அன்னையர் தினம் பதிவு 10
மார்ச் 22, 2021 at 11:55 முப பின்னூட்டமொன்றை இடுக
இதுவும் அம்மாவைப் பற்றிய தொடர்ச்சிகள்தான். இதனின்றும் அது என்கிறமாதிரி. பெரிய பதிவு இல்லை. படியுங்கள் அன்புடன்
ஊரே திரண்டு உபசாரம் சொல்ல வந்தார்கள். அந்த ஸமயம்
அவரவர்களுக்குத் தோன்றியபழைய ஞாபகங்கள் வந்து ஒவ்வொருவர்
ஒவ்வொன்றாகஞாபகப்படுத்திக் கொண்டுஅதை அப்போது புரிந்து கொள்ளவில்லையே,
இது இப்படி ஆயிற்றே, அம்மாதிரி செய்திருக்கலாமோ, நமக்கேன் அப்படி
தோன்றவில்லை, இந்த சகுனம் ஸரியில்லை,அது,இது என்று சொல்லி
புதுச்சேரி தான்போகாதிருந்தால் அவன் இருந்திருப்பான். எதுவும்
தோன்றவில்லையே என்ற புலம்பலும், அரற்றலும் தான் பாக்கியாக இருந்தது.
திருவண்ணாமலையினின்றும்,அவன்படித்த,அப்பாவுடன் வேலை செய்த
எல்லோரின்,அனுதாபக் கடிதங்களும்,நேரில் வந்தவர்களுமாக, புதிய
செய்தியாக இவன் காலத்தில், இவனைப்போல தெரிந்தவர்கள் இரண்டுபேரின்
அகால முடிவுகளும், அந்த விவரமும் இன்னும் மோசமாக இருந்தது.
அக்காவின் வீட்டிற்கு போய்வருகிறேன் என்று சொல்லிப் போனவன், ஒருவன்
ஆரணி போளூர் பக்கத்தில் கிராமம். அங்கெல்லாம் நடவாபி என்று சொல்லப்படும்
கிணறு. கிணற்றுக்குள் இரங்க படிகளிருக்குமாம்.
ஒருவருமில்லாத ஸமயத்தில் இறங்கிப்பார்க்க ஆசைப்பட்டு இறங்கி இருக்கிறான்.
அவ்வளவுதான். அவன் கதை முடிவுக்கு வந்து விட்டதாம். அவ்விடம் உடல்நிலை
ஸரியில்லாது போயிருக்கும்.ஸைன்ஸ் எல் டி சாமிநாதய்யர் பிள்ளை அவன்.
இன்னொரு கேஸ் தீவிபத்து.
என்ன அக்கரையாகப் பார்த்தாலும், அங்கங்கே நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது.
இம்மாதிரி இல்லாமல் வைத்தியம் செய்தோம்,பலனில்லை என்ற அளவிற்கு
மனதை தேற்றிக் கொள்ளுங்கள், இப்படியெல்லாம் ஆறுதல் மொழிகளுடன்
செய்திகள் குவிந்து கொண்டிருந்தது
சின்ன வயதானாலும், வேறுவிதமான முடிவு வராமல், நல்ல முறையில் அவனின்
வியாதியிலிருந்து விடுபட்டு போய்விட்டான்
அவன் வரையில் அவனுக்கு நல்ல கதி வந்து விட்டது. இப்படி யாவரும் ஹிதாஹிதம்
ஏற்றுக்கொள்ள…
View original post 377 more words
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed