அன்னையர் தினப்பதிவு—26
ஏப்ரல் 1, 2015 at 9:10 முப 23 பின்னூட்டங்கள்
பிறந்த நாள் குறிப்பிடுவதற்கு கார்த்திகை உற்சவத்தின் போதுதீபத்தின்
இரண்டாவது நாள் மிருகசீரிஷ நக்ஷத்திரம், வந்தவர்கள் யாவருக்கும்
வடைபாயஸத்துடன் வருஷா வருஷம் சமைத்துப்போட்டு ,அப்பாவின்
பிறந்தநாளைக் கொண்டாடுவது ஞாபகம் வந்தது.
தேதிகள் மாறிதான் நக்ஷத்திரங்கள் வரும். இருப்பினும், மாதத்தையும்
ஷஷ்டியப்த பூர்த்தி நடந்ததை வைத்து ஓரளவு தோராயமாகக் கொடுத்தது.
நல்ல வேளை பர்த் ஸர்டிபிகேட் கொண்டுவா என்றால் எங்கு போவது?
அடுத்து கல்வி எங்கு கற்றார்? என்ன படிப்பு?
ஒரு பதின்மூன்று வயது சிறுமி. நாற்பதுக்கு அதிகம் மாப்பிள்ளை.
மாப்பிள்ளை என்ன படித்தார், என்ன என்று விசாரித்தா கொடுத்தார்கள்.
அல்லது பெண்ணிற்குதான் அதை எல்லாம் கேட்கத்தான்
தெரியுமா?
ஊரைச் சுற்றிவா. இவ்வளவு படித்து வேலையிலுள்ள எவரையாவது
காண்பி.இங்லீஷும்,தமிழும் படிச்சு சொக்கா போட்டுண்டு வேலைக்குப்
போகும்பிள்ளை யாராவது காண்பி என்றுதான் சொல்லி இருப்பார்கள்.
ட்ரெயினிங் படித்தவரா?
இந்த வார்த்தைக்கே அர்த்தம் தெரியாது.
டேனிஷ் மிஷின் பள்ளியில் தனியாக ஆளை நியமித்தே
ஐம்பதுவருஷரிகார்டுகளைத் தேடினார்களாம்.
அங்கும் ரிகார்டுகளே இல்லாமற் போயிருந்தது.
அதற்குப் பிந்தைய இரண்டொரு வருஷ ரிகார்டுகள் கூட
இல்லாமலிருந்ததுதான் கண்டுபிடிக்கப் பட்டிருந்தது.
இப்படி,அப்படி என்று எல்லாத் தேடல்களையும் ஒருவாராக
முடித்து அனுப்பினால் அது ஸரியில்லை,இதுஸரியில்லை என்ற
கடிதப்போக்கு தொடர்ந்து கொண்டே இருந்தது.
நல்ல முறையில் பணம் கிடைத்தால், இதற்கெல்லாம் பாடு பட்டவர்க்கு
எந்த முறையிலாவது கணிசமாக உதவ வேண்டும்என்ற
இம்மாதிரி எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
காங்கிரஸ் தியாகி அவர்களின் முயற்சி சென்னை மந்திரி ஸபை
வரைப் போயிருந்தது.
அதோ,இதோ வந்து விடும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டிருந்தது.
ஊரில் நான்கு பாகமாக்கப்பட்ட ஒரு மனை கிடந்தது
அதையும் விற்பதானால் கூட எந்த தஸ்தாவேஜும் கிடையாது.
பக்கத்தில் சொந்த வீட்டுக்காரர் ஏதோ ஒரு சிறிய தொகை கொடுத்து
கையெழுத்து வாங்கிக் கொண்டார்.
அதை வைத்து என்ன பண்ணப்போகிறோம். அவர்கள் ஒரு
வைக்கப்போராவது போட்டுக் கொள்வார்கள்.கொடுத்து விட்டேன்
என்ற செய்தியுடன் ஒரு முறை போய்வந்தது.
பக்கத்து வீட்டுக்காரர்களும் யார் வந்து நம்மைக் கேள்வி கேட்கப்
போகிரார்கள் என்ற எண்ணம்தான் அவர்களுக்கு இருந்தது.
இதெல்லாம் நான் ஒருமுறை சென்னை போனபோது அம்மா சொன்ன
ஸமாசாரங்கள்..
அம்மாவின் திருவண்ணாமலைப் பயணங்கள் தொடர்ந்து கொண்டு
இருந்தது.
அம்மாவிற்காக எல்லாவற்றையும் செய்து கொண்டிருப்பவர் திருவண்ணாமலை
காங்கிரஸ் தியாகி என்ஏ சிவம் அவர்கள்.
அவர்கள் குடும்பத்திலும் ஒரு அங்கத்தினராகக் குடும்பமே அம்மாவிடம்
அன்பு செலுத்தியது.
என் நாத்தனார் அவர்களின் குடும்பமது.
பேத்தியின் குடும்பம் இன்னும் சற்று ஸவுகரியமான வீட்டிற்குக் குடி
பெயர்ந்தார்கள்.
வீட்டுக்காரர்கள் ,பேத்தி,மாப்பிள்ளையுடன் கூடப் படித்தவர்கள்.
இன்னும் பாட்டி,பாட்டி என்று அன்புடன் பழக அவர்கள், அருகிலேயே
எங்கள் ஊர்ப்பெண் குடும்பத்துடன், அம்மாவிற்கு ஏக ஸந்தோஷம்.
பக்கத்து வீட்டு வைஷ்ணவப் பாட்டி.
வேலைக்குப் போகும்,பெண்,படிக்கும் பேரன் என,அ்வர்களுக்கு உறுதுணை.
அம்மாவிற்கும் ஒழிந்த நேரங்களில் பாட்டி கம்பெனி .அவரவர்கள்,அனுபவ
வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள.
மற்றும் தெருவிலுள்ளவர்களுக்கு வீட்டைப் பூட்டி ,சாவியைக் கொடுத்தால்
மற்றவர்களுக்குக் கொடுத்து ஒத்தாசை செய்ய. எவ்வளவு விதமான
கௌரவ பதவி உயர்வுகள்.
பாட்டியின் ரஸம் ஊற்றிக்கொடுத்தால் என்பெண் ஒருநிமிஷத்தில்
சாப்பிட்டு விடுகிறாள். நல்லாவும் சாப்பிடரா!!!!அதனால் பாட்டி ரஸத்துக்கு
ஏக டிமாண்டு. இரண்டு வேளையும் ரஸம் புக்காகி விட்டது.
எதிர்வீட்டுச் சிறுமி பாட்டி ரஸத்துடன் மட்டும் போகமாட்டாள்.
சின்ன,, பேரனுடைய விளையாட்டு ஸாமான்களையும்,தாருமாராக
இறைத்து விஷமம்பண்ணும்.கூட வராளே விஷமம் பண்ணாதேன்னு சொல்ல
மாட்டாளோ?
பேரன் வரும்போதே என் ஸாமான் ஏன் இது அங்கிருக்கு,இது எங்கே என்று
கேட்கும் போது நமக்கு இது கூட ஸரியா வைக்கத் தெரியவில்லையே என்று
தோன்றும்.
இதெல்லாம் குறிப்பிடுவது எதற்காக? தானம்,தர்மம் என்று தனியாக ஏதும்
செய்ய அவசியமில்லை, நாம் புழங்கும் வகை எது கிடைக்கிரதோ அதைப்
பிறருடன் பகிர்ந்து கொண்டால்ப் போதும் என்பது அம்மாவின் சித்தாந்தம்.
பேரன் கால்பாகாது ஓடி விளையாடும்,கீழே விழும்,தலையில் பட்டுக் கொள்ளும்.
என்ன ஜாக்கிரதையாக இருந்தாலும் டிமிக்கி கொடுத்து விடும்.
அந்த மாதிரி நிலை எல்லாம் தாண்டி,பேரன் நான்காவது க்ளாஸ் படிக்கிறான்.
பேத்தியும் அங்கேயே வேலைக்குச் சேர்ந்து விட்டாள்.
முன்பு எப்போதோ ஒரு காலி மனையும் வாங்கிப் போட்டிருக்கிரார்கள்.
எல்லாம் ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்த நேரம். பென்ஷன் ப்ராப்ளம்.
அதுவும் இவ்வளவு தூரம் வந்து கண்ணா மூச்சி விளையாடிக் கொண்டு
இருக்கிறது.
வர வழியில் சின்ன அளவில் அபார்ட்மென்ட் கட்டரா. நமக்கு முடிந்தால்
லோன் போட்டு வாங்கலாம் என்ற சேதியைக் கொண்டு வந்தாள் பேத்தி
எல்லா விஷயங்களும் தோது பட்டு வரும் என்ற எண்ணத்தில்மும்முரமாக
முயற்சி செய்ய ஆரம்பித்து வாங்குவதென்று தீர்மானித்து முடிவாக
தீர்மானம் செய்து விட்டார் மாப்பிள்ளை.
ஏற்கெனவே வாங்கிப்போட்ட மனை சற்று தூரம் என்று,அருகிலுள்ள
மெயின் ரோட்டில் வாங்கப் போகிரார்கள்.
முதல் மாடி என்கிரார்களே. நமக்கு முடியுமா?
இவ்வளவு பழக்கமான சுற்றங்களை விட்டு,அவ்விடம் போக
வேண்டுமே? தரையெல்லாம் வழுவழுப்பாம்.
எப்போதும் வீட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிரார்களே.
இப்படி எல்லா ஸங்கதிகளையும் சேமித்துக் கொண்டு, நாமும்
அவர்களுக்கு எந்த விதத்தில் உபயோகமாக இருப்போம்?
ஏதாகிலும் பகவான் ஏற்பாடு பண்ணுவார் என்று நினைத்ததுடன்
சொல்லிக்கொண்டும் இருந்திருக்கிறார்.
பேத்தியிடம், எப்போதும் பணம் காசைப் பற்றியே பேசிக்கொண்டு
இருக்கிறீர்களே. ஸரியாகத் தூங்கவேண்டும்.
என்ன கொஞ்சம் மேலும் தேவையாயிருக்கு,. அவ்வளவுதானே.
எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி இருக்கிறேன்.
கேட்டால் அவர்கள் கூட ஒத்தாசை செய்வார். அவர்களுக்கும்
தைரியம்,அறிவுறை .
இந்த வீட்டில் பார்க்க வராத உறவினர்களே இல்லை
பெங்களூரிலிருந்த பெரிய பெண்ணைக் கொடுத்த இடம்,நான்கு வித
சம்பந்தி உறவுகள்.
மாமியார்,மைத்துனர்,ஓர்படிகள். கூட்டுக் குடும்பம்.அவளின்
நாத்தனார் அவர்கள் ,குடும்பமும் ஒரு தனிக்கூட்டுக் குடும்பம்.
பெண் வாழ்க்கைப்பட்ட குடும்பம் போல் பார்ப்பதே அரிது.
குடும்பத்தின் தலைமை பெரிய மைத்துனர்,பெங்களூரில் கவர்மென்ட்
ட்ரெஷரி ஆபீஸர்.மாப்பிள்ளை பெயர்போன ஆஸ்ப்பத்திரியில் ஸெகரட்டரி.
மற்றும் யாவரும் நல்ல வேலையில் இருந்தனர்.
வளவனூர்காரர்களுக்கு, வேலை வாங்கிக் கொடுத்தல், ஊர்ப்
பெண்களுக்கு கேட்பவர்களுக்கு நல்ல வரனாகப் பார்த்து உதவுதல்,
உடல் நலம் ஸரியில்லாது போகும் எவருக்கும்,தகுந்த வைத்திய உதவி
பெற்று நல்குதல்.
பிரதி பிரயோஜனம் எதிர்பாராமல் , ஒத்தாசை செய்தல் இம்மாதிரி ஒரு
குடும்பத்தைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
அவர்களிடமிருந்தும் ஒரு செய்திகளும் இல்லையே, என்று கடிதம்
எதிர்பார்த்துக்காத்திருந்தாள் அம்மா.
Entry filed under: அன்னையர்தினம். Tags: 26 ஆம் பதிவு..
23 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. VAI. GOPALAKRISHNAN | 9:20 முப இல் ஏப்ரல் 1, 2015
பழங்கதைகளாயினும் தாங்கள் சொல்லிக்கேட்பதில் எனக்குள் ஓர் தனி சந்தோஷம் ஏற்படுகிறது. அந்தக் காலத்தையும் இந்தக்காலத்தையும் ஒப்பிட்டுப்பார்க்க முடிகிறது. என் அம்மா சொல்லி நானும் இதுபோலெல்லாம் நிறைய சம்பவங்களைக் கேட்டுள்ளதால் சுலபமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.
2. chollukireen | 9:31 முப இல் ஏப்ரல் 1, 2015
ஆமாம். உங்கள் கருத்துரை ஸரியானது. ஒரு பானை சோற்றில் ஒரு பருக்கை பதம் பார்த்தால் போதும் என்பார்கள். அப்படி இதுவும் ஒரு பானையின் ஒரு சோரு தான். பலவித பானைகளில் வடித்த சாதம் இருக்கிறது.
பலவித அனுபவங்களைக் கொண்ட கதைகளும் உள்ளது.
உங்கள் பின்னூட்டம் அனுபவங்களைப் பலபேர்,அதுவும் அம்மாவின் மூலமும் கேள்விப்பட்டதைத் தெரிவித்ததில் அனுபவங்களைக் கொண்ட உண்மைக் கதை இது என்பது
படிப்பவர்களுக்கும் புரியும். இரண்டு நாட்களாய்த் திருப்பதி
தரிசனம் கிடைத்தது. உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்
3. chitrasundar5 | 1:08 முப இல் ஏப்ரல் 2, 2015
காமாஷிமா,
அம்மாவின் பகிர்தலை எங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சிம்மா. இதன்மூலம் பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது.
எதிர்பார்த்ததற்கு பலனாக கடிதம் வந்து மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்றே நினைக்கிறேன். அன்புடன் சித்ரா.
4. chollukireen | 3:00 பிப இல் ஏப்ரல் 5, 2015
ஆழ்ந்து படிப்பதற்கு மகிழ்ச்சி. அந்தக்கால விஷயங்கள்
சொன்னால்தான் புரியும். மனதில் பதிந்தது பதிவில் வருகிறது. அன்புடன்
5. chitrasundar5 | 1:09 முப இல் ஏப்ரல் 2, 2015
ஓ, திருப்பதி போய் வந்தீர்களா !! நல்லதும்மா 🙂
6. chollukireen | 3:02 பிப இல் ஏப்ரல் 5, 2015
நல்ல தரிசனம் கிடைத்தது. நன்றி சித்ரா. அன்புடன்
7. திண்டுக்கல் தனபாலன் | 3:35 முப இல் ஏப்ரல் 2, 2015
பல விசயங்களை அறிந்து கொள்ள முடிகிறது அம்மா…
8. chollukireen | 3:03 பிப இல் ஏப்ரல் 5, 2015
அப்படியா? மிகவும் நல்லது. அன்புடன்
9. Prabu Varatharajan (@iam_vprabu) | 5:27 முப இல் ஏப்ரல் 3, 2015
நல்ல பதிவு.
“அன்னையர் தினப்பதிவு—26” வெற்றி நடை போடும் ஒரு பதிவு.
நன்றி அம்மா.அன்புடன் பிரபு.
10. chollukireen | 3:05 பிப இல் ஏப்ரல் 5, 2015
உங்களுடைய பின்னூட்டம் உற்சாகத்தைக் கொடுக்கிரது. னன்றி. அன்புடன்
11. பிரபுவின் | 5:28 முப இல் ஏப்ரல் 3, 2015
நல்ல பதிவு.
“அன்னையர் தினப்பதிவு—26″ வெற்றி நடை போடும் ஒரு பதிவு.
நன்றி அம்மா.அன்புடன் பிரபு.
12. chollukireen | 6:08 முப இல் ஏப்ரல் 6, 2015
பாருங்கள். எந்த ன அச்சாகியுள்ளது. ந . அஸரத்தில் திருப்பிப் பார்க்காமல் போஸ்ட் செய்து விடுகிறேன்.
இம்மாதிரி அடிக்கடி ஏற்படுகிறது. நன்றி நானும் சொல்லுகிறேன். அன்புடன்
13. ranjani135 | 7:58 முப இல் ஏப்ரல் 4, 2015
அட! 26 வது பகுதியா? சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டு போனதால் நாட்கள் போனதே தெரியவில்லை. அந்தக் கால நிகழ்வுகள், மனிதர்கள் என்று பழைய சமாச்சாரங்கள் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. அம்மாவிற்கு நல்லபடியாக பென்ஷன் கிடைத்திருக்க வேண்டும். பேத்தியும் புது வீட்டிற்குக் குடி பெயர்ந்திருக்க வேண்டும் மனம் பிரார்த்திக்கிறது.
14. chollukireen | 6:12 முப இல் ஏப்ரல் 6, 2015
பிரார்த்தனைக்கு நன்றி. நீங்களும் அவஸரச் சூழ்நிலைகளில் இருந்தீர்கள். உங்கள் பின்னூட்டமில்லாமலா என் பதிவுகள். திரும்பவும் யாவும் ஸகஜ நிலைக்கு வர வேண்டும். யாவர் நலனையும் வேண்டுகிறேன். அன்புடன்
15. chollukireen | 11:28 முப இல் ஜூலை 12, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
தொடரும் திருவண்ணாமலைப் பயணங்கள். மீள்பதிவு செய்ய முடியாது என்றே நினைத்தேன். செய்துவிட்டேன். படியுங்கள். அன்புடன்
16. ஸ்ரீராம் | 3:12 பிப இல் ஜூலை 12, 2021
சுவாரஸ்யமான பழைய அனுபவங்களின் நினைவுகள்.
17. chollukireen | 11:23 முப இல் ஜூலை 13, 2021
ஆமாம். இம்மாதிரி எல்லாம் நிகழ்வுகள் அப்போது.நன்றி. அன்புடன்
18. Geetha Sambasivam | 6:08 முப இல் ஜூலை 13, 2021
பேத்தியும், பேத்தியின் கணவரும் நல்லபடியாகப் புது வீட்டுக்குப் போய் இனிமையான வாழ்க்கை வாழ வேண்டும். பிரார்த்தனைகள். தொடர்ந்து படிக்கக் காத்திருக்கேன்.
19. chollukireen | 11:25 முப இல் ஜூலை 13, 2021
பிரார்த்தனைகளுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
20. Revathi Narasimhan | 2:10 பிப இல் ஜூலை 13, 2021
பேத்திக்குப் பாட்டியின் உறுதுணை .
அக்கம்பக்கத்தார்களின் அருமை.
புது வீட்டிற்குப் போனாலும் பாட்டி
அட்ஜஸ்ட் செய்வார். எத்தனை பெரிய மனுஷி. பென்ஷன் செட்டிலாக வேண்டும்.
21. chollukireen | 11:52 முப இல் ஜூலை 14, 2021
வளர்த்தவளே பாட்டிதான். மனிதர்களும் அருமையானவர்கள். இன்னும் நான்கு வாரங்கள் முடித்து விடுகிறேன். மிக்க நன்றி. அன்புடன்
22. நெல்லைத்தமிழன் | 3:40 பிப இல் ஜூலை 13, 2021
பழைய நினைவுகள்தாம் எவ்வளவு ரசமானவை. நல்ல மனிதர்களை மீண்டும் காணும் எண்ணம் ஏற்படுகிறது. வறுமையோ, அறியாமையோ… நல்ல குணங்கள் இருந்திருக்கிறது.
23. chollukireen | 11:46 முப இல் ஜூலை 14, 2021
கதம்பக் கலவைதான். இப்படியும் பலர். அதில் இவர் ஒருவர். நன்றி. அன்புடன்