Archive for பிப்ரவரி, 2021

சுரைக்காய் கோப்தா

பத்து வருஷங்களுக்குமுன் ஜெனிவாவில் என் மருமகள் செய்தது இது. வேண்டாதவர்கள் பூண்டை நீக்கிவிட்டுச் செய்யுங்கள். அன்புடன்

சொல்லுகிறேன்

வேண்டியவைகள்

சுரைக்காய்—திட்டமாக –1

மிளகாய்ப்பொடி—1 டீஸ்பூன்

தனியாப்பொடி—1 டீஸ்பூன்

மஞ்சள்ப் பொடி—அரை  டீஸ்பூன்

புதியதாய்ப்  பொடிக்க

லவங்கம்—4

மிளகு—–அரை டீஸ்பூன்

சீரகம்—-1 டீஸ்பூன்

அரைக்க

வெங்காயம்—2அல்லது   3

இஞ்சி—-சிறியதுண்டு

பூண்டு இதழ்—4

பழுத்தத் தக்காளி—3  திட்டமான  சைஸ்

ருசிக்கு  உப்பு

கடலைமாவு—கால்கப்.   வேண்டிய அளவு   உபயோகிக்க

மாவு   மீதி  இருக்கும்.

எண்ணெய்—-பொறிப்பதற்கு  வேண்டிய அளவு

பிரிஞ்சி இலை  —சிறியது  ஒன்று.

செய்முறை

சுரைக்காயைத்   தோல்   சீவிக்  கொப்பரைத்   துருவியில்த்

துருவலாகத்   துருவிக்  கொள்ளவும்.

சற்று  நீருடன்  கூடியதாகத்  துருவல்  இருக்கும்.

வெங்காயம், பூண்டு.   இஞ்சியை நறுக்கி   மிக்ஸியில்   தண்ணீர்

விடாமல்   நன்றாக   அரைத்துக் கொள்ளவும்.

தக்காளியையும்  தனியாக  அரைத்து  வைத்துக் கொள்ளவும்.

மிளகு.சீரகம், லவங்கத்தைப்  பொடித்துக் கொள்ளவும்.

சுரைக்காய்த்  துருவலுடன்   திட்டமாகக்   கடலைமாவைச்  சேர்த்துக்

கலக்கவும்.

துருவலே   தண்ணீருடன்  இருப்பதால்  தண்ணீர்  அவசியமில்லை.

வடைமாவு மாதிரி   சற்றுத் தளரவே  மாவு இருக்க  வேண்டும்.

அடுத்து   எண்ணெயைக்  காய வைத்து  கலவையை   சிறிய வடை

போலவோ,  பகோடாக்கள் மாதிரியோ   போட்டுபொறித்தெடுக்கவும்.

இரண்டு பக்கமும்  சிவக்க  வேகும்படி   நிதானமாகத் திருப்பிவிட்டு

எடுக்கவும்.

இதுவே   கோப்தாவின்   முதல்ப்படி.

அகலமான  நான்ஸ்டிக்   வாணலியில்  5,6 ஸ்பூன்  எண்ணெயைச்

சூடாக்கி    பிரிஞ்சி இலையுடன்   ,வெங்காய  விழுதைச் சேர்த்து

வதக்கவும்.

வெங்காயம்  நிறம் மாறி  நன்குவதங்கியபின்பொடிகளைச்சேர்த்து

பிரட்டி  தக்காளி   விழுதைச்    சேர்க்கவும்.

உப்பு  சேர்த்துக்  கொதிக்க விடவும்.

எண்ணெய் பிறிந்து   கலவை நன்றாகக்  …

View original post 51 more words

பிப்ரவரி 25, 2021 at 11:19 முப பின்னூட்டமொன்றை இடுக

அன்னையர்தினத்தொடர்வு 6

ஓரளவு வயதிற்குப் பின்னர் பிள்ளைகளுக்கு அவரவர்களின் நிலையும் மாறி விடுகிறது. சொந்த விருப்பங்கள். எதிற்கும் குணம் வந்து விடுகிறது. எல்லா காலத்திலும் அது ஒரே மாதிரிதான் போலும்! ஆராவது பகுதி இது.பாருங்கள். படியுங்கள். அன்புடன்

சொல்லுகிறேன்

எல்லோரும் நல்லபடியாக உடல் நலம் தேறினார்கள். வீட்டில்
சுபகாரியங்கள் செய்ய வேண்டும். யாவருமாகத் திருப்பதி போய்
பூணூல் நடத்தி வருவதென்று முடிவாகி, நல்ல நாள் பார்த்து
திருப்பதியில் , உற்றார் உறவினர்கள் சூழ நல்ல காரியங்களும் நன்றாக
நடந்தது.
நித்ய அனுஷ்டானங்கள் யாவும் கடை பிடிக்கும் நேரத்தில் ஒரு நாள்
பார்த்தால் பிள்ளை தலைக் குடுமியைக் கத்தரித்துக்கொண்டு வந்து
நிற்கிரான்.
கிராப்பு வைத்துக்கொள்ள. வீட்டில் பூகம்பம்தான் நடக்கப்போகிறது.
கூடப் படிக்கும் சிநேகிதர்கள் யாருக்கும் குடுமி கிடையாது.எல்லாரும்
கிராப்புக்கு மாறியவர்களல்ல. குடுமி வழக்கமே இல்லாதவர்கள்.
அவ்வளவு பிள்ளைகள் மத்தியில் உடன் படிக்கும் பிள்ளைகள் அளித்த
தைரியம். இவன்கையால் எனக்கு எதுவுமே
வேண்டாம்.
சொல்லாமல் எனக்குப் பிடிக்காத காரியம் செய்தவன் என் பிள்ளையே
இல்லை. எதிரில் வரக்கூடாது போகட்டும் வீட்டை விhttps://chollukireen.wordpress.com/wp-admin/ட்டு.
எனக்கு க் கொள்ளிகூட இவன் போடக்கூடாது.
இப்படி அப்பா பிள்ளை போர்க்கொடி.
ஒருவர் அறியாமல் ஒருவருக்கு எல்லாம் செய்து யுத்தகளத்தில்
வெகுநாள்.
ஏதோ தகாத காரியம் செய்து விட்டு வந்த மாதிரி அப்பாவின் கோபம்.
எல்லோரும் உடந்தை என்ற ஸந்தேகம். எல்லோரும் எதற்கும் மௌனம்.
ஏதாவது பேசினாலும் கடைசியில் வந்து நிற்கும் , இந்த க்ராப் தலையன்
எனக்கு ஏதும் செய்ய வேண்டாம் என்ற பேச்சே முடிவாக வரும் வார்த்தை.
காலங்கள் இரண்டொரு வருஷங்கள் ஓடியது.
பெண் குழந்தைக்கு அடிக்கடி, ஜுரம்,கபம்,இருமல் என்று தொடர்ந்து வந்து
கொண்டே இருந்தது.
ஆஸ்த்மாவா இருக்குமோ சங்கை.

View original post 420 more words

பிப்ரவரி 22, 2021 at 11:09 முப பின்னூட்டமொன்றை இடுக

மூலிகைப் பச்சடி—கற்பூரவல்லி.

எதையாவது மறுபதிவு செய்வோமென்று பார்த்தால் இது சிக்கியது. பெண்ணாத்தில் செய்தது. நன்றாக இருந்தது.அன்புடன்

சொல்லுகிறேன்

இது ஒரு தயிர்ப் பச்சடி.   உடம்பிற்கு நல்லது. ருசியாகவும் இருக்கிறது..

கற்பூரவல்லி இலைவேண்டியவைகள்.

கற்பூர வல்லி இலை—6

தயிர்—-1கப் புளிப்பில்லாதது.

பச்சைமிளகாய்—1

தேங்காய்த் துருவல்—1 டேபிள்ஸ்பூன்

ருசிக்கு—உப்பு

வறுத்துப் பொடிக்க—தனியா,சீரகம்,வகைக்கு அரை டீஸ்பூன்

தாளித்துக் கொட்ட  கடுகு சிறிதளவு.

எண்ணெய்  சிறிதளவு.

தனியா,சீரகத்தை லேசாக வெரும் வாணலியில்  வருத்துப்

பொடிக்கவும்.

தேங்காய்,மிளகாய், கற்பூர வல்லி இலையை நன்றாக அரைத்துக்

கொள்ளவும்.

அரைத்ததைத் தயிரில் உப்பு சேர்த்துக்  கலக்கவும்.

பொடியையும் சேர்க்கவும்.

கடுகு தாளிக்கவும்.   பச்சடி தயார். சாதத்துடன்

துவையல்,பொடி முதலானவைகள்  கலந்து சாப்பிடும் போது

தொட்டுக் கொள்ள பச்சடி  சுவையாக இருக்கும்.

கற்பூரவல்லிப்  பச்சடி கற்பூரவல்லிப் பச்சடி

நெஞ்சுக்கட்டு,சளி முதலானவைகளையும்  கட்டுப்படுத்தும்.

சிறியதாக ஒரு தக்காளிப் பழத்தை நறுக்கியும் சேர்க்கலாம்.

நன்றாகத்தான் இருக்கிறது.

View original post

பிப்ரவரி 19, 2021 at 11:40 முப 6 பின்னூட்டங்கள்

அன்னையர் தினத் தொடர்வு 5

குழந்தைகளைப் பெரியவர்கள் ஆக்குவதற்கு முன் அவர்களுடன், எந்தவிதமாக எல்லாம் பாடுபடவேண்டி இருக்கிரதுஅவர்களுக்கு உடம்பு அஸௌகரியம் ஏற்பட்டால் எந்த முறையில் வைத்திய வசதி இருந்தது? இதுவும் உங்களுக்குத் தெரியவே எழுதுகிறேன். படியுங்கள். அன்புடன்

சொல்லுகிறேன்

வீட்டில் முதல்ப்பெண்ணின்  கல்யாணத்திற்குப்

பிறகுஇரண்டு பெண் குழந்தைகள்,   பேத்தி ஆக பெண் மகவுகள்.

ஆண் குழந்தை அருமைக்கு ஒன்று. நல்ல படிப்பு,சுறுசுறுப்பு.

வயது பதிமூன்று.   வம்சத்துக்கே ஒரு ஆண் மகவு.

அப்பாவின் உடன் பிறந்தவர்கள்,  யாருக்கும்,   எந்த வாரிசும்

இல்லை. போற்றி போற்றி வளரும்  ஆண் குழந்தை.

அந்த நாட்களில் எது ஒன்றானாலும்,  உடனே டாக்டர் என்று

ஓடாதகாலம்.வீட்டுவைத்தியத்திலேயே,கஞ்சி,கஷாயம்,என்று

வியாதிகள் குணமாகிவிடும்.

இப்படித்தான்8வயதுஇரண்டாவதுபெண்ணிற்குஜலதோஷம்,

மூக்கடைப்பு இருமல்,தும்மல்,    சளி.

சுக்கு,சித்தரத்தை,  இருமலுக்கு அதிமதுரம், எல்லாம்

போட்டுகஷாயம், நாலுநாளில் ஸரியாரது,திரும்பவும் வரது.

மூச்சு விட கஷ்டம்.

டாக்டர் வீட்டுக்கே வந்து பார்க்கிறேன் என்று  சொன்னார்.

அவர் ஒரு படிக்கும் பையனின் தகப்பனார்.

ஏற்கெனவே வீட்டுக்காரர்  வீட்டிற்கும் வந்திருந்து

பரிச்சய,மானவர்.

டாக்டர் வந்து பார்த்து விட்டு   மார்புலே சளி ரொம்ப

கட்டிண்டிருக்கு.   மருந்துகள் கொடுப்பதோடு,மார்பு

சளியைக் குறைக்க   ஒரு மருந்து கொடுப்பதாகச்சொல்லி

எழுதிக் கொடுத்திருக்கிரார்.

பேரே யாருக்கும் சொல்ல வரவில்லை. ஏதோ, மருந்தைப்

போட்டு ,கட்டு கட்டணுமாம்.

கடைசியிலே சொல்ல வந்த பேரு ஆண்டிப்ளாஸ்த்திரி.

இப்போதெல்லாம்,  ரைஸ் குக்கர்வருகிரதே அம்மாதிரி

நல்ல  அலுமுனியத்தில்   ஒரு  அழகான டப்பா.

அதில் கெட்டியானவெண்ணெய்போன்றசற்றுஇளமஞ்சளில்

அடைத்திருக்கும்  மருந்துக்கலவை. அதனுடைய

வாஸனை.

எப்படி உபயோகிப்பது எல்லாம் செய்து காட்ட ஒரு ஆள்.

எல்லாம் ஸரிதான்.

அகலமான  பாத்திரத்தில் ஜலத்தைக் கொதிக்க

வைக்கணும். கொதிக்கும் ஜலத்தில் டப்பியைத் திறந்து

வைத்து சூடாக்கணும்.

அப்போவெல்லாம் பேப்பர் ஒழுங்கா கட் பண்ணி நோட்புக்

தைக்க  மெல்லிசா  கட்டையிலே …

View original post 381 more words

பிப்ரவரி 15, 2021 at 11:02 முப பின்னூட்டமொன்றை இடுக

அன்னையர்தினத்தொடர்வு 4

தொடர்ந்து அந்தக் கால நம்பிக்கைகளும்,நடந்தேறியவிதங்களும், காலம் எவ்வளவு வித்தியாஸம் இந்தக் காலத்தில். படியுங்கள். அன்புடன்

சொல்லுகிறேன்

கல்யாணம்நன்றாகநடந்தாயிற்று.இனிபுகுந்தவீட்டில்எவ்வெப்போது

பெண்ணை அழைத்துவா வென்று சொல்கிரார்களோ

அப்போதெல்லாம் அழைத்துப்போய்,திரும்ப அழைத்து

வந்து தகுந்த மரியாதைகள் கொடுத்து வர வேண்டும். ,

அடுத்து பண்டிகைபருவங்கள், தீபாவளி,கார்த்தி, பெண்

வயதுக்கு வருதல் போன்றவிசேஷங்களும் அணி வகுக்கும்.

ஒருவர் மனம் கோணாது இவைகள் ஸமாளிக்க வேண்டும்

அவ்வப்போது ஆவணிஅவிட்டம்போன்றபண்டிகைகளிலும்

கூட விடாது எல்லாம் செய்வார்களாம்.

ஆச்சு வருடங்கள் இரண்டு. பெண் பெரியவளாகி, புக்ககத்திற்கு அனுப்பும் போது இரண்டாவதாக ஒரு பெண்

குழந்தையும் வீட்டில்.

சின்னக் குழந்தைத் தங்கையைக் கொஞ்சாது போகிரோமே

என்று புக்ககம் போகும் பெரிய குழந்தைக்குக் குறை.

அப்படி இப்படி பெண்ணைக் கொண்டு விடும் போது

பெண்ணை எப்படியெல்லாம் உடல் நலம் பாதுகாத்து

வளர்த்தோமென பட்டியலிடும் போது, மாதாமாதம்

வீட்டில் நடைமுறையிலிருந்த விளக்கெண்ணெய் குடித்தலையும் அப்பா ன்ற முறையில் விவரித்து இருக்கிரார்.

அந்தக்கால கஷாயம். சுக்கு,சோம்பு,நிலாவரை, கடுக்காய்,திராக்ஷை, எல்லாம் போட்டுக் கஷாயம் வைத்து

திட்டமான சூட்டில், விளக்கெண்ணெய் விட்டு ஒரு

ஞாயிற்றுக்கிழமை எல்லோரையும், குடிக்க வைத்து,

அதற்கென்றே ஒரு வெள்ளிக்கிண்ணம்.

உத்ஸவம், மண்டகப்படி, எல்லாம் ஸரியா ஆச்சுன்னு அதை

முக்கிய செய்தியாகக் கூறுவார்கள்.

மிளகு ஜீராரஸம், மணத்தக்காளி வத்தல் வறுத்து ஒரு

சாப்பாடு.4மணிக்குமேலே மோர்சாதமும், வத்தக் குழம்பும்.

சாப்பிட ருசியாயிருக்கும்னு வேரெ சொல்லுவார்கள்

அதுவும், உண்மைதான்.

மாப்பிள்ளையாத்தில்,மாதாமாதம் விளக்கெண்ணெய்

பொண்ணுக்கு கொடுக்கணும்னு அவப்பா சொன்னார் என்று

வம்பாகப் பேச்சு வந்ததுன்னும், இதைப்போய்

சொல்லுவாளா என்று அம்மா அங்கலாய்த்ததும் ஞாபகம்

வருகிறது.

அம்மாக்கு பதினெட்டுநாள் குழந்தை கையில்…

View original post 381 more words

பிப்ரவரி 8, 2021 at 11:23 முப 6 பின்னூட்டங்கள்

அன்னையர்தினத் தொடர்வு 3

இது மூன்றாவதுபதிவு. முன்னே,பின்னே ஸம்பந்தம் செய்த இடம். இரண்டு அத்தைகளுமே சம்மந்தி முறைகள். இன்னொரு கல்யாணத்தையும் நிச்சயம் செய்ய ஆவல் மிகுந்தவர்கள் . எவ்வளவு ஸுலபமாக நிச்சயிக்கப் படுகிறது. படித்தால்த் தெரியும். அன்புடன்

சொல்லுகிறேன்

எல்லோரும் ஸ்டேஷனுக்கு வந்திருப்பதைப் பார்த்தால் மிகவும்

ஸந்தோஷமாக இருந்தது. ரயில்தான் கொஞ்சநேரம் தாமதம்.

அதற்குள் பாட்டி,நாங்கள் அத்தைஎன்றுதான் கூப்பிடுவோம்.

   அக்காவிற்கான பாகம் போட்ட உரவு அது. பேசுவதற்குயோசனைகள்

செய்து தயாராகிவிட்டாள்.

இதோ பாரப்பா. நீ முதல்லே எதுவும் சொல்ல வேண்டாம். கடைசியில்

அக்கா சொன்னா எல்லாம் ஸரிதான்னு சொல்லி விடு.

அதெப்படி, நானும் சிலதெல்லாம் யோசனை செய்ய வேண்டாமா?

அதுக்கெல்லாம் இது வேளை இல்லையப்பா.

நல்ல பிள்ளை,  நல்ல வேலை,  தங்கமான மாமியார், மத்ததெல்லாம்

இப்படி அப்படி, இருக்கும்,

நான் அறிந்து இரண்டு ஸம்பந்தம் பண்ணியாச்சு.

ஒன்று  மருமகள். மற்றொன்று   மருமகளின் அக்கா பெண்  என்

பெரியம்மாவின் மருமகள்.

ஆக ஒரு பெண் கொடுத்திருக்கிரது. ஒரு பெண் வாங்கி இருக்கிரது.

இதுவும் நல்லபடியா முடியணும்.

நாள் அதிகமில்லே. எங்கே போய் தேடரது?

என்ன செய்யணும், செய்வோம் எல்லாம் நான் பேசிக்கிறேன்

நம்ம குழந்தைக்கு என்ன குறைச்சல்?

பாட்டு சொல்லி வச்சிருக்கோம். ஆர்மோநியம் வாசிப்பா.

கபடற்ற பொண்ணு, பாக்க அழகா,  தாழம்பு மாதிரி கலரும்,

இந்த பொண்ணு கிடைச்சா போராதா?

எல்லாம் ஸரி, நான் பாத்துக்கறேன், அதை ஞாபகம் வச்சுக்கோ!

மாமியாரா இல்லே,   அத்தையா, அந்த தரப்பு அத்தையோட நான்

பேசறேன். இ.பி.கோ  நூத்தி நாப்பத்து நாலை   144 அமுல் செய்தாகி

விட்டது.

கைகாட்டி சாஞ்சுடுத்து. தூரத்லே பொகையும் வரது தோ வண்டி

வரவேண்டியதுதான் பாக்கி.

அவ அம்மாதான் தெய்வமா அவா மநஸுலே…

View original post 429 more words

பிப்ரவரி 1, 2021 at 11:08 முப பின்னூட்டமொன்றை இடுக


பிப்ரவரி 2021
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 547,500 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.