Archive for ஓகஸ்ட் 8, 2011
பருப்புப் பாயஸம்
இது ஒரு சின்ன அளவில் நினைக்கும்போது வைக்கும் பாயஸம்
ஆடி வெள்ளிக் கிழமையன்று செய்தது.
இதன் குறிப்பையும் பார்க்கலாமா. நினைத்துக் கொண்டால்
நிவேதனத்திற்குச் செய்ய உபயோகமாக இருக்கும்.
வேண்டிய ஸாமான்கள்
கடலைப் பருப்பு—1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு—-1 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி—1 டேபிள்ஸ்பூன். இவை மூன்றையும் வெறும்
வாணலியில் நன்றாக வாஸனை வரும்படி சற்று சிவப்பாக
வறுத்துக் கொள்ளவும்.
சக்கரை— 5,அல்லது 6 டேபிள்ஸ்பூன். இனிப்புக்குத் தக்கபடி
பால்— 1 டம்ளர்
ஏலப்பொடி—-வாஸனைக்கு சிறிது
பாதாம் பருப்புத் தூள்–2 டீஸ்பூன்.
நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை–விருப்பத்திற்கு.
செய்முறை–
வறுத்த அரிசி, பருப்புக்களை நன்றாகத் தண்ணீர் விட்டுக்
களைந்து, திட்டமாகத் தண்ணீர் விட்டுப் ப்ரஷர் குக்கரில்
2 விஸில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.
பருப்பை லேசாக மசித்து சக்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு
பாதாம் தூளையும், பாலையும் சேர்க்கவும்.
ஓரிரண்டு கொதிவிட்டு இறக்கி முந்திரி திராட்சையைச்
.சேர்த்து ஏலப் பொடிபோட்டு கலக்கி உபயோகப் படுத்தவும்.
பாலிற்கு பதில் சிறிது தேங்காயை அறைத்தும் செய்யலாம்.
குங்குமப்பூ சேர்த்தால் கலரும் கூடும்.மணமும் கூடும்.
வெல்லம் சேர்த்து செய்வதுதான் அதிகம். வேண்டிய அளவு
இனிப்பு கூட்டவும்