Archive for திசெம்பர் 23, 2009
ரஸப் பொடி
- வேண்டியவைகள்——–காய்ந்த மிளகாய் வற்றல் 200 கிராம்
- .கொத்தமல்லி விதை 500 கிராம்.
- துவரம் பருப்பு 200 கிராம்.
- மிளகு 200 கிராம்.
- சீரகம் 200 கிராம்.
- விரளி மஞ்சள் 100 கிராம்.
செய்முறை——–மிளகாயைக் காயவைத்து, காம்பை நீக்கிக கொள்ளவும். மற்ற சாமான்களையும் , வெய்யிலில் நன்றாகக்
காயவைத்து ,ஒன்றாகச் சேர்த்து மிஷினில் கொடுத்து மிகவும்
நைஸாக இல்லாமல், சற்று,கரகரப்பான பதத்தில், அறைத்துக்
கொடுக்கச் சொல்லி , பேப்பரில் கொட்டிப் பரவலாக வைத்து
ஆறவைத்து பாட்டில்களில் எடுத்து வைத்து உபயோகிக்கவும்.
அவ்வப்போது புதியதாகச் செய்வதானால் சிறிய அளவில்
வருத்துப் பொடி செய்து கொள்ளலாம். மிஷினில் அறைப்பதாநாலும்
லேசாக வறுத்துக் கொடுக்கலாம். வறுத்து அறைத்த பொடி
கெட்டுப் போகாது. நீண்ட நாட்கள் இருக்கும்.
ஸாம்பார்ப் பொடி.
வேண்டிய ஸாமான்கள்
கால் கிலோ மிளகாய் வற்றல்
அரைகிலோ கொத்தமல்லி விதை
துவரம் பருப்பு 150 கிராம்.
கடலைப் பருப்பு 150 கிராம்.
விரளி மஞ்சள் 100 கிராம்.
மிளகு 100 கிராம்.
வெந்தயம் 100 கிராம்.
செய்முறை ——எல்லா ஸாமான்களையும், நல்ல வெய்யிலில் தனித்தனியாக
காய வைத்து.மஞ்சளைத் துண்டு செய்து சேர்த்து , மிளகாய் அரைக்கும் மிஷினில்
அரைத்து, சூடுபோக ஆறவைத்து பாட்டில்களில் எடுத்து வைக்கலாம்.
குண்டு மிளகாயாக இருந்தால் காம்பை நீக்க வேண்டாம். நீளவாகு மிளகாயாக
இருந்தால் காம்பை நீக்க வேண்டும். வீட்டில் குறைந்த அளவு. மிக்ஸியில்
செய்வதானால் நன்றாக வறுத்தே செய்ய வேண்டும். மிஷினில் ்அரைக்கும்
பொடியை அவ்விடமே பெரிய பேப்பரில் பரத்தி. ஆறவைக்க வேண்டும்.
காய்ந்த கறிவேப்பிலை சேர்த்து அரைப்பதும் உண்டு.