Archive for மார்ச் 10, 2016
காரடையான் நோன்பு.
இவ்வருஷத்திய பூஜை காரடையான்நோன்பு மார்ச் பதினான்காம்தேதி திங்கட்கிழமை காலை பத்து மணி முதல் பத்து மணி ஐம்பது நிமிஷத்திற்குள் செய்யலாம் என்று வாத்தியார் சொல்லி சரடு கொடுத்துவிட்டுப் போனார். யாவரும் பூஜையை பக்தி சிரத்தையுடன் அனுஸரித்து, வேண்டும் வரங்களைப் பெறவேண்டும். உங்கள் யாவருக்கும் மஞ்சள்,குங்குமம்,தாம்பூலத்துடன் என்னுடைய அன்பான நல் ஆசிகளையும் சொல்லுகிறேன். அன்புடன்
பூஜைக்குச் செய்யும் முக்கியமான நிவேதனப் பொருளின் பெயரைக்
கொண்டே இந்தப்பூஜையை,அதாவது நோன்பைச் செய்கிறோம்.
இதற்காகத் தொன்று தொட்டு ஒரு கதையும் உண்டு.
ஸாவித்ரி அவள் கணவர் ஸத்யவானின் உயிரை மீட்டு வந்து
நன்றிக்காக இவ்விரதத்தை அநுஷ்டித்ததாகச் சொல்லுவார்கள்.
அசுவபதி என்கிற அரசனுக்கு நெடுநாட்கள் குழந்தைப்பேரின்றி, தவமிருந்து
பெற்ற பெண் ஸாவித்ரி.
மிக்க அருமையான குணம் நிறைந்த,தெய்வ பக்தியுள்ள,, ஒரு பெண்.
அரசர் ஒருஸமயம் நாரதரைப் பார்க்கும் பொழுது இவ்வளவு உத்தம் சீலமான
பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று வினவினார்.
நாரதரும் அவள் ஒரு உத்தமமான தாய்தந்தையரிடம் பக்தி கொண்டு
அவர்களை ரட்சிக்கும் ஒரு நல்லவனை மணப்பாள் என்றாராம்.
ஆனால் அவனுக்கு ஆயுள் குறைவு என்றும் சொல்லி வைத்தார்.
வழக்கம்போல ஒருமுறை தோழிகளுடன் ஸாவித்ரி வனத்திற்குச் சென்ற
போது அவ்விடம் ஸத்யவானைச் ஸந்திக்கிறாள்.
ஸத்யவானையே மனதில் வரித்து விடுகிறாள்
ஸத்யவானின் தந்தை பகையரசர்களால் நாடு கடத்தப்பட்டு
வனத்தில் வசிக்கும், கண்தெரியாத அரசர். மனைவிக்கும் கண்தெரியாது.
அவர்களைப் புதல்வன் ஸத்யவான் காப்பாற்றி வருகிரார்.
காட்டில் விரகு வெட்டி, அதை நாட்டில் விற்று அந்தத் தொகையில்
காட்டில் குடிசை அமைத்து அதில் வாழ்ந்து வருகிரார்கள்.
ஸத்யவானைச் சந்தித்த விஷயம் சொல்லி அவளின் விருப்பத்தைச்
சொல்லுகிறாள் தந்தையிடம்.
அவருக்கு ஆயுள் குறைவு, என்று சொல்லியும் ,ஸாவித்ரியின் விருப்பப்படி
ஸத்யவானுடன் மணமுடித்து வைக்கிரார்.
ஸாவித்ரியும் மாமனார்,மாமியாருக்குச் சேவை செய்து கணவருடன்
உத்தமமான வாழ்வை நடத்தினாள்.
View original post 328 more words