கொழுக்கட்டை .
ஓகஸ்ட் 11, 2011 at 1:48 பிப 7 பின்னூட்டங்கள்
சிறிய அளவில் கொழுக்கட்டை தயாரிப்பதற்கு வேண்டியவைகளைப் பார்ப்போம்.
வேண்டியவைகள்
பூரணம் தயாரிக்க –தேங்காய்த்துருவல்–6டேபிள்ஸ்பூன்
வெல்லப்பொடி—–5 டேபிள்ஸ்பூன்.
ஏலக்காய்ப்பொடி—-சிறிது
மேல் மாவிற்கு—பச்சரிசி மாவு–அரைகப்
நல்லெண்ணெய்—-1 டீஸ்பூன்
உப்பு—-ஒரு சிட்டிகை .
செய்முறை
அரிசி மாவு களைந்து உலர்த்தி அரைத்த மாவானால் மிகவும்
நல்லது.
நான்ஸ்டிக் பேனில் தேங்காய்த் துருவலுடன் வெல்லப்
பொடியைச் சேர்த்து, துளி ஜலம் தெளித்து நிதான தீயில்
வைத்துக் கிளறவும்.
-கையில் ஒட்டாது சேர்ந்து வரும் போது இறக்கி ஏலப்பொடி
சேர்த்துக் கலக்கவும்.
அடிகனமான நான்ஸ்டிக் பேனில் ஒரு கப் தண்ணீரை
உப்பு, எண்ணெய் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
தீயைக் குறைத்து அரிசி மாவைச் சேர்த்துக் கிளறவும்
.பந்துபோல் மாவு வெந்து சேர்ந்து வரும்போது தீயை
அணைத்துவிட்டு, தட்டினால் மூடி வைக்கவும்.
மாவு சிறிது ஆறியதும் எடுத்து கையில் சிறிது எண்ணெயைத்
தடவிக் கொண்டு, தாம்பாளத்தில் நன்றாகத் தேய்த்துப்
பிசைந்து ஒரு ஈரத்துணியினில்சுற்றி மூடி வைக்கவும்.
மாவைச் சிறிய உருண்டைகளாகச் செய்து சிறிய சிறிய
கிண்ணங்கள் போல சொப்புகளாகச் செய்து , அதில்
சின்ன அளவுபூரணத்தை வைத்து மடக்கி , விளிம்புகளை
அழுத்தி மூடவும்.
கையில் எண்ணெய் தொட்டுக்கொண்டு சொப்புகளைச்
செய்யவும். உடனுக்குடன் பூரணத்தை வைத்து, வேண்டிய
ஷேப்புகளில் மூடவும்.
செய்த கொழுக்கட்டைகளை நல்ல நீராவியில் 6,7,
நிமிஷங்கள் ஸ்டீம் செய்து எடுக்கவும். இட்லி வேக வைக்கும்
முறைதான்.
கொழுக்கட்டைகள் தயார்.
நான் கடையில் வாங்கிய மாவில் செய்தேன்.
Entry filed under: இனிப்பு வகைகள்.
7 பின்னூட்டங்கள் Add your own
priyaram -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. Mahi | 8:54 பிப இல் ஓகஸ்ட் 11, 2011
சூப்பரா இருக்குமா! இந்த வெள்ளிக்கிழமை என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன், கொழுக்கட்டை செய்துடறேன். thanks for the idea! 🙂
2. chollukireen | 12:14 பிப இல் ஓகஸ்ட் 16, 2011
நிதானமான பதில்.பண்டிகை, பூஜை, கெஸ்ட் என இந்தபக்கம் வந்தாலும் டைப் செய்ய நேரமில்லை. எல்லாம் செய்தாயா. அன்புடன்
3. chitrasundar's blog | 5:55 முப இல் ஓகஸ்ட் 12, 2011
காமாட்சி அம்மா,
மீண்டும் ஒரு இனிப்பு! உடனுக்குடன் குறிப்புகளாக வந்து கொண்டிருக்கிறது.ஸந்தோஷம்.
நான் இந்தியாவிற்கு போய் கடந்த வெள்ளிக்கிழமை (Aug 5th ) USA வந்தேன்.இன்றுதான் என் ப்ளாக்கை தூசிதட்டி எடுத்து பதிவு போட்டுள்ளேன்.
4. chollukireen | 12:28 பிப இல் ஓகஸ்ட் 16, 2011
மீண்டும், மீண்டும் இனிப்பு. திகட்டாத சிறிய குறிப்புகள். ஆடிமாதத்திற்குப் பின் இவைகள் எல்லார் வீட்டிலும் செய்யப் படுவது இல்லையா. உடனே பதில் எழுதவில்லை. பொருட்படுத்த வேண்டாம். உன்னைக் காணோம் என்று எவ்வளவு கவனம் கொடுத்து எழுதினேன் பார்த்தாயா. தொடருவோம்.
5. priyaram | 7:28 முப இல் ஓகஸ்ட் 13, 2011
அம்மா, உங்களோட ப்ளாக் பக்கம் இன்று தான் முதல் முறை வருகிறேன். நேத்து எங்க வீட்டுல கூட வரலக்ஷ்மி நோம்பு -க்காக கொழுக்கட்டை செய்தோம். உங்க கொழுக்கட்டை பார்க்க அழகா இருக்கு…. மத்த குறிப்புக்களையும் படிக்கணும்….
உங்களுக்கு நேரம் இருந்தால் என்னோட ப்ளாக் பக்கமும் வந்து பாருங்க…..
6. chollukireen | 1:10 பிப இல் ஓகஸ்ட் 16, 2011
முதல் முறையாக வந்திருக்கும் உன்னை வா என்று வரவேற்கிறேனம்மா. உன்னுடைய ப்ளாகிற்கு பலமுறை வந்திருக்கிறேனம்மா.
நன்றாக எழுதுகிராய். ஸந்தோஷம். உன் வரவிற்கும் சேர்த்து. உன் ப்ளாகில் சொல்லுகிறேன் பெயரையும் போட்டிருந்தாய்.
நன்றி. தொடர்ந்து வந்து கொண்டிரு. அன்பும்
ஆசிகளும்.
7. Mahi | 4:55 பிப இல் ஓகஸ்ட் 16, 2011
/எல்லாம் செய்தாயா. /அம்மா,வெள்ளிக்கிழமை கொஞ்சம் வெளிவேலை இருந்ததால் விஸ்தாரமா செய்ய நேரமில்லை, சட்டுன்னு ஒரு ஜவ்வரிசி-சேமியா பாயசம் செய்துட்டேன். இந்த வெள்ளியும் பயணம்..நேரம் கிடைக்கையில் கட்டாயம் செய்துபார்த்து சொல்றேன்.
நன்றிம்மா!