Archive for பிப்ரவரி 16, 2012
மாங்காய் இஞ்சி பிசறல்.
இந்த மாங்காய் இஞ்சி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னை
வந்த பிறகு மாங்காயிஞ்சியை ஸ்மரிக்காமல் இருக்க முடியுமா?
கேட்பதற்கு முன்னாடியே எனக்கு பிடிக்கும் என்ற முறையில் மாஇஞ்சியை
என் பெண் வாங்கி வந்து விட்டாள். ஸரி, எதையும் தேடிப் போகாமல்
இருப்பதைவைத்து ஒரு பதிவு போடலாம் என்று தோன்றியது.
ஸாதாரணமாக பொடியாக மாஇஞ்சியை நறுக்கி, உப்பு சேர்த்து,
எலுமிச்சை சாறு சேர்த்து , கடுகு தாளித்து, பச்சைமிளகாயையும்
துளி வதக்கிப் போட்டால் அதுவே மிக்க ருசியாக இருக்கும்.
எனக்கு எப்படி செய்தால் பிடிக்கும்,செய்தேன் என்பதையும்தான்
நீங்களும் படியுங்களேன். பிரமாதமொன்றுமில்லை. இருந்தாலும்
எழுதுகிறேன். படியுங்கள்.
வேண்டியவைகள்—–
நல்ல கேரட்—பெறியதாக ஒன்று
திட்டமான நீளம் கொண்ட மாங்காயிஞ்சி—4 துண்டுகள்
கேப்ஸிகம்—1 பச்சைநிறம்.
பச்சைமிளகாய் பாதியோ அல்லது ஒன்றோ
பூண்டு இதழ்—ஒன்று.பிடித்தவர்கள் உபயோகிக்கவும்.
வெங்காயம்—-1
உப்பு—ருசிக்கு
சர்க்கரை—ஒரு துளி
கடுகு, சீரகம்—மொத்தமாக அரை டீஸ்பூன்.
உளுத்தம் பருப்பு—-சிறிது
எண்ணெய்—-துளி. தாளிக்க
சின்ன எலுமிச்சம் பழம்—1
கொத்தமல்லித்தழை—மேலே தூவ
செய்முறை—இஞ்சி,கேரட்டைத் அலம்பித் தோல்
சீவிப் பொடியாக நறுக்கவு்ம்.
காப்ஸிகத்தையும் அதே அளவில் நறுக்கவும்.
ஒரு கரண்டியில் துளி எண்ணெயில் கடுகு,சீரகம் உ.பருப்பு,தாளித்து
பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சைமிளகாயை வதக்கி வைக்கவும்.
எலுமிச்சை சாற்றில்,,உப்பு, சர்க்கரை சேர்த்து நறுக்கிய துண்டங்களின்
கலவையில் சேர்த்துக் கலக்கவும்.
தாளிதத்தைச் சேர்த்து கொத்தமல்லி தூவவும். உரிகானோ இருந்தலும்
ஒரு துளி போடலம்.
வாய்க்கு ருசியானது. பார்க்கவும் அழகாக இருக்கு. சாப்பாட்டுடன்,
ருசிதான். வெங்காயத்தை பிடித்த முறையில் வதக்கியோ,
பச்சையாகவோ நறுக்கிச் சேர்க்கலாம்.
வினிகர் சேர்த்தும் செய்யலாம்.