Archive for செப்ரெம்பர், 2021
கணபதியே வருகவருக.
இவ்வருஷம் வினாயக சதுர்த்தி மும்பை படங்கள் எடுக்க முடியாது கட்டுப்பாடுகள். தடைகள். வழக்கம்போல படங்கள் 2017 ஆம் வருடப் படங்களை மீள் பதிவு செய்து வணங்குகிறேன். உலகம் நன்மையுறப் பிரார்த்திப்போம் யாவரும். வாழ்த்துகள். அன்புடன்
வாக்குண்டாம் நல்ல மன முண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
மும்பை கணபதிகளின் அணி வகுப்பு. அவ்விடமுள்ள என் மகன் அமெரிக்கா போவதால் முன்கூட்டியே படங்கள் கேட்டிருந்தேன். குறைந்தது படமாவது போடலாமே.
வேழ முகத்து வினாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.
வெற்றி முகத்து வினாயகனைத் தொழ புத்தி மிகுத்து வரும்.
அல்லல் போம் வல்வினைகள் போம், அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம் போம் நல்ல குணமதிக
மாமருணைக் கோபுரத்தில் வீற்றிருக்குங்
கணபதிையைக் கொதொழுதக்கால்.
கணபதிியின் அடி பணிந்து யாவருக்கும் நன்மைகள் உண்டாக வேண்டி வணங்குவோம்.
நல் வாழ்த்துகள் யாவருக்கும்.
வெந்தயக்கீரைப் புலவு
மிக்க பழைய பதிவு இது. டில்லியில், அதுவும் டிஸம்பரில் இருந்திருக்கிறேனா? எனக்கே நம்ப முடியவில்லை.ஸிம்பிளான பதிவு. படங்களும் அதிகம் இல்லை. ருசிக்கவும். அன்புடன்
இதுவும் சுலபமாகச் செய்யக் கூடிய ஒன்றுதான்.
வேண்டியவைகள்
மெல்லியரக பாஸ்மதி அரிசி—1 கப்
தேங்காய்த் துருவல்—-2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்—–2 டேபிள் ஸ்பூன்
நெய்—–1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம்—-1 சிறியதாக நறுக்கவும்
பூண்டு—–2 இதழ்கள் தட்டிக் கொள்ளவும்
பச்சைப் பட்டாணி—அரைகப்
பச்சை மிளகாய்—2 கீறிக் கொள்ளவும்
சற்று பெறியதாக தக்காளிப் பழம்—1 நறுக்கியது
சுத்தம் செய்து நறுக்கிய வெந்தயக் கீரை—-ஒன்றறை கப்
இஞ்சி—-வாஸனைக்குத் துளி
லவங்கம்–2, ஏலக்காய் 1 , பட்டை வெகு சிறியத் துண்டு
இஷ்டத்திற்கிணங்க முந்திரி, திராட்சை
ருசிக்கு—உப்பு
சீரகம்—சிறிது
செய்முறை—- அரிசியைக் களைந்து தண்ணீரை இறுத்துவைக்கவும்
ஒரு கப் செய்ய ப்ரஷர் பேனே போதுமானது.
பட்டை,லவங்கம், ஏலக்காயை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்.
பேனில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து சீரகம் தாளித்து
நறுக்கிய மிளகாய், வெங்காயம்,பூண்டு இஞ்சியை வதக்கவும்
.மசாலாவைச் சேர்க்கவும்
தேங்காயைச் சேர்த்துப் பிரட்டி கீரையைச் சேர்த்து வதக்கி
கீரை வதங்கியபின் பொடியாக நறுக்கிய தக்காளி,பட்டாணி
சேர்த்துக் கிளறி நிதான தீயில் வைத்து அரிசியையும்
சேர்த்து ப் பிரட்டி உப்பும் கால் டீஸ்பூன் சர்க்கரையும்
சேர்த்து ஒன்றறைக் கப் தண்ணீர் விட்டுக் கிளறி மூடி
ப்ரஷர் குக் செய்யவும் ஒரு விஸிலே போதும்.
ஸிம்மில் 2, 3 நிமிஷங்கள் வைத்து இறக்கவும்
முந்திரி, திராட்சையை யும் தாளிப்பிலேயே சேர்க்கவேண்டும்.
தேங்காய்க்குப் பதில் தேங்காய்ப் பால் சேர்க்கலாம்.
சர்க்கரை சேர்ப்பது கலர் மாறாதிருக்க வேண்டியே.
என்ன இஷ்டமோ…
View original post 39 more words
கல்யாண கணேசர்.
வினாயகசதுர்த்தி வருகிறது. அவரைப்பற்றிய கதையாக இருப்பதால் இதை மீள் பதிவு செய்கிறேன். திரும்பவும்தான் ஒருமுறை படியுங்களேன். அன்புடன்
நமக்கெல்லாம் தெரிந்து பல கணேசர்கள் இருந்தாலும் கல்யாண கணேசரைப் பற்றி முதல் முதலாக இப்பொழுது தான் நான் படித்தேன்.
தமிழ் நாட்டைப் பொருத்த வரையில் கணேசர் கட்டை பிரம்மசாரிதான். அதே வடநாட்டில் அவரை விவாகமானவராகத்தான் சொல்லுவார்கள்.
ஸித்தி,புத்தி ஸமேத விக்னேசுவரர்தான்.
கைலாயகிரியில் பார்வதி பரமேசுவரருக்கு,தன் பிள்ளைகள் இருவருக்கும் விவாகம் செய்விக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டதாம்.
இதனையறிந்த கணேசரும்,முருகரும் , தாய்,தந்தையரிடம் போய் தனக்கே முதலில் விவாகம் செய்து வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.
பிள்ளைகளிருவரும் போட்டி இடுவதைப் பார்த்து,இதை நல்ல முறையில் தீர்க்கவேண்டுமென்று சிவன் விரும்பி இருக்கிறார்.
இந்த பூலோகத்தை யார் முதலில் பிரதக்ஷிணம் செய்து வருகிறீர்களோ, அவனுக்கு முதலில் விவாகம் என்று சொன்னார்.
முருகருக்கு ஏக குஷி. கணேஷசருக்கு இவ்வளவு சீக்கிரமாக உலகைச் சுற்றிவர முடியாது. நாம் வேகமாகப்போய் வந்து விடலாம் என்று மயில் வாகனத்தின் மீது அமர்ந்து உலகைச் சுற்றிவரப் போய்விட்டார்.!
கணேசருக்கோ தன்னால் உலகைச் சுற்றிவர முடியாது. என்ன செய்யலாம் என்று ஒரு வினாடி யோசித்தார்.
மளமளவென்று நியமத்துடன் நீராடி,நியம நிஷ்டைகளைக் கடைப் பிடித்துத், தந்தைதாய் அருகிலே வந்தார். அவர்களைப் பார்த்து,
நீங்கள் இருவரும் இப்படி ஆஸனத்தில் வீற்றிருக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார். அவர்கள் முகத்தில் கேள்விக் குறி?
பூமியைச் சுற்றிவரக் கிளம்பவில்லையா? சீக்கிரம் கிளம்பு பணித்தனர் இருவரும்.
உங்கள் இருவரையும் ஒன்றாகப் பூஜிக்க விரும்புகிறேன்.
இருவரும் அமர்ந்தனர்
கணேசர் அவர்களிருவரையும் பூஜித்து…
View original post 308 more words