Archive for திசெம்பர் 6, 2011
பால்ப்போளி
கார்த்திகைப் பண்டிகை வருகிரதே ஏதாவது எழுதுவோம்
என்று தோன்றியது. ஸரி, பால்ப்போளி இன்று செய்து
ப்லாகிலும் போடலாமென்று நினைத்தேன். செய்து
முடித்து எழுதவும் ஆரம்பித்தாகி விட்டது.
நீங்களும் செய்து பாருங்களேன். வேண்டியஸாமான்களை
பார்ப்போமா.
வேண்டியவைகள்
மைதா–1கப்
மெல்லிய பேணிரவை—அரைகப்
பொரிப்பதற்கு வேண்டிய—எண்ணெய்
பால்—அரைலிட்டர்
சக்கரை—ஒன்றரைகப்
ஏலக்காய்–3
முந்திரிப் பருப்பு—10
பாதாம் பருப்பு—10
ஒரு சிட்டிகை—உப்பு
குங்குமப்பூ—துளி.
அரிசிமாவு—அரைகப். பூரி தோய்த்து இட
செய்முறை
பாதாம்,முந்திரி, பருப்புகளை ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில்
பின்னும் கொஞ்சநேரம் ஓடவிட்டு ஒரே முறையில்
பொடியாக பொடித்துக் கொள்ளவும்.
ரவையையும், முடிந்தவரை தனியாகப் பொடித்துக்
கொள்ளவும்.
மைதா, பொடித்த ரவை இரண்டையும் கலந்து துளி உப்பு
சேர்த்து, தண்ணீரைச் சிறிது சிறிதாக விட்டு கலவையை
கெட்டியாகப் பிசையவும்.
நன்றாகப் பிசைந்த மாவை மூடி வைத்து அரைமணி நேரம் ஊர
விடவும்.
பாலை நன்றாக சற்று சுண்டக் காய்ச்சவும்.
ஊறிய மாவை அழுத்தித் திரட்டி சிறு உருண்டைகளாகப்
பிறித்து உருட்டி வைத்துக் கொள்ளவும்.
உருண்டைகளை சப்பாத்திக் கல்லில் அரிசிமாவு தோய்த்து
வட்டமான பூரிகளாக இட்டு நடுநடுவே போர்க்கினால் குத்தி
வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மிதமான சூட்டில்
கரகர பதத்தில் பூரிகளைப் பொறித்தெடுக்கவும்.
அகண்ட வாணலியிலோ, நான்ஸ்டிக் பாத்திரத்திலோ
சக்கரையைப் போட்டு சிறிது ஜலம் விட்டு , சக்கரை
கரையும்படிக் கிளறி , அடுப்பில் வைத்து ஸிரப்பாகச் செய்து
கொள்ளவும்.
குங்குமப்பூகரைசல்,பொடித்தபொடி இவைகளைக் கலந்து
காய்ச்சிய பாலையும் விட்டு சக்கரை ஸிரப்பில் கலந்து 2,3
நிமிஷங்கள் கொதிக்க வைத்து தீயை அணைத்து விடவும்.
பூரிகளை ஒன்றிரண்டாக பால்க்கலவையில் ஊறவைத்து,
இரண்டொரு நிமிஷங்களில்மடித்தமாதிரிஅரைவட்டஷேப்பில்
தாம்பாளத்தில் எடுத்து வைக்கவும்.
இப்படியே எல்லாப் பூரிகளையும், ஒன்றன்பின் ஒன்றாக ஊற
வைத்து எடுத்து பிறித்து அடுக்கவும்.
பால்க் கலவை ஆறாமலிருக்க தீயை ஸிம்மில் வைத்தால்
சூடான பாலில் பூரிகள் சீக்கிரம் ஊறும்.
தட்டில் அடுக்கின பூரிகள்தான் போளிகள்.
பால்க் கலவையை அடுக்கின போளிகள் மீது சிறிது விட்டால்
நன்றாக ஊறும்.
உடனேயும் சாப்பிடலாம்.
இரண்டொரு மணி நேரம் கழித்து ப்ளேட்டில் போளியும்,
மிகுந்திருந்தால் பால்க் கலவையையும் சேர்த்துக்
கொடுக்கலாம்.
விருப்பமான எஸன்ஸுகளும் பாலில் கலக்கலாம்.
பூரி மெல்லியதாக இடுவதற்கு அரிசி மாவில் பிரட்டி இடுவது
சுலபமாக இருக்கும்.
அதிக இனிப்பு வேண்டுமானால் சக்கரை, பால் அதிகரிக்கவும்.
பால்ப் போளி ரெடி.
திட்டமான அளவில் 15, 16, க்கு மேலே வரும்.