Archive for ஓகஸ்ட் 19, 2016

தொட்டில் 12

தொட்டில் 12

வீட்டுக்குள்ள நுழைந்தப்புறம் எல்லாம் நமக்குத் தெரிந்தது ஓர்ப்படிக்கும் தெரியும். புதுசா சொல்ல என்ன இருக்கு? நீலாவையே போய்ப்பார்த்து மீதி ஸமாசாரங்களையும் கேட்டு எதை, எப்படிச் சொல்லலாம் என்று அவளையே யோசித்துச் சொல்லச் சொல்லணும்.

என்ன பாட்டி நீவேறெ எனக்குப் மாப்பிள்ளை பார்க்கிறயா என்று கேட்டு விடும்அந்தப் பெண்.
நீலாவாத்து சாப்பாடெல்லாம் ஆகட்டும். யோசனை முடிந்து ஈரப்புடவையை ஓர்ப்படியிடம் கொண்டு கொடுத்து விட்டு மத்தியானமா வரேன். நீலா என்னவோ சொன்னா. ஸரியா கேட்டுண்டு வரேன். நீயும் தினம் கேக்கரே மன்னி.
ஸரி ஏதாவது நல்லதா வரணும்.

என்ன ஒரு வத்தக் குழம்பும்,சுட்டஅப்ளாமும். இரண்டுநாளா தோசை ராத்தரியில். மாவு புளிச்சு வழியறது. ஊறுகாமிளகாயும்,கடுகு பெருங்காயம் தாளிச்சுக்கொட்டி வாணலியில் இரட்டை விளிம்பு தோசையாக இராத்திரி இரண்டு வார்த்தால் மாவும் காலியாகும். எண்ணெய் நிறைய விட்டு வார்த்தால் தானே ருசி கொடுத்துவிடும்.
இரவு ஆகாரத்தையும் கற்பனையில் செய்தாகிவிட்டது.

ifஊரில் அக்ரஹாரம்
நன்றி கூகல். படம் ஒரு மாதிரிக்கு.

பானுவின் புக்ககம் ஒரு கூட்டுக் குடும்பமாக இருந்தது ஒரு காலத்தில். அவள் மாமனார் இராமாயணம்,பாரதம், பாகவதம் என்று கதை வாசிப்பவர். மனைவி இல்லை. பிள்ளைகள் மூன்று பேர்.

அக்கால முறைப்படி காலாகாலத்தில் பிள்ளகளுக்குக் கல்யாணமாகி ஒரே கூட்டுக் குடும்பம். கடைசி பிள்ளைக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மற்றவர்களுக்கு ஸந்தானம் ஏற்படவில்லை. நாகப்பிரதிஷ்டை,ராமேசுவரம்போய் திலஹோமம், சாந்திகள் எல்லாம் காலா காலத்திலேயே செய்து விட்டனர். அந்தகாலத்து அரசப்ரதக்ஷிணம் என்று எல்லாம் வரிசைக்கிரமாக நடந்தது.
மனதில் அசைபோட்டுக்கொண்டு நீலாவாத்திற்குப் போனால் அவளும் மிகுதியைக் கூட சேர்த்து அசைபோட்டாள்.

முன்னாள் கதைகளென்றால் மருத்துவ வசதி குறைவு,அகால மரணம் இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை . இவைகளைப் படிப்பவர்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். சின்ன நாட்டுப்பெண் திடீரேன்ற ஜுரத்தில் போய்விட்டாள்.

ஜெயா எல்லோருக்கும் அருமைப் பெண் ஆகிவிட்டாள். பெற்றவன் மறு கல்யாணம் வேண்டாமென்ற விரக்தி.
என்பெண்,உன் பெண் என்று போட்டா போட்டியில் ஓரகத்திகளுக்குள் சண்டை.
நமக்கென்று ஏதாவது செய்து கொள்ள வேண்டுமே தவிர இவளுடன் இருக்க முடியாது என்று பெரியவள் தனிக்குடும்பம் போய்விட்டாள்.

பெரியவர் அதான் குடும்பத்தலைவர் பேத்திக்கும் பங்கு கொடுத்து பத்திரம் எழுதிவிட்டுப் போய்ச் சேர்ந்து விட்டார். சொத்து விஷயமாக கோர்ட் கேஸ் என்று அண்ணந்தம்பிக்குள் மனஸ்தாபம்.

பெண் குழந்தை நடு பிள்ளையின் பராமரிப்பில் இருந்து ஒட்டுதலும் ஏற்பட்டு விட்டது. விவரமறிந்த வயதாகவும் ஆகிவிட்டது. பெண் குழந்தைக்கு பராமரிப்பில் பெண் துணையும் அவசியம். ஸமாதானமாகப் போங்கள் உரிமை  உங்களுக்குத்தான். என்று ஜட்ஜ் தீர்ப்பு கூறிவிட்டார்.

பிரிந்து வாழ்ந்தாகி விட்டது.  பெண்ணையும் ஒட்டவிடவில்லை. அவர்களுடன் சேர்ந்து இருக்கவும்  முடியவில்லை.  தனக்கென்று எதுவும்  ஒரு பைஸா கூட வைக்கவும் முடியவில்லை.

இது யார்,யார் யாருக்கு என்னென்ன தூண்டி விடுவார்களோ? எப்படி இக்குடும்பம் இம்மாதிரி ஆகியதோ? எல்லாம் புதிராக இருந்தது.   இதெல்லாம் அறிந்த விஷயம். இப்போதைய நிலவரம் என்ன அதைச்சொல்லு. அதுதானே முக்கியம்.

அவனுடைய சித்திதான் கூப்பிட்டிருந்தாள் போயிருந்தேன்.   அவனைக் கல்யாணம் செஞ்சுக்கோ. என்ன வயஸாயிடுத்து உனக்கு நாப்பது இருக்கும். இப்படி தனியாக அலைகிராயே! உன் பெண்ணிற்கும்  அவர்கள் வரன் பார்த்திருக்கிரார்கள். உன்னிடம் சொல்லவில்லை.
எனக்கு  எதற்கு கல்யாணம் என்று   திட்டுவார்கள் என்றான்.  போக்கு வரத்தே இல்லை. பெரியவளும் ஏதோ தூர உறவில் ஸ்வீகாரத்திற்கு ஏற்பாடாம்.

நான் சொன்னேன் உனக்குன்னு குடும்பம் வேணும். வேலையில் இருக்கே. ஸம்பாதிக்கிறே! அவனுக்கும் மனதில் தோன்ற ஆரம்பித்து இருக்கு. நான் பார்க்கிறேன் என்றேன். ஹூம் கொட்டி இருக்கிறான்.
பொருப்பான பொண்ணா இருந்தா போரும். ஒண்ணும் பண்ண வேண்டாம். மீதியை நான் பாத்துக்கறேன் என்றேன்.

சித்தியும் வயதானவள்தான். ஸ்டேட்மென்ட் கொடுக்க ஒரு ஆஸாமி, வேண்டுமே. யாரையும் கூப்பிடவேண்டாம். அவன் அண்ணாமார்களுக்கு ஒரு மரியாதையாக சொன்னால் போதும் என்ற அளவிற்கு சொல்லி வைத்திருக்கேன். என்றார்.

நீங்க ஊருக்கு போவதற்கு முன் உங்க மன்னியைக் கேட்டு விவரம் சொல்லுங்கள். நானும் போய்ச் சொல்றேன். அந்தப் பெண்ணிற்கும் நான் போய் ஸம்மதமா என்று கேட்கிறேன்.
அவன் ஒன்றும் ஊருக்குப் புதியவனில்லை. எல்லாருமே தூரத்து உறவாகத்தான் இருக்கும். ஸரி நான் போய் விசாரிக்கிறேன்.
மாமி தேங்காத் துகையல் அரைச்சேன் நிறைய இருக்கு . கொஞ்சம் எடுத்துண்டு போங்கோ. சின்ன கிண்ணத்தில் துண்டு இலையைப் போட்டு மூடித் துகையல் தூது போகிறது.

மன்னிக்கு ஸமாசாரம் அஞ்ஜலாகிறது. மாப்பிள்ளை ,பெண்ணை வரச்சொல்லி ஆளனுப்புகிராள். அவர்களும் வந்தார்கள்.
நீலா பெண்ணோடு பேசி மனதை ஆராய்கிராள். பளிச்சென்று சொல்லாவிட்டாலும் இந்த அடைந்து கிடக்கும் தளையிலிருந்து, வெளியே போனால் போதும் என்ற மனநிலை பளிச்சிட்டது. ஆனாலும் அங்கும் உறவுகள் தொல்லை கொடுக்காமல் இருப்பார்களா என்பதை உறுதிப்படுத்திச் சொல்லுங்கள் என்ற வார்த்தையே பதிலாக வந்தது. பெண் ,பிள்ளை பார்க்க என்ற ஸம்பிரதாயத்திற்கு அவசியமில்லை. எல்லோரும் தெரிந்தவர்களே!

இக்காலத்தில் பெண்கள் பிள்ளைக்கு லக்கேஜ் இருக்கா என்று விஜாரிக்கிறார்களாம். அதாவது அப்பா,அம்மா கூட இருப்பார்களா என்பதற்கு. அக்காலத்திலும் இந்தச் சுவடுகள் ஆங்காங்கே இருந்திருக்கிறது.

ஏராளமான வாக்கு வாதங்களிடையே அப்பாவின் எக்கேடு கெட்டுப்போங்கோ என்ற கோபமான ஸிக்னல்.
அப்புறம் என்ன ஆச்சு?
பெண்ணுக்கு கல்யாணம் பேச்சு ஆரம்பித்ததிலிருந்து புருஷனுடைய ஏச்சும்,பேச்சும் மனஸு வெறுத்தே போச்சு அம்மாவுக்கு. தான் சொன்ன பிள்ளையையே கொண்டு வந்து பலவந்தமாகத் தாலி கட்டவைக்கிறேன் என்ற புருஷனின் ஸவால் வெளியே சொல்ல முடியாமல் பயமுறுத்தியது.
இங்கேயும் ஒற்றுமை இல்லை. வாயளவில் கல்யாணம் நிச்சயித்தாயிற்று. வெளியில் எங்கும் சொல்லவில்லை. மிக்க வேண்டியவர்களுக்குதான் தெரியும்.
மன்னி விசாரப்படாதே. கல்யாணிக்கு எல்லாம் ஸரியா நடக்கும். தொடரும்.

ஓகஸ்ட் 19, 2016 at 10:20 முப 20 பின்னூட்டங்கள்


ஓகஸ்ட் 2016
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 546,898 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.