அன்னையர் தினப்பதிவு—20

ஜனவரி 6, 2015 at 11:55 முப 19 பின்னூட்டங்கள்

மஞ்சள்செம்பருத்தி

மஞ்சள்செம்பருத்தி

நான் காட்மாண்டுவிலிருந்த  பொழுது  வழக்கமாக 2அல்லது  மூன்று

வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்தியா வருவது வழக்கம்.

அதுவும்   ராயல் விமான சேவையின்  பிளேன்கள்   ஏதாவது

ஸாமான்கள் கொண்டுவர    தில்லியோ,கல்கத்தாவோ வரும்.

அம்மாதிரி ஸமயங்களில்   இலவசமாகப் ப்ளேன் ஸவாரி கிடைக்கும்.

எந்த இடமோ இடமோ  அங்கு வந்து அவ்விடமிருந்து இரயில் பிடித்து

எங்கு போக  வேண்டுமோ அங்கு போகலாம்.   பிள்ளைகளின்  விடுமுறை

ஸமயம் வந்தால் மட்டுமே நான் வருவேன்.

ஊரில் எல்லோரும் உறவுக்காரர்கள்.

அப்படி முன்பு எப்பொழுதோ போன ஸமயம்,  அம்மா எங்கள்

உறவினரைக்    காட்டி அவர்கள் வந்தபோது, உன் பொண்ணுக்கு   உடம்பு

கிடம்பு ஏதாவது வந்து விட்டால், மருந்து மாத்திரை சாப்பிட அப்படி ஒரு

படுத்தல். இவர்களைத்தான் கூப்பிடுவேன்.

சிவனேன்னு நல்ல வார்த்தைகள் சொல்லி  இவ கொடுத்து விட்டால்

மாத்திரை மெள்ள உள்ளே போகும்.

அப்படியா மாமி  ரொம்ப நன்றி மாமி என்றேன். இதெல்லாம்தான் பெரிய

உதவி என்றேன்.

இதெல்லாம் எப்போது?     பெண்ணெல்லாம்   சின்னப் பெண்ணாக இருந்த

போது. இதெல்லாம் அம்மா செய்வதைவிட  என்ன பெரிசு.

ஒரு வேளை இவ என் மாட்டுப்பெண்ணாக வரப்போகிறாளோ

என்னவோ?

ப்ராப்தம் இருந்தால்   அப்படிக்கூட நடக்கலாம் இல்லையா?

இப்போபிடிச்சு என்ன வார்த்தை மாமி!

நாங்களெல்லாம் ஜாஸ்தி படிக்கலே.  இவதானே பெரியவோ?

இவளை நன்னா படிக்க வச்சு வேலைக்கு அனுப்பணும்.

கல்யாணம் என்பதெல்லாம்  நான் யோசிக்கவே இல்லை.

அதற்குள் அம்மா குறுக்கிட்டு,  இப்படியெல்லாம் பதில் சொல்லலாமா?

அதற்கென்ன மாமி,   நடக்கட்டுமே,  ஸந்தோஷம் என்று  சொல்லு.

வாய் வார்த்தைதானே?

ஸரிஸரி அப்படியே சொன்னால்ப் போச்சு என்று  சொன்னேன்.

எப்போதும் நிறைய  படிக்க வைக்க வேண்டும். என்பதில்தான்

யோசனையே தவிர மற்றதை யோசித்ததே இல்லை.

அப்புறம் எந்த முறை போனாலும் நீதான் என் சம்பந்தி என்பார்கள் அந்த

மாமி.

அம்மா சொல்லிக் கொடுத்தபடி  படிக்கராள், படிக்கட்டும் என்பேன்.

ஊரில் உறவுக்காரர்களிடையே   இம்மாதிரி வார்த்தை உபசாரங்கள்

எல்லாம் வெகு ஸகஜம்.

பெண்ணும் அவ்விடத்தில் ஓரளவு படித்த பின்  காட்மாண்டு வந்து

டிகிரி முடித்தாகி விட்டது.

பையன் ஒருவன் சென்னைபோய்  அடுத்தவனும் போவதற்காக  மனதில்

எண்ணிக் கொண்டிருந்தோம்.

இரண்டு பேர்கள் உறவினர் வீட்டில் இருப்பது சிரமம்.. அவனுக்குச்

சென்னையில் படித்துக்கொண்டிருந்த  பிள்ளையே  படிக்க இடம் வாங்கித்

தருவதாகவு ஏற்பாடும் ஆயிற்று.

இடையே சென்னையினின்றும்  ஒரு கடிதம்   வந்தது. அதை எங்கள்

அதுதான் மாமி,மாமி என்று குறிப்பிடுகிறேனே அவரின் மூத்தபிள்ளை

மாமியின் சார்பில் எழுதினது  போஸ்டல்  தாமதங்கள் ஏதுமின்றி வந்து

சேர்ந்ததுதான் ஆச்சரியம்.

அவர்கள் தன் தம்பிக்கு விவாகம் செய்ய  உத்தேசித்திருப்பதாயும்,

அவர்கள்  அம்மாவின்   விருப்பப்படி  கடிதம் எழுதுவதாகவும்,, முதலிலேயே

பெண்ணும் பிள்ளையும்  ஒருவர்க்கொருவர் தெரிந்தவர்கள் என்பதாலும்,

நீங்கள்உங்கள் உத்தேசத்தைத் தெரியப்படுத்தவும் என்று எழுதியிருந்தார்.

அந்தக் கடிதம் பார்த்தே   எங்கள் வீட்டவருக்கு   கலியாணம் நிச்சயமாகி

விட்டது போன்ற ஸந்தோஷத்தில்  பணத்திற்கு என்ன செய்யலாம்,ஆபீஸில்

எவ்வளவு ஏற்பாடு செய்ய முடியும் என்ற கணக்கு போட ஆரம்பித்தாகி விட்டது.

எனக்குதான்   சென்னையில்  கல்யாண மார்க்கெட் நிலவரம் தெரியாது.

நானும் பதிலெழுதிப் போட்டேன். மிக்கஸந்தோஷம். உங்கள் எதிர்பார்ப்புகள்

என்ன என்று தெரியாது.

அடுத்துப் பிள்ளைகளின்   மேல் படிப்பு இருக்கிறது. ஆதலால் விவரங்கள்  தயவு

செய்து எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.

எதிர்பார்ப்புகள் என்று ஒன்றும்  கிடையாது. நேரில் பார்க்கும் போது பேசலாமே.

என்ற பதில்  வந்தது. அம்மாவிடம்  விவரம் சொல்லி  ஆலோசனை கேட்டேன்.

அவர்களே பிரஸ்தாபிக்கும் போது  ஸம்பந்தம் பேசதான் வேண்டும்.

ஒருமுறை வந்து பார்.

காலா காலத்தில்  எல்லாம் செய்துடணும். மற்றும் ஸமீபத்தில் நடந்த

இரண்டொரு கலியாணங்களைப் பற்றியும், யாரையோக் கொண்டுதான்

எழுதியிருந்தாள்.

அவாத்து கல்யாணம் அவ்வளவு நன்றாக இருந்தது. எங்கேயிருந்துதான்

அவ்வளவு செய்தாளோ?    ரொம்ப ஸாதாரணநிலைதானே அவர்கள்.

அதனாலே நாம் தயாராகத்தான் இருக்க வேண்டு்ம்.

ஒருதரம் கல்யாண வார்த்தைகள் பேசி  ஆரம்பித்தால்தான்  சுறுசுறுப்பு வரும்.

ஓரளவு இப்படி அப்படி என்று கோடியும் காட்டியிருந்தாள் .

மனதில் தூண்டிலைப் பதியும்படி போட்டு விட்டாள்.ஒரு முறை அவர்களை

நேரில் பார்த்துப் பேசு.  பெங்களூரில் ஒரு கல்யாணம்   வருகிறது. நீங்களும்

வாங்கோ. நானும்  அவ்விடம் வருவேன்.

எதற்கும் சென்னையில் முதலில் அவர்களைப் பார்த்து விட்டு வாங்கோ

என்று குறிப்பிட்டிருந்தாள். ஸரி அப்படியே செய்யலாம் என்று தீர்மானித்து

நாங்களிருவரும்  சென்னையும் வந்து  ஸாதாரண விஸிட்டாக

அவர்களைப்   பார்த்து விட்டு மறுநாள் வருகிறோம் என்று சொல்லி விட்டு

மறுநாளும் சென்றோம். பேச்சு ஆரம்பிக்க வேண்டுமே.

பெங்களூர் கல்யாணத்திற்கு வந்தோம். நீங்கள் குறிப்பிட்ட

விஷயத்தையும்  கலந்து ஆலோசிக்க வந்தோம்.

இதுவரை கல்யாணத்தை யோசிக்கவில்லை. ஒரு ஆறுமாத காலம்

டைம் எடுத்துதான்  எல்லாம் செய்ய வேண்டும். பிள்ளைகள் படிப்பிருப்பதால்

அதிகம் செய்யும்படியான  வசதி இல்லை. உங்கள் யோசனையைச்

சொல்லுங்கள் என்று கேட்டேன்.

நாங்களெல்லாமும் படிக்கும் காலத்தின் பெற்றோர்களின் சிரமம் அறிந்தவர்கள்.

பெண்,பிள்ளை இவர்களுக்கும் விருப்பமிருக்கிரது.

அதனால் கௌரவமான முறையில் நடத்திக் கொடுத்தால் போதுமானது.

இம்மாதிரி பதில்   எதிர்பார்க்கக் கூடியதே இல்லையல்லவா!!!!!!!

உங்கம்மாவுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.   அம்மா சொன்னால்

ஸரி தான்.    இப்போது அம்மாதான் நடு ஆஸாமி.

திரும்ப காட்மாண்டு போவதற்கு முன் வந்து விட்டுப் போகிறோம்.

அடிக்கடி வரமுடியாது.

ஸரி நிச்சயம் செய்து விடலாமே.

அப்பொழுதே நிச்சயமும் செய்து விடலாம். தேதியும் பார்த்து சொல்லியாயிற்று.

எல்லாம் ஒரு ஏழெட்டு நாட்கள் பாக்கி.     பெங்களூர் கல்யாணம் நன்றாக நடந்தது.

சென்னையில்  அக்கா வீட்டவர்களுக்கு எழுதி கல்யாண விஷயம் சொன்னோம்.

மனிதர்கள் வேண்டுமல்லவா?

நாங்கள் அக்கா வீட்டிலிருந்து  வருவதாக  விலாஸமும் கொடுத்தோம்.

அம்மா நான் எதற்கு?  ~ ஒருஜோடி பருப்புத் தேங்காய் செய்து கொடுத்து

இவ்விப்படி செய்யுங்கள் என சொல்லி அனுப்பி விட்டாள்.

சென்னையும் வந்தாகி விட்டது.

அக்கா சொல்கிறாள்.   பிள்ளையாத்திலிருந்து  நாளைக்குள்  உன்னை வந்து

பார்க்கச்  சொல்லியுள்ளார்கள்.

என்ன விவரம் ஏதும்  கேட்டேன்  சொல்லவில்லை. நீயானால்  பருப்பு

தேங்காயுடன் வந்திருக்கிறாய்.

ஒருவேளை    இஷ்டம் இல்லையோ என்னவோ?  ஸந்தேக விதை நட்டு

விட்டாள்.

அப்பவெல்லாம் எல்லோரிடமும் போன் வசதி கிடையாது.   திடீரென்று

என்ன காரணம்  இருக்கும்?    குழப்பம்தான்.

மறுநாள் போனோம்.

மாமியுடைய மன்னி வந்திருந்தார். ஸாதாரணமாக பேச்சு ஆரம்பமாகியது.

அறிமுகத்திற்குப் பின்

எங்க நாத்தநார்தான்  மிகவும் விசாரப் படுகிறார். என்ன உத்தேசம்

உங்களுக்கு.

இவ்விடம் பாத்திரங்கள் வாங்குவதானால்   மூன்று ஆயிரத்திலிருந்து

முப்பது ஆயிரம் வரை ஸெட்ஸெட்டாகப் பாத்திரம் கிடைக்கிரது.

நகைகளும் நமக்கேற்றார்போல  கிடைக்கும்.     சத்திரமும் அப்படியே.

என்ன உத்தேசம் உங்களுக்கு?. இப்படி கேள்விக்குமேல் கேள்விகள்.

நான் ரெடி இல்லையே பதிலளிக்க. பொய் சொல்லத்  தெரியாது.

பார்ப்போம் தொடர்ந்து

Entry filed under: அன்னையர் தினம்.

புத்தாண்டு வாழ்த்துகள் அன்னையர்தினப்பதிவு—21

19 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ranjani135's avatar ranjani135  |  3:08 பிப இல் ஜனவரி 6, 2015

    பெண்ணின் திருமணம் நடந்ததா? உங்களுடைய அந்த நாள் கவலை இப்போது எங்களைப் பிடித்துக் கொண்டுவிட்டதே! பெண்ணுக்கும், பிள்ளைக்கும் விருப்பம் இருப்பதால், எல்லாம் நல்லபடியாகவே நடந்திருக்கும், உங்கள் அம்மா தலையிட்டு முடித்து வைத்திருப்பார் என்று நினைக்கிறேன்.
    சீக்கிரம் அடுத்த பதிவு எழுதிவிடுங்கள். சஸ்பென்ஸ் அதிகமாகிறது.

    மறுமொழி
    • 2. chollukireen's avatar chollukireen  |  7:16 முப இல் ஜனவரி 8, 2015

      அதற்கென்ன சீக்கரமே எழுதிவிட்டாற் போகிறது. நன்றி.அன்புடன்

      மறுமொழி
  • 3. chitrasundar's avatar chitrasundar  |  6:07 பிப இல் ஜனவரி 6, 2015

    அருமையான பதிவு காமாக்ஷிம்மா. திருமண விஷயத்தில் ஒவ்வொரு அடியையும் எவ்வளவு ஜாக்கிரதையாக வைக்க வேண்டும் என்பது தெரிகிறது. அம்மாவின் முயற்சியால் உங்களுக்கு பாதி பாரம் குறைந்திருக்கும் என நினைக்கிறேன். எனக்கும் முடிவைத் தெரிந்துகொள்ளும் ஆவல் அதிகமாகிவிட்டது. அன்புடன் சித்ரா.

    மறுமொழி
    • 4. chollukireen's avatar chollukireen  |  7:20 முப இல் ஜனவரி 8, 2015

      அருமையான பதிவு என எழுதியது கண்டு உச்சி குளிர்ந்து விட்டது. அடுத்த பதிவும் எழுதுகிறேனே. அன்புடன்

      மறுமொழி
  • 5. பிரபுவின்'s avatar பிரபுவின்  |  5:04 முப இல் ஜனவரி 7, 2015

    ப்ராப்தம் என்றால் என்ன அர்த்தம்.
    அருமையான பதிவு அம்மா.
    திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்று சும்மா சொல்லவில்லை.

    மறுமொழி
    • 6. chollukireen's avatar chollukireen  |  7:24 முப இல் ஜனவரி 8, 2015

      யாரால் நிச்சயிக்கப்பட்டு நடந்தாலும் எதுவும் அவரவர்களுக்கென கடவுளால் நிர்ணயிக்கப்பட்டது
      என்ற எண்ணம்தான் ப்ராப்தம்.. கடவுள் நம்பிக்கையைக் குறிக்கும் பதம் என்பது என் எண்ணம்.

      மறுமொழி
  • 7. dawnpages.wordpress.com's avatar marubadiyumpookkum  |  11:28 முப இல் ஜனவரி 7, 2015

    some times marriages are decide by people only

    மறுமொழி
    • 8. chollukireen's avatar chollukireen  |  7:27 முப இல் ஜனவரி 8, 2015

      தெய்வம் மானுஷ ரூபேண என்பது பழமொழி. நீங்கள் சொல்வதும் அதையே ஒத்திருக்கிறது போலத் தோன்றுகிறதெனக்கு.. அன்புடன்

      மறுமொழி
      • 9. dawnpages.wordpress.com's avatar marubadiyumpookkum  |  8:08 முப இல் ஜனவரி 8, 2015

        good persons always seeing goodness in all aspects…like Dharmar

  • 10. JAYANTHI SRIDHARAN's avatar JAYANTHI SRIDHARAN  |  4:40 பிப இல் ஜனவரி 7, 2015

    sema suspense mami. 🙂 miga nandraaga ezhuthi irukkel

    மறுமொழி
  • 11. chollukireen's avatar chollukireen  |  7:32 முப இல் ஜனவரி 8, 2015

    வாம்மா வா. உன் மறுமொழி ஸந்தோஷத்தைத் தருகிரது..
    அடிக்கடி வந்து ஊக்கம் கொடுக்கலாமே. அன்புடன்

    மறுமொழி
  • 12. VAI. GOPALAKRISHNAN's avatar VAI. GOPALAKRISHNAN  |  9:55 முப இல் மார்ச் 2, 2015

    யதார்த்தமாகவும் மிகவும் விறுவிறுப்பாகவும் எழுதி கடைசியில் சஸ்பென்ஸ் கொடுத்து முடித்துள்ளது அழகு !

    மறுமொழி
  • 13. chollukireen's avatar chollukireen  |  12:06 பிப இல் மே 31, 2021

    Reblogged this on சொல்லுகிறேன் and commented:

    பதிவு இருபதை எட்டி விட்டது. கையில் பணம் காசு எதுவும் ரெடி இல்லை. ஸம்ஸாரி.கல்யாணம் பேச வந்து, இப்போது எதிர் பார்ப்பு எது என்று தெரியாத நிலை. இப்படியும் எதிர்பார்ப்புகள்.ஸாமான்யகுடு்பத்தின் நிலை. அன்புடன்

    மறுமொழி
  • 14. நெல்லைத்தமிழன்'s avatar நெல்லைத்தமிழன்  |  11:49 பிப இல் மே 31, 2021

    யார் யாருக்கு என்ன ப்ராப்தமோ அதன்படிதான் வாழ்க்கை அமைகிறது.

    திருமணம் என்பது மிகப்பெரிய நிகழ்வு அல்லவா? தடங்கல்கள் இல்லாமல் சுமுகமாக எப்படி நடக்கும்? சின்னச் சின்ன கவலைகளும் வரும்.

    நல்ல இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள்.

    மறுமொழி
    • 15. chollukireen's avatar chollukireen  |  11:30 முப இல் ஜூன் 1, 2021

      எங்கேயோ உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசிக்கும்படியான நிலை. அதிகம் நான் எங்குமே குறிப்பிடாத ஒரு காலகட்டம். இப்போது யோசிக்கிறேன். ஸரியான பின்னூட்டம் உங்களுடயது. மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 16. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம்  |  12:19 முப இல் ஜூன் 1, 2021

    யாருக்கு எங்கே முடி போட்டிருக்கிறதோ என்று சொல்வார்கள்.  வந்தது தடங்கலா, உதவியாகும் யோசனையா என்று அப்புறம்தான் தெரியும்!

    மறுமொழி
    • 17. chollukireen's avatar chollukireen  |  11:34 முப இல் ஜூன் 1, 2021

      அதானே. பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்துவிட்டால்? நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 18. Geetha Sambasivam's avatar Geetha Sambasivam  |  1:26 முப இல் ஜூன் 1, 2021

    பெண்ணின் திருமணம் நல்லபடி நடந்திருக்கும் என நம்புகிறேன். சுவாரசியமான இடத்தில் நிறுத்தி விட்டீர்கள். தொடர்ந்து படிக்கக் காத்திருக்கேன், கவலையுடன்! 🙂

    மறுமொழி
    • 19. chollukireen's avatar chollukireen  |  11:39 முப இல் ஜூன் 1, 2021

      நானும் குழம்பிப் போய்விட்டேன். எதிர்பார்ப்பு எப்படி இருக்குமோ என்று. நன்றி. அன்புடன்

      மறுமொழி

JAYANTHI SRIDHARAN -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஜனவரி 2015
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 557,017 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • Unknown's avatar
  • chitrasundar5's avatar
  • Great Foodies's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • yarlpavanan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • tamilelavarasi's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.