Archive for ஜனவரி, 2012

டால்மஃக்னி. ராஜ்மா

ஸாதாரணமாக   முழு உளுந்தும்,  ராஜ்மாவும் சேர்த்து   செய்வது

டால்மஃக்னி.

இது  சின்னவகை,ராஜ்மாவும், மஃக்னியும்  சேர்த்துச் செய்தது.

இதுவும்  ருசியானதுதான்.  ரொட்டி     பூரியுடனும்,  சற்று  லூஸாகச்

செய்து   சாதத்துடனும்  சாப்பிட  நன்றாகவே   இருக்கிறது.

எனக்குத் தெறிந்ததை  நான் எழுதுகிறேன். நீங்களும் செய்து

பாருங்கள்.  அத்தோடு   கொஞ்சம் கருத்தையும் சொல்லுங்கள்.

இப்போது  வேண்டிய  ஸாமான்களைப் பார்ப்போமா?

வேண்டியவைகள்.

சிரியவகை  ராஜ்மா—-1 கப்

மஃக்னி—-அரைகப்

வெங்காயம்—2

தக்காளி—-1

பூண்டு இதழ்—-4

இஞ்சி—-சிறிய துண்டு.

வேண்டிய பொடிகள்

மிளகாய்ப் பொடி –அரைடீஸ்பூன். காரத்திற்கு வேண்டியபடி

மஞ்சள்ப்பொடி—அரை டீஸ்பூன்

தனியாப்பொடி–1 டீஸ்பூன்

சீரகப்பொடி—1 டீஸ்பூன்

எண்ணெய்—1டேபிள்ஸ்பூன்

வெண்ணெய்—1டேபிள்ஸ்பூன்

ருசிக்கு—உப்பு

பச்சைக் கொத்தமல்லி—வேண்டிய அளவு தூவ.

எந்த வகை மஸாலா வேண்டுமோ  அந்த மஸாலாப்பொடி சிறிது.

செய்முறை.

1  சிறியவகை   ராஜ்மாவைக்    களைந்து  அமிழ  ஜலம் விட்டு

முதல் நாள்  இரவே   பாத்திரத்தில் ஊர வைக்கவும்.

2இஞ்சி,பூண்டு , வெங்காயம், தக்காளி  இவைகளை மிக்ஸியில்

நைஸாக   ஜலம்விடாமல்  அரைத்துக்  கொள்ளவும்.

3ராஜ்மாவைக்   குக்கரில் ஜலம்வைத்து   நன்றாக வேகவைக்கவும்.

4 பாத்திரத்தில்   எண்ணெயைக்  காயவைத்து,  அரைத்த விழுதைக்-

-கொட்டிக்  கிளறவும்.  தீ நிதானமாக இருக்கட்டும்.

5  .விழுது  கெட்டியாகி   எண்ணெய்ப்  பிறிந்து வரும் போது பொடிகளைப்

போட்டுக் கிளறவும்.

6 . வெந்த தண்ணீருடன்   ராஜ்மாவைச் சேர்த்து ,   உப்பையும் போட்டு

நன்றாகக்   கொதிக்கவிட்டு  இரக்கவும்.

7 .வெண்ணெயைச்  சூடாக்கி  மஃக்னியை   லேசாக    வறுத்து

8 .கீழிறக்கின    ராஜ்மாக் கலவையில்  சேர்த்துக் கலக்கவும்.

பச்சைக் கொத்தமல்லியால்  அலங்கரிக்கவும்.

9 . க்ரீமும் சேர்க்கலாம்.

10 .ரொட்டி வகையராக்களுடனும்,   ஏன்  சாத வகைகளுடனும்

சேர்த்துச் சாப்பிட  ருசியாக  இருக்கும்.

ராஜ்மாவும் மஃக்னியும்

தயாரான டால் மஃக்னி ராஜ்மா

ஜனவரி 30, 2012 at 11:17 முப 13 பின்னூட்டங்கள்

பொங்கல் வாழ்த்துகள்

அன்புள்ள    எல்லா   ஸகோதர,  ஸகோதரி  பதிவர்களுக்கும்,   சொல்லுகிறேன்    ஆதரவாளர்களுக்கும்   ,   மற்றும்

எல்லோருக்கும்   என்   அன்பான   பொங்கல் வாழ்த்துகளை   இதன்மூலம்    தெறிவித்துக் கொள்கிறேன் .

பொங்கலோ பொங்கல்.  பொங்கும் மங்களம்   எங்கும்   தங்குக.     அன்புடன் சொல்லுகிறேன் காமாட்சி.

ஜனவரி 14, 2012 at 11:18 முப 4 பின்னூட்டங்கள்

கீரை வடை

இது   உளுத்தம்  பருப்பு  வடைதான்.    இந்த மருமகள்  செய்த மாதிரியைப்

படம் பிடித்தேன்.   ஸரி,  பொங்கல் வருகிறது.    அரைக்கும் மாவில் இது

மாதிரியும்  ஒரு நான்கு   செய்து       பார்க்கலாமே   நீங்களும்   என்று

தோன்றியது. ஷேப் முன்னே பின்னே   இருந்தாலும்   வடை ருசிதானே

முக்கியம்.   கரகரப்பாக   நன்றாகவே   இருந்தது  வடை.

வேண்டியவைகள்

உளுத்தம் பருப்பு-தோல் நீக்கிய  வெள்ளை உளுத்தம்பருப்பு-1கப்

முழு உளுந்து  ஆனால்   மிகவும்  நல்லது.   தோல் நீக்கியதைத்தான் .

பாலக் கீரை—-மெல்லியதாக    அலம்பி  நறுக்கியது  1 கப்பிற்கு அதிகம்.

பச்சையோ சிகப்போ   4  மிளகாய்கள்

துளி இஞ்சி

ருசிக்கு   உப்பு

வடை தட்டி எடுக்க வேண்டிய   எண்ணெய்

துளி  பெருங்காயப் பொடியும்.   சில  கறிவேப்பிலையும்.

செய்முறை

பருப்பை   ஊற வைத்து    வடிக்கட்டி   மிளகாய் சேர்த்து மிக்ஸியில்

கொரகொரப்பாக   அரைத்து எடுத்து  வைத்து   தயாராக   நறுக்கிய

பொடிப்பொடியான வடிக்கட்டிய  கீரை,   பெருங்காயப்பொடி,உப்பு,

கறிவேப்பிலையை   சேர்த்துக்     கலந்து   துளி   ஜலத்தைத் தெளித்து

காயும் எண்ணெயில்  வடைகளைப் போட்டு    கரகரவென்று

வேகவைத்துஎடுத்து  பச்சைப் பசேல்  என்று   வடை தயார்.

அரைத்த பருப்பு   கெட்டியாக   இருந்தால்தான்   ஜலம்

தெளிக்க வேண்டும்.  இஞ்சியைப் போட்டே அரைக்கலாம்.

பண்டிகை நாட்களில்   வெங்காயம் சேர்ப்பதில்லை.

அதையும் சேர்த்து   ஜமாய்க்கலாம்.

இளசான  எந்தக் கீரையையும்   போடலாம்.

கொரகொர பதத்தில் வடைமாவும், கீரையும்.

கீரை வடை

ஜனவரி 9, 2012 at 7:29 முப 4 பின்னூட்டங்கள்

2011 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2011 annual report for this blog.

Here’s an excerpt:

The concert hall at the Sydney Opera House holds 2,700 people. This blog was viewed about 38�000 times in 2011. If it were a concert at Sydney Opera House, it would take about 14 sold-out performances for that many people to see it.

Click here to see the complete report.

ஜனவரி 8, 2012 at 4:44 பிப 2 பின்னூட்டங்கள்

அவல்ப் பாயஸம்.

புது வருஷ  ஆரம்பத்தில்   ஏதாவது   பாயஸத்தோட  சமையல்

குறிப்புகளைத்      தொடருவோம் என்று  தோன்றியது.

நினைத்தால்  எழுதிடலாம். திடீரெனப்       பண்ணியதையே

எழுதலாமென  எழுதுகிறேன்.

டிஸம்பர்  8 ஆம் தேதி   காட்மாண்டு   stஜேவியர்ஸ்  காலேஜ்

பிரிஸ்பல் ,  ஃபாதர்   பாம்பே வருகிறார்.   அப்பாவைப் பார்க்க

நேராக     ஏர்போர்டிலிருந்து  வீட்டுக்கே  வருவார்   என    மத்யானம்

ஒரு மணிக்கு   பெறிய பிள்ளையின்   போன் வருகிரது.

4 மணிக்கு   அவர்   வருகிறார்.   நாட்டுப் பெண் ஊரிலில்லை.

சட்டுனு ஒரு சட்னியை அரைத்து,   உருளைக்கிழங்கு கறி செய்து

மஸால் தோசைக்கு ரெடி. ஸாம்பார் ஆல் ரெடியாயிருக்கு.

ஒரு பாயஸம்   அதான்  அவில்ப் பாயஸம் வைத்தேன்.

அவர்  ஒரு தமிழ்ப்     ஃபாதர் .ஃபாதர்  அந்தோனிஸாமி.

ரஸித்து சாப்பிட்டுவிட்டு   ,சொல்லுகிறேனைப் பாராட்டிவிட்டும்

போனார்.   எதற்கு சொல்கிறேனென்றால்    வயதானவர்களுக்கு

ப்ளான் சற்று  முதலில் போட்டால்   நிறையவே செய்யலாம்.

அதுஸரி. விஷயத்துக்கு  வருவோம்.

பாயஸத்துக்கு வேண்டியவைகள்.

ஒரு  பிடிச்ச பிடி   அவல்

ஒரு   2 கப் பால்

ஒரு துளி  நெய்

அரைகப்புக்கு சர்க்கரை

துளி   ஏலக்காய்ப்பொடி

வகைக்கு  5,6   முந்திரி   பாதாம்   அப்படியே மிக்ஸியில் பொடித்தது.

செய்முறை

பட்டும்  படாமலும்  நெய்விட்டுப்  பிசறி  அவலை   ஒரு நிமிஷம்

மைக்ரோவேவில்   அதன் பாத்திரத்தில் வைத்து எடுத்தேன்.

பாலைக் காய்ச்சி  எடுத்து    பாதியை எடுத்து  வைத்துவிட்டு

அதில்  அவலை மிதமான  தீயில் வேக வைத்தேன்.

பாதாம் முந்திரிப் பொடியைச் சேர்த்துக் கிளறி   சக்கரையைச்

சேர்த்து     சற்றுக் கிளறி   பாலைச் சேர்த்து   ஒரு   கொதி விட்டு

இறக்கி  ஏலப்பொடி சேர்த்தேன்.   அவ்வளவுதான்.

அப்படியே வாணலியோடு  ஒரு  போட்டோவும்.

அவசரக்காரியம் தானே?

வெண்ணெய் போட்ட தோசையும்.    அவல் பாயஸமும்

தமிழ்ப் பேச்சும்    ரொம்ப  நாளாச்சு.   வீட்டுக்கு போனால்தான்

கிடைக்கும் என்று  சொல்லிவிட்டுப் போனார்.  ஃபாதர் எனக்கு

நன்றி சொன்னார்.   அவருக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும்.

எனக்கும் ஞாபகம்  வந்தது.   எழுதினேன் அவ்வளவுதான்.

என் பெறிய  பிள்ளை   காட்மாண்டு   ஸென்ட் ஜேவியர்ஸ்ஸில்

தான் வேலை செய்கிறார்.

அவல்ப் பாயஸம் செய்த பாத்திரத்துடன்

ஜனவரி 5, 2012 at 12:01 பிப 6 பின்னூட்டங்கள்


ஜனவரி 2012
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 546,898 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.