பூண்டு கறிவேப்பிலைக்குழம்பு

ஓகஸ்ட் 26, 2012 at 7:37 முப 17 பின்னூட்டங்கள்

இது  5 நட்சத்திர ஹோட்டலில் செய்யும்    தமிழ் நாட்டுக் குழம்பு.

நானும் எழுதுகிறேன்.  நீங்களும் செய்யுங்கள்.ருசிப்போமா.

பூண்டு கறிவேப்பிலைக் குழம்பு

வேண்டியவைகள்.

பூண்டு—100 கிராம்.   தோலை  உரித்து   வைத்துக் கொள்ளவும்.

ஸாம்பார் வெங்காயம்–100 கிராம்

தக்காளி—2 அல்லது 3

கடுகு–அரை டீஸ்பூன்

வெந்தயம்—அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு–1– டீஸ்பூன்

கடலைப்பருப்பு—2   டீஸ்பூன்

பெருங்காயம்—சிறிது

நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்.

வற்றல்மிளகாய்—2    இவைகள்  எல்லாம்.தாளித்துக் கொட்டுவதற்கு.

வேண்டிய  பொடிகள்

தனி   மிளகாய்ப்பொடி—1 டீஸ்பூன்

தனியாப்பொடி—-4 டீஸ்பூன்

மஞ்சள் பொடி—1 டீஸ்பூன்

புளி—1 பெறிய   நெல்லிக்காயளவு.

ருசிக்கு   உப்பு

உருவின  பச்சை கறிவேப்பிலை–கால்க்கப்பிற்கு அதிகமாகவே

இருக்கலாம்

1     மேலே தூவ  சிறிது  கறிவேப்பிலை  பாக்கி வைத்து விட்டு சிறிது

எண்ணெயில்   கறிவேப்பிலையை  வறுத்து வைக்கவும்.

2      புளியைத்  தண்ணீரில்   ஊறவைக்கவும்.கறைத்து  சாரெடுக்கவும்.

3      சின்ன வெங்காயத்தை  உறித்து   ஒன்றிரண்டாக   மிக்ஸியில்

போட்டு   சுற்றி எடுக்கவும்.

4   தக்காளிப் பழத்தை   மிகச் சிறிய  துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளவும்.

5. குழம்புப் பாத்திரத்தை   காஸில் வைத்துச் சூடாக்கி எண்ணெயை விடவும்.

6  எண்ணெய்  காய்ந்ததும்  கடுகு  மிளகாயைப்  போட்டு, கடுகு வெடித்ததும்

பருப்புகள்   வெந்தயம் சேர்த்து   சிவக்க  வறுத்து,   வெங்காயம், பூண்டு

சேர்த்து  நன்றாக  வதக்கவும். பெருங்காயம்  சேர்க்கவும்.

7      தக்காளியைச்  சேர்த்து வதக்கி   மிளகாய்,தனியா,  மஞ்சள்பொடி

வகையைச்  சேர்த்துப்  பிரட்டி   புளி ஜலம்,  உப்பைச் சேர்த்து   நன்றாகக்

கொதிக்க விடவும்.

பூண்டு வெந்து ,  பொடி வாஸனைகள்  அடங்கி,   குழம்பு  திக்காக வரும்

பொழுது   கறிவேப்பிலை   பொடித்ததைச் சேர்க்கவும்.

குழம்பு   நீர்க்க  இருக்கும் போலிருந்தால்  ஒரு டீஸ்பூன் அரிசிமாவை

தண்ணீரில்க்  கரைத்து சேர்த்துக் கொதிக்க விட்டு  இறக்கவும்.

கமகமவென்று  குழம்பு  தயார்.மிகுந்த கறிவேப்பிலையைத்   தூவவும்

சாதத்துடன்  சாப்பிடவும், மற்றும்  வேண்டியவைகளுடன்  சாப்பிடவும்

ருசியான குழம்பு தயார்.

வேண்டுமானால்  துளி  வெல்லம்   போடலாம்.

ருசித்து பார்த்து  எழுதுங்கள்.

பூண்டு,வெங்காய ,தக்காளி,புளி.

முருங்கைக்காய்  வேறு  கூட இருக்கிறது. அதையும் போட்டு ருசிக்கலாம்.

Entry filed under: குழம்பு வகைகள்.

மாலாடு பழு பாகல் வதக்கல்

17 பின்னூட்டங்கள் Add your own

  • 1. chitrasundar5's avatar chitrasundar5  |  7:01 பிப இல் ஓகஸ்ட் 26, 2012

    காமாட்சிமா,

    “உருவின பச்சை கறிவேப்பிலை–கால்க்கப்பிற்கு அதிகமாகவே”_அதுதான் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஸ்டைல் பூண்டு கறிவேப்பிலைக்குழம்பு வாசனை இங்குவரை வருகிறது போலும்.குழம்பு சூப்பரா இருக்கு. அன்புடன் சித்ரா.

    மறுமொழி
    • 2. chollukireen's avatar chollukireen  |  6:34 முப இல் ஓகஸ்ட் 27, 2012

      நன்றி சித்ரா. பச்சை கறிவேப்பிலை பூண்டு இவை இரண்டும் ருசியோடுகூட ஆரோக்கியத்தையும் உடலுக்கு கொடுக்கும். பசியை உண்டாக்கும். சாப்பிடும்போதே இன்னும் கொஞ்சம் சாதம் சாப்பிட வைக்கும். வாஸனை பிடித்தாகி விட்டது.
      தானே சாப்பிடத் தோன்றும். அன்புடன்

      மறுமொழி
  • 3. திண்டுக்கல் தனபாலன்'s avatar திண்டுக்கல் தனபாலன்  |  12:50 முப இல் ஓகஸ்ட் 28, 2012

    நல்லா இருக்கே…
    விளக்கமாக கொடுத்துள்ளீர்கள்… மிக்க நன்றி…

    மறுமொழி
    • 4. chollukireen's avatar chollukireen  |  1:19 பிப இல் ஓகஸ்ட் 28, 2012

      தொடர்ந்து பாராட்டும் உங்களுக்குதான் நன்றிகளைச் சொல்ல வேண்டும். அன்புடன்

      மறுமொழி
  • 5. Mahi's avatar Mahi  |  4:23 முப இல் செப்ரெம்பர் 5, 2012

    கடைசி படம் அழகா இருக்குமா! சூப்பர் குழம்பு!

    மறுமொழி
  • 6. பிரபுவின்'s avatar பிரபுவின்  |  5:46 முப இல் செப்ரெம்பர் 5, 2012

    ஆரோக்கியமான சமையல்.நன்றி அம்மா.

    மறுமொழி
  • 7. darshini's avatar darshini  |  10:42 முப இல் செப்ரெம்பர் 12, 2012

    பாட்டிமா,
    நேற்று பூண்டு கருவேப்பில்லை குழம்பு செய்தேன் . நாங்கள் இரண்டு பேர் தான்
    வீட்டில் இருக்கிறோமே . மறு நாளைக்கும் வைத்து கொள்ளலாம் என்று நிறைய செய்தேன் .
    ஆனால் பாருங்கள் நேற்று இரவே காலி ஆகி விட்டது . நல்ல ருசி … என் தங்கை சொல்கிறாள் இனி அவர்கள் செய்துள்ள அனைத்தையும் ஆபீசில் பார்த்து மனம் செயஞ்சிடு வந்து சமைகனு 🙂 சமையல் தெரியாத நான் செய்ததே இவ்ளவு
    நன்றாக இருந்தால் நீங்கள் செய்தது எப்படி இருக்கும் என்று நெனைக்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது பாட்டிமா ..
    ஆனால் சாப்பிட தான் குடுப்பினை இல்லை…

    உங்கள் பேத்தி
    தர்ஷினி

    மறுமொழி
  • 8. darshini's avatar darshini  |  10:47 முப இல் செப்ரெம்பர் 12, 2012

    பாட்டிமா ,
    நாங்கள் அதிகம் காய் கறிகள் சேர்த்தி கொள்வது இல்லை …
    எங்களை போல் கம்ப்யூட்டர் துரெயில் இருக்கும் பெண்கள் ஆபீஸ் முடித்து போய்
    சமைப்பது என்பதே பெரிய வேலையாக உள்ளது .. சுலபமாகவும், கை கறிகள் சேர்த்து செய்ய கூடிய நல்ல துரித உணவு வைகளை எங்களை போன்றவர்கள் ஈஸ்ய செய்ய கூடிதையும் எழ்ளுதுங்கள் பாட்டிமா பிளஸ்

    மறுமொழி
    • 9. chollukireen's avatar chollukireen  |  11:53 முப இல் செப்ரெம்பர் 15, 2012

      தர்ஷினி உங்களிடம் என்ன வசதிகள் இருக்கு . அதைத் தெறிந்து கொண்டால் உனக்கு ஸ்பெஷலாகவே
      மெயிலில் அனுப்பலாம். முன்புகூட கேட்டிருந்தேன். அருமைப் பேத்திகளா ஞாபகத்தோடு பாட்டியை மறக்காமல் எழுதறிங்களே. என்ன ஸந்தோஷம் தெறியுமா? ஆசிகளுடன் அன்பும் சொல்லுகிறேன்

      மறுமொழி
  • 10. thooralauthor's avatar thooralauthor  |  2:09 பிப இல் செப்ரெம்பர் 19, 2012

    நன்று

    மறுமொழி
  • 11. chollukireen's avatar chollukireen  |  11:48 முப இல் ஓகஸ்ட் 23, 2021

    Reblogged this on சொல்லுகிறேன் and commented:

    மீள்பதிவு வரிசையில் இன்று 5 நக்ஷத்திர ஹோட்டல் குழம்பு வருகிறது. பிடித்தவர்களுக்கு கமகமதான். அன்படன்

    மறுமொழி
  • 12. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம்  |  11:53 முப இல் ஓகஸ்ட் 23, 2021

    ஆஹா…   சுவை நாக்கை எட்டுகிறது.  நான் இதில் தக்காளி போடாமல், தனியா பொடி தனியாய்ப் போடாமல் செய்வதுண்டு.

    மறுமொழி
    • 13. chollukireen's avatar chollukireen  |  11:57 முப இல் ஓகஸ்ட் 23, 2021

      என்ன பூண்டு குழம்பா என்று கேள்வி வரும் என்று நினைத்தேன்.போனால்ப் போகிறது நம்ம காமாட்சி அம்மா என்று பதிலில்லை. நன்றி அன்புடன்

      மறுமொழி
      • 14. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம்  |  1:50 பிப இல் ஓகஸ்ட் 23, 2021

        ஹா…  ஹா..  ஹா…   இன்று செய்தால்தானா?  நாளை அல்லது அப்புறம் செய்தால் போகிறது.  எங்கள் வீட்டின் ஃபேவரைட் குழம்பு இது!

      • 15. chollukireen's avatar chollukireen  |  11:50 முப இல் ஓகஸ்ட் 24, 2021

        மறு பதிவுகள். ஸம்பந்தம் இருப்பதில்லை. பிளாகை சற்று உயிர்ப்புடன் இருக்க இதுவே முடிகிறது. பிடித்தமான குழம்பாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. அன்புடன்

  • 16. Revathi Narasimhan's avatar Revathi Narasimhan  |  11:19 முப இல் ஓகஸ்ட் 24, 2021

    மிக அருமையான ரெசிப்பி காமாக்ஷி மா.

    கருவேப்பிலை,கொத்தமல்லி, சிறிது
    அரிசி வறுத்து அரைத்து சேர்ப்பதுண்டு.
    அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
    மிக நன்றி.

    மறுமொழி
    • 17. chollukireen's avatar chollukireen  |  11:55 முப இல் ஓகஸ்ட் 24, 2021

      வறுத்து அரைத்தால் ருசி இன்னும் ஜோராகவே இருக்கும். இது ஹோட்டல் குறிப்பு. அதில் பொடிபோட்டே செய்தது எழுதியிருந்தார்கள். உங்கள் குறிப்பிற்கும் மிக்க ஸந்தோஷமும் நன்றியும். அன்புடன்

      மறுமொழி

chitrasundar5 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஓகஸ்ட் 2012
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 557,013 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Durgakarthik's avatar
  • ranjani135's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • Unknown's avatar
  • yarlpavanan's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • பிரபுவின்'s avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • chitrasundar5's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.