அன்னையர்தினப் பதிவு—27
இதிலும் சில ஸம்பவங்களின் ஞாபகத்துடன் தொடருகிறது. 27 வரை வந்துவிட்டோம்.வாருங்கள். அன்புடன்
விசுபலகை இதுமாதிரிதான்ஆனால்,அகலமாக இருக்கும், இது மாதிரிக்குதான்
பெங்களூர் குடும்பத்தைப் பற்றி நினைத்து விட்டால் அவ்வளவு
பெருமிதமாக இருக்கும் அம்மாவிற்கு.
அந்தக்குடும்பத்துப் பெண்களும்தான் என்ன எவ்வளவு மனதில்
ஒருவர்க்கொருவர் முரண்பாடுகளிருந்தாலும், அதையதை அப்படியே
விட்டு விட்டு, எதையும் ரகளையாக ஆக்காமல் நேசம் பாராட்டுவார்கள்.
அண்ணன் தம்பிகளும் அப்படியே. அவர்கள் குடும்பத்து பெண்கள்,
பேத்திகளெனஅவர்கள் வாழ்க்கைப்பட்ட இடத்திலும் யாவரையும்
நேசித்து இன்றளவும் வாழ்ந்து வருகிரார்கள்.
இப்படியெல்லாம் இந்த விசுப்பலகையில் உட்கார்ந்து யோசிப்பதுதான்
வேலையாக இருக்கிரது.
அதென்ன விசுப்பலகை.? விசுபலகையா? விசைப் பலகை இல்லை. நல்ல
பருமனான ,அழுத்தமுள்ள பலகைகளை ஒன்று சேர்த்து படுப்பதற்கு
இரண்டு மூன்று பெஞ்சுகளைச் சேர்த்தால் வரும் அகலத்திற்குச்
செய்யப்பட்ட அகலமான படுக்கும் பலகை.
அழகாக தாங்குவதற்கு நான்கு கால்களுக்குப் பதில், பிடிமானம்
இருக்கும்.? அது எந்தத் தலைமுறையில் செய்ததோ?
அவ்வளவு கனம்.
ஒரு முறை பிரார்த்தனைக்கு மயிலம் சென்ற போது,வளவனூரிலிருந்து
வேனின் மீது கட்டி யெடுத்து வந்தது.
ஹாலில் அதைப்போட்டு அதில்தான் அம்மாவின் வாஸம்.
காலையில் படுக்கை சுருட்டி வைத்தாகிவிடும். அதில்தான் மெத்
என்ற உணர்வுக்காக எத்தனை பழம் புடவைகள் மடித்துப்
போட்டிருக்கும். இதெல்லாம் ஏம்மா என்று கேட்பேன். வேண்டாமே
இதெல்லாம்.!
அசடே உனக்குத் தெரியாது. வயதானவர்களுக்கு இந்தப்புடவைகளால்
எவ்வளவு சுகம் கிடைக்குமென்று.
வயதானவர்கள் சமத்துதான். நாம்தான் அசடு.
உபயோகி. வேண்டாதபோது தூக்கி எறி.
எதையும் வீணாக்காது உபயோகிக்கும் சுபாவம். இதுதான் தியரி.
ஒரு ஸமயம் தில்லி வந்திருந்தேன். சென்னைக்கும் போகத்தான்.
View original post 467 more words
டால்.தோலுடன் கூடியபாசிப்பருப்பு
பத்து வருஷங்களுக்குமுன் ஜெனிவாவில் எழுதியக் குறிப்பு இது. பார்த்து வையுங்கள். அன்புடன்
இந்த டாலைப் பயத்தம் பருப்பில் தயாரிப்போம். அதுவும்
தோலுடன் கூடிய பருப்பு. ருசி நன்றாகவே இருக்கிரது.
டால் வகைகளை தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பிலும்
தயாரிக்கலாம்.
ரொட்டி. பூரி வகைகளுடனும், சாத வகைகளுடனும் சேர்த்தும்
.உண்ணலாம்.
எளிய வகைதான். வேண்டியவைகளைப் பார்ப்போம்.
தோலுடன் கூடிய பயத்தம் பருப்பு—-முக்கால் கப்
பொடிக்க ஸாமான்—மிளகு–அரை டீஸ்பூன்
சீரகம்—1டீஸ்பூன்
லவங்கம்—4
நறுக்க வேண்டியவைகள்—பச்சைமிளகாய்–3
வெங்காயம்—-2
உறித்த பூண்டு இதழ்கள்—4
தக்காளி—1
இஞ்சி—சிறிது
தாளிக்க எண்ணெய், நெய் வகைக்கு 2, 3 டீஸ்பூன்கள்
பிரிஞ்சி இலை—1
சிவப்பு கேப்ஸிகம்—-விருப்பத்திற்கு
பொடிகள்—மஞ்சள்பொடி—1டீஸ்பூன்
மாங்காய்ப்பொடி–1 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—சிறிது
ருசிக்கு,—உப்பு, துளி சர்க்கரை
செய்முறை— பருப்பைக் களைந்து சற்று ஊறவைத்து, மஞ்சள்ப்
பொடி, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் ப்ரஷர் குக்கரில்
2விஸில் வரும்வரை வைத்து வேகவிட்டு இறக்கவும்.
பொடிக்கக் கொடுத்த ஸாமான்களைப் பொடிக்கவும்.
வெங்காயம் ,இஞ்சி மிளகாய், பூண்டு வகைகளைப் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியாக நறுக்கிக் கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் நெய்எண்ணெயைக்காயவைத்து
பிரிஞ்சி இலையைப்போட்டு , வெங்காய வகையாராக்களையும்
சேர்த்து நன்றாக வதக்கவும். சுருள வதக்கி , பொடித்த
பொடியைப்போட்டுப் பிரட்டி நறுக்கிய தக்காளியையும் சேர்த்து
பின்னும் வதக்கவும்.
பெருங்காயம், மாங்காய்ப் பொடி சேர்க்கவும்.
வெந்த பருப்பைச் சிறிது மசித்து தாளிப்பில் சேர்த்து, வேண்டிய
உப்பு, துளி சக்கரை சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
ஆம்சூர் வேண்டாதவர்கள், எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.
பொடித்து போடுவது நல்ல வாஸனையைக்…
View original post 47 more words
அன்னையர் தினப்பதிவு—26
தொடரும் திருவண்ணாமலைப் பயணங்கள். மீள்பதிவு செய்ய முடியாது என்றே நினைத்தேன். செய்துவிட்டேன். படியுங்கள். அன்புடன்
பிறந்த நாள் குறிப்பிடுவதற்கு கார்த்திகை உற்சவத்தின் போதுதீபத்தின்
இரண்டாவது நாள் மிருகசீரிஷ நக்ஷத்திரம், வந்தவர்கள் யாவருக்கும்
வடைபாயஸத்துடன் வருஷா வருஷம் சமைத்துப்போட்டு ,அப்பாவின்
பிறந்தநாளைக் கொண்டாடுவது ஞாபகம் வந்தது.
தேதிகள் மாறிதான் நக்ஷத்திரங்கள் வரும். இருப்பினும், மாதத்தையும்
ஷஷ்டியப்த பூர்த்தி நடந்ததை வைத்து ஓரளவு தோராயமாகக் கொடுத்தது.
நல்ல வேளை பர்த் ஸர்டிபிகேட் கொண்டுவா என்றால் எங்கு போவது?
அடுத்து கல்வி எங்கு கற்றார்? என்ன படிப்பு?
ஒரு பதின்மூன்று வயது சிறுமி. நாற்பதுக்கு அதிகம் மாப்பிள்ளை.
மாப்பிள்ளை என்ன படித்தார், என்ன என்று விசாரித்தா கொடுத்தார்கள்.
அல்லது பெண்ணிற்குதான் அதை எல்லாம் கேட்கத்தான்
தெரியுமா?
ஊரைச் சுற்றிவா. இவ்வளவு படித்து வேலையிலுள்ள எவரையாவது
காண்பி.இங்லீஷும்,தமிழும் படிச்சு சொக்கா போட்டுண்டு வேலைக்குப்
போகும்பிள்ளை யாராவது காண்பி என்றுதான் சொல்லி இருப்பார்கள்.
ட்ரெயினிங் படித்தவரா?
இந்த வார்த்தைக்கே அர்த்தம் தெரியாது.
டேனிஷ் மிஷின் பள்ளியில் தனியாக ஆளை நியமித்தே
ஐம்பதுவருஷரிகார்டுகளைத் தேடினார்களாம்.
அங்கும் ரிகார்டுகளே இல்லாமற் போயிருந்தது.
அதற்குப் பிந்தைய இரண்டொரு வருஷ ரிகார்டுகள் கூட
இல்லாமலிருந்ததுதான் கண்டுபிடிக்கப் பட்டிருந்தது.
இப்படி,அப்படி என்று எல்லாத் தேடல்களையும் ஒருவாராக
முடித்து அனுப்பினால் அது ஸரியில்லை,இதுஸரியில்லை என்ற
கடிதப்போக்கு தொடர்ந்து கொண்டே இருந்தது.
நல்ல முறையில் பணம் கிடைத்தால், இதற்கெல்லாம் பாடு பட்டவர்க்கு
எந்த முறையிலாவது கணிசமாக உதவ வேண்டும்என்ற
இம்மாதிரி எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
காங்கிரஸ் தியாகி அவர்களின் முயற்சி சென்னை மந்திரி ஸபை
View original post 468 more words
அரிநெல்லிக்காய் சாதம்.
இதுவும் சென்னையில் செய்தது. ருசியுங்கள். அன்புடன்
கலந்த சித்ரான்னம் மேலே உள்ள படம்.
இப்போதுஅரிநெல்லிக்காய்ஸீஸன்.அரிநெல்லிக்காயிலும்
பலவிதங்கள் செய்யலாம். ஸீஸனில் மலிவாகவும்கிடைக்கும்.
சென்னையில் எங்கள் வீட்டு மனையில் அரிநெல்லிமரம் இருக்கிறது.
இரண்டு வருஷங்களாகக் காய்க்கத் துவங்கியுள்ளது.முன்பெல்லாம்
வாங்கி பச்சையாகத் தின்போம். ஜூஸ்செய்து குடிப்போம். ஆனால்
இப்போது ஊறுகாய்,சாதம் , பச்சடி, ஜூஸ் என எல்லா விதத்திலும்
உபயோகிக்கிறோம். நல்ல ருசியாக இருக்கிறது.
வீட்டுமரம் என்றால் பறித்தவுடன் செய்து சுவைக்க முடிகிறது.
நீங்களும் செய்து பார்க்கலாமே!!!!!!! இதனுடைய புளிப்பு
ருசி வித்தியாஸமானது.
வேண்டியவைகள்.
அரிநெல்லிக்காய்——புளிப்புக்குத் தக்கபடி–12
உதிரியாக வடித்த சாதம்- இரண்டுகப்
பச்சைமிளகாய்—ஒன்று. காரம் அதிகம் சேர்க்கலாம்
இஞ்சி—சிறிதளவு
தாளித்துக்கொட்ட—கடுகு,உளுத்தம் பருப்பு,கடலைப்பருப்பு வகைக்கு
சிறிதளவு.
கலர் கொடுக்க–ஒரு துளி மஞ்சள்ப்பொடி
பெருங்காயப் பொடி—வாஸனைக்குச் சிறிது
நல்லெண்ணெய்—-3 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
கறிவேப்பிலை சில இலைகள்.
செய்முறை.
நல்ல பழுத்த நெல்லிக்காய்களாகப் பொறுக்கிச் சுத்தம் செய்து
கொப்பரைத் துருவல் மூலம் துருவிக் கொள்ளவும்.
சாதம் இரண்டு கப் அளவிற்கு எடுத்து ஆறவிடவும்.
நான்ஸ்டிக் பேனிலோ,அல்லது அலுமினியம் வாணலியிலோ
எண்ணெயைக் காயவைத்து முறையே கடுகை வெடிக்கவிட்டு
பருப்புகளைச் சிவக்க வறுத்து ,நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாயை
வதக்கவும்.
துருவிய நெல்லிக்காய்த்துருவலைச் சேர்த்து வதக்கவும்.
உப்பு,மஞ்சள் , பெருங்காயம்சேர்த்து சுருள வதக்கவும்.
கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி, சாதத்தில்க் கொட்டிக்
கலக்கவும்.
வறுத்த வெந்தியப்பொடி,சீரகப்பொடி சேர்க்கலாம்.
காரட்,காப்ஸிகம்,பச்சைப் பட்டாணி, முதலியவைகளும் வதக்கும்
போது சேர்த்து வதக்கலாம்.
காரம் அதிகமாக்கிக்…
View original post 18 more words
அன்னையர் தினப்பதிவு 25
பதிவு 25 உங்கள் பார்வைக்கு வருகிறது. அம்மா கோர்ட்படி ஏறியது, இன்னும் சில ஸம்பவங்கள் இதில். இன்னும் ஐந்து வாரங்கள்தான் பாக்கி. படியுங்கள். அன்புடன்
அப்பா இறந்த போது காரியங்களில் ஒன்றான சர்மஸ்லோகம்
வாசித்தளித்த பேப்பர் என்னிடம் உள்ளதா?
அதைஆதாரமாகக் காட்டமுடியுமா என்ற ஒரு யோசனை.
என்னிடம் உள்ளதா எனக்கேட்டு ஒருகடிதம்.
கடிதம் கைக்குவரவே மூன்று வாரமாகி விட்டது.
பாரக்பூர்,காட்மாண்டு என எத்தனை குடிப்பெயற்சிகள்.
அதுவும் எங்கு ஒளிந்து கொண்டதோ கிடைக்கவில்லை.
அப்பா காலமான விஷயம், நமது விசேஷ நிருபர் என்ற
தலைப்பில் சுதேசமித்திரன் பாரத தேவியில் வந்தது, என எந்த பேப்பர்
கட்டிங்கும் கிடைக்கவில்லை.
நீ சிரமப்படாதே பென்ஷனுக்காக அலையவும் வேண்டாம்,நிம்மதியாய்
இரு. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என்றுதான் சொல்ல முடிந்ததே
தவிர எந்த முயற்சியும் செய்ய யாருக்கும் நேரம்,காலம்,இல்லை
என்றுதான் சொல்ல முடிந்தது.
அயலூர் மாற்றலாகிச் சென்ற பேரன்,பெண் அவர்கள் குடும்பத்துடன்
வரபோக இருக்கிரார்கள் என்ற செய்தியும் இடையே கிடைத்தது.
இதில் அம்மாவிற்கு மகிழ்ச்சி.
நம்முடன் வரபோக இல்லாவிட்டாலும் அவர்கள் குடும்பம்
ஒற்றுமையுடன் இருந்தால் ஸரி என்ற எண்ணம் ஒரு மகிழ்ச்சியைத்
தந்தது. இப்படிச் சில காலம் கடந்தது. ஒருநாள்
பாட்டி உங்கள் பேரனுடன் ஜோடியாக ஸ்கூட்டரில் ஒரு பெண்ணும்
போவதைப் பார்த்தேன் என மாப்பிள்ளை சொல்ல
நீயாரைப் பார்த்தாயோ? நல்ல பிள்ளை அவன். நீ வேறு யாரையாவது
பார்த்திருப்பாய்.
அம்மாவின் மனதில் எண்ணங்கள் ஓடியிருக்கும். இது என்ன புது
ஸமாசாரம் என்று.
ஒரு பத்துப் பதினைந்து நாட் கழித்து, பேரன்,அவன் மனைவி,மாமியார்,
அம்மா என எல்லோரும் விஜயம்.
வாங்கோ என்று கூப்பிட்டதற்கு…
View original post 391 more words
இதுவும் ஒரு பூவே

பதிவை மேம்படுத்த
சேமிக்கப்பட்டதுPreview(ஒரு புதிய தாவலில் திறக்கிறது)தலைப்பைச் சேர்இதுவும் ஒரு பூவே

பூண்டின் பூவிது. மொட்டும் மலரும். நன்றாகவுள்ளதா?ஸாதாரணமாக வெங்காயத்தின் தாள்கள் தெரியும். இதையும் பாருங்கள்.
அன்னையர் தினப் பதிவு—24
அம்மாவின் நினைவான பதிவுகளும் வேறு வழியாகத் திரும்புகிறது. பாருங்கள் படியுங்கள். அன்புடன்
பசங்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்ததே அவர்தானாம்.
பூராவுமே அவர்கள் பள்ளிக்கூடத்தில்தானாம் படித்தது..
இதெல்லாம் முன்னாடியே தெரிந்து கொள்ள வேண்டாமா?
நான் ஒரு அசடு. .
எப்படி என்னால் இப்படியெல்லாம் சொல்ல முடிந்தது?
அம்மா மனதில் இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டிருப்பாள்.
காட்மாண்டுவில் ஸெயின்ட் ஜேவியர்ஸ் பள்ளியை அடுத்து
எங்களின் வீடு.
இரண்டாவது மாடி நாங்கள் இருப்பது. அவர்கள் ஸ்கூலில் நடப்பது
ஒவ்வொன்றையும் பார்க்க முடியும்.
பிள்ளைகள் அவ்விடம் படித்ததால், அடிக்கடி அவர்களைப் பார்ப்பது,
பேசுவது,அவர்களும் நம் வீட்டிற்கு வந்து போவது,யாராவது
தமிழ் ஃபாதர்கள், பிரதர்கள் வந்தால் தமிழ்க்குடும்பம், நாம்
அவர்களுக்கு வேண்டியவர்கள், என்ற முறையில் அறிமுகப்
படுத்துவது, அவர்களைச் சாப்பிட அழைத்து வருவது என்ற முறையில்
யாவரும் வந்து போவது எல்லாம் வழக்கமானது.
இதெல்லாம் நேரில் சொல்ல, நினைத்தபோது போனில் சொல்ல
வசதிகளும் கிடையாது.
என்ன செய்யலாம் பசங்களிடம் அம்மாவின் கேள்வி.
நீ எதெல்லாம் செய்கிறாயோ அது போதும்.
நம்மாத்தில் சாப்பிட்டு அவர்களுக்கு வழக்கம்.
ரஸம் இரண்டு டம்ளர் வாங்கிக் குடிப்பார்கள். கவலையே வேண்டாம்.
எது செய்தாலும்,தோசை,இட்லி தெரியாதது ஒன்றுமே இல்லை.
ஃபாதரும் வந்தார். ஃபில்டர் காஃபி.
இட்லி,சட்னி,மிளகாப்பொடி எண்ணெய் எல்லோரும் சாப்பிட்டோம்.
ஒரு ரூம் வீட்டில் சேர்தான் உண்டு. மேஜை கிடையாது.
அவரும் விசேஷ ஸௌகரியங்கள் எதுவும் எதிர்பார்க்க மாட்டார்.
அவர்கள் தங்கும் இடத்தில் எல்லா ஸௌகரியங்களும் உண்டே தவிர
கையில் சிலவு செய்ய அதிக பணம் கிடையாது. கிடைக்காதோ என்னவோ?
எங்கு…
View original post 500 more words
கார சாரமான பூண்டுப் பொடி
என்ன காமாட்சியம்மா பூண்டு போட்டு ஒரு பொடியா? நம் தோசை மிளகாய்ப் பொடியுடனும்போட்டுச் செய்பவர்கள் இருக்கிறார்கள். இது வேறு ஒருவிதம்.என்னைப்பார் என்று அதுவும் வருகிறது . மிகவும் புராதனமான பொடி. அன்புடன்
இதைச் சின்ன அளவில் செய்து பாருங்கள். ஊறுகாய் போலவும்
சட்னிக்குப் பதிலாக அவசரத்திற்கும் உபயோகப்படும்.
இதுவும் கிராமங்களில் செய்யும் ஒரு ருசியான அவசர
தயாரிப்பு.
வேண்டியவைகள்
வேர்க் கடலை—3 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள்—3 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல்— 3, அல்லது 4.
உறித்த பூண்டு இதழ்கள்—கால் கப்
ருசிக்கு உப்பு
பெருங்காயம்—வாஸனைக்கு
ஆம்சூர்—ஒரு டீஸ்பூன் அல்லது துளி புளி
ஒரு துளி எண்ணெய்
செய்முறை.
வெறும்வாணலியில்தனித்தனியாகஎள்ளையும்,வேர்க்கடலையையும்
சிவக்க வறுக்கவும்.
வேர்க் கடலையை கையினால் தேய்த்து தோலை நீக்கவும்.
துளிஎண்ணெயில் மிளகாயையும் சிவக்க வறுக்கவும்.
இவைகளைப் பெருங்காயம்சேர்த்துமிக்ஸியில்கரகரப்பாகப்
பொடிக்கவும்.
உறித்த பூண்டைதுண்டுகளாக்கி அரைத்த சாமான்களுடன்
உப்பு சேர்த்து சற்று மசியும்படி 2 சுற்று சுற்றவும்.
சேர்ந்தாற் போல வரும்.
ஆம்சூர். சேர்த்து சிறிய உருண்டைகளாகச் செய்துசிறிதுநேரம்
வெளியில் வைத்து பாட்டிலில்எடுத்துவைத்துஉபயோகிக்கவும்.
புளிப்புக்காக புளியோ, ஆம்சூரோ உபயோகிக்கவும்.
எள், வேர்க் கடலை உபயோகிப்பதால், எண்ணெய்ப் பசையுடன்
சேர்ந்தாற்போல இருக்கும். ஜலம் உபயோகிப்பதில்லை.
நீண்ட நாட்கள் கெடாது.
எள்மட்டிலும் சேர்த்தும், செய்யலாம்.
அதேபோல் வேர்க்கடலை மட்டும் சேர்த்தும் செய்யலாம்..
லின் ஸீட் சேர்த்தும் செய்யலாம். நான் நினைத்துக்
கொண்டேன் அக்ரூட், பாதாம், முந்திரி, ஸன்ப்ளவர் ஸீட்
என ஏதாவது வீட்டிலிருப்பதையும் ஏதாவதொன்றை சிறிது
சேர்த்தும் செய்து பார்க்க வேண்டுமென்று.
பூண்டை பச்சையாகவே வதக்காமல் போட வேண்டும்.
சற்று ஊற,ஊற பொடி சற்று உதிர் பதத்தில் வரும்.
காரம் வேண்டிய அளவிற்கு கூட்டவும். நான்
செய்தது,எள்,வேர்க்கடலை…
View original post 9 more words
அன்னையர் தினப்பதிவு—23
அம்மாவின் சென்னைக் குடும்பமும் பாதிரியார்களின் வருகையும்.பாருங்கள் அன்புடன்
அமெரிக்கன் ஃபாதர்கள்
எங்களுக்கு மிகவும் வேண்டியவர்களில் சிலர்.
rev father ஸுபோல், ரெ டௌனி, ரெ மோரன், ரெ காயின், ரெ மில்லர்,பிரதர் கெம்பன்ஸ்கி,
மற்றும் அவர்களுடன் வேலை செய்த ஆசிரியர்கள் முதலானவர்களின் படங்கள்.
மற்றபடி
நாங்கள் ஊர் வந்து சேர்ந்தோம். பேத்தியும்,மாப்பிள்ளையும்
வருவதற்கு முன்பே, அம்மாவும் வந்து விட்டாள்.
புத்தி சொல்லிவிட்டு வந்தேன்.
அடிக்கடி போய் பார்த்துவிட்டுவா என்று சொன்னேன். சென்னை
பெண்ணிற்கான புத்திமதி இது.
மற்றபடி யாவும் நல்லபடி நடந்தது. நாங்கள் காட்மாண்டு திரும்பும்
போது அம்மாவிடம் சென்னையில் சின்னதாக ஒரு இடம் பார்த்து
பேரன்களோடு இரேன். என்றேன். யோசனை செய் என்றேன்.
ஐயோ எனக்குப் புருஷக் குழந்தைகளே ஆவிவரவில்லை.
எங்காவது என் பெயர் சொல்லாமலேயே நன்றாக இருக்கட்டும்.
இங்கே ஊரையும்,மக்கமனுஷாளையும் விட்டு விட்டு பட்டின மாஸக்
குடித்தனம் எனக்கு ஸரிபட்டுவருமா?
அங்கே வீடுபார்க்கணும்,இங்கே எல்லாத்தையும் ஸெட்டில் பண்ணணும்
சட்டுனு ஆரகாரியமா.?
புருஷபசங்க நன்னா படிச்சு பேர் வாங்கணும். எனக்கு என்ன தெரியும்.
மனஸாலே கூட நினைக்காதே! நானும் என் வேஷமும். புடவையை
பாத்தாலே பாப்பாத்தின்னு திட்ர கூட்டம் ஒண்ணு.
அங்கெல்லாம் ஸரிப்பட்டு வராது.
எங்களுக்கும் அதிகம் வற்புறுத்த,இருந்து எல்லாம் செய்ய நேரமில்லை.
ஒருவழியாக பைரோடாகவே ஊர் போக நினைத்தும் பாட்னா,கங்கைப்
பிரவாகம் என ப்ளேன் சிலவு செய்தே காட்மாண்டு போய்ச் சேர்ந்தோம்.
வீட்டைக் கட்டிப்பார்,கல்யாணம் செய்து பார் என்று சொல்வார்களே
அதைக் கணக்குகள் பார்த்தால்தானே தெரியும்?
இந்தியன்…
View original post 375 more words












