பொரி உருண்டை

கார்த்திகையை நினைத்துக் கொண்டு நாம் ஏதாவதுஎழுதினோமா என்று பார்த்தால் ஜெனிவாவில் கிடைத்த பொரியில் செய்தது நான் இருக்கிறேன் என்று முன் வந்து நிற்கிறது. அதுதான் நானே எடுத்த முதல் போட்டோவும். காமா,சோமா என்று இருந்தாலும் கார்த்திகைப்
பருப்பு தேங்காயும்,உருண்டைகளும் கிடைத்த வெல்லத்தைக் கொண்டு செய்தது. நான் எடுத்த முதல் படம்.
என் கேமிராவில் என்ன இருக்கும்? கம்யுட்டரில்தான் என்ன இருக்கும்.? இதுவே அது.அதுவே இது என்ற கணக்கில்தான்.
பாருங்கள்.அண்ணாமலைக் கார்த்திகை வாழ்த்துகளுடன்.
அன்புடன்

கோபுர தரிசனம் கோடி புண்யம். திருவண்ணாமலை கோபுரம்.

திவண்ணாமலை ராஜகோபுரம்.

திருவண்ணாமலை ராஜகோபுரம்.

கார்த்திகைத் தீபங்களே ஒளி வீசுகவே

கார்த்திகைத் தீபங்களே ஒளி வீசுகவே

இவைகளும் கோபுரமும் என் காமிராவின் பதிவே.

chollukireen's avatarசொல்லுகிறேன்

சுத்தம் செய்த     அவல் பொரியோ அல்லது  நெல் பொரியோ எது

கிடைக்கிரதோ  ஒரு 3 டம்ளர் அளவில் செய்யலாம் வாருங்கள்.

வேண்டிய சாமான்கள்.—–பொடித்த வெல்லம்—1 டம்ளர்

சுக்குப் பொடி—அரை டீஸ்பூன்

மிளகுப் பொடி—கால் டீஸ்பூன்

ஏலப்பொடி—கால் டீஸ்பூன்

சிறிய பல்போல நறுக்கிய தேங்காய்த் துண்டுகள்–3டேபிள்ஸ்பூன்

பொட்டுக் கடலை, வறுத்த வேர்க் கடலை  சிறிது

நெய்—-சிறிது

செய்முறை. —-நெய்யில்   தேங்காய்த் துண்டுகளை சிவக்க

வறுத்து வைத்துக் கொள்ளவும்.

சற்று கொள்ளளவு  பெரிதாகவுள்ள பாத்திரத்தில் வெல்லப்பொடி

நன்றாக மூழ்கும் அளவு   தண்ணீர் சேர்த்து  நிதான தீயில் வைத்து

பாகாகக் காய்ச்சவும்.

பாகில் பொடிகளைச் சேர்க்கவும்.   முதிர் பாகாக வரும் போது

பொரியையும்,  தேங்காயையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

எண்ணெய் தடவிய தட்டில் கொட்டிக் கொண்டு   கையில்

அரிசி மாவை  லேசாக தடவிக்கொண்டு  வேண்டிய சைஸில்

உருண்டைகளாக உருட்டவும்.

விருப்பமுள்ளவர்கள்,     பொட்டுக் கடலையையும், வறுத்த

வேர்க் கடலையையும்    பொரியுடன் சேர்க்கலாம்.

பாகு வெல்லமாக இருந்தால் நல்லது.

காய்ந்தபாகில் ஒரு துளி, சிறிது ஜலத்தில் விட்டுப் பார்த்தால்

கரையாமல் கெட்டியாக  உருட்டி எடுக்கும் பதத்தில் பாகு வரும்.

திருக்கார்த்திகைக்கு  விசேஷமான பொரி உருண்டை.

சாதாரணமாக எப்போதும் கிடைக்கும்    முட்டைப்பொரி[அதாவது  அரிசிப் பொரி]

இதிலும் தயாரிக்கலாம். அளவு எல்லாம்   பொரி 3 பங்கு,   வெல்லம் 1 பங்கு கணக்குதான்.

பொரி யைக் கடையில் வாங்குவதால் சில சமயம் நமுத்துப் போக

வாய்ப்புள்ளது. அதனால் பொரியை சற்று சூடு படுத்தி…

View original post 7 more words

திசெம்பர் 4, 2014 at 11:21 முப 10 பின்னூட்டங்கள்

மூலிபரோட்டா என்று அழைக்கப்படும் முள்ளங்கி சேர்த்த ரொட்டி

சுடச்சுட சாப்பிட நன்றாக இருக்கும். செய்து பழக்கமானால் அடிக்கடி செய்வதற்குத் தோன்றும்.

Continue Reading திசெம்பர் 2, 2014 at 10:52 முப 15 பின்னூட்டங்கள்

அன்னையர் தினப்பதிவு 18

சிறிது சீக்கிரமாகவே இப்பதிவு இடுகிறேன். எழுத எழுத வளர்ந்து கொண்டே போகிறதா? பாருங்கள்.

Continue Reading நவம்பர் 28, 2014 at 4:46 பிப 13 பின்னூட்டங்கள்

பெப்பர் கார்லிக்சாஸ். நூடல்ஸுக்கானது.

வேக வைத்த நூடஸுடன் இம்மாதிரியான சாஸை சேர்த்துச் சாப்பிடலாம். ஸிம்பிளாக நூடல்ஸை வதக்கினாலே போதும்.
இதெல்லாம் சுலபம்தானே.
நூடல்ஸ் வாங்கி வேக வைத்து அலசி வடிக்க வேண்டியதுதான். செய்து ரஸியுங்கள்.

Continue Reading நவம்பர் 27, 2014 at 5:14 முப 12 பின்னூட்டங்கள்

அன்னையர் தினப்பதிவு–17

தாமதமாகத்தான்
எழுதிக்கொண்டு இருக்கிறேன். படித்துத் தொடருங்கள்.

Continue Reading நவம்பர் 17, 2014 at 5:14 முப 16 பின்னூட்டங்கள்

காரக்குழம்பு

காய்கள் ஒன்றும் போடாது ஸுலபமாகத் தயாரிக்கும், ருசியான க் குழம்பு இது.

Continue Reading நவம்பர் 7, 2014 at 11:49 முப 26 பின்னூட்டங்கள்

வாழ்த்துகள்

விசேஷமான தீபாவளி வாழ்த்துகள் யாவருக்கும்.

Continue Reading ஒக்ரோபர் 21, 2014 at 10:48 முப 16 பின்னூட்டங்கள்

மாலாடு

இந்த மாலாடுவும் 2012 இல் எழுதியதுதான். தீபாவளியையொட்டி இதுவும் ரி ப்ளாக் செய்துள்ளேன்.
ஸுலபமானது. எதையாவது எழுதிப் பழக்கம். இதையாவது போடுவோம் என்று இந்தப்பதிவு. யாருக்காகவாவது உபயோகப்பட்டால் போதும். ருசியுங்கள். வாழ்த்துகளுடனும்,
அன்புடனும் சொல்லுகிறேன்.

chollukireen's avatarசொல்லுகிறேன்

இதுவும்  மிகவும்  சுலபமாக   நினைத்தால்  செய்யக்கூடிய

லட்டு.   வாயில் போட்டால்  கரையக்கூடியதும், ருசியானது

மானது. நீங்களும்  செய்து  பாருங்கள்.

மாலாடு

வேண்டியவைகள்

பொட்டுக்கடலை—-ஒருகப்

சர்க்கரை—1 கப்

பாதாம்—–    8

முந்திரி—8

பிஸ்தா—8

ஏலக்காய்—3

நெய்—-2 கரண்டிகளுக்கு  அதிகம்.

லாடுக்கான ஸாமான்கள். நெய் தவிர

செய்முறை

பொட்டுக்கடலை  அதாவது   தேங்காய் சட்னியில் கூட

வைத்து அரைப்போமே ஸாக்ஷாத் அதுவேதான்.

வாணலியிலோ,   மைக்ரோவேவில்  வைத்தோ  பொட்டுக்

கடலையை   சற்று  சூடாக்கி    மிக்ஸியில்  நன்றாக அறைத்து

சலித்து எடுத்துக் கொள்ளவும்.   சில ஸமயம்  பொட்டுக்கடலை

நமுத்துப் போயிருக்கலாம்.  அதற்காகவும்,வாஸனைக்காகவும்

சூடாக்க வேண்டும்.

பருப்பு வகைகளையும்   லேசாக  வறுத்து   மிக்ஸியில்

நறநறப்பாகப்   பொடிக்கவும்

உறித்த  ஏலக்காயுடன்   சர்க்கரையையும் நன்றாக மிக்ஸியில்

அறைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியின்  சிறிய   கன்டெய்னரில்   அறைத்தால்

யாவையையும் நைஸாகப் பொடி செய்ய   முடியும்

பொட்டுக் கடலைமாவுப்ளஸ் முந்திரி பாதாம்பொடி
அறைத்த சர்க்கரைப் பொடி

இப்போது பொடித்த   எல்லாவற்றையும்   ஒரு  அகன்ற

தாம்பாளத்திலோ  தட்டிலோ   சேர்த்துக்  கலக்கவும்.

இனிப்பு   குறைவாக  வேண்டியவர்கள்   சர்க்கரைப் பொடியைக்

குறைக்கவும்.

முந்திரி,  பாதாம்  வகைகளை   ஸவுகரியம் போல  சேர்க்கவும்.

எல்லாமே  அவசியம் என்று  நினைக்க வேண்டாம்.

வாணலியில்    பாதியளவு   நெய்யை விட்டு  மிதமான  தீயில்

நன்றாகச்   சூடாக்கவும்.

தாம்பாளத்தில்   கலவையை பாதியாக  பிரித்துக் கொள்ளவும்.

பாதிக் கலவையில்  நன்றாகக்  காய்ச்சிய  நெய்யைவிட்டு

அகலமான  கரண்டியினால் நன்றாகக்   கலக்கவும்.

சூடான நெய்யுடன்

நெய்யின்  சூட்டில்    சர்க்கரை இளகி   உருண்டை…

View original post 82 more words

ஒக்ரோபர் 18, 2014 at 7:23 முப 4 பின்னூட்டங்கள்

புத்துருக்குநெய் மைசூர் பாகு

நான்கு வருஷத்திற்கு முன் எழுதியது இது. கடலைமாவை சற்று வருத்தாலே போதும். தீீபாவளிக்காகப் புதியதாக ஒன்று எழுதாவிட்டாலும் ரீ/ப்ளாகாகிலும் செய்வோமென்று தோன்றியது. செய்து ருசியுங்கள். கமகமவென்று வாஸனையுடன் ருசியுங்கள். அன்புடன் சொல்லுகிறேன்.

chollukireen's avatarசொல்லுகிறேன்

வெண்ணெய் புதியதாகக் காய்ச்சி  அந்த நெய்யில் மைசூர்பாகு

தயாரித்தால்   அந்த ருசியே  அலாதிதான்

அம்மாதிரி செய்யும்  முறையைப் பார்ப்போமா?

வேண்டியவைகள்.

கால் கிலோ  உப்பு சேர்க்காத  வெண்ணெயை நெய்யாகக் காய்ச்சினால்

ஒரு கப்பிற்கு அதிகமாகவே  நல்ல நெய் கிடைக்கும். அதில் ஒருகப்

நெய்யை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும்.

அரைகப் கடலை மாவை   முன்னதாகவே  ஒரு ஸ்பூன் நெய் கலந்து

மைக்ரோ வேவில்   ஒவ்வொரு நிமிஷமாக கிளறிவிட்டு   2,   3,   நிமிஷம்

வைத்தெடுக்கவும்.

அல்லது   வாணலியிலிட்டு   லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.

அடி கனமான    அகலமான பாத்திரத்தில்    ஒரு கப் சர்க்கரையைப்

போட்டு   சர்க்கரை அமிழ  ஜலம் விட்டு   நிதான தீயில் நன்றாகக்

கிளறவும்.

கூடவே     மற்றொரு    பாத்திரத்தில்   நெய்யைச்     சூடாக்கிக்

கொண்டே இருக்கவும்.

சர்க்கரை கரைந்து கொதித்து   ஒரு கம்பிப்  பாகு பதம் வரும் போது

மாவைச் சிறிது, சிறிதாகத் தூவிக் கிளறவும்.

நல்ல சூடான  நெய்யையும் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.

தீ மிதமானதாக இருக்க வேண்டும். கை விடாது  அடிபிடிக்காது

கிளறவும்.

நெய் விடவிட கலவை நெய்யுடன்  சேர்ந்து    கொதித்து  இறுகி

பாத்திரத்தை விட்டு விலகி     நுறைத்து  மேலே வர ஆரம்பிக்கும்

நன்றாகக் கிளறி ,     தயாராக வைத்திருக்கும் நெய் தடவிய

தட்டு  அல்லது ட்ரேயில்     கலவையைக் கொட்டி , தட்டை

இரண்டு கையினால் பிடித்து  சமனாக பரவும்படி  அசைக்கவும்.

View original post 32 more words

ஒக்ரோபர் 10, 2014 at 11:47 முப 5 பின்னூட்டங்கள்

வாழ்த்துகள்

ஸரஸ்வதிபூஜை,விஜயதசமிக்கான வாழ்த்துகள்

Continue Reading ஒக்ரோபர் 1, 2014 at 3:19 பிப 8 பின்னூட்டங்கள்

Older Posts Newer Posts


மார்ச் 2026
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 560,828 hits

காப்பகம்

பிரிவுகள்

  • பிரபுவின்'s avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • ranjani135's avatar
  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • yarlpavanan's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • chitrasundar5's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.