ஒரு பரோபகாரத் தந்தை.

Snapshot_20160309_1

உதவி

துக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தை  மற்றவர்களுக்கும் இம்மாதிரி  கஷ்டம் நேரிடக் கூடாது என்று,  அதற்குத்  தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டுமென்று,செய்து கொண்டிருக்கும் காரியம்தான் என் மனதை மிகவும் நெகிழ்த்தியது.

பார்க்கப்போனால் இவர் அன்றாடும் காய்கறிகளைத் தள்ளு வண்டியில் வைத்து விற்று அந்த வருமானத்தில் இரவு,பகல்,மழை,வெயில்,குளிர் எதுவும் பாராது,அலைந்து திரிந்து சம்பாதித்தால்தான் குடும்பம் ஓடும். மும்பை அந்தேரி பகுதியில்  விஜயாநகர் இவர் வியாபார ஏரியா. தான் படும் கஷ்டம் பிள்ளைக்கு வரக்கூடாது என்று,ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் பிள்ளையைப் படிக்கவைத்தார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு,டிப்ளமா என்ஜீயனிரிங் படிப்பதற்காக ஒரு பாலி டெக்னிக் கல்லூரிக்குஅவருடைய பிள்ளை தனது நண்பருடன் சென்றுவிட்டு  மோட்டர் ஸைக்கிளில்வரும் போது, எதிர் பாராத வகையில் வீதியில் மழை நீரால் மூடப்பட்ட ஒரு பள்ளத்தில் வீழ்ந்து இருவரும்தூக்கி எறியப்பட்டனர்.   இவரின் பிள்ளை பலத்த அடியில் உயிரிழந்தான் தந்தை தாதாராவிற்கும், அவர் குடும்பத்தினருக்கும் பேரிழப்பு. தனது பெண்ணிற்காக அதிகம் துக்கத்தை வெளியில்  காட்டிக் கொள்ள முடியாத சூழ்நிலை. அதன்பிறகு மகனுக்கு செலுத்தும் அஞ்ஜலியாக,  பிரருக்கு இம்மாதிரி கஷ்டம் நேரிடாமலிருப்பதற்காக,  காய்கறி விற்கும்போதே வீதியில் எங்கு குழி,பள்ளங்கள் இருக்கிறதோ, அதைப் பார்த்துப் பார்த்து நிரப்புகிரார்.

இதை ஆரம்ப நாட்களில் பலர் வேடிக்கைப் பார்த்தனர். தற்போது என்னுடன் ,பலர்ஒத்தாசையும் புரிகின்றனர். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது. இது ஸம்பந்தமாக சாலை பராமரிப்பு நிறுவனம்மீது, போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். கோர்ட்டில் 6,7 மாதங்களாகியும், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. மகன் படித்து பெரிய ஆளாக வருவான் என்று கனவு கண்டேன் அவ்வளவு புத்திசாலிமகன். எங்களைவிட்டு மகிழ்ச்சி சென்று விட்டாலும், என் மகனுக்குச் செலுத்தும் அஞ்ஜலியாக இதைச் செய்து வருகிறேன் என்கிரார் தாதாராவ்.

பின் குறிப்பு.  மனம் நெகிழ்ந்த வேளையிலும், தாதாராவ் குழிகளை நிரப்பி அஞ்ஜலி செய்வது மனதை நெகிழ்த்துகிறது.  இது ஒரு மாதத்திற்கு முந்தைய  பேப்பரில் வந்த ஸமாசாரம்தான்.பெற்றமனம். இதுதான்.   என்னுடைய கேமரா பழுதாகி இருந்ததால் அப்போது போட நினைத்த ஸமாசாரமிது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மார்ச் 16, 2016 at 6:48 முப 9 பின்னூட்டங்கள்

காரடையான் நோன்பு.

இவ்வருஷத்திய பூஜை காரடையான்நோன்பு மார்ச் பதினான்காம்தேதி திங்கட்கிழமை காலை பத்து மணி முதல் பத்து மணி ஐம்பது நிமிஷத்திற்குள் செய்யலாம் என்று வாத்தியார் சொல்லி சரடு கொடுத்துவிட்டுப் போனார். யாவரும் பூஜையை பக்தி சிரத்தையுடன் அனுஸரித்து, வேண்டும் வரங்களைப் பெறவேண்டும். உங்கள் யாவருக்கும் மஞ்சள்,குங்குமம்,தாம்பூலத்துடன் என்னுடைய அன்பான நல் ஆசிகளையும் சொல்லுகிறேன். அன்புடன்

chollukireen's avatarசொல்லுகிறேன்

உருக்காத வெண்ணெயும், ஓரடையும் உருக்காத வெண்ணெயும், ஓரடையும்

பூஜைக்குச் செய்யும் முக்கியமான  நிவேதனப்  பொருளின்  பெயரைக்

கொண்டே இந்தப்பூஜையை,அதாவது நோன்பைச் செய்கிறோம்.

இதற்காகத் தொன்று தொட்டு ஒரு கதையும் உண்டு.

ஸாவித்ரி  அவள் கணவர்   ஸத்யவானின்  உயிரை மீட்டு வந்து

நன்றிக்காக இவ்விரதத்தை அநுஷ்டித்ததாகச்  சொல்லுவார்கள்.

அசுவபதி என்கிற அரசனுக்கு நெடுநாட்கள் குழந்தைப்பேரின்றி, தவமிருந்து

பெற்ற பெண் ஸாவித்ரி.

மிக்க அருமையான குணம் நிறைந்த,தெய்வ பக்தியுள்ள,, ஒரு பெண்.

அரசர் ஒருஸமயம் நாரதரைப் பார்க்கும் பொழுது இவ்வளவு உத்தம் சீலமான

பெண்ணின் வாழ்க்கை எப்படி  இருக்கும் என்று வினவினார்.

நாரதரும்  அவள் ஒரு உத்தமமான தாய்தந்தையரிடம்  பக்தி கொண்டு

அவர்களை ரட்சிக்கும்  ஒரு  நல்லவனை மணப்பாள் என்றாராம்.

ஆனால் அவனுக்கு ஆயுள் குறைவு என்றும் சொல்லி வைத்தார்.

வழக்கம்போல ஒருமுறை தோழிகளுடன்  ஸாவித்ரி  வனத்திற்குச் சென்ற

போது அவ்விடம்  ஸத்யவானைச் ஸந்திக்கிறாள்.

ஸத்யவானையே மனதில் வரித்து விடுகிறாள்

ஸத்யவானின்  தந்தை   பகையரசர்களால்  நாடு கடத்தப்பட்டு

வனத்தில் வசிக்கும், கண்தெரியாத  அரசர். மனைவிக்கும் கண்தெரியாது.

அவர்களைப் புதல்வன் ஸத்யவான்  காப்பாற்றி வருகிரார்.

காட்டில் விரகு வெட்டி, அதை நாட்டில் விற்று அந்தத் தொகையில்

காட்டில் குடிசை அமைத்து அதில்  வாழ்ந்து வருகிரார்கள்.

ஸத்யவானைச் சந்தித்த விஷயம் சொல்லி அவளின் விருப்பத்தைச்

சொல்லுகிறாள் தந்தையிடம்.

அவருக்கு   ஆயுள் குறைவு, என்று சொல்லியும் ,ஸாவித்ரியின் விருப்பப்படி

ஸத்யவானுடன்    மணமுடித்து வைக்கிரார்.

ஸாவித்ரியும்  மாமனார்,மாமியாருக்குச் சேவை செய்து கணவருடன்

உத்தமமான வாழ்வை நடத்தினாள்.

View original post 328 more words

மார்ச் 10, 2016 at 8:14 முப 6 பின்னூட்டங்கள்

ருத்திராக்ஷம்.

பக்திசிரத்தையுடன் அணியக்கூடிய அற்புத ஆற்றலுடைய மணிகள்.

Continue Reading மார்ச் 6, 2016 at 8:01 முப 7 பின்னூட்டங்கள்

மொஸென்டோ பூக்கள்

images333

இந்தச்,செடியோபூவோஎனக்கொன்றும்தெரியாது. சென்ற வருஷம் சென்னை சென்று விட்டு ஏப்ரல் பத்தாம் தேதி மும்பை வீட்டு ஹாலில் உட்கார்ந்து வெளியில் பார்த்தால் கண்கவரும்படியாக  செடி கொள்ளாத வகையில்  அருமையான கண்கவரும் ரோஜா நிறத்தில் அடர்த்தியாக பூக்கள் அமைதியாக காட்சி கொடுக்கிறது.

என்ன பூவிது என்று கேட்டால் நீயே போய்ப்பார்.முன்பே இருந்த செடிதான். இப்போதுதான் காட்சி கொடுக்கிறது என்றவுடன் அருகில் போய்ப் பார்த்தால் இலைகளே நிறம் மாறி   விரிந்த பூக்கள் போலவும்,குட்டியாக ஒரு மஞ்சள் நிறப் பூவுடனும் காட்சி தருகிறது. இலைகள் சற்றுத் தடித்த வெற்றிலைபோலச் சொறசொறப்பாக இருந்தது.

நாம் பூவென்றால் பூஜிக்கத் தகுந்ததாக இருக்கும் என்று பார்த்தால்  கண்கவர் அழகுப் பூக்களாக அருகதை என்று நினைக்கத் தோன்றியது. இது ஒரு கலர்தானா?   இல்லை.

பலவேறு அழகுக் கலர்களும் இருக்கிறது.

images111

இது புஷ் அல்லது மரம்போன்று பரந்து வளரும்தாவரம். 5, அல்லது 6 அடி உயரம்கூட வளருமாம். வெப்ப மண்டலங்களில் அதிகமாக வளரும். நல்ல சூரிய வெளிச்சம் வேண்டும். இலைகள் தோல் எரிச்சலை ஏற்படுத்துமாம்.

ஆனால் இதன் இலைகள் மரப் பட்டைகள்  முதலானது மருத்துவ குணங்கள் அடங்கியதாம். இன்னும் தேடினால் எவ்வளவோ விஷயங்கள் கிடைக்கும்.

 

444

சிவப்பு நிறமே குட்டி மஞ்சள் நிறம்தான் பூ.

நாங்களெல்லாம்   சிறுவர்களாயிருக்கும் போது இலையிலே பூபூக்கும் என்று ஒரு  பச்சை நிற செடி    இலை     சிவப்பாக மாறும்.பச்சை இலையும்இருக்கும். அந்த செடி ஞாபகம் வந்தது. அதற்கு இராஜ பேதிச் செடி என்று சொல்வார்கள். ஸ்கூலில்  இருக்கும்.     இதற்கு என்ன மருத்துவ குணமோ.   உலகத்தில் எல்லாமே உபயோகமான வஸ்துதான் போலும். தோட்டத்திற்கேற்ற அழகான பூக்கள்.

 

 

 

 

 

மார்ச் 4, 2016 at 2:41 பிப 9 பின்னூட்டங்கள்

சிவராத்திரி மகிமை

தியானலிங்கம்சிவனுக்குகந்த தினம் சிவராத்திரி

.தேவியைப் பூஜை செய்ய நவராத்திரி ஒன்பது தினங்களைப்போல் இல்லாவிட்டாலும்சிவராத்திரி ஒரு தினமே சிவனுக்கு மிகவும் மகத்துவமானது. சிவனுக்காக விசேஷமான தினங்கள் ஏராளமாக உள்ளது. ஆயினும் இந்த சிவராத்திரி எல்லா சிவன் கோயில்களிலும்,  அவரவர்கள் வீடுகளிலும் பூஜித்துக் கொண்டாடப் படுகிறது.  இளைய ஸமுதாயங்கள் சற்று விதி விலக்காக இருக்கலாம். ஆனால் கிராமங்களில் சிறுவர் சிறுமியர்கள் கூட   அவரவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து ,பூஜை,பாட்டு என்று பாடிக் கொண்டாடுவது ஞாபகம் வருகிறது. இரவு முழுதும் கண் விழித்து பக்தியை அப்போதே சிறுவர்களுக்கு ஊட்டப் படுவதும் மனதை விட்டு அகலவில்லை.

காட்மாண்டு சுபதீசுவரர்   கோவிலில்   சிவராத்திரி  வெகு விசேஷமாகக் கொண்டாடப் படும். நேபாளத்திலேயே மிகவும்  உயர்வான  சிவனைப் பற்றிய விசேஷக் கொண்டாட்டமது. வெகு வருஷங்கள் அவ்விடம் வசித்தபடியால்   நேபாளத்தைப்பற்றி குறிப்பிடாதிருக்கவே முடிவதில்லை.ஸாதுக்கள் கூட்டம்சொல்லிமாளாது.

பசுபதிநாத்கோயில்

பசுபதிநாத்கோயில்

பசுபதீசுவரருக்கு நான்கு திசையில் நான்கு முகங்கள், உச்சியில் ஒன்று என ஐந்து முகம் கொண்ட ஸதா சிவமாக விளங்குபவர்.   நான்கு முக எதிரிலும் நான்கு வாயில்கள் உள்ளன. எதிரில் பிரும்மாண்டமான  உலோகத்தினாலான  நந்தியின் சிலை உள்ளது.   தென்னிந்திய      கர்னாடக பட்டாக்கள்தான் பூஜை செய்கின்றனர்.பிரஸாதமாக அன்றன்று அரைத்த சந்தனம்  வழங்கப்படும். நான்கு ஜாமங்களிலும்   அபிஷேக அலங்காரம் சொல்லி மாளாது.

மாசிமாத கிருஷ்ணபக்ஷ சதுர்தசியில் இரவு நேரத்தில் நான்கு ஜாமங்களாகப் பிரித்து , அபிஷேக ஆராதனைகளுடன்  சிவராத்திரி பூசைகள் நடக்கிறது. அன்று  கண் விழித்திருந்து, விரதமிருந்து, இறைவனை வணங்கும்போது, முழுமையான பக்தி பரவசம் கிடைக்கும். நினைத்த எண்ணங்கள் கைகூடும் என்றும் சொல்வார்கள்.

சிவராத்திரியன்று மடி ஆசாரத்துடன் சாப்பிடாது உபவாஸமிருந்து,   இரவு பூராவும் கண் விழித்து   சிவ தரிசனம் செய்து,  மறுநாளும், மடியாக சிவதரிசனம் செய்து, தான தர்மங்கள் செய்து பாரணை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த  பாவங்கள் அகலும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். சிவனுக்குப் பூஜிக்கத் தகுந்த இலை வில்வம்.இந்த வில்வ தளப் பெருமையை  பீஷ்மப்பிதாமஹர் அம்புப்படுக்கையில் இருக்கும்போது கூறிய ஒரு சிறுகதை ஞாபகம் வருகிறது.

சித்ரபானு என்கின்ற ஒரு மன்னன்  வேட்டையாடி ஒரு மானை எடுத்துக்கொண்டு வரும்போது இரவு நேரமாகிவிட்டது. ஒரு மரத்தின்கீழ் அதைப் போட்டுவிட்டு,,மரத்தின்மேலே இரவைக்கழிக்க, அதன்ஏறி உட்கார்ந்து கொண்டான்.  விழிப்புணர்வுடன் இருப்பதற்காக மரத்தின் ஒவ்வொரு இலையாகக் கிள்ளி கீழே போட்டுக் கொண்டும்,குடுவையிலிருந்த நீ்ர் சிந்திக் கொண்டும் இருந்தது.கண்களைத் துடைக்கும் போது நீர் கீழே சிந்திக் கொண்டும் இருந்திருக்கிறது. காலையில் மானுடன் அவர்  அரண்மனை போயாகிவிட்டது.

காலப்போக்கில் அவர் காலகதி அடைந்தபோது, சிவதூதர்கள்   அவருக்கு இராஜ உபசாரம் செய்து அழைத்துப் போனபோது அவரறியாது செய்த புண்ணியத்தின்பலன் தெரியவந்தது.    அவர் ஏறி இருந்த மரம் வில்வமரம்.மரத்தினடியில் சிவலிங்கமிருந்திருக்கிறது.
அவரறியாமலே செய்த சிவராத்ரி பூஜையின் பலன் அவருக்கு, அதுவும் பூர்வ ஜன்மத்தில் செய்தது நல்ல கதியைக் கொடுத்ததாக மஹாபாரத சாந்தி பர்வத்தில் பீஷ்மரால் கூறப்படுகிறது.

ஓம்நமசிவாய

ஓம்நமசிவாய

ஸகல பிரபஞ்ஜமும் அடங்கி இருக்கிற லிங்க ரூபமானதுஆவிர்பவித்த மஹா சதுர்த்தசி இரவில்.அவரை அப்படியே ஸ்மரித்துஸ்மரித்து அவருக்குள்நாம் அடங்கி இருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் வேறில்லை என்று ஸ்ரீ ஸ்ரீீ மஹா பெரியவாள் தன்னுடைய தெய்வத்தின் குரலில் சொல்லி இருக்கிறார். அதை விட வேறு எந்த வாக்கு பெரியது?
நாராயணா என்னா நாவென்ன நாவே நமசிவாயா யென்னா நாவென்ன நாவே.
திரிகுணம்,திரிகுணாகாரம்,திரிநேத்ரஞ்சதிரயாயுஷஹ
திரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் சிவார்ப்பணம்.

இவ்வருஷம் மார்ச்மாதம் ஏழாம் தேதி மஹா சிவராத்திரி வருகிறது. நம் எல்லா சிவாலயங்களிலும் அவரவர்களுக்கு அருகிலுள்ள ஆலயத்திற்குச் சென்று சிவனை வழிபட்டு உலக நன்மைகளுக்காகவும் உங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.

நான்கு ஜாமங்கள் என்பது மாலை 6–30 மணி,   9—30மணி,    12—30 மணி     3. மணி என்பர்.

ஓம் நமசிவாயநமஹ.

மார்ச் 1, 2016 at 2:16 பிப 9 பின்னூட்டங்கள்

தை பிறந்தால்–2

உஷாவின் நினைவு இருந்துகொண்டே இருக்கிறது. அவ்வப்போது மானஸீகமாகப் பேசிக்கொள்வோம் கற்பனையில். மிகவும் அபிமானமுள்ள பெண். ஒரு ஆகாயவிமான பிரயாணம் மட்டுமல்ல.பல வித உணர்வுகளை பல ஸமயம் விமானப் பயணங்களில் அனுபவித்துள்ளேன். இது மனதை விட்டு அகலாத கற்பனையும் சேர்ந்ததுதான். உஷாவும் படித்து மகிழ்ந்திருப்பாள். அன்புடன்

chollukireen's avatarசொல்லுகிறேன்

-வாஷிங்டன்லே நல்ல வேலெம்மா எனக்கு. மகளைப் பாத்துபாத்து

அருமையா வளர்க்கவும், அதுக்கு குறையில்லாம எல்லாம் செய்யவும்,

வேலைக்கு போவதும் ,வருவதும்தான் அதுதான்  உலகத்திலே ,பெரிசு.

மக நல்லா வளரணும், படிக்கணும், இது ஒண்ணுதாம்மா கனவு.

ஆபீஸ்லே இருக்கரவங்க சொல்லுவாங்க,   உனக்குன்னு வாழ்க்கை

வேணும்,  அதைப்பத்தியும் யோசின்னு சொல்லுவாங்க.

எனக்கு எதுவும் காதுலே விழுந்ததேயில்லைம்மா. வருஷத்துக்கொரு

முறை இந்தியா வந்து போனால்,  அம்மா கை சாப்பாடு  தின்றாலே அது

போதும்மா.

ஜெயந்தி நல்லா படிப்பா. அவங்க அப்பா வழி பாட்டின்னா உசுரு.

அவங்களும் வருஷா வருஷம் கூப்பிடுவாங்க. அனுப்புவேன்.

இப்படியே அவளுக்கு அன்பும் நல்லா கெடைச்சுது.

நான் அவங்ககிட்டே போன் போட்டுதான் பேசுவேன்.

உஷா, ஜெயந்தி வளந்திட்டே வரா. நீ ஜாக்கிரதையா இருக்கோணம்.

அவளுக்கு எல்லாம் நல்லா செய்யணும்!

வெளி நாட்லே இருக்கே!ஞாபகம் இருக்கணும் , இதையே சொல்லுவாங்க.

இது ஏது? புதுக்கதை ஏதாவது பாவம், நமக்கு இதெல்லாம் வேணுமா?

யோசனை வந்து விட்டது.

ட்ரே,ப்ளேட் எல்லாம் எடுக்க ஏர்ஹோஸ்டஸ் வர இரண்டு நிமிஷம் பேச்சு

தடை.

அப்பா சொல்வாங்க,  போனிலேதான், உன் மக எதிர்காலம் உன் கையில்.

என் எதிர் காலமே தெரியலே. என்ன சொல்ராங்கன்னு புரியலையா?

ஆபீஸ்லே பெரிய,பெரிய மீட்டிங்லாம் ஏற்பாடு செய்ய என்னிடம்

ஒப்படைப்பாங்க. வெளியிடங்கள்லேந்து ஆட்களெல்லாம் வருவாங்க.

அவங்களுக்கும், எல்லா ஒத்தாசைங்க. ஷாப்பிங் எல்லாம் கூட போய்

முடிந்ததை   எல்லாம்  செய்வேங்க

ஜெயந்திக்கும் ஷாப்பிங் போக பிடிக்கும். இம்…

View original post 976 more words

பிப்ரவரி 3, 2016 at 1:43 பிப 8 பின்னூட்டங்கள்

தை பிறந்தால்–1

பார்த்துக்கொண்டே வரும்போது இந்தக் கதை மட்டும் திரும்பப் படித்ததாக ஞாபகம் வரலை. இரண்டு பகுதியாவேறு போட்டிருந்தேன். அடியைப் பிடிடா பாரதப்பட்டா என்று ஒரு வசனமுண்டு. புதுசா எழுத யோசனைவந்தாலும் ப்ளாகில் அதிகம் தட்டச்சு செய்ய முடிவதில்லை ஸரி இதைப் போடுவோம் என்று தோன்றியது. படிக்காதவர்கள் கூட சிலர் ,பலர் இருக்கலாமில்லையா? எனக்காகவே மனத்திருப்திக்காகப் போடுகிறேன் என்றே இருக்கட்டும். படியுங்கள்.

chollukireen's avatarசொல்லுகிறேன்

ஏர் போர்ட்,   டிக்கெட் கவுண்டர்.

அப்க்ரேட் இன்னிக்கு செய்வதாகச் சொன்னீர்கள்.

ஸாரி மேடம். பிஸினஸ்க்ளாஸ்  ஃபுல் மேடம்.

நேற்று புக்செய்யக் கேட்ட போது கட்டாயம் இன்று தருகிறேன்

என்று  சொன்னீர்கள். ப்ளாட்டினம் கார்ட்  எதற்குத் தருகிறீர்கள்?

எங்கே உங்கள் ஆஃபீஸர்.  நான் பேசுகிறேன்.

ஸாரிமேடம்.

நோநோ.  ஸாரி,யெல்லாம்  வேண்டாம். கொடுத்த வார்த்தையை

காப்பாத்தணும்.  வயஸானவங்க,   வீல்ச்சேர்.

போன் செய்து விவரம் போக   ஆஃபீஸரே வருகிரார்.

ஒரு முறைகூட  இ்துவரை அப்க்ரேட் கேட்டதில்லை.

உங்கள் கார்டிற்கு என்ன மதிப்பு.?

வாதம், கார்ட் எதற்குக் கொடுக்குறீர்கள் அதற்கு அர்த்தமே இல்லை.

எப்படியோ  பத்து  நிமிஷம் கொடுங்கள்,   பார்க்கிறேன்.

வேண்டாமே இ ப்படியே  அட்ஜஸ்ட் பண்ணலாமே.

என்ன ஆகிறது பார்ப்போம். அப்படி விடக்கூடாது.  டிக்கட் வாங்க

முடியாதா என்ன?

வாதம் பலித்து.   கார்டை வாங்கி  ஸரி பார்த்து   அப்க்ரேட் செய்து

மூன்று  போர்டிங்பாஸ்.

சேர்ந்தமாதிரி இருக்கையில்லை. ஆரம்பத்தில் இரண்டு  இருக்கை.

கடைசியில்  ஒரு இருக்கை.

ஸாரி. இப்படிதான் கொடுக்க  முடிந்தது.  ரொம்ப சிரமப்பட்டுதான்

செஞ்ஜோம்.

இவ்வளவு சண்டை போட்டால்தான்  காரியம் நடக்கும்.

வீல்சேர்.   முன்னைடியே  போய்ச் சேரணும்.

நாங்க முன்னாடி இருக்கோம். நீங்க பின் ஸீட்டுலே இருங்கோ.

மத்ததை நான் பாத்துக்கறேன்.

வீல்சேர்,  பாஸஞ்சர்கள் இரங்கிப் போனவுடன்,ப்ளேன் சுத்தம்செய்து

கொண்டிருக்கும் போதே  டோரில்  காத்துக் கிடக்கும்.

அதிகம் பாஸஞ்சரிருந்தால்   இன்னும் சீக்கிரமே   சுவர்க

வாசல்தான்.  உள்ளே போக  அனுமதிக்கு  .

தெறியாமல் பணத்தை , வீல் சேரைத்…

View original post 538 more words

பிப்ரவரி 2, 2016 at 11:23 முப 3 பின்னூட்டங்கள்

யானைகளின் சிலசுபாவங்கள்

சிறியதாக எதையாவது எழுதி திரும்ப எழுத முயற்சிக்கும் அவாவில் யானை சிக்கிக்கொண்டது. கேட்ட ஸமாசாரம்தானிது. இருக்கட்டுமே. குழந்தைகளுக்கானது போலத் தோன்றுகிறது. பாருங்கள்

Continue Reading ஜனவரி 29, 2016 at 6:34 முப 8 பின்னூட்டங்கள்

பொங்கல் வாழ்த்துகள்.

அன்புமிக்க சொல்லுகிறேனின்    ஆதரவாளர்கள் அனைவருக்கும்   என் மனமார்ந்த   இனிய மகர ஸங்கராந்தி,தைப்பொங்கலின்  இனிய வாழ்த்துகளையும், ஆசிகளையும் ,அன்புடன் இதன் மூலம்   பகிர்ந்து கொள்கிறேன்.  பொங்கலோ பொங்கல். காமாட்சி மஹாலிங்கம்.
P1030558இனிய பழங்கள்

 

ஜனவரி 14, 2016 at 1:31 பிப 13 பின்னூட்டங்கள்

பேபி பொடேடோ வதக்கல்.

இன்று இவ்விடம் இதே கறிசெய்தது. அதிகம் நான் சமையல் பக்கம் போவதில்லை. என்னையாவது திரும்பிப்போடு என்று குட்டி உருளைக் கேட்டது.டிஸம்பர் ஆரம்பித்து எதுவும் பதிவிடவே இல்லை. படியுங்கள் நீங்கள் ருசிக்காதது எதுவுமில்லை. என்னை புதுப்பித்துக் கொள்கிறேன். அவ்வளவுதான். பதிலும் கட்டாயம் முதலில் விட்டுப்போனவைகளுக்கும் சேர்த்து எழுதுகிறேன். காமாட்சிம்மா அன்புடனாக.

chollukireen's avatarசொல்லுகிறேன்

இன்று  இந்த வதக்கல் செய்தேன்.  ஸரி நம் ப்ளாகைப் பார்க்கிறவர்களும்

ருசிக்கட்டுமே    என்று     தோன்றியது.4  நாட்கள்  முன்பு செய்தது, இது.

பேபிபொடேடோவதக்கல் பேபிபொடேடோவதக்கல்

வேண்டியவைகள் ஒன்றும் பிரமாதமில்லை.    வேண்டிய அளவு

குட்டி உருளைக் கிழங்கு

எண்ணெய் தாராளமாகவே    விடுங்கள்.

தாளித்துக் கொட்ட —சிறிது கடுகு.

மஞ்சள்பொடி—சிறிது

மிளகாய்ப் பொடி—காரம் வேண்டிய அளவு.

சீரகப்பொடி—-அரை டீஸ்பூன்

உப்பு—ருசிக்கு

பெருங்காயப் பொடி—சிறிது

ஒரு டீஸ்பூன்—கடலைமாவு

கறிவேப்பிலை—-சிறிது.   2 இதழ் உரித்த பூண்டு

செய்முறை–

உருளைக்கிழங்கை அலம்பி  ,அது அமிழத்  தண்ணீர் வைத்து

குக்கரிலோ,அல்லது பாத்திரத்திலோ வேக வைத்து வடிக்கட்டவும்.

முக்கால் வேக்காடு போதும்.   ஆறினவுடன் தோலை உரிக்கவும்.

உரித்த கிழங்குடன்,உப்பு, மிளகாய், மஞ்சள், பெருங்காயம் சீரகப்

பொடிகளுடன்      நன்றாக நசுக்கிய பூண்டு சேர்த்துப்  பிசறி வைக்கவும்.

சற்று ஊறிய பிறகு, அடி கனமான வாணலியைச் சூடாக்கி

எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்க விடவும்.

பிசறி வைத்துள்ள  பேபி பொடேடோவை, அதான் குட்டி உருளைக்

கிழங்கைச் சேர்த்து வதக்கவும்.

ஸிம்மில் எரிவாயுவை வைக்கவும்.

நிதானமாகக்  கிளறிவிட்டு வதக்கவும்.

ம னதுக்கு போதும் என்று தோன்றும் வரை வதக்கலாம்.

இஞ்சி சேர்த்து வதக்கலாம்.

பூண்டு சேர்த்து வதக்கலாம்.

வெங்காயம் சேர்த்து வதக்கலாம்.

மஸாலா, பெருஞ்சீரகம், எது வேண்டுமானாலும் சேருங்கள்.

ஏதாவதொன்று சேர்த்து வதக்கி கடைசியில்   கடலை மாவைப் பரவலாகத்

தூவிப் பிரட்டி வதக்கி இரக்கவும்.    சிறிது எண்ணெய் அதிகமிருந்தாலும்

மாவு அதை  ஸரியாக்கிவிடும். கறிவேப்பிலை மறக்க வேண்டாம்.

வித்தியாஸமான  …

View original post 12 more words

திசெம்பர் 18, 2015 at 12:32 பிப 9 பின்னூட்டங்கள்

Older Posts Newer Posts


மார்ச் 2026
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 560,808 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Pandian Ramaiah's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • gardenerat60's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • geethaksvkumar's avatar
  • Great Foodies's avatar
  • yarlpavanan's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • tamilelavarasi's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • chitrasundar5's avatar
  • Unknown's avatar
  • பிரபுவின்'s avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.