Archive for ஜனவரி 25, 2021
அன்னையர் தினத் தொடர்வு.2
ஈரல் குலைக்கட்டி என்ற நோய். அந்தநாளைய குழந்தைகளின் நிலை. அம்மாவின் நிலை. தொடர்வு. பகிர்ந்திருக்கிறேன். அன்னையர் தினத் தொடர்வு இது. பாருங்கள். அன்புடன்
அது ஒருகாலம். குழந்தை வைத்தியம் ஸரிவர இல்லாத
காலமென்றும் சொல்லலாம். மருந்துகள் கண்டு பிடித்த காலம்
அது என்றும் சொல்லலாம்.
எங்கு நோக்கினாலும் ஒரு வயதுக் குழந்தைகள் வயிற்றைப்
பெரியதாக முன்நோக்கித் தள்ளிக் கொண்டு, சரிந்த தோள்களும்,
மெலிந்த கால்களுமாக உட்கார்ந்து கொண்டிருக்குமே தவிர சுரு
சுருப்பாக இராது. கண்களில் ஒரு ஏக்கம். அழுகை என ஈரல்
,குலைக்கட்டிக்கு ஆளாகி இம்மாதிரிக் குழந்தைகள்தான் பார்க்கக்
கிடைக்கும்.
கட்டி விழுந்த குழந்தை., மாதமொரு முறை ஜம்மி வெங்கட
ரமணய்யாவின் அருகிலிருக்கும் பெரிய ஊர்களுக்கு அவரின் விஜயம்
எல்லா மாதங்களிலும் ஒரே குறிப்பிட்ட தேதியில் அவர் வருகைக்காக
அம்மாவுடன் பயணிக்கும்.
நல்ல வார்த்தை டாக்டர் சொல்ல வேண்டுமே என்று வேண்டும்
தாயின் உள்ளங்கள்.
பத்துரூபாய் மருந்து என்ரால் பாப்பையா மருந்து. வியாதி கடினம்.
ஐந்து ரூபாய் மருந்து என்ரால் ஜம்மியோ,ஜிம்மியோ? வியாதி ஆரம்பம்.
அப்படிப் பெயர்போன மருந்துகள். மிகவும்,கஷ்டம்.
எத்தனை தேரும்,தேராது என்பது.
ஒரு முப்பது வருஷ காலங்கள் இம்மாதிரிதான் ஓடிக்கொண்டிருந்தது.
நான் நிறைய இம்மாதிரி குழந்தைகள் பார்த்திருக்கிறேன்.
ஒரு ஐம்பது வருஷமாக இம்மாதிரி அவல நிலை ஓய்ந்தது என
நினைக்கிறேன்.
அம்மாவின் முதல் ஆண் குழந்தை இம்மாதிரி இழப்பு. அடுத்து ஒரு
ஆண் குழந்தை.
என் அப்பா என்ன வாக இருந்தார் என்று சொல்லவில்லை.
அவர் ஒரு தமிழ்ப் பண்டிதர். என்ன படிப்பு படித்து வித்வானானார்
என்றெல்லாம் அப்பொழுது கேட்கவும் தெரியாது. அம்மாவிற்கும்
View original post 362 more words