Archive for ஒக்ரோபர், 2014
வாழ்த்துகள்
விசேஷமான தீபாவளி வாழ்த்துகள் யாவருக்கும்.
Continue Reading ஒக்ரோபர் 21, 2014 at 10:48 முப 16 பின்னூட்டங்கள்
மாலாடு
இந்த மாலாடுவும் 2012 இல் எழுதியதுதான். தீபாவளியையொட்டி இதுவும் ரி ப்ளாக் செய்துள்ளேன்.
ஸுலபமானது. எதையாவது எழுதிப் பழக்கம். இதையாவது போடுவோம் என்று இந்தப்பதிவு. யாருக்காகவாவது உபயோகப்பட்டால் போதும். ருசியுங்கள். வாழ்த்துகளுடனும்,
அன்புடனும் சொல்லுகிறேன்.
இதுவும் மிகவும் சுலபமாக நினைத்தால் செய்யக்கூடிய
லட்டு. வாயில் போட்டால் கரையக்கூடியதும், ருசியானது
மானது. நீங்களும் செய்து பாருங்கள்.
வேண்டியவைகள்—
பொட்டுக்கடலை—-ஒருகப்
சர்க்கரை—1 கப்
பாதாம்—– 8
முந்திரி—8
பிஸ்தா—8
ஏலக்காய்—3
நெய்—-2 கரண்டிகளுக்கு அதிகம்.
லாடுக்கான ஸாமான்கள். நெய் தவிர
செய்முறை
பொட்டுக்கடலை அதாவது தேங்காய் சட்னியில் கூட
வைத்து அரைப்போமே ஸாக்ஷாத் அதுவேதான்.
வாணலியிலோ, மைக்ரோவேவில் வைத்தோ பொட்டுக்
கடலையை சற்று சூடாக்கி மிக்ஸியில் நன்றாக அறைத்து
சலித்து எடுத்துக் கொள்ளவும். சில ஸமயம் பொட்டுக்கடலை
நமுத்துப் போயிருக்கலாம். அதற்காகவும்,வாஸனைக்காகவும்
சூடாக்க வேண்டும்.
பருப்பு வகைகளையும் லேசாக வறுத்து மிக்ஸியில்
நறநறப்பாகப் பொடிக்கவும்
உறித்த ஏலக்காயுடன் சர்க்கரையையும் நன்றாக மிக்ஸியில்
அறைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியின் சிறிய கன்டெய்னரில் அறைத்தால்
யாவையையும் நைஸாகப் பொடி செய்ய முடியும்
பொட்டுக் கடலைமாவுப்ளஸ் முந்திரி பாதாம்பொடி
அறைத்த சர்க்கரைப் பொடி
இப்போது பொடித்த எல்லாவற்றையும் ஒரு அகன்ற
தாம்பாளத்திலோ தட்டிலோ சேர்த்துக் கலக்கவும்.
இனிப்பு குறைவாக வேண்டியவர்கள் சர்க்கரைப் பொடியைக்
குறைக்கவும்.
முந்திரி, பாதாம் வகைகளை ஸவுகரியம் போல சேர்க்கவும்.
எல்லாமே அவசியம் என்று நினைக்க வேண்டாம்.
வாணலியில் பாதியளவு நெய்யை விட்டு மிதமான தீயில்
நன்றாகச் சூடாக்கவும்.
தாம்பாளத்தில் கலவையை பாதியாக பிரித்துக் கொள்ளவும்.
பாதிக் கலவையில் நன்றாகக் காய்ச்சிய நெய்யைவிட்டு
அகலமான கரண்டியினால் நன்றாகக் கலக்கவும்.
நெய்யின் சூட்டில் சர்க்கரை இளகி உருண்டை…
View original post 82 more words
புத்துருக்குநெய் மைசூர் பாகு
நான்கு வருஷத்திற்கு முன் எழுதியது இது. கடலைமாவை சற்று வருத்தாலே போதும். தீீபாவளிக்காகப் புதியதாக ஒன்று எழுதாவிட்டாலும் ரீ/ப்ளாகாகிலும் செய்வோமென்று தோன்றியது. செய்து ருசியுங்கள். கமகமவென்று வாஸனையுடன் ருசியுங்கள். அன்புடன் சொல்லுகிறேன்.
வெண்ணெய் புதியதாகக் காய்ச்சி அந்த நெய்யில் மைசூர்பாகு
தயாரித்தால் அந்த ருசியே அலாதிதான்
அம்மாதிரி செய்யும் முறையைப் பார்ப்போமா?
வேண்டியவைகள்.
கால் கிலோ உப்பு சேர்க்காத வெண்ணெயை நெய்யாகக் காய்ச்சினால்
ஒரு கப்பிற்கு அதிகமாகவே நல்ல நெய் கிடைக்கும். அதில் ஒருகப்
நெய்யை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும்.
அரைகப் கடலை மாவை முன்னதாகவே ஒரு ஸ்பூன் நெய் கலந்து
மைக்ரோ வேவில் ஒவ்வொரு நிமிஷமாக கிளறிவிட்டு 2, 3, நிமிஷம்
வைத்தெடுக்கவும்.
அல்லது வாணலியிலிட்டு லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான அகலமான பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரையைப்
போட்டு சர்க்கரை அமிழ ஜலம் விட்டு நிதான தீயில் நன்றாகக்
கிளறவும்.
கூடவே மற்றொரு பாத்திரத்தில் நெய்யைச் சூடாக்கிக்
கொண்டே இருக்கவும்.
சர்க்கரை கரைந்து கொதித்து ஒரு கம்பிப் பாகு பதம் வரும் போது
மாவைச் சிறிது, சிறிதாகத் தூவிக் கிளறவும்.
நல்ல சூடான நெய்யையும் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.
தீ மிதமானதாக இருக்க வேண்டும். கை விடாது அடிபிடிக்காது
கிளறவும்.
நெய் விடவிட கலவை நெய்யுடன் சேர்ந்து கொதித்து இறுகி
பாத்திரத்தை விட்டு விலகி நுறைத்து மேலே வர ஆரம்பிக்கும்
நன்றாகக் கிளறி , தயாராக வைத்திருக்கும் நெய் தடவிய
தட்டு அல்லது ட்ரேயில் கலவையைக் கொட்டி , தட்டை
இரண்டு கையினால் பிடித்து சமனாக பரவும்படி அசைக்கவும்.
View original post 32 more words
வாழ்த்துகள்
ஸரஸ்வதிபூஜை,விஜயதசமிக்கான வாழ்த்துகள்
Continue Reading ஒக்ரோபர் 1, 2014 at 3:19 பிப 8 பின்னூட்டங்கள்