Archive for பிப்ரவரி 8, 2021
அன்னையர்தினத்தொடர்வு 4
தொடர்ந்து அந்தக் கால நம்பிக்கைகளும்,நடந்தேறியவிதங்களும், காலம் எவ்வளவு வித்தியாஸம் இந்தக் காலத்தில். படியுங்கள். அன்புடன்
கல்யாணம்நன்றாகநடந்தாயிற்று.இனிபுகுந்தவீட்டில்எவ்வெப்போது
பெண்ணை அழைத்துவா வென்று சொல்கிரார்களோ
அப்போதெல்லாம் அழைத்துப்போய்,திரும்ப அழைத்து
வந்து தகுந்த மரியாதைகள் கொடுத்து வர வேண்டும். ,
அடுத்து பண்டிகைபருவங்கள், தீபாவளி,கார்த்தி, பெண்
வயதுக்கு வருதல் போன்றவிசேஷங்களும் அணி வகுக்கும்.
ஒருவர் மனம் கோணாது இவைகள் ஸமாளிக்க வேண்டும்
அவ்வப்போது ஆவணிஅவிட்டம்போன்றபண்டிகைகளிலும்
கூட விடாது எல்லாம் செய்வார்களாம்.
ஆச்சு வருடங்கள் இரண்டு. பெண் பெரியவளாகி, புக்ககத்திற்கு அனுப்பும் போது இரண்டாவதாக ஒரு பெண்
குழந்தையும் வீட்டில்.
சின்னக் குழந்தைத் தங்கையைக் கொஞ்சாது போகிரோமே
என்று புக்ககம் போகும் பெரிய குழந்தைக்குக் குறை.
அப்படி இப்படி பெண்ணைக் கொண்டு விடும் போது
பெண்ணை எப்படியெல்லாம் உடல் நலம் பாதுகாத்து
வளர்த்தோமென பட்டியலிடும் போது, மாதாமாதம்
வீட்டில் நடைமுறையிலிருந்த விளக்கெண்ணெய் குடித்தலையும் அப்பா ன்ற முறையில் விவரித்து இருக்கிரார்.
அந்தக்கால கஷாயம். சுக்கு,சோம்பு,நிலாவரை, கடுக்காய்,திராக்ஷை, எல்லாம் போட்டுக் கஷாயம் வைத்து
திட்டமான சூட்டில், விளக்கெண்ணெய் விட்டு ஒரு
ஞாயிற்றுக்கிழமை எல்லோரையும், குடிக்க வைத்து,
அதற்கென்றே ஒரு வெள்ளிக்கிண்ணம்.
உத்ஸவம், மண்டகப்படி, எல்லாம் ஸரியா ஆச்சுன்னு அதை
முக்கிய செய்தியாகக் கூறுவார்கள்.
மிளகு ஜீராரஸம், மணத்தக்காளி வத்தல் வறுத்து ஒரு
சாப்பாடு.4மணிக்குமேலே மோர்சாதமும், வத்தக் குழம்பும்.
சாப்பிட ருசியாயிருக்கும்னு வேரெ சொல்லுவார்கள்
அதுவும், உண்மைதான்.
மாப்பிள்ளையாத்தில்,மாதாமாதம் விளக்கெண்ணெய்
பொண்ணுக்கு கொடுக்கணும்னு அவப்பா சொன்னார் என்று
வம்பாகப் பேச்சு வந்ததுன்னும், இதைப்போய்
சொல்லுவாளா என்று அம்மா அங்கலாய்த்ததும் ஞாபகம்
வருகிறது.
அம்மாக்கு பதினெட்டுநாள் குழந்தை கையில்…
View original post 381 more words