Archive for மே 27, 2009
தவலடை
பிடி குழக்கட்டைககு தயாரித்த மாதிரி, மாவு கிளரிக்கொள்ளவும். மிளகாய் சேர்க்காமல் ஒரு டீஸ்பூன் மிளகு பொடித்து சேர்க்கவும். ஆறியபின் தண்ணீரைத்தொட்டு பெரிய வடைகளாக பொத்தலுடன் தயாரித்து வைத்துக் கொள்ளவும். அடி கனமான அகலமான வாணலியிலோ அல்லது நான் ஸ்டிக் பேனிலோ பரவலாக எண்ணெய்த டவி நடுவிலும், சுற்றிலுமாக தோடு , மாதிரி வைத்து சற்று தாராளமாகவே எண்ணெய் சுற்றிலும் விட்டு மிதமான தீயினில் வேகவிடவும். இரண்டொரு நிமிஷம் தட்டினால் மூடித் திறக்கவும். அடி பாகம் சிவந்ததும் திருப்பிப் போட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு அடைமாதிரி முருகலாக எடுக்கவும்.
எல்லாவித சட்னிகளோடும் ஒத்துப்போகும். மேலே கரகரப்பூ உள்ளே உப்புமாபோல மெத்தென்றும் இருக்கும். தேங்காய் அதிகமாகச் சேர்த்தால் ருசி கூடும். அடுத்து இன்னொரு விதம்.
ஹோட்டல் தவலடை———பச்சரிசி,—-உளுத்தம்பருப்பு,—–கடலைபபருப்பு,—–பயத்தம்பருப்பு——–துவரம்பருப்பு யாவும்—-தனித்தநியாக 100–100 கிராம்கள்.——–காய்ந்தமிளகாய்நானகு,—-ஒருகப்தேங்காய்த் துருவல்—–இஞ்சிஒரு துண்டு–சீரகம்ஒருடீஸ்பூன்–வேண்டியஅளவுஉப்பு—நறுக்கிய பச்சைக் கொத்தமல்லி பொரித்தெடுக்க எண்ணெய்.
அரிசி,பருப்பு வகைகளை 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து களைந்து நீரை ஒட்ட வடிக்கட்டவும். எண்ணெய் நீங்கலாக மற்றவைகளைச் சேர்த்துமிக்ஸியில் கரகரப்பாக நீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்தெடுக்கவும். இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் நன்றாகக் காய்ச்சி மாவுடன் கலக்கவும்.வாணலியில் எண்ணெயைக காய வைத்து, பொத்தலிடாமல்வடைகளைத் தட்டிப போடடு இருபுறமும் சிவக்க வேக விட்டு எடுக்கவும். விருப்பமான சட்னிகளுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
கனமான பாலிதீன் பேப்பரின்மேல் வடைகளைத் தயாரிக்கலாம்.