Archive for ஜூலை 4, 2022
மூலிகைப்பொடி.
மூலிகைப்பொடி. மலைக்காதீர்கள். சித்ரகூடம் போகவேண்டாம். வீட்டு மூலிகைகள்தான்.சற்று அக்கரையாகச் செய்தேன். மிகவும் ருசியாக வந்தது. இதுவும் மீள் பதிவுதான். பாருங்கள் அன்புடன்
பச்சென்று பார்க்க அழகாகவும், வாய்க்கு ருசியாகவும் அமைந்த பொடி
இது. செய்வதும் ஸுலபம்தான். மனம் விரும்பிச் செய்தால் ஒரு
நிமிஷத்தில் செய்து விடலாம்.
கறிவேப்பிலை, புதினா, சில எலுமிச்சை இலைகள் நல்ல வாஸனை
ஆன ஸாமான்களாதலால் இன்னும் ஸாமான்களுடன் மிக்க நன்றாக
அமைந்தது.
மோர்க்குழம்பு, பச்சடி,வற்றக்குழம்பு என சற்றுப் புளிப்பு ருசியுடன் கூடிய
வகைகளைத் தொட்டுக்கொண்டு சாப்பிட கூடுதல் ருசி வரும்.
சாப்பிட நேர்த்தியாக உள்ளது.
சென்னையில் கறிவேப்பிலை ஒருநாள் அதிகம் கிடைத்தது.
புதினாவும் அதிகப்படி இருந்ததைக் காயவைத்திருந்தேன் முதல் நாள்.
காய்ந்த புதினா, பச்சை கறிவேப்பிலை
இந்த மூலிகைப்பொடியைச் செய்தேன். ருசியும் பார்த்தேன்
நீங்களும் செய்து பார்க்கலாமே என போட்டோவும் எடுத்தேன்.
எதைச் செய்யலாம்,எதை எழுதலாம் என்ற எண்ணம் ஸொந்த வலைப்பூ
வைத்திருப்பதால் அதிகம் தோன்றுகிறது.
ஸமயத்தில் இது ஒரு தொத்து வியாதி போலக்கூடத் தோன்றுகிறது.
பார்ப்போம். இதுவும் எவ்வளவு தூரம் போகிறதென்று.
ஸரி ஸாமான்களைப் பாருங்கள்.
வேண்டியவைகள்.
பச்சை கறிவேப்பிலை—இரண்டுகப்.
புதினா இலை காயவைத்தது—அரைகப்,அல்லது இருப்பதைப் போடவும்.
எலுமிச்சை,அல்லது நாரத்தை இலை—5 அல்லது 6. இல்லாமலும்
செய்யலாம்.
கடலைப் பருப்பு—இரண்டு டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு—இரண்டு டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு—இரண்டு டேபிள்ஸ்பூன்
எள்–ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு,சீரகம் வகைக்கு அரை டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் குண்டுவகை—-4
புளி—சிறிது
உப்பு,பெருங்காயம்—-ருசிக்கு
செய்முறை.
கறிவேப்பிலையை அலம்பி ஈரமில்லாமல் துண்டில் பரப்பி ஈரம்
உலரவிடவும்.
அடுப்பில் வாணலியைக் காயவைத்து, பருப்புக்களைத் தனித்தனியாக
வெரும்…
View original post 101 more words