Archive for ஜூலை, 2016

அதிசயக் குழந்தை

மும்பை மஹிம் ஏரியாவைச் சேர்ந்த செருப்புத் தைக்கும் தொழிலைச் செய்து வரும் ஒரு தொழிலாளியின் மனைவியை செவ்வாய்க் கிழமையன்று மூன்றாவது பிரஸவத்திற்காக ஸையான் ஆஸ்ப்பத்திரியில் சேர்த்தனர். ஏற்கெனவே அப்பெண்ணிற்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். வயது அவருக்கு 26. பிறந்தது என்னவோ ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள். அதுவும் ஆண் குழந்தை.

ஒட்டிப் பிறந்த குழந்தைகள்

வலி எடுத்ததும் மருத்துவர்கள் பிரஸவம் பார்த்தும் அவருக்கு ஸுகமான பிரஸவம் ஆகவில்லை. இதனால் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரஸவம் பார்த்து குழந்தையை வெளியே எடுத்தனர். வியாழக்கிழமையன்று.
பிரஸவம் பார்த்தவர்களுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும். குழந்தைக்கு இரண்டு தலைகள்,இரண்டுகால்கள்,இரண்டு கைகள், வயிற்றில் தொப்புள் கொடிகள் இரண்டு..
மூன்று கைகள் என்று சில பத்திரிக்கை எழுதினது.
பிறந்ததும் இரண்டு வாய்களாலும், காலை அசைத்து குழந்தைகள் வீறிட்டு அழுதது.இரண்டு குழந்தைகளும் மார்புப் புறத்திலிருந்து இடுப்புவரை ஒட்டிப் பிறந்திருந்தது. டாக்டர்களுக்கு ஒரே வியப்பு. அந்தக்குழந்தை உடல் நலத்துடன் இருக்கிறது.
குழந்தைகளை ஸி.டி ஸ்கேன், ,ஈ.ஸி.ஜி என பலவித டெஸ்டுகளும் செய்து பார்த்ததில் அவர்களைப் பிரிக்கலாம். அதுவரை அந்த இரட்டையர்கள் ஒரு ஹ்ருதயத்திலேயே ஸ்வாஸிக்க வேண்டும். ஏன் என்றால் இருவருக்குமாக இருப்பது இரண்டுகால்கள்,இரண்டு கைகள், ஒரு கிட்னி, ஒரு லிவர், இரண்டு intestines, ஒரு ஆண்குறி, ஒரு ஹார்ட் இரண்டு aortas.

இரண்டு குழந்தைகளுக்கும் மூச்சு விடுவதில் சிரமமிருந்தாலும் நல்லபடியாகவே உள்ளது. இரண்டின் எடையும் சேர்த்து மூன்றறை கிலோ உள்ளது.
பிரித்தெடுக்கும் வகையில் ஒரு குழந்தைதான் உயிரோடிருக்க முடியும். அதுவும் உறுதி செய்வது கடினம் என்பது டாக்டர்களின் அபிப்ராயம்.

முதலிலேயே தொடர்பு கொண்டிருந்தால் கர்பத்தை கலைத்திருக்க முடியும். நல்ல தேர்ந்த டாக்டர்களின் மேற்பார்வையில்தான் யாவும் கவனிக்கப்பட்டு வருகிறது.
யாவும் நல்லபடியாக முடியவேண்டும் என்று அந்த முகம் அறிந்திராத பெண்ணிற்காக நாம் கடவுளைப் பிரார்த்திப்போம்.
செய்தி மும்பைமிரர்,தினத்தந்தியின் வாயிலாக . நன்றி இரண்டு பத்திரிக்கைகளுக்கும்.

ஜூலை 29, 2016 at 2:04 பிப 6 பின்னூட்டங்கள்

தொட்டில்—10

தொட்டில்காலங்கள்  வேகமாக இல்லாவிட்டாலும் அதன்   போக்கில் சுழன்றுகொண்டுதானிருந்தது.

வயதாகிவிட்டது. யாருக்காக இன்னும் ஸொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்  யாருக்கும் ஏற்படுவதில்லை.  நான் என்ன எனக்காகவா சேர்க்கிறேன்  உங்கள் எல்லோருக்கும்தானே என்ற சொல்தான் யாவரின் தாரக மந்திரமாகவும் இருந்தது.

மெள்ள மெள்ள   நம் பையனில் ஒருவனை ஸ்வீகாரம் கொடுக்க நான் முடிவு  பண்ணி விட்டேன்.   இதில் யாரும் ஆக்ஷேபணை சொல்ல நான் அனுமதிக்க மாட்டேன்.என்ற பாணியில் போர்க்கொடி உயரலாயிற்று.
நஞ்சைநிலம்

நான் ஸம்மதிக்கவே மாட்டேன்.  நான் பெற்ற பிள்ளைகள் எனக்குதான்.  அவர்கள் முன்னுக்கு வந்திருக்கிரார்கள். இருப்பது போதும்.நான் ஸம்மதிக்கமாட்டேன்.   பதில் பேசியாயிற்று.

போ. இந்த வீட்டை விட்டு. எங்கு வேண்டுமானாலும்போ. என் பேச்சு கேளாது பதில் சொல்ல உனக்கு என்ன தைரியம்.  பேச்சு வலுத்து,  அடி அமக்களத்துடன் வெளியே மனைவியைத் தள்ளும்படியான நிலைக்கு உச்ச கட்டங்கள் நடைபெற ஆரம்பித்து விட்டது.

வீட்டைவிட்டுப் போகும் வயதா?  ஆக்கினைகளுக்குக் கட்டுப்பட்டே காலம் கடத்தியவள். ஊர் சிரிக்கும். நாலுபேர்  இரண்டு பேருக்கும் நீ சொல்வதுதான்ஸரி என்பார்கள்.   மூன்று தலைமுறைகளை சபித்துக் கொண்டு ஒரு புருஷன்.  அழலாம் மனதோடு மருகலாம்.

அம்மா படும்பாட்டைப்பார்த்து பிள்ளை எங்காவது சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டால். அவனுக்கும் இஷ்டமில்லை. இரண்டாம் கெட்டான் வயது.

பிள்ளையை என்ன காக்காயா தூக்கிக் கொண்டு போய்விடும்?    அவன் என்ன அவர்கள் வீட்டிற்கா போகப் போகிரான்?    வாயடைப்பு.நிர்பந்தம். மௌனம்.

இன்னும் எட்டு நாட்கள் இருக்கு. நாள் பார்த்தாகி விட்டது. ஸ்வீகாரம்,பூணூல் இரண்டும் ஒரே நாளில். யாரும் மூச்சு பேச்சு காட்டக்கூடாது.

அவர்களிடமும் நான் எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். இரண்டு நாள் முன்னால்   யாருக்குச் சொல்லணுமோ சொல்லிக் கொள்ளலாம்.

அசட்டு அக்காவிற்கு  சற்று யோசனை வலுத்தது.ஐயோ நமக்கு ஸரிப்படுமா.

எல்லாம் ஸரியாகிவிடும். நமக்கு சாப்பாடே அவர்கள் வீட்டிலிருந்து அனுப்புவதாகச் சொல்லி விட்டார்.  இதைவிட நமக்கு என்ன வேண்டும்.?

நான் ஸரி சொன்னதால்தான் இந்த ஏற்பாடு. எனக்கும் உடம்பு நன்றாக இல்லை. அதைப் புரிந்துகொள்.
நான் அசடு. எது சொன்னாலும்ஸரி.

ஊரே அதிசயித்தது. இது என்ன காதும்,காதும் வைத்தாற்போல ஸ்வீகாரமாம்,பூணூலாம். அதிகம் யாரையும் கூப்படவில்லை. தங்கையே உறவு இல்லை. மற்றவாளைப் பற்றி என்ன?
பத்திரம் பெற்ற பிள்ளைக்குண்டான எல்லா அதிகாரமும் ஸ்வீகாரப்பிள்ளைக்கு. ஸொத்தை விற்பதானால்கூட பிள்ளயின் அனுமதி வேண்டும்.
ஸொரத்தா ஒன்றும் இல்லை. யாருடனும் யாரும் அதிகம் பேசவில்லை. அம்மாக்காரி அழுத மூஞ்சியுடன்தானிருந்தாள். போய் வந்தவர்களின் குசுகுசுப்பான பேச்சு. ஆக ஸ்வீகாரம் ஆயிற்று. கதை இத்துடன் முடியவில்லை.

பிள்ளை வீட்டுக்கு வரவில்லை. அவர்கள் வீட்டிற்கு இவர்கள் பண்டிகை பருவங்களுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டும் வந்தனர். இப்படியே காலம் போகும்போதே ஸ்வீகாரத் தகப்பனாரும் போய்ச் சேர்ந்தார். பையன் பெரியவனாகி வெளியூருக்கு வேலைக்கும் போய் விட்டான்

இனிமேல்தான் அசட்டு அக்கா காலந்தள்ள வேண்டும். நீ ஒருத்திதானே. ஒரு அரிசி வைத்துக் கொண்டு சாப்பிடு. ஸாமான் வாங்கித் தரேன். இப்படி அப்படி அரிசியாகக் கொடுப்பதும்,சிலவுக்கு பத்து ரூபாய் படியளப்பதுமாக ரேஷன் அமுலுக்கு வந்தது. அசடு.கொடுத்ததை வாங்கிக் கொண்டு பணம் போரலே. இன்னும் இரண்டு ரூபாய் வேண்டும் என்று கேட்கும் லெவலுக்கு வந்து விட்டது.

அடுத்த தெருவில் தங்கை பணக்கஷ்டம் நீங்கி நல்ல நிலையே. அக்கா புருஷன் சாவிற்கு போகக்கூட அனுமதிக்காத குடும்பத்தினரின் ஆக்கினையில். அவளின் பெரிய பையன்  அவ்வளவாகப் பணம் ஸம்பாதிக்கவில்லை. தியாகு உஷார்.வாங்கும் ஸொத்துக்களைத் தன் பணம் கொண்டே வாங்கி,   தன்பேரிலேயே  பத்திரங்களையும் தயார் செய்து கொண்டு மிகவும் உஷார் ஆஸாமியாக வலம் வந்தான்.

தானும் கல்யாணம் செய்து கொண்டு   ஊராரைப்போல ஒழுங்காக வாழ ஆசை. பெரியவன் நமக்கு வருமானம் போதாது.  நாம் இப்படியே வாழ்ந்து விட்டால் போதும். தம்பியை நீ வேண்டுமானால் செய்து கொள் . நம் வீட்டுச் சூழ் நிலையில்  இன்னும் சங்கடங்கள்   அதிகமாகும்.  கல்யாணம் வேண்டாம் என்ற தங்கை ஒருத்தி,ஆகாத அக்கா,  ஆதரவில்லாத அப்பா,   வேண்டாம்பா.

நீ செய்து கொண்டால்கூட நிம்மதி இருக்காது.முடிவு சொல்லி விட்டான்.  அங்கும் வயதான பெரியவர்கள்.

வாழத்துடித்தவனுக்குப் பெண்ணா கிடைக்காது? தெரிந்தவர்கள் மூலம்  பெண் ஏற்பாடு ஆகியது.   கல்யாணமும் ஆகியது.  வீட்டில் வழக்கம்போல  சண்டை,வாக்குவாதங்கள் தொடங்கியது.   இரண்டு மூன்று மாதங்களுக்குள்ளேயே   தனிக்குடித்தனம். அம்மா மட்டிலும்   போகவர இருந்தாள்  பக்கத்து வீடே. இவர்கள் இருந்ததும் தியாகுவின் பேரிலான வீடே.

இரண்டு வருஷங்களிலேயே  குழந்தை பிறக்கவில்லையே என்ற குறையில், தம்பதிகள்  அயலூருக்குப் போய்  வைத்தியம் செய்து கொள்ள ஆரம்பித்தனர். என்ன அவஸரம்? அம்மா சொன்னாலும்  கேட்கவில்லை.

சண்டைக்கார அப்பா போய்விட்டார்.   தியாகுவிற்கு உடம்பு ஸரியில்லை. என்ன ஏது கேட்டால், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?   நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற பதிலே வந்தது.    அக்கா தங்கைகள்  பேச்சு வார்த்தை இல்லை.   என்ன நடக்கிறது என்றே கண்டு பிடிக்க முடியவில்லை.   டாக்டர் வந்து விட்டுப் போகிரார்.
என்னடா உடம்பு என்று கேட்டால் அவனும் ஒன்றும் இல்லேம்மா. நீ ஏன் விசாரப்படறே? என்கிறான்.
இரண்டு மூன்று தலைமுறைகளில் விஷயங்கள் கேட்கும்போது பெரியவர்கள், அவரவர்களின் காலம் ஏதோ ஒருவிதத்தில் முடிந்து விடுகிறது. ஸ்வீகாரம் கொடுத்தவரும் போயாச்சு.
அக்காக்காரியும் அசடாக இருந்ததால் கடவுள் நல்லபடியாகவே அழைத்துக் கொண்டு விட்டார் போலும்.
பிள்ளையாக நிர்ணயிக்கப் பட்டவன் வந்தான். காரியங்களைச் செய்தான். நிலம்,வீடுவாசல்,மாந்தோட்டம் எல்லாவற்றையும் விற்றான். நேராக அனாதைக்குழந்தைகளைக் காப்பாற்றும் ஸர்க்கார் காப்பகத்திற்குச் சென்று அவர்களின் நலனுக்காக இதை ஃபண்டாக எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.

குழந்தைகள் காப்பகம்

Nurses tend to nstate of Tamil Nadu June 20, 2013. These unwanted infant girls in southern India’s Tamil Nadu state are considered the fortunate ones. They are India’s “Cradle Babies,” products of a government scheme that permits parents to give their unwanted baby girls anonymously to the state, saving them from possible death in a region where daughters are seen as a burden and where their murder is a common reality. Picture taken June 20, 2013. To match INDIA-CRADLEBABIES/ Thomson Reuters Foundation/Mansi Thapliyal (INDIA – Tags: SOCIETY)


படம் உதவி—-கூகல்…நன்றி.

தங்கை. பிள்ளையின் பக்கத்திலேயே கவலையுடன் இருக்கிராள். யாரோ வக்கீல் அயலூரிலிருந்து வந்துள்ளனர். ஏதோ பத்திரம் எழுதி கையெழுத்து வாங்குகிரார்கள்.
தியாகு சொல்கிரான்.அம்மா எனக்கு மனைவி அவள். நீங்கள் இருக்கும் வீட்டில் நீங்கள் யாவரும் இருக்கும் வரையில் இருக்கலாம். விற்க வாங்க முடியாது.
ஓரளவு பணமும் உனக்கு எழுதி வைத்திருக்கிறேன். மீதியாவும் என் மனைவிக்கே. அவள் உன்னைப் பார்த்துக் கொள்வாள். நான் மீளமுடியாத அளவிற்கு ரத்தப் புற்றுநோயால் கடைசி நிலையில் இருக்கிறேன்.
தாய்க்குத் தாளமுடியவில்லை. மூர்ச்சையானவள் ஸாதாரணநிலைக்குத் திரும்பவே மூன்று நாட்களாயிற்று. அதிக வைத்திய முன்னேற்றமில்லை. கேன்ஸர் வந்தவர்கள் பிழைப்பதில்லையா?இப்போதைக்கு இந்த வார்த்தை ஸரியாக இருக்கலாம்.

முடிவு உங்களுக்கே விளங்கி இருக்கும். அவ்வளவு தெரிந்த மனிதர்கள் கூட்டம் தியாகுவை வழியனுப்பக் கூடியது. இரண்டொரு வருஷங்கள் நகர்ந்தது.

தியாகுவின் மனைவிக்கு வேண்டியவர்கள் அவளுக்கு மறுமணம் செய்வித்து விட்டனர். இருந்த எல்லாவற்றையும் விற்றுப் பணமாக்கிக் கொண்டு போய்விட்டாள். இரட்டையும் ஒற்றையுமாக அவளுக்கு மூன்று குழந்தைகள்.
குழந்தைகள்
படம் உதவி கூகல். மிக்க நன்றி

தியாகுவின் அம்மா,அக்கா என்று யாவரும் துக்கத்தின் பிடியில் போனார்கள்.
இருந்த பெரியபிள்ளை போனது வேலைக்காரி காலையில் பார்த்த போதுதான் தெரிந்தது. விவரிக்க இஷ்டமில்லை.
அந்த வீடும் தியாகுவின் மனைவியாக இருந்தவளுக்குதான். நம்ப முடிகிறதா?

தொட்டில்கள் ஆடுகிறது. அனாதை இல்லத்திலும், முன்னாள்மனைவியாக இருந்த தியாகுவின் மனைவியின் இந்நாள் குடும்பத்திலும். கதையாகப் படியுங்கள். நீண்ட கதை.நிதானமாகப் படியுங்கள்.

 

ஜூலை 26, 2016 at 2:06 பிப 11 பின்னூட்டங்கள்

தொட்டில்—9

தொட்டில்வேலைக்குப் போக ஆரம்பிக்கு முன்னர்  வீட்டில் இந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் பூணூலை  முன்னிறுத்தியே  ஆரம்பமாகியுள்ளது. உண்மையில் பூணூலில் ஒருவருக்கும் அக்கறை இல்லை. சொத்து. நம் ஏழ்மை.

இனி இவர்கள்  இதைப்பற்றி பேச விடாமல் நாம் அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும்.  மஹா பெரியவாள் பிறந்த ஊர் அருகிலுள்ளது. அங்கும் ஒரு பெரியவர்   ஏழைப் பையன்களுக்குப் பூணூல் போட்டு வைக்கிரார்.  அவ்விடம் போய் நாம்  குடும்ப நிலவரத்தைச் சொல்லிக் கேட்போம்.

யாருமே வேண்டாம். அவர்களாகவே  போட்டு விடட்டும்.   பிறகு இந்தப் பேச்சே வராது.   முடிவெடுத்து விட்டனர்.

நிலம் நீச்சு மேற்பார்வை பார்க்க   ஏதோ வேலையும் கிடைத்தது.  வீட்டில் இரண்டு சமையலும்.   பெரிம்மாவை திட்டுதலுமாக  எப்போதும்   சச்சரவு நீடித்தது.

தியாகு ஒருநாள்    பூணூல் போட்டு வைக்கும் பெரியவரைப் பார்த்து பேசிவிட்டு வந்தான். பெற்றவர்கள் வராமல் செய்வதற்கு மறுப்பு  தெரிவித்தாலும் வயதையும் வீட்டு சூழ்நிலையையும் உத்தேசித்து நல்ல நாள் ஒன்று குறிப்பிட்டு சொல்லி விட்டார்.

விடியற்காலமே   நிலத்தில்  சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போன இரண்டு பிள்ளைகளும்    புது வேஷ்டியும்,  பூணலும்,    மாலையும் கழுத்துமாக வீட்டிற்கு வந்து    சாயங்காலம்  அம்மாவிற்கு  நமஸ்காரம் செய்கிரார்கள்.  என்னடா இது  தாய் விக்கித்துப் போய்  ஒரு கணம்  அப்படியே நிற்கிறாள்.    அடக்க முடியவில்லை அழுகையை. என்ன அம்மாடா நான்.   இன்னும் என்ன வெல்லாம்  ஆகப்போகிறதோ?

அந்த மனுஷன் கத்துவாரே.   நன்னா இருங்கடா. காலம் விடியணும்.  கதறல்தான்.

பெரியபெண் கத்துகிராள். வெளியில் போங்கடா. அப்பாகாரரும் வந்து விட்டார். அடிக்கப்போய் பசங்கள் தடுத்து நாங்கள் தப்பு ஒன்றும் செய்யவில்லை. இனி உங்கள் அடியெல்லாம் மறந்து விடுங்கள். ஏக ரகளை. பக்கத்து வீட்டுப் பாட்டி வருகிராள். விஷயம் தெரிகிறது.

நகருங்கள் எல்லாம்.  மஞ்சபொடி இருந்தா கொண்டுவா. ஆரத்தியைக் கரைத்து  பிள்ளைகளை நிற்க வைத்து ஆரத்தி எடுத்து வாசலில் கொட்டிவிட்டு வருகிறாள். போதும் உங்கள் சண்டை. ஊர் சிரிக்கும்.கௌரவமாக இருங்கள் என்று பல விதத்திலும் சொல்லி பெருத்த சண்டையை    குறைக்கிராள்.  சாப்பாடு,அப்படியே கிடந்தது. ஸந்தோஷமான நாள்   மூலைக்கொருவராக முடங்கினர்.ஊரெல்லாம் இதே பேச்சு.

நாட்கள் ,மாதங்களாக நகருகிறது. பிரும்மசர்ய ஆசிரமம் நல்ல கல்வியை கற்கும் நேரம்.  இந்தப் பிள்ளைகளும், அக்கம் பக்க நிலங்களையும் கவனித்து, அவர்களுக்கு இலாபகரமாக நெல்லை விற்றுக் கொடுத்துத்,தாங்களும் அதிலும் தியாகுவும்  பொருளீட்ட ஆரம்பித்தனர்.
பெரியபெண்ணுக்கு வயது அதிகம். கல்யாணமில்லை. இன்னொரு பெண் ஏதோ இரண்டாந்தாரமாக கோவிலில் வைத்து கல்யாணம்.

எதற்கும் யாரையும் கூப்பிடுவதில்லை. வன்மம் அதிகமாகிக் கொண்டே போனது. தியாகு சின்னதாக வீடுகூட வாங்கி விட்டான்.

அக்கா குடும்பம். பெரிப்பா திடீரென உடல்நலம் குன்ற ஆரம்பித்தது. போக்குவரத்து பேச்சு வார்த்தை இல்லை.பிரயோஜனமுமில்லை. அவருக்கு தன்நிலத்தையே பார்க்கப் போகக் கூட முடியவில்லை. அவருடைய நிலத்தின் பக்கத்து நிலக்காரரும் அவருக்கு ஸொந்தமானவர். அவர்தான் நிலத்தை கவனித்தார்.

அவருக்கும் இந்த நிலத்தின்மீது ஒரு கண். அக்கா,தங்கை குடும்பமும் விரோதிகளாக இருக்கிரார்கள். நல்ல சான்ஸ்தான் என்று கணக்குப் போட ஆரம்பித்து விட்டது.

அவருடைய வழக்கமே நிலமுள்ளவர்களுக்கு ஏதாவது கஷ்டம் வந்தால் வலியபோய் பணம் கொடுப்பது. அவர்களுக்கு முடியாத ஸமயங்களில் கஷ்டம் கொடுத்து எழுதி வாங்குவது,மேன்மேலும் பாரம் சுமத்தி விற்கும் நிலைக்கு ஆளாக்கி தானே வாங்குவது என்பதில் கை தேர்ந்த நிபுணர். நிலத்தை ஆர்ஜிதம் செய்வதில் நிபுணர்.

பெரிப்பாவிற்கு தான் போய் விட்டால் இந்த அசட்டு மனைவி தெருவில் நிற்பாளே! யோசனைகளே ஆளை உலுக்கியது. என்ன செய்யலாம் யோசனையை பக்கத்து நிலக்காரரையே ஆத்மார்த்தமாக நம்பி கேட்க ஆரம்பித்தார். அவருடைய புத்தி இன்னும் தீட்சண்யமாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.

நாமே நம்முடைய பிள்ளையை ஸ்வீகாரம் கொடுத்து ஸொத்தை அடைந்து விடலாமே. மெள்ள மெள்ள யோசனை வலுத்தது.

நான் இருக்கும் போது உனக்கேன் கவலை. உனக்கு ஒன்றும் ஆகாது. உன் மனைவி எனக்குக் கூடப் பிறந்தவள்மாதிரி. நீ கவலையே படாதே. பங்காளிகளால் கஷ்டம் வரலாம். நான் அதற்கும் யோசனை வைத்துள்ளேன் கவலைப்படாதே.
வார்த்தைகள் தேனாக இனித்தது.

செயல்படுத்த வேண்டுமே. வீட்டிற்கு வந்ததும் அவர் மனைவியிடம் நான் ஒரு நல்ல காரியம் செய்யப் போகிறேன். யாரும் மறுப்பு சொல்லக்கூடாது. என்றாவது மறுப்பு சொல்ல அந்தக்கால மனைவிகளுக்கு உரிமை இருந்ததா என்ன?

யார் ஸொத்தை குறைந்த விலைக்கு வாங்கப் போகிராரோ? யார் சாபம் இடப் போகிரார்களோ? எதற்கு இந்தப் பேராசையோ? மனைவி ஸந்தோஷப்படவில்லை.
என்ன ஏது என்றும் கேட்கவில்லை.
நான் ஒருவருக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். என்ன ஏது என்று யாரும் கேட்கவில்லை.
கதையில் பெரியப்பாவாக வருபவரிடம் சென்று உனக்கு இகம்,பரம் இரண்டிற்கும் உங்கள் குடும்பத்திற்கு நான் இருக்கிறேன். என் பிள்ளைதான் உன் பிள்ளை. யாருக்கும் இப்போது சொல்ல வேண்டாம். கொஞ்சம் பொறு.

என்ன இவன் இப்படிச் சொல்லுகிறான். புரியவில்லையே. புரியும் பிறகுதான். ஓ.இவனுக்கும் ஒரு பிள்ளை இருக்கிரான். நமக்கு அதெல்லாம் ஸரிப்படுமா?

கண்ணான நிலம். பிள்ளையைக் கொடுத்தாலென்ன பெயரளவிற்குதானே. மனதில் பதிந்தாகி விட்டது.

தியாகு இன்னுமொரு வீடு வாங்கி இருக்கானாம். இதுவும் அவருக்கு ஒரு செய்தியாகத் தெரிவித்து அவர்களெல்லாம் எக்காலத்திலும் திரும்பியும் பார்க்க மாட்டார்கள் உங்களை. நானிருக்கப் பயமேன்? தொடரலாம்.

ஜூலை 24, 2016 at 12:56 பிப 14 பின்னூட்டங்கள்

பூ–பூ என்னபூ

பூ–பூ என்னபூ குழந்தைகள் சொல்வார்கள் புளியம்பூ.இல்லை இல்லை ஸாயபூ என்று பேசக் கற்றுக் கொடுப்போம்.

அந்தவகையில் தொட்டியில் பூத்த பூவைப் பார்த்து மகிழ்ச்சி. நேற்று இன்டர்நெட் வேலை செய்யவில்லை.விடை எழுத முடியவில்லை.
இது வெறெதுவும் இல்லை. நித்ய மல்லியும் இல்லை. நந்தியாவட்டையுமில்லை.

தொட்டியில் பூ-பூ

தொட்டியில் பூ-பூ

இந்தச் செடியை என் மருமகள் பிரதீஷா ஜோர்ஹாட்டிலிருந்து கொண்டு வந்து நட்டாள். சென்ற ஜூலையில் ஆகாயவிமானத்தில் பயணித்து வந்த செடி இது. அன்று பார்க்கிறேன். அதில் பூக்கள். புதியதாக கொள்ளுபேரன் பிறந்தமாதிரி பரவசம். உடனே படமெடுத்தேன். பேத்தியையும் படமெடுக்கச் சொன்னேன். பார்த்தால் சிறு காயுடன் வேறு தரிசனம் கொடுக்கிறது. நம்முடைய தமிழில் அதன் பெயர் தெரியும். பூவெல்லாம் எங்கு பார்த்திருக்கப் போறேன்.!!!!

எட்டிப்பார்க்கும் குட்டிக்காய்

எட்டிப்பார்க்கும் குட்டிக்காய்

வட இந்தியாவில் இப்பழத்தை மெல்லிய கீற்றுகளாக நறுக்கி உணவின்போது உடன் பிரியமாக உபயோகிக்கிரார்கள். பெயருக்கு வருவோமா? கதை சொல்லுகிறேனா?

மேல்நாட்டில் Finger LIME—Cavier Lime
நம் நாட்டில்,தமிழ்நாட்டில் —கொடி எலுமிச்சை Crotalaria evolvuloides
ஹிந்தியில்—நிம்பு. அஸ்ஸாமியில் காஜிநெமு. பெங்காலியில் ரஸ்ராஜ்
இன்னும் எவ்வெவ்வளவு பெயர்களோ? செடி,பூ,பிஞ்சு எல்லாம் எங்கள் வீட்டுப் படங்கள். காய் பட உதவி கூகல். மிகவும் நன்றி.

கொடி எலுமிச்சைகாய்
ஆக இந்த பூ–பூ கொடி எலுமிச்சை பூ. பதிலளித்த யாவருக்கும் நன்றி. காயாகவும் பழமாகவும் உபயோகிக்கலாம். நல்ல எலுமிச்சை வாஸனையும் சுவையும் உண்டு. தோல் பருமனாக இருக்கும். ஊறுகாய்க்கு அவ்வளவு ஏற்றதல்ல. பூ அழகாக இருக்கிறது. மரமாக அடர்ந்து வளரும். நிறைய தகவல்கள். இல்லையா?

செடியைக் கொண்டு வந்த பிரதீஷாவிற்கும் நன்றி.இரவு மணி 11. இன்டர்நெட் வேலை செய்தது. போட்டும் விட்டேன்.

ஜூலை 21, 2016 at 5:47 பிப 3 பின்னூட்டங்கள்

பூ- பூ என்னபூ

எங்கள் வீட்டுத் தொட்டிச் செடியில் புதியதாகப் பூத்த பூ இது.
என்னபூ. சொல்லுங்கள்.

பூ--பூ

பூ–பூ

தெரிந்ததா? ஸுலபமானது. ஒரு இடுகை எனக்கு இது. பார்ப்போம்.

ஜூலை 19, 2016 at 12:10 பிப 2 பின்னூட்டங்கள்


ஜூலை 2016
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 547,548 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.