Archive for மே 24, 2009
துவையல் வகை சட்னி
புதினா பச்சை சட்னி.–வேண்டியவை-இரண்டு மூன்று கைப்பிடி கழுவியபுதினா இலை, ஒரு வெங்காயம், பச்சைமிளகாய்மூன்று, சிறியதுண்டு வெல்லம், உப்பு, சிறிது எலுமிச்சை சாறு,. யாவற்றையும் மிகசியில் போட்டு நீர் தெளித்து அரைத்தெடுக்கவும். சாஸ் பதத்தில் தயாரித்து காரவகைகளுக்கு ஜோடியாகக் கொடுக்கலாம். இதே வகையில் பச்சைக் கொத்தமல்லி, இளம் கறிவேப்பிலையிலும் தயாரிக்கலாம். புளிப்பிற்காக புளியையும் உபயோகிககலாம்.
புளிச் சட்னி—-வேண்டியவை–புளிஎலுமிச்சை அளவு, சீரகம்,பெருஞ்சீரகம்ஒவ்வொரு டீஸ்பூன், உப்பு, வெல்லம்ஒரு துண்டு, சாட்மஸாலா அரைஸ்பூன்.
சுடு தண்ணீரில் புளியை ஊறவைத்து கெட்டியாகச் சாறு பிழிந்து வடிக்கட்டிக் கொளளவும். சீரகங்களை வெறும் வாணலியில் சிவக்க வருத்துப பொடித்துக் கொள்ளவும். புளிச்சாறை நிதானமானதீயில் நன்றாகக் கொதிக்க வைத்து மற்ற சாமான்களையும் சேர்த்து சாஸ் மாதிரியான பதத்தில் இரக்கி உபயோகிககவும். இதுவும் காரவகையான சமோசா போண்டா பஜ்ஜிகளுடன் ஜோடியாகிறது. வட இந்தியாவின் இம்லி சட்னி இது.
பெருங்காயம்,இஞ்சி சேற்பது அவரவர்கள் சாய்ஸ்.