Archive for ஒக்ரோபர் 25, 2011
கார மபின்.சோளம்.
மெல்லியதாக உடைத்த சோள ரவையில் செய்த இதைஎங்களுக்கு மிகவும்வேண்டியவர்கள்செய்துகொண்டுவந்திருந்தனர். மிகவும் ருசியாக இருந்ததால் செய் முறைகேட்டேன். மிகவும்அக்கறையாகஉங்களப்ளாகில்போடுங்கள்என்று
செய்முறைவிளக்கம்அளித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வேண்டியவைகள்
மெல்லியதான சோளரவை–1 கப்.polenta
மைதா—1 கப்
ருசிக்கு உப்பு
இவைகளைக் கலந்து கொள்ளவும்.
அடுத்து—எண்ணெய் –கால்கப்,
மோர் கடைந்தது–இரண்டே முக்கால் கப்
இவை இரண்டையும் மாவுடன் சேர்த்துக் கரைத்து
இட்டிலி மாவு பதத்தில் மாவைத் தயார் செய்து கொள்ளவும்.
மேலும் பதப்படுத்திய இனிப்பு சோள முத்துகள்—1 கப்
காப்ஸிகம் மெல்லியதாக நறுக்கிய துண்டுகள்–1 கப்
parmezan. பார்மிஜான் சீஸ்ப் பொடி–1 கப்
பச்சைமிளகாய்–2 சிறியதாக நறுக்கியது
இவைகளை மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.
செய்முறை—அவனைச் சூடாக்கவும்
கலக்கிய மாவை சிறிய மபின் கப்புகளில் விட்டு
ட்ரேயில் அடுக்கி வைத்து
90 டிகிரி உஷ்ணத்தில் அவனில் வைத்து 20 நிமிஷங்கள்
பேக் செய்து எடுக்கவும்.
அழகான கலரில் ருசியான கார மபின்கள் ரெடி.
ருசித்துப் பாருங்கள். நன்றி ஸ்டெல்லா.
தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்புமிக்க வலைப்பதிவு உலகத்தின் அனைவருக்கும், மற்றும் யாவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள். இனிமையாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். அன்புடன் சொல்கிறேன் காமாட்சி.வணக்கம்.