பால் என பட்டியல் நீளும்.
இப்போது இடியாப்பம் குருமா தான் முதலிடத்தில் இருக்கிறது.
நாம் முதலில் ப்ளெயின் சேவை தயாரிப்பதைப் பற்றி அதுதான்
புழுங்கலரிசியில் தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.
வேண்டியவைகள்
புழுங்கலரிசி—3கப். இட்டிலிக்கு உபயோகிக்கும் அ ரிசி
இடியாப்பம் செய்ய உபயோகிக்கும் — சேவை நாழி
அரிசியைக் களைந்து நன்றாக ஊறவைக்கவும்.
செய்முறை-
கிரைண்டரில் , ஊறிய அரிசியை ப் போட்டு அதிகம் ஜலம் விடாமல்
கெட்டியாகவும், நைஸாகவும் அரைத்தெடுக்கவும்.
இட்டிலி வார்ப்பது போல குழித்தட்டுகளில் எண்ணெய் தடவி மாவை
விட்டு ரெடி செய்யவும்.
சேவை நாழியில் உட்புறம் லேசாக எண்ணெய் தடவி வைக்கவும்.
குக்கரில் அளவாக தண்ணீர்விட்டு இட்டிலி ஸ்டேண்டை வைத்து,
வெயிட் போட்டு இரண்டு விஸில் வரும் வரை மிதமான தீயில்
இட்டிலிகளாக வார்க்கவும்.
சாதாரண இட்டிலி வார்க்க வெயிட் போட மாட்டோம்.
நீராவி அடங்கிய பின் இட்டிலிகளை ஒன்றன் பின் ஒன்றாக
எடுத்து அச்சில் போட்டு அழுத்தி சேவைகளாகப் பிழிந்து
எடுக்கவும். சூட்டுடன் பிழியவும்.
திருகு முறையிலும், ப்ரஸ் செய்து பிழியும் முறையிலும்
சேவை நாழிகள் கிடைக்கின்றன.
ப்ளெய்ன் சேவை ரெடி.
இதனுடன் குருமா சேர்த்து சாப்பிடலாம்.
தேங்காய் சாதத்திற்கு தயாரிப்பது போல தாளிதம் செய்து
தேங்காயை வறுத்து சேர்க்கலாம். இது தேங்காய் சேவை.
எலுமிச்சை சாற்றில் தாளித்துக் கலக்கலாம். இது எலுமிச்சை
சேவை.
தயிரில் தாளித்து தயாரித்தால் தயிர் சேவை.
எள்ளில் தயாரித்தால் எள்ளு சேவை.
வெல்லப் பாகு சேர்த்து தயாரித்தால் வெல்ல சேவை.
மோர்க் குழம்பு, தேங்காய்ப் பாலுடனும், சாப்பிடும்
வழக்கம் உண்டு.
எல்லா காய் கறிகளுடனும், உப்பு சேர்த்து வதக்கி
ஸோயா ஸாஸ் கலந்தும் தயாரிக்கலாம்.
தக்காளியை உபயோகப் படுத்தலாம்.
குருமா தயாரித்து உடன் உபயோகிப்பதுதான் பிரபலமாக
உள்ளது.
நம்முடைய ரஸனைக்கு ஏற்றவாறு பலவிதங்கள்.
சுலபமாக மாவை அறைத்து முதல்நாளே பிரிஜ்ஜில்
வைத்துக் கொண்டு வேண்டும் போது தயாரித்து
உபயோகிக்கலாம்.
குருமா செய்முறை முன்பே இருக்கிறது.
சேவை படங்கள் சில.
எந்த விதமான ருசி வேண்டுமோ அந்த விதமான மேல் சாமான்கள்
கலவையைத் தயார் செய்து தக்கபடி ப்ளெயின் சேவையுடன்,
திட்டமாகக் கலந்தால் விருப்பமானது தயார்.
குருமா, தேங்காய்ப்பால், மோர்க்குழம்பு வகைகளை கிண்ணங்களில்
ஸ்பூனுடன் கொடுத்து ப்ளேட்டில் ப்ளெயின் சேவையைக் கொடுக்கவும்.
மற்ற வகைகளைக் கலந்த நிலையிலே சித்ரான்னங்கள் டைப்பில்
அழகாகக் கொடுக்கலாம்.