சித்ரான்னங்கள். ,எலுமிச்சை, தேங்காய், எள், மற்றும்—–
ஜூலை 24, 2009 at 12:25 பிப பின்னூட்டமொன்றை இடுக
எலுமிச்சை—-
உதிராக வடிக்கப்பட்ட ஒருகப் அரிசியில்சமைத்த சாதத்தைஆற விடவும்.
மற்றும் வேண்டியவைகள் பச்சைமிளகாய்இரண்டு,—-பொடியாக நறுக்கிய சிறு துண்டு இஞ்சி,
பச்சைப் பட்டாணிஇரண்டு டேபிள்ஸ்பூன்,–நறுக்கிய குடமிளகாய் நான்கு டேபிள் ஸ்பூன்—–10,அல்லது15 கறிவேப்பிலை இலைகள்,–திட்டமான சாருள்ள ஒரு எலுமிச்சம் பழம்
தாளிக்க, வேண்டியவை——நல்எண்ணெய் 3டேபிள் ஸ்பூன்,—–கடுகு அரை டீஸ்பூன்,
வேர்க்கடலை2 டேபிள்ஸ்பூன்,—-கடலைப்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்,- பெருங்காயப்பொடி கால்டீஸ்பூன், —மஞ்சள்பொடி கால் டீஸ்பூன்
ருசிக்குத் தேவையான உப்பு.
செய் முறை———–மிளகாயை நான்காகக் கீறிக் கொள்ளவும். வாணலியில் தாளிக்க
எண்ணெயைக் காய வைத்து, கடுகைமுதலில்போட்டு வறுத்துக் கொண்டு பருப்பு வகைகளைப் போட்டு சிவக்கவறுத்து கறிவேப்பிலை மிளகாய் , பட்டாணி, குடமிளகாய் இஞ்சி முதலியவைகளைச்
சேர்த்து நிதானமான தீயில் வதக்கவும். உப்பு, மஞ்சள்பொடி பெருஙகாயப் பொடி சேர்த்து இறக்கி ஆற விடவும்.
ஆறின கலவையில் எலுமிச்சம் பழத்தை நறுக்கி கொட்டையை நீக்கி சாற்றைப் பிழியவும். ஆற வைத்துள்ள சாதத்தில் கலவையைக் கொட்டி சீராகக் கலக்கவும்.
சிவக்க வறுத்துப்பொடித்த வெந்தயப்பொடி இருந்தால் வாசனைக்கு ஒர் துளி பிடித்தவர்கள் சேர்க்கலாம். எலுமிச்சம் சாதம் தயார். தொடர்ந்து மற்றவைகள்——-
Entry filed under: சித்ரான்னங்கள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed