Archive for ஜனவரி, 2021
மீனா மாமியா பாட்டியா?
நான் எழுதிய கதை இது. திருப்பிப் பார்க்கும் போது இதை மீள் பதிவுசெய்யலாமே என்றுதோன்றியது. சிலஸமயம் மீள்பதிவும் ஸரியாக ஆவதில்லை. இதைப் போட்டுப் பார்க்கலாம் என்று தோன்றியது. பார்ப்போம். அடிஷனல் தாட்ஸ் வந்தது.போனவாரம் புடலங்காய் கறி மீள் பதிவு செய்தேன். பார்ப்போம இதை. அன்புடன்
ஏறியை அடுத்த வழல் வீடுகளிலிருந்து வளர்க்கும் சேவல்கள் கொக்கரகோகோ
பொட்டைகோழி கூவி பொழுது விடியுமா என்ன? சேவல்களினாலேயே பொழுது
விடிந்து விட்டது. சக்சக்கென்று எல்லார் வீட்டிலும் சாணி கறைத்து தெளிக்கப்
பட்டுக் கொண்டிருக்கிறது. விடிந்தும் விடியாத காலை நேரம்.
பொழுது புலர்ந்தது, பொற்கோழி கூவிற்று, பொன்னான வேலரே எழுந்திரும்,
கண்ணான வேலரே எழுந்ந்ந்ந்திரும்!ம்
மீனாமாமி உதயராகம் பாடத் துவங்கியாயிற்று.
காய்ந்த தென்னமட்டையில் குச்சியை அரிவாள் மணையில் சீவி யெடுத்துவிட்டு
பாக்கிஓலையை சின்ன சின்ன கட்டாக கட்டி எறியவிட லாகவமாய்.
குச்சிகள் கட்டி ஈரம் பெருக்கும் துடப்பமாக,
அம்மா பாலு. நேராக போகிணியிலே பால்
.இரும்படுப்பில் கறிபோகிணியில்
4 கரண்டி ஜலம் ஓலையைப்போட்டு எறியவிட்டு கொதிக்கவைத்து குட்டியூண்டு
பில்டரில் காஃபிப்பொடி அமுங்க ஸ்நானம் செய்கிரது.
மெல்ல டொக்டொக். பில்டருக்குச் செல்லத் தட்டல்.
சின்ன அருவியாய் அடிப்பாத்திரம் 2 தரம் ரொம்பறது.
திரும்பவும் ஓலை எறியறது.
கரி போகிணியில் பால் ஸந்தோஷமாய் மேலே வரது.
ஸரி பாதியா பிறித்து சக்கரையைப் போட்டு, இரண்டாந்தரம்
காஃபிக்கு ஸ்டாக் மூடியாகிறது.
வாசல்லேபோட்ட கோலத்தைவிட பக்கத்திலிருக்கும், பெருமாள்
கோவிலோட ஹனுமானுக்கு ஒரு சின்ன கோலம். சாமியை
சுத்திட்டு வரச்சே கிடைக்கற 2 பூவை வீட்டு படத்திற்கு
ஒரு பூஜை.
ஆனந்த மஹத்வம் அகில ஜகம் அத்தனையும்,
அனந்த மஹத்வம் மாமுனிவரெல்லாரும்.
காவேரியம்மன் கமலமலர்த் தாள் பணிந்தே
கங்கை யமுனையம்மன் செங்கமலர்த் தாள் பணிந்தே
காவேரிமாலை …
View original post 739 more words
அன்னையர் தினத் தொடர்வு.2
ஈரல் குலைக்கட்டி என்ற நோய். அந்தநாளைய குழந்தைகளின் நிலை. அம்மாவின் நிலை. தொடர்வு. பகிர்ந்திருக்கிறேன். அன்னையர் தினத் தொடர்வு இது. பாருங்கள். அன்புடன்
அது ஒருகாலம். குழந்தை வைத்தியம் ஸரிவர இல்லாத
காலமென்றும் சொல்லலாம். மருந்துகள் கண்டு பிடித்த காலம்
அது என்றும் சொல்லலாம்.
எங்கு நோக்கினாலும் ஒரு வயதுக் குழந்தைகள் வயிற்றைப்
பெரியதாக முன்நோக்கித் தள்ளிக் கொண்டு, சரிந்த தோள்களும்,
மெலிந்த கால்களுமாக உட்கார்ந்து கொண்டிருக்குமே தவிர சுரு
சுருப்பாக இராது. கண்களில் ஒரு ஏக்கம். அழுகை என ஈரல்
,குலைக்கட்டிக்கு ஆளாகி இம்மாதிரிக் குழந்தைகள்தான் பார்க்கக்
கிடைக்கும்.
கட்டி விழுந்த குழந்தை., மாதமொரு முறை ஜம்மி வெங்கட
ரமணய்யாவின் அருகிலிருக்கும் பெரிய ஊர்களுக்கு அவரின் விஜயம்
எல்லா மாதங்களிலும் ஒரே குறிப்பிட்ட தேதியில் அவர் வருகைக்காக
அம்மாவுடன் பயணிக்கும்.
நல்ல வார்த்தை டாக்டர் சொல்ல வேண்டுமே என்று வேண்டும்
தாயின் உள்ளங்கள்.
பத்துரூபாய் மருந்து என்ரால் பாப்பையா மருந்து. வியாதி கடினம்.
ஐந்து ரூபாய் மருந்து என்ரால் ஜம்மியோ,ஜிம்மியோ? வியாதி ஆரம்பம்.
அப்படிப் பெயர்போன மருந்துகள். மிகவும்,கஷ்டம்.
எத்தனை தேரும்,தேராது என்பது.
ஒரு முப்பது வருஷ காலங்கள் இம்மாதிரிதான் ஓடிக்கொண்டிருந்தது.
நான் நிறைய இம்மாதிரி குழந்தைகள் பார்த்திருக்கிறேன்.
ஒரு ஐம்பது வருஷமாக இம்மாதிரி அவல நிலை ஓய்ந்தது என
நினைக்கிறேன்.
அம்மாவின் முதல் ஆண் குழந்தை இம்மாதிரி இழப்பு. அடுத்து ஒரு
ஆண் குழந்தை.
என் அப்பா என்ன வாக இருந்தார் என்று சொல்லவில்லை.
அவர் ஒரு தமிழ்ப் பண்டிதர். என்ன படிப்பு படித்து வித்வானானார்
என்றெல்லாம் அப்பொழுது கேட்கவும் தெரியாது. அம்மாவிற்கும்
View original post 362 more words
அன்னையர் தின தொடர்வு. 1
அம்மாவின் கதை ஆரம்பம். பாருங்கள். படியுங்கள் அன்புடன்
என் அம்மாவைப் பற்றி எழுதுகிறேன் என்று சொன்னேன்.
அவர் இருந்தா நூரைவிட அதிகம் வயது. இருக்க
வாய்ப்பில்லை. அவரின் சின்ன வயது அனுபவங்களைப்
கேட்டபோது காலம் எப்படியெல்லாம் இருந்தது என்பதை
தெரிந்து கொள்ள முடிகிரது. அவரின் சிறிய வயது
காலத்தில் விவாகம் என்பது பெண் குழந்தைகளுக்கு
அவசியம் என்பதுடன், உள்ளூரிலேயே ஸம்பந்தம் செய்ய
வேண்டும், என்பதால், சாப்பாட்டிற்கு கஷ்டமில்லாது
பார்த்துக் கொள்ளக் கூடியவரைப் பார்த்தார்களே தவிர
நல்ல இடம் கிடைக்கும் என்றுவேறு ஊர்களில் வரன்
தேடுவதில்லை. கஷ்டப் பட்டாலும்,
கண்ணெதிரே இருப்பதை விரும்பினார்கள். ஆதலால் வயது
வித்தியாஸம், பெரியதாகத் தெரிவதில்லையாம்.
அந்தந்த ஸீஸனில் விளையும் பயிர் பச்சைகள் போல,
கிடைக்கும் மாப்பிள்ளைகளைத் தேர்ந்தெடுப்பார்கள்
போலும்.
எல்லோரும்,எல்லோருக்கும், கொண்டு கொடுத்து சம்பந்தம்
செய்வதால் எல்லோரும் ஏதோவகையில்உரவினர்கள்தான்.
என் அம்மாவைப் போலவே அவர் அம்மாவும்
வயதானவருக்கு வாழ்க்கைப் பட்டவர்தான். அவர்
பெண்களுக்காவது இதில் விதிவிலக்கு உண்டா?
நான்கு பெண்களில் நான்கு நான்கு விதம் அவருக்கும்.
ஏன் ரொம்ப ஏழையா நீங்கள் என்று என் அம்மாவைக்
கேட்டேன்.
அப்படியெல்லாம் கிடையாது. நிலம்,நீர்,வீடு,வாசல்
எல்லோருக்கும் இருந்தது. அதையெல்லாம், விற்று,வாங்கி
கலியாணம் என்பதெல்லாம் நினைக்க முடியாத விஷயம்.
இருப்பதை வைத்துக்கொண்டுதான் செய்வார்கள்.
சாப்பாட்டிற்கு கஷ்டம் யென்பதே கிடையாது. தெரியவும் தெரியாது.
மலிந்த காலம். பணப்புழக்கம் அதிகம் இல்லை.
கௌரவமாக இருப்பதைக் கொண்டு ஸமாளிப்பதுதான்
ஸரி என்று நினைக்கும் காலம்.பெரியவா சொன்னா
கேட்கணும். அது ஒன்றுதான் தெரியும்.
வேரெ ஏதாவது…
View original post 241 more words
மக்னி அல்லது மகானா.makhana
டால் மஃனி எழுதியதில் மஃனியப்பற்றிய தகவல்கள் இது. உபயோகப்பட்டால் நல்லது என்று பதிவு செய்திருக்கிறேன். அன்புடன்
நான் மஃக்னி யைப்பற்றி இங்கே எழுதுகிறேன். மும்பையில்
மக்னி என்று சொல்வது பெரும்பாலான இடங்களில் மகானா
என்று அதுவும் வட இந்தியாவில் சொல்லப்படுகிறது. அதைப்பற்றி
விவரம் கேட்டு எழுதியதில் ஏராளமான விவரங்கள் அறிய
முடிந்தது. எனக்கு தெறிந்ததில் சிலவற்றை எழுதுகிறேன்.
மகானா. makhana இங்லீஷ் பெயர் foxnut
இது ஒரு தண்ணீரில் வளரும் தாவரம்.
லில்லி குடும்பத்தைச் சேர்ந்தது. இலை ரவுண்ட்ஷேப்.
பெறிய அளவு. இலை மேலே பச்சை நிறம். கீழே பர்பல் நிறம்.
பூவும்–பர்பல்நிறம்தான்.
ஒயிட் கலர், ஸ்டார்ச்சி ஸீட். சாப்பிடத் தகுந்தது.
விதைக்காக கல்ட்டிவேட் செய்கிரார்கள்.
விளையும் இடங்கள்—இந்தியா,சைனா, ஜப்பான்.
சீதோஷ்ணம்–ஹார்ட் ட்ரை ஸம்மர்,கோல்ட் வின்ட்டரில்
பயிராகும்.
லேட் ஸம்மரில் கலெக்ட் செய்வார்கள்.
3000 வருஷங்களாக சைனாவில் விளைவிக்கிறார்கள்.
இந்தியாவில் பீஹாரில் மாத்திரம் 96000 ஹெக்டேரில்
தண்ணீரில் பயிராகிரது.
இதை பச்சையாகவும், உணவுகளில் சேர்த்தும் சாப்பிடலாம்.
சைனாபெயர்—- Qian’shi
சைனாவில் மருந்துகளிலும், ஸூப்புகளிலும், மற்றும் பல
விதங்களிலும் உபயோகிக்கிரார்கள்.
ஆண்மை பலப்படும், முதுமை தள்ளிப்போகும் என சைனீஸ்
நம்புகிறார்கள்.
இந்தியாவில் , வட இந்தியாவிலும்,, இந்தியாவின் மேற்குப்
பகுதிகளிலும், அதிக உபயோகமாகிறது.
பீஹாரில் பண்டிகைகளிலும், கடவுளுக்கான நிவேதனப்
பண்டங்களிலும், இது அதிகமாக உபயோகப் படுத்தப்
படுகிரது.
கஞ்சி, பாயஸம்,லட்டு, புட்டிங், சமையல் என பல
விதங்களில் மிகுதியாக உபயோகப் படுத்துகிறார்கள்.
நான் அறிந்து கொண்டதை எழுதியிருக்கிறேன்.
ஜெநிவாவில் என் சம்மந்தி அம்மா அவர்கள் செய்ததையும்,
படம்பிடித்து …
View original post 54 more words
டால்மஃக்னி. ராஜ்மா
2012 போட்ட பதிவு இது. டால் மக்னி செய்துதான் பாருங்கள். பதிவு ஸரியாகப் பதிவாகவில்லை. திரும்பவும் போஸ்ட் செய்த பிறகுதான் வந்தது என்று நினைக்கிறேன். பார்க்கலாம். அன்புடன்
ஸாதாரணமாக முழு உளுந்தும், ராஜ்மாவும் சேர்த்து செய்வது
டால்மஃக்னி.
இது சின்னவகை,ராஜ்மாவும், மஃக்னியும் சேர்த்துச் செய்தது.
இதுவும் ருசியானதுதான். ரொட்டி பூரியுடனும், சற்று லூஸாகச்
செய்து சாதத்துடனும் சாப்பிட நன்றாகவே இருக்கிறது.
எனக்குத் தெறிந்ததை நான் எழுதுகிறேன். நீங்களும் செய்து
பாருங்கள். அத்தோடு கொஞ்சம் கருத்தையும் சொல்லுங்கள்.
இப்போது வேண்டிய ஸாமான்களைப் பார்ப்போமா?
வேண்டியவைகள்.
சிரியவகை ராஜ்மா—-1 கப்
மஃக்னி—-அரைகப்
வெங்காயம்—2
தக்காளி—-1
பூண்டு இதழ்—-4
இஞ்சி—-சிறிய துண்டு.
வேண்டிய பொடிகள்
மிளகாய்ப் பொடி –அரைடீஸ்பூன். காரத்திற்கு வேண்டியபடி
மஞ்சள்ப்பொடி—அரை டீஸ்பூன்
தனியாப்பொடி–1 டீஸ்பூன்
சீரகப்பொடி—1 டீஸ்பூன்
எண்ணெய்—1டேபிள்ஸ்பூன்
வெண்ணெய்—1டேபிள்ஸ்பூன்
ருசிக்கு—உப்பு
பச்சைக் கொத்தமல்லி—வேண்டிய அளவு தூவ.
எந்த வகை மஸாலா வேண்டுமோ அந்த மஸாலாப்பொடி சிறிது.
செய்முறை.
1 சிறியவகை ராஜ்மாவைக் களைந்து அமிழ ஜலம் விட்டு
முதல் நாள் இரவே பாத்திரத்தில் ஊர வைக்கவும்.
2இஞ்சி,பூண்டு , வெங்காயம், தக்காளி இவைகளை மிக்ஸியில்
நைஸாக ஜலம்விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
3ராஜ்மாவைக் குக்கரில் ஜலம்வைத்து நன்றாக வேகவைக்கவும்.
4 பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த விழுதைக்-
-கொட்டிக் கிளறவும். தீ நிதானமாக இருக்கட்டும்.
5 .விழுது கெட்டியாகி எண்ணெய்ப் பிறிந்து வரும் போது பொடிகளைப்
போட்டுக் கிளறவும்.
6 . வெந்த தண்ணீருடன் ராஜ்மாவைச் சேர்த்து , உப்பையும் போட்டு
நன்றாகக் கொதிக்கவிட்டு இரக்கவும்.
7 .வெண்ணெயைச் சூடாக்கி மஃக்னியை லேசாக வறுத்து
8…
View original post 23 more words
வாழ்த்துகள்

யாவருக்கும் இனிய மகர ஸங்கராந்திப் பொங்கல் நல் வாழ்த்துகள். 14—1—2021
பொங்கலோ பொங்கல் அன்புடன்
அன்னையர் தினம்.
இது ஒரு தொடராகவே நான் எழுதியது. 2013 இல் அன்னையர் தினத்திற்காக நான் எழுதிய பதிவு இது. தொடர்ந்து கதைபோல இருக்கும் இதைப் படிததுக் கருத்து சொல்லுங்கள். புதுப் பதிவு என்று நினைத்துக் கொள்ளுங்கள். இதுவும் சரித்திரம் தான். எல்லா திங்கட் கிழமைகளில்த் தொடர்ந்து பதிவு செய்கிறேன்.அன்புடன்
அன்னையர் தினம் என்று பிரித்துக் கொண்டாட வேண்டிய அவசியம்
இல்லாமலேயே ஒவ்வொருநாளும் அன்னையை மனதிலிருத்தி
கொண்டாடிக்கொண்டே இருக்கும் , மகன்கள்,மகள்களின் ஞாபகப்
பிரதிபலிப்பாகத்தான் இந்தநாள் இருக்கிறது.
இந்த நாள் இனிய நாளாகவும் இருக்கிறது.
ஓ. இன்று அன்னையர் தினம் என்று கேட்டவுடனே அவரவர்கள்
எண்ணக் குவியல்களுக்கிடையே தாயைப் பற்றிய முக்கிய
நிகழ்வுகள் வரிசையாக கோர்வையாக பவனிவர ஆரம்பித்து
விடுகிறது.தாய் உடனிருந்தால் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறோம்.
மற்றவர்களுடன் பகிர்ந்தால் அவர்களின் தாயைப்பற்றிய எண்ணக்
குவியல்களையும், அன்பையும் தெரிந்து கொள்கிறோம்..
இந்த அன்னையர் தினம் நேபாலில் சித்திரை மாத அமாவாஸை
அன்று கொண்டாடப் படுகிரது.
ஆமாகோ மூங் ஹேர்னி என்பார்கள். ஆமா–அம்மா. மூங்—முகம்
ஹேர்னி—பார்ப்பது.
பிள்ளையானாலும், பெண் ஆனாலும், அவர்களாலியன்ற
பரிசுப்பொருள்கள், இனிப்பு பழம் என்று வாங்கிப்போய் கொடுத்து
நமஸ்கரித்து ஆசி பெருவார்கள்.
இது கட்டாயமாகச் செய்யவேண்டியது என்று சொல்லியும்,செய்தும்
பழக்கத்திலிருத்துவார்கள். என்னுடைய மூத்த பிள்ளையும்
காட்மாண்டுவினின்றும் போன் செய்து ஆசிகளைப் பெற்றான்.
அதனால் இதைக் குறிப்பிட்டேன்.
அம்மாஇல்லாதவர்கள்கோவிலுக்குப்போய்தேவியைவணங்கிவிட்டு
வரவேண்டும்.
இதே மாதிரி தகப்பனார்கள் தினமும் அவர்களுக்குண்டு. மஹாளய
பக்ஷத்தில் தகப்பனார் தினம் கொண்டாடுவார்கள்.
மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினம் இந்தியாவிலும் கொண்டாடப் படுகிரது.
இப்போது பரவலாக பிள்ளை, மருமகள் எனஇருவரும் வேலைக்குப் போவது வழக்கத்திலிருக்கிரது.
வயதான தாயாரை கூட வைத்துக்கொள்ள யோசிக்கிரார்கள்.
நடப்பதுதான் நடக்கும். அதனால் யாரும் யோசனை செய்யாதீர்கள்.
தாய்மார்களும் அனுஸரித்துப் போவார்களே தவிர வேறு என்ன
வேண்டும்.
View original post 274 more words
தொட்டில்–16
நேபாலப்பின்னணியின் தொடர்ச்சி இது. சுதேச,விதேசத்துடன்,தாராளமான மனதுடன் ஆடுகின்ற அழகே தனியழகு இல்லையா அன்புடன்
ன்
பண்டிட் எங்கிருந்து வந்தான்?
அது ஒரு டீக்கடை. வரும்வழியில் ரொம்பகுளிர். ஸரி வீட்டில் முதியவளும் இல்லே போனவுடன் டீகொடுக்க ஒரு டீசாப்பிடலாம்.டீவருகிறது.
ஓ ராம்தாயீ எனக்கும் ஒரு டீ. குரல் வந்த திசையில் ஒரு வயதான பெண்மணி. நீ எங்கே இங்கே வந்தே. ஹஜூர் இந்த பையனுக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுக்கலாம் என்று வந்தேன்.
பஹினி இது யாரு?
தாயி, எல்லாம் சொல்றேன். வீட்டிற்குப் போன பிறகு.
பையனுக்கும் சாய் ஒன்று.
இல்லே அவன் ஒண்ணும் குடிக்க மாட்டான். பாவுன்கா சோரா. பிராமணப்பிள்ளையாம். ஏதோ புதியகதை. வீட்டை அடைந்தாகி விட்டது.
பாவுஜு மன்னி பேரு நேபாலியில்.
வாவா பஹினி என்று வரவேற்கிறாள் பாவுஜு. தாயி என்றால் அண்ணா
. தீதி என்றால் அக்கா.பாயி என்றால் தம்பி. யாரையும் உறவு சொல்லிதான் அழைப்பார்கள்.bபுவாரி என்றால் மருமகள்.அம்மாவிற்கு ஆமா என்று பெயர் அப்பாவிற்ரு புவா.
பாவுஜு இந்த பிள்ளை நல்லவன். அப்பா,அம்மா இரண்டுபேரும் பிரிஞ்சுபோயி வெவ்வேரெ வாழ்வு. இது நம் வீட்டோடு இருக்கு. ஆத்தா,அப்பன் இரண்டும் ஸரியில்லே.
நம் வீட்டிலே இருந்தா இரண்டு பேரும் தொந்திரவு கொடுக்கராங்கோ. இது அங்கே போகமாட்டேன்னு நம் வீட்டோடு கிடக்கறது. அங்கே வேண்டாம்,உனக்கும் உதவிக்கு ஆள் கேட்டாயே என்று அழைத்து வந்தேன்.
அதன் ஆத்தாகாரியும் ஸரி கண் முன்னாலே இல்லாமல் இருக்கட்டும் என்றாள்.
என்ன சொல்கிறாய்? அவ ரொம்பவருஷ பழக்கம்.
இல்லாவிட்டால் சாய் துகானில் கேட்டார்கள். விட்டுவிடணும்…
View original post 479 more words