Archive for ஜனவரி 5, 2012
அவல்ப் பாயஸம்.
புது வருஷ ஆரம்பத்தில் ஏதாவது பாயஸத்தோட சமையல்
குறிப்புகளைத் தொடருவோம் என்று தோன்றியது.
நினைத்தால் எழுதிடலாம். திடீரெனப் பண்ணியதையே
எழுதலாமென எழுதுகிறேன்.
டிஸம்பர் 8 ஆம் தேதி காட்மாண்டு stஜேவியர்ஸ் காலேஜ்
பிரிஸ்பல் , ஃபாதர் பாம்பே வருகிறார். அப்பாவைப் பார்க்க
நேராக ஏர்போர்டிலிருந்து வீட்டுக்கே வருவார் என மத்யானம்
ஒரு மணிக்கு பெறிய பிள்ளையின் போன் வருகிரது.
4 மணிக்கு அவர் வருகிறார். நாட்டுப் பெண் ஊரிலில்லை.
சட்டுனு ஒரு சட்னியை அரைத்து, உருளைக்கிழங்கு கறி செய்து
மஸால் தோசைக்கு ரெடி. ஸாம்பார் ஆல் ரெடியாயிருக்கு.
ஒரு பாயஸம் அதான் அவில்ப் பாயஸம் வைத்தேன்.
அவர் ஒரு தமிழ்ப் ஃபாதர் .ஃபாதர் அந்தோனிஸாமி.
ரஸித்து சாப்பிட்டுவிட்டு ,சொல்லுகிறேனைப் பாராட்டிவிட்டும்
போனார். எதற்கு சொல்கிறேனென்றால் வயதானவர்களுக்கு
ப்ளான் சற்று முதலில் போட்டால் நிறையவே செய்யலாம்.
அதுஸரி. விஷயத்துக்கு வருவோம்.
பாயஸத்துக்கு வேண்டியவைகள்.
ஒரு பிடிச்ச பிடி அவல்
ஒரு 2 கப் பால்
ஒரு துளி நெய்
அரைகப்புக்கு சர்க்கரை
துளி ஏலக்காய்ப்பொடி
வகைக்கு 5,6 முந்திரி பாதாம் அப்படியே மிக்ஸியில் பொடித்தது.
செய்முறை
பட்டும் படாமலும் நெய்விட்டுப் பிசறி அவலை ஒரு நிமிஷம்
மைக்ரோவேவில் அதன் பாத்திரத்தில் வைத்து எடுத்தேன்.
பாலைக் காய்ச்சி எடுத்து பாதியை எடுத்து வைத்துவிட்டு
அதில் அவலை மிதமான தீயில் வேக வைத்தேன்.
பாதாம் முந்திரிப் பொடியைச் சேர்த்துக் கிளறி சக்கரையைச்
சேர்த்து சற்றுக் கிளறி பாலைச் சேர்த்து ஒரு கொதி விட்டு
இறக்கி ஏலப்பொடி சேர்த்தேன். அவ்வளவுதான்.
அப்படியே வாணலியோடு ஒரு போட்டோவும்.
அவசரக்காரியம் தானே?
வெண்ணெய் போட்ட தோசையும். அவல் பாயஸமும்
தமிழ்ப் பேச்சும் ரொம்ப நாளாச்சு. வீட்டுக்கு போனால்தான்
கிடைக்கும் என்று சொல்லிவிட்டுப் போனார். ஃபாதர் எனக்கு
நன்றி சொன்னார். அவருக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும்.
எனக்கும் ஞாபகம் வந்தது. எழுதினேன் அவ்வளவுதான்.
என் பெறிய பிள்ளை காட்மாண்டு ஸென்ட் ஜேவியர்ஸ்ஸில்
தான் வேலை செய்கிறார்.