Archive for திசெம்பர் 24, 2009
கறிப்பொடி
வேண்டியவைகள்– ——–கடலைப் பருப்பு அரைகப்
உளுத்தம் பருப்பு அரைகப்,
தனியா அரை கப்,
மிளகாய் வற்றல் 15 , வேண்டிய காரத்திற்கு தக்கபடி
கட்டி பெருஙகாயம் சிறிதளவு
அரை டீஸ்பூன் எண்ணெய்
செய்முறை——நிதானமான தீயில் அரைஸபூன் எண்ணெயை
வாணலியில் விட்டு காய வைத்து தனியாவைத் தவிர
மற்ற சாமான்களைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
தனியாவைத் தனியாக வறுத்துச் சேர்க்கவும்.
ஆறியபின் யாவற்றையும் மிக்ஸியிலிட்டு ரவைபோன்ற
கரகரப்பான பதத்தில் அரைத்தெடுத்து பாட்டில்களில்
கொட்டி மூடி வைத்து உபயோகிக்கலாம்.
வாஸனை பிடித்தவர்கள் சிறிதளவு சீரகமோ, பட்டையோ,
சேர்த்துப் பொடிக்கலாம். எண்ணெயில் வதக்கும் காய்
கறிகளுக்கும், வாழைக்காய், கத்தரிக்காய் ,கறிகளுக்கும்
இப்பொடி மிகவும் ஏற்றதாக இருக்கும்.