Posts filed under ‘Uncategorized’
புழுங்கலரிசி சேவை
இன்று எதை மீள்ப் பதிவு செய்யலாமென்று யோசித்தேன். சேவை எழுதிப் பல வருஷங்கள் ஆகிறது.செய்து பாருங்கள் என்பதற்கு இது பரவாயில்லை.பாருங்கள். அன்புடன்
சேவை என்பது இடியாப்பம். எனக்கு இந்த பெயர் முன்பெல்லாம்
தெரியாது. சேவை என்றே சொல்லி வழக்கம்.
இந்தப் பெயரும் நன்றாகவே இருக்கிறது. இதனுடன் கலக்கும் பொருளைக்
கொண்டு பெயர் சொல்லுவோம். தேங்காய், எள், எலுமிச்சை,வெல்லம்,
தயிர்,காய்கறி, மோர்க்குழம்பு, தேங்காய்ப் பால் என பட்டியல் நீளும்.
இப்போது இடியாப்பம் குருமா தான் முதலிடத்தில் இருக்கிறது.
நாம் முதலில் ப்ளெயின் சேவை தயாரிப்பதைப் பற்றி அதுதான்
புழுங்கலரிசியில் தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.
வேண்டியவைகள்
புழுங்கலரிசி—3கப். இட்டிலிக்கு உபயோகிக்கும் அ ரிசி
இடியாப்பம் செய்ய உபயோகிக்கும் — சேவை நாழி
அரிசியைக் களைந்து நன்றாக ஊறவைக்கவும்.
செய்முறை-
கிரைண்டரில் , ஊறிய அரிசியை ப் போட்டு அதிகம் ஜலம் விடாமல்
கெட்டியாகவும், நைஸாகவும் அரைத்தெடுக்கவும்.
இட்டிலி வார்ப்பது போல குழித்தட்டுகளில் எண்ணெய் தடவி மாவை
விட்டு ரெடி செய்யவும்.
சேவை நாழியில் உட்புறம் லேசாக எண்ணெய் தடவி வைக்கவும்.
குக்கரில் அளவாக தண்ணீர்விட்டு இட்டிலி ஸ்டேண்டை வைத்து,
வெயிட் போட்டு இரண்டு விஸில் வரும் வரை மிதமான தீயில்
இட்டிலிகளாக வார்க்கவும்.
சாதாரண இட்டிலி வார்க்க வெயிட் போட மாட்டோம்.
நீராவி அடங்கிய பின் இட்டிலிகளை ஒன்றன் பின் ஒன்றாக
எடுத்து அச்சில் போட்டு அழுத்தி சேவைகளாகப் பிழிந்து
எடுக்கவும். சூட்டுடன் பிழியவும்.
திருகு முறையிலும், ப்ரஸ் செய்து பிழியும் முறையிலும்
சேவை நாழிகள் கிடைக்கின்றன.
ப்ளெய்ன் சேவை ரெடி.
இதனுடன் குருமா சேர்த்து …
View original post 120 more words
துளசித்துதி
இது பல வருஷங்களுக்கு முன்னர் பதிவிட்டப் பதிவு இது. இன்று வெள்ளிக்கிழமை. துளசி ஸ்தோத்திரம் படித்தால் நல்லது. விரும்புவீர்கள் என்று பதிவிட்டுள்ளேன். அன்புடன்
நம்மில் யாவர் வீட்டிலும் துளசிச் செடியை ஒரு மாடத்தில் வளர்த்து அதற்கு
சுற்றிலும் கோலமிட்டு,மஞ்சள் குங்குமத்தால் அலங்கரித்து தினமும் வழிபடுவதென்பது
தொன்று தொட்டு வரும் பழக்கம்.
வீட்டுப் பெண் குழந்களுக்கு கோலம்போட, பக்தியை வளர்க்க என்று கலைக்கும்,தெய்வ பக்திக்கும்
ஒன்று சேர அப்யாஸிக்கப் படுகிறது என்பதும் என் எண்ணம்.
அதிலும் வெள்ளிக் கிழமைகள்,ஆடி,தைமாத வெள்ளிக் கிழமைகள்,
என விசேஷமாக பூஜிப்பதும் உண்டு.
மாக்கோலத்துடன் செம்மண் பூச்சும்,பூக்களுடன் விசேஷ பாயஸ நிவேதனத்துடன்
பூஜித்து ,ஸுமங்கலிகளுக்கு வெற்றிலை,பாக்கு,பழங்கள்,குங்கும சந்தனத்துடன்
அளிப்பதும் உண்டு.
கார்த்திகை மாத சுக்கில பக்ஷ துவாதசியில் துளசி கல்யாணம் என்று கொண்டாடுவதும்
உண்டு.
அப்பொழுது
நெல்லிக் கிளையை மஹா விஷ்ணுவை மனதிலிருத்தி துளசியுடன் சேர்த்து வைத்து
பக்ஷ பரமான்னத்துடன் பூஜிக்கலாம்.
நெல்லிக்காயில் விளக்கேற்றி பூஜிப்பவர்களும் உண்டு.
நேபாளத்தில் ஆடிமாதம் துளசியை நடுவதற்கும் வாத்தியார் வந்து
முறைப்படி நடுவார். இது நேபாளத்து வழக்கம்.
கார்த்திகை மாதம் துளசி விவாக தினத்தன்று, ஹோமம் வளர்த்து, அதையும்
மந்திர கோஷத்துடன் கொண்டாடும் வழக்கத்தையும் பார்த்திருக்கிறேன்.
குளிர் நாட்களில் துளசி பட்டுப் போய்விடுவதால், வருஷா வருஷம் நடுவதும்
ஒரு விசேஷநாளாகிறது.
நம்மில்
ஸாதாரணமாக தினமும் தமிழில் துளசித் தோத்திரம் எல்லோரும் சொல்வார்கள்.
அதை எனக்குத் தெரிந்த அளவில்ப் பதிவிடுகிறேன்.
இதைப் படித்து வந்தால் சிறிது நாட்களிலேயே மனப்பாடமாகிவிடும்.
தினமும் மனதினால் இதைச் சொன்னாலே போதும். அவ்வளவு நல்லது.
ஒரு சிறிய தொட்டியில் துளசியை வளர்த்தால் கூட…
View original post 166 more words
நீயா நானா முதல்


போட்டி போட்டு மார்ச் மாதத்தில் சிறிது சீதோஷ்ணம் மாறியதும் பூக்கும் எங்கள் தோட்டத்து மலர்கள். அழகு இல்லையா?எல்லோரும் ஒரே நாளில்தான் பூத்தீர்கள். ஸந்தோஷமா?

நானும் அந்த வகைதானே.பூமியினுள் கிடந்த நாங்கள் தானாகப் பூத்தோம்தானே!
எல்லோரும் ஒன்றேதான் சிறிக்கும் மலர்களே.
ஹலோ ஹலோ ஹலோ.2
திங்கட்கிழமை வெளியிட்டதின் முடிவுப்பதிவு. இதுவும் மீள்பதிவுதான். படித்து அபிப்ராயம் சொல்லுங்கள். ஹலோஹலோஹலோஹலோ. அன்புடன்
ஹலோ என்ன சொல்ல வந்தெங்களோ சொல்லுங்க.
எதை ஆரம்பிக்கறது, எதைச் சொல்லரது, எதை விடரது
தெரியலே.
பிள்ள நல்ல வேலையிலே இருக்கான், எதுக்கும் பஞ்சமில்லே.
வேலைக்காரிகளுக்கும், குறைவில்லே. ஆனால் நாமதான்
வேலைக்காரிகள் சொன்னபடிகூட கேட்க வேண்டியிருக்கு.
பாரு ஒவ்வொரு நாள் மாட்டுப்பெண் வெளியில் போரச்சே
ஒண்ணும் சொல்ல மாட்டாள். ரொம்ப நாழி கழித்து போன் பண்ணி
வேலைக்காரியிடம் சொல்லுவோன்னு நினைக்கிறேன்.
அம்மா,ஒங்க கிட்டே சொல்லச் சொன்னாங்கோ, ஒரு
ரஸம் செய்துடச் சொன்னாங்க.
வேரெ ஒண்ணும் சொல்லலியா?
இல்லே அவங்க வந்து பாத்துப்பாங்க.
இதை நம்மிடம் சொல்லிட்டுப் போகக் கூடாதா?
நினைக்கத் தோன்றுகிரதா இல்லையா?
வேலக்காரி காயும் ஏதோ நறுக்குவோ. ஆனால் சும்மா
நறுக்கி வைக்கிறேன். அவங்க ஒண்ணும் சொல்லலே!
நீ செஞ்சாலும் தப்புன்னுவாங்க.
ஸரி ஒரு பருப்பைபோட்டு ரஸத்தை வைச்சு இரக்கினோம்
என்றால் அத்துடன் போகுமா?
போனைல்தான் தேவலையே. அவ வருவோ, என்னம்மா ஒரு
கறியும் பண்ணிருப்பேங்கோ என்று நினைத்தேன். இல்லே
அவ நீ ஒண்ணும் சொல்லலேன்நு சொன்னா, அதான்.
நான் அப்படிதான் நினைத்தேன். இதெல்லாம் கணக்கா?
இன்னொரு நாள் பண்ணிடலாம் என்று பண்ணி விட்டால்
பிள்ளைகளுக்குப் பிடிக்காதே. என்னை ஒரு வார்த்தை கேளுங்கோ!!
இல்லே இதை வேரெ மாதிரி பண்ணாதான் அவர்களுக்குப் பிடிக்கும்.
எது சொல்லு செய் எல்லாம் எதிரிடை.
வேலைக்காரிக்கு ப்ரட் கொடுத்தால் அதிலும் ஏதாவது குற்றம் கண்டு
பிடிப்பு. இவ்வளவு ப்ரெட் இருக்கு, இன்னும் ஏன் வாங்கணும்.
நீதானே…
View original post 521 more words
ஹலோ, ஹலோ,ஹலோ
திங்கட் கிழமைகளில் மீள் பதிவாக 1913 இல் எழுதிய கதை ஒன்றைப் பதிவு செய்கிறேன். இரண்டு பதிவுகளாக எழுதியது. முதல்ப் பதிவை இன்றும் வியாழனன்று அடுத்தப் பதிவையும் பதிவிடுகிறேன். படித்துப் பார்த்து உங்கள் அபிப்ராயம் என்ன சொல்லுங்கள்.
ட்ரிங்-ங் ட்ரிங், ட்ரிங்
யாரா இருக்கும்
வீட்லே யாரும் இல்லே, எடுத்துதான் ஆகணும். ஹலோ
ஓ நீங்ளா. எப்போ போன் செய்தாலும் ஏதோ காரியமா,இருக்கிங்கோ
சித்த நாழி கழித்து போன் பண்ணுங்கோன்னு பதில் சொல்ரா,
என்ன தான் பண்றெங்கோ?
பண்றதென்ன இருக்கு? மேலேர்ந்து வந்து சொல்லணும்.
அவர்கள் பிஸி. என்னையும், பிஸியாக்கிரா, அவ்வளவுதான்.
எப்படி இருக்கே, என்ன ஸமாசாரம்.
ரொம்ப நாளுக்கு முன்னே பேசினதுடந் ஸரி. ரொம்பவே பேசணும்.
யாரிடமாவது மனதிலிருப்பதை கொட்டினா தேவலை போல இருக்கு.
என்னத்தை கொட்டணும்?
எதையும் கொட்டினா கஷ்டம். வார முடியாதே.
ஆமாம், நீங்கள் இப்படி சொல்லியே இருந்திண்டிருக்கெங்கோ
என்னால் இப்படி இருக்க முடியலே.
இந்த வார்த்தை கேட்டு கேட்டே இருந்திருக்கேநா, ஸரி,அப்புரமா பேசலாம்.
ஒத்தரும் இல்லாத வேளையா சொல்லுங்கோ.
ஸரி. அப்படியே ஆகட்டும்.
லக்ஷ்மி, ரொம்ப நாளா விட்டுப்போன நட்பு, ஒரே இடத்தில்குடியிருந்தநட்பு.
வித்தியாஸமில்லாமல் மனது விட்டு பேசி, அன்றாடும் நடக்கும்
நல்லது கெட்டதுகளைப் பகிர்ந்து கொள்ளும்படியான நட்பு. விட்டுப் போய்
வெகு வருஷங்களுக்குப்பிறகு, அவளைப் பார்த்து, மறுபடியும் நட்பு
ஆரம்பித்ததே எதிர் பாராத விதத்தில்.
பிள்ளை கல்கத்தாவிலிருக்கும்போது, குருவாயூரப்பன் கோவிலுக்கு
தரிசனம் செய்யப் போகும் போது ராஜம்மா என்று கையைப்பிடித்துக்
கொண்டாள்.
நீ எங்கிருந்து வந்தாய், நிஜமாதானா, இல்லே நான் தப்பா லக்ஷ்மி.
இல்லேஇல்லே,நான்தான் ராஜம்மா.
யாரோட வந்திருக்கே, பொண்ணு இங்கிருக்கா, இப்படி ஸமாசாரங்கள்
அடுத்து எப்போதாவது போன் வரும்.
எல்லாருக்கும், மாற்றல் அது…
View original post 364 more words
சிவராத்திரி மகிமை
நாளை மார்ச் முதல்தேதி 1-3-1922 மஹா சிவராத்திரி. முன்னாடி எழுதிய பதிவு ஒன்றை மீள்ப் பதிவு செய்கிறேன். உலகெலாமுணர்ந்து ஓதற்கறியவன்
நிலாவுலாமலி நீர்மலி வேணியன்
அலகில் ஜோதியன் அம்பலத்தாடுவான்
மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.
அன்புடன்
சிவனுக்குகந்த தினம் சிவராத்திரி
.தேவியைப் பூஜை செய்ய நவராத்திரி ஒன்பது தினங்களைப்போல் இல்லாவிட்டாலும்சிவராத்திரி ஒரு தினமே சிவனுக்கு மிகவும் மகத்துவமானது. சிவனுக்காக விசேஷமான தினங்கள் ஏராளமாக உள்ளது. ஆயினும் இந்த சிவராத்திரி எல்லா சிவன் கோயில்களிலும், அவரவர்கள் வீடுகளிலும் பூஜித்துக் கொண்டாடப் படுகிறது. இளைய ஸமுதாயங்கள் சற்று விதி விலக்காக இருக்கலாம். ஆனால் கிராமங்களில் சிறுவர் சிறுமியர்கள் கூட அவரவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து ,பூஜை,பாட்டு என்று பாடிக் கொண்டாடுவது ஞாபகம் வருகிறது. இரவு முழுதும் கண் விழித்து பக்தியை அப்போதே சிறுவர்களுக்கு ஊட்டப் படுவதும் மனதை விட்டு அகலவில்லை.
காட்மாண்டு சுபதீசுவரர் கோவிலில் சிவராத்திரி வெகு விசேஷமாகக் கொண்டாடப் படும். நேபாளத்திலேயே மிகவும் உயர்வான சிவனைப் பற்றிய விசேஷக் கொண்டாட்டமது. வெகு வருஷங்கள் அவ்விடம் வசித்தபடியால் நேபாளத்தைப்பற்றி குறிப்பிடாதிருக்கவே முடிவதில்லை.ஸாதுக்கள் கூட்டம்சொல்லிமாளாது.
பசுபதீசுவரருக்கு நான்கு திசையில் நான்கு முகங்கள், உச்சியில் ஒன்று என ஐந்து முகம் கொண்ட ஸதா சிவமாக விளங்குபவர். நான்கு முக எதிரிலும் நான்கு வாயில்கள் உள்ளன. எதிரில் பிரும்மாண்டமான உலோகத்தினாலான நந்தியின் சிலை உள்ளது. தென்னிந்திய கர்னாடக பட்டாக்கள்தான் பூஜை செய்கின்றனர்.பிரஸாதமாக அன்றன்று அரைத்த சந்தனம் வழங்கப்படும். நான்கு ஜாமங்களிலும் அபிஷேக அலங்காரம் சொல்லி மாளாது.
மாசிமாத கிருஷ்ணபக்ஷ சதுர்தசியில் இரவு நேரத்தில் நான்கு ஜாமங்களாகப் பிரித்து , அபிஷேக ஆராதனைகளுடன் சிவராத்திரி பூசைகள் நடக்கிறது. அன்று கண் விழித்திருந்து, விரதமிருந்து, இறைவனை வணங்கும்போது, முழுமையான பக்தி…
View original post 224 more words
முளைக்கீரை மசியல்.
பத்துவருஷங்களுக்கு முன்னர் எழுதிய பதிவிது. சென்னை போயிருந்த போது செய்தது இது. மும்பையிலும் ஸரி, டில்லியிலும் ஸரி முளைக்கீரை கிடைத்து வாங்கியதில்லை. பார்த்தவுடன் போடத் தோன்றியது. வற்றல் குழம்பும், கீரை மசியலும் ஊர் ஞாபகம் வருகிறது. செய்யத் தோன்றுகிறதா? பார்ப்போம். அன்புடன்
இந்தக்கீரை எல்லா வயதினரும் சாப்பிடக்கூடிய ஆரோக்கிய சத்து மிகுந்த ஒரு நல்ல கீரை. இதை
பருப்பு சேர்த்தும் சேர்க்காமலும் சமைக்கலாம்.
வேண்டியவைகளைப் பார்க்கலாமா/?
முளைக்கீரை—2கட்டு
அவசியமானால் பூண்டு—4 இதழ்
மிளகு—அரை டீஸ்பூன்
சீரகம்–1 டீஸ்பூன்
மிளகாய்—1
துவரம்பருப்பு—1டேபிள்ஸ்பூன். ஊறவைக்கவும்.
தேங்காய்த்துறுவல்—2 டேபிள்ஸ்பூன்
உப்பு
தாளித்துக் கொட்ட—1ஸ்பூன் நெய்
சிறிது கடுகு,உளுத்தம்பருப்பு,பெறுங்காயம்.
செய்முறை—–கீரையை நன்றாக சுத்தம் செய்துப்
பொடியாகநறுக்கி தண்ணீரில் 2, 3,முறை அலசித்
தண்ணீரைவடியவிடவும்.
துவரம்பருப்பை முன்னதாகவே ஊறவைத்து அதனுடன்
தேங்காய்,மிளகு ,சீரகம்,மிளகாய் சேர்த்து மிக்ஸியில்
மசியஅரைத்துக் கொள்ளவும்.
நிதான தீயில் வடியவைத்த கீரையுடன், பூண்டைத் தட்டிப்
போட்டு கால்கப் ஜலத்துடன் பாத்திரத்தில் சேர்த்து வேக
வைக்கவும். ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் பச்சென்று
கீரை நிறம் மாறாமலிருக்கும்.
கீரை வெந்ததும் குழிக் கரண்டியாலோ, மத்தாலோ
நன்றாக மசிக்கவும்.
அறைத்த கலவையுடன் உப்பு சேர்த்து கீரையில்க்
கொட்டிக் கலக்கி பின்னும் இரண்டொரு கொதி விடவும்.
இறக்கி வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு,பெறுங்காயம்
முதலியவைகளை நெய்யில் தாளித்துக் கொட்டவும்.
துவரம்பருப்பு அரைப்பதற்குப் பதில் வேகவைத்த பயத்தம்
பருப்போ அல்லது துவரம் பருப்போ ஒருகரண்டி சேர்க்கலாம்.
சின்னவெங்காயம்வேண்டியவர்கள்சேர்த்துக்கொள்ளுங்கள்
சாதத்துடன் கலந்துசாப்பிடவும்மற்றவைகளுடன்தொட்டுக்
கொள்ளவும் நன்றாக இருக்கும்.கீரை மசியல் ரெடி.
அக்ரூட் சட்னி.

இன்று புதுவிதமான ஒரு சட்னி வகையை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்.இது என் பேத்தி செய்வதைப் பார்த்தேன்.. எனக்குப் புதுமாதிரியாகத் தோன்றியது. இது தோய்த்துச் சாப்பிடுவதற்கானது. பச்சைப் பசேலென ஸுலபமாகத் தயாரிப்பது. மாதிரிக்குப் பண்ணி படங்களுடன் கொடு என்று கேட்டேன். நீங்களும் முயற்சிக்கலாமே!
படங்களுடன் பார்க்கவும் நன்றாக இருக்கிறது. பேத்தி விலாஸினியின் குறிப்பு இது.
வேண்டியவைகள்.



அக்ரூட் பருப்பு—–6. ஆய்ந்த பாலக்கீரை மூன்றுகைப்பிடி, பூண்டு ஒரு இதழ் [பல் 1]
மிளகாய்ப் பொடி—-1/4 டீஸ்பூன், கஸூரிமெத்தி 1/4டீஸ்பூன்,உப்பு ருசிகு ஏற்ப,
வினிகர் 1 டேபிள் ஸ்பூன், பச்சைக் கொத்தமல்லி இலைகள் விருப்பத்திற்கு ஏற்ப.
வினிகர் பிடிக்காதவர்கள் எலுமிச்சை சாறு உபயோகிக்கலாம்.
செய்முறை.
பாலக் கீரையை இலைகளாகத் தேர்ந்தெடுத்துத் தண்ணீரில் சுத்தம் செய்து வடிய வைக்கவும். நான்கு நிமிஷங்கள் மைக்ரோ வேவ் செய்து கொள்ளவும். இல்லாவிட்டால் சிறிது தண்ணீர் தெளித்து, வேக வைத்து எடுக்கவும்.



மிக்ஸி கன்டெய்னரில் அக்ரூட் பருப்பை பொடித்துக் கொள்ளவும்.
அதனுடன்பாலக்கீரை,பூண்டு,கொத்தமல்லி இலை,கஸூரிமெத்தி , முதலானவைகளைச், சேர்த்து அரைக்கவும். தண்ணீர் விடவேண்டாம்.
அரைத்த விழுதுடன் உப்பு ,மிளகாய்ப்பொடி, வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கலக்கவும். அக்ரூட் சட்னி தயார். உப்பு ,காரம் ஸரியாக இருக்கிறதா பார்த்து , வேண்டியவைகளை அதிகமாக்கவும். ஒரு அழகான அகலமான கிண்ணத்தில் ,எடுத்து வைக்கவும்.
ரெடியாக டேபிளில் வையுங்கள்.டோஸ்ட்செய்த பிரெட்,சீஸ்,டோக்லா, பஜ்ஜி வகைகளுடன் தோய்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.
ருசி பாருங்கள். தற்கால சட்னி இது.அக்ரூட் ருசியுடன் இருக்கும்.

ராயல்ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.5
சாளகிராமத்திற்கும் ராயல் ஃபிளைட்டிற்கும் என்ன உறவு புரிந்ததா? இப்படியெல்லாம் எழுதிய இந்தப்பதிவு அவரின் ஞாபகமார்த்தப் பதிவாக இப்போது பதிவாகிறது.சாளக்ராம வினியோகம் . அன்புடன்
இந்த ஒருமாதமாக என்ன செய்தீர்களென்று கேட்கிறீர்களா?
அக்கம்,பக்கம், அரிந்தவர்,தெரிந்தவர்கள் இப்படி யாவரின்
விசாரிப்புகளும், நல்லபடி வந்து சேர்ந்ததற்கு ஸந்தோஷமும்
தெரிவித்த வண்ணமிருந்தனர்.
எங்களுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் C.P.W.D. இல் வேலை
செய்பவர் I.c.mஇல் காட்மாண்டுவில் வேலை செய்து கொண்டு
இருந்தார். வழிவழியாக தலைமுறை,தலை முறையாக நல்ல
பூஜை,புனஸ்காரங்கள் செய்து பழக்கப் பட்டவர்கள்
குடும்பத்தைச்சேர்ந்தவர். அவரும் விடாது
பூஜைகள்செய்பவர்.அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு
சாளக்ராமம் வேண்டும் என்று சொன்ன போது, முன்னதாகவே
நான் கேட்டிருந்தேன். என்ன செய்யலாமென்று.
திருப்பதி போய்வந்தால்,வேங்கடாசலபதிக்கும், காசி,ராமேசுவரம்
போய்வந்தால், கங்கையை வைத்து ,பூஜை,ஸமாராதனைகள்
செய்வது போல இதையும், அப்படியே அபிஷேக ஆராதனைகள்
முடிந்த அளவு செய்து, வேண்டியவர்களுக்கு கொடுங்கள் என்று
சொல்லி இருந்தார்.அப்படி செய்வது நல்லதென்றும் சொன்னார்.
அதை ஞாபகப்படுத்தி அவரையே நம் வீட்டிற்கு வந்து நல்லபடி
பூஜையை முடித்துக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்
கொண்டதற்கிணங்க அவரும் வந்தார். மற்றும் சில
குடும்பங்களையும் கூப்பிட்டோம்.
கூப்பிட்ட யாவரும் வந்து புஷ்பங்களும், பாலும்,பழங்களுமாக
நிரப்பி ஒரு பக்தி பூர்வமாக அருமையான ஸமாராதனையாக
நடத்திக் கொடுத்தனர்.
மந்திர பூர்வமாக, அபிஷேகங்களும்,அர்ச்சனைகளும்
வந்தவர்களுக்கும்,மனம் நிறைந்த ஒரு ஸொந்த
வீட்டு பூஜை,புனஸ்காரம் மாதிரி உணர்ந்தார்கள்.
வீட்டு,ஸமாராதனையாக ஒரு ஸந்தோஷத்தைக் கொடுத்தது.
இதற்கு முன்னரே, சாளக்ராமங்களைப் பற்றிய அனுபவம் உள்ள
ஒரு பெரியவரிடம் வகை பிரித்துக் கொடுக்கும்படி கேட்டோம்.
கைக்கடக்கமானவைகள்தான் வீட்டில் வைத்து பூஜிப்பதற்குச்
சிரேஷ்டமானது.
பெரிய அளவுள்ளவைகள் கோவிலுக்குக் கொடுத்து விடுங்கள்,
என்று சொன்னவர்,சங்கு சக்கரம் உள்ளவைகள்…
View original post 369 more words
என்ன பிரஸாதம்?எப்படி?
பிிரஸாதம் எப்படி இருக்கிறது. உங்களுக்கும் ஒரு ஸாம்பிளுக்குத்தான்.இதுவும் ஒரு மலரும் நினைவுகளில்தான் சேர்த்தி.ருசித்துச் சொல்லுங்கள். அன்புடன்
பூஜை அறை. வரலக்ஷ்மி மற்றும் படங்கள்
லக்ஷ்மி பூஜை படமிருந்தது. நீங்களும் தரிசியுங்கள்.
பஜனைக்கு வரவர்கள் சாயங்காலமே புறப்பட்டுவந்து லேட்டாக
போவதை உத்தேசித்து எல்லோருமேகொஞ்சம் வயிறு
நிறையும்படி ப்ரஸாதம் செய்து வினியோகிக்க விரும்புவார்கள்.
மேலும் வெளியூர் படியாக பணம் கூட கிடைத்ததால் யாருமே
இதனை ஒரு பெறிய சிலவாக யோசிப்பதில்லை என்பது அங்கு
யாவரின் அபிப்ராயமாக இருந்தது.
பூண்டு, வெங்காயமில்லாத, ஏதாவது ஒரு பாத், டால்டா
கலப்பில்லாத ஒரு இனிப்பு , ஒரு சுண்டல். இருக்கவே இருக்கும்
நிவேதனமான வாழைப்பழங்கள்.
ஹூக்லி கரையோரம் பாரக்பூர். அக்கரைக்கு படகில் போனால்
சுராபுளி என்ற இடம். வாழைப்பழங்கள், வாழைஇலை,
காய்கறிகள் என எல்லாம் மலிவாகக் கிடைக்கும். யாராவது
போவார்கள். நிறைய வாங்கி வந்து எல்லோரும் பாகம் போட்டு
வாங்கிக் கொள்வார்கள். கேட்கணுமா?
மண்டலிக்கென்று சில பெறிய அலுமினியப் பாத்திரங்கள் உண்டு.
அடுப்புதான் சற்று கேள்விக்குறி? காஸ்,மைக்ரோவேவ்,அவன்
இதெல்லாம் வரவுமில்லை. தெறியவும் தெறியாது.
நான்தான் எப்பவும் செய்து கொண்டிருந்தேனா?
அதுவும்தான் இல்லை. யார்வீட்டிலாவது செய்து எடுத்து
வருவார்களாகத்தானிருக்கும்.
முதலில் இரண்டு முறை பாரக்பூர் அவுட் ஸ்டேஷன் போன
போது நான் பஜனைக்குப் போனதில்லை. கொஞ்சம் துலைவு.
ஆனால் போனவர்கள் ப்ரஸாதம் கொண்டு வருவதில்
கொடுப்பார்கள்.
எப்படியோ மூன்றாவது முறை அதே ஊர் வந்தபோது இருக்க
ஒரு போர்ஷன் பஜனைமண்டலியின் பக்கத்திலேயே கிடைத்தது.
நாங்களும் ஒருநாள் பஜனைச் சிலவை செய்ய உத்தேசித்து
ப்ரஸாதமும் நாங்களே செய்தோம்.
அப்புறம் …
View original post 422 more words






