Archive for ஓகஸ்ட், 2011
சொல்கிறேன்.
அன்புள்ள என்னுடைய ப்ளாகைப் பார்த்துத்
தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு வணக்கம்.
வீட்டில் பெரியவருக்கு உடல்நிலை ஸரியில்லாத
காரணத்தால் எனக்கு எழுதமுடியவில்லை.
நிலைமை ஸரியாகி தொடர்ந்து எழுத கடவுளைப்
ப்ரார்த்திக்கிறேன். அன்புடன் காமாட்சி சொல்லுகிறேன்.
கொழுக்கட்டை .
சிறிய அளவில் கொழுக்கட்டை தயாரிப்பதற்கு வேண்டியவைகளைப் பார்ப்போம்.
வேண்டியவைகள்
பூரணம் தயாரிக்க –தேங்காய்த்துருவல்–6டேபிள்ஸ்பூன்
வெல்லப்பொடி—–5 டேபிள்ஸ்பூன்.
ஏலக்காய்ப்பொடி—-சிறிது
மேல் மாவிற்கு—பச்சரிசி மாவு–அரைகப்
நல்லெண்ணெய்—-1 டீஸ்பூன்
உப்பு—-ஒரு சிட்டிகை .
செய்முறை
அரிசி மாவு களைந்து உலர்த்தி அரைத்த மாவானால் மிகவும்
நல்லது.
நான்ஸ்டிக் பேனில் தேங்காய்த் துருவலுடன் வெல்லப்
பொடியைச் சேர்த்து, துளி ஜலம் தெளித்து நிதான தீயில்
வைத்துக் கிளறவும்.
-கையில் ஒட்டாது சேர்ந்து வரும் போது இறக்கி ஏலப்பொடி
சேர்த்துக் கலக்கவும்.
அடிகனமான நான்ஸ்டிக் பேனில் ஒரு கப் தண்ணீரை
உப்பு, எண்ணெய் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
தீயைக் குறைத்து அரிசி மாவைச் சேர்த்துக் கிளறவும்
.பந்துபோல் மாவு வெந்து சேர்ந்து வரும்போது தீயை
அணைத்துவிட்டு, தட்டினால் மூடி வைக்கவும்.
மாவு சிறிது ஆறியதும் எடுத்து கையில் சிறிது எண்ணெயைத்
தடவிக் கொண்டு, தாம்பாளத்தில் நன்றாகத் தேய்த்துப்
பிசைந்து ஒரு ஈரத்துணியினில்சுற்றி மூடி வைக்கவும்.
மாவைச் சிறிய உருண்டைகளாகச் செய்து சிறிய சிறிய
கிண்ணங்கள் போல சொப்புகளாகச் செய்து , அதில்
சின்ன அளவுபூரணத்தை வைத்து மடக்கி , விளிம்புகளை
அழுத்தி மூடவும்.
கையில் எண்ணெய் தொட்டுக்கொண்டு சொப்புகளைச்
செய்யவும். உடனுக்குடன் பூரணத்தை வைத்து, வேண்டிய
ஷேப்புகளில் மூடவும்.
செய்த கொழுக்கட்டைகளை நல்ல நீராவியில் 6,7,
நிமிஷங்கள் ஸ்டீம் செய்து எடுக்கவும். இட்லி வேக வைக்கும்
முறைதான்.
கொழுக்கட்டைகள் தயார்.
நான் கடையில் வாங்கிய மாவில் செய்தேன்.
.கொழுக்கட்டைகள்.
பருப்புப் பாயஸம்
இது ஒரு சின்ன அளவில் நினைக்கும்போது வைக்கும் பாயஸம்
ஆடி வெள்ளிக் கிழமையன்று செய்தது.
இதன் குறிப்பையும் பார்க்கலாமா. நினைத்துக் கொண்டால்
நிவேதனத்திற்குச் செய்ய உபயோகமாக இருக்கும்.
வேண்டிய ஸாமான்கள்
கடலைப் பருப்பு—1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு—-1 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி—1 டேபிள்ஸ்பூன். இவை மூன்றையும் வெறும்
வாணலியில் நன்றாக வாஸனை வரும்படி சற்று சிவப்பாக
வறுத்துக் கொள்ளவும்.
சக்கரை— 5,அல்லது 6 டேபிள்ஸ்பூன். இனிப்புக்குத் தக்கபடி
பால்— 1 டம்ளர்
ஏலப்பொடி—-வாஸனைக்கு சிறிது
பாதாம் பருப்புத் தூள்–2 டீஸ்பூன்.
நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை–விருப்பத்திற்கு.
செய்முறை–
வறுத்த அரிசி, பருப்புக்களை நன்றாகத் தண்ணீர் விட்டுக்
களைந்து, திட்டமாகத் தண்ணீர் விட்டுப் ப்ரஷர் குக்கரில்
2 விஸில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.
பருப்பை லேசாக மசித்து சக்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு
பாதாம் தூளையும், பாலையும் சேர்க்கவும்.
ஓரிரண்டு கொதிவிட்டு இறக்கி முந்திரி திராட்சையைச்
.சேர்த்து ஏலப் பொடிபோட்டு கலக்கி உபயோகப் படுத்தவும்.
பாலிற்கு பதில் சிறிது தேங்காயை அறைத்தும் செய்யலாம்.
குங்குமப்பூ சேர்த்தால் கலரும் கூடும்.மணமும் கூடும்.
வெல்லம் சேர்த்து செய்வதுதான் அதிகம். வேண்டிய அளவு
இனிப்பு கூட்டவும்