தோசை மிளகாய்ப்பொடி
திசெம்பர் 25, 2009 at 11:49 முப பின்னூட்டமொன்றை இடுக
வேண்டியவைகள்—-வற்றல் மிளகாய் 12அல்லது 15,-
காரத்திற்கேற்ப.
கடலைப் பருப்பு——-அரைகப்.
உளுத்தம் பருப்பு——-அரைகப்,
சர்க்கரை—-ஒரு டீஸ்பூன்,
புளி–ஒரு நெல்லிக்காயளவு,
வெள்ளை எள்—-கால்கப்,
பெருங்காயப் பொடி—-ஒரு டீஸ்பூன்
ருசிக்கு தேவையான உப்பு.
செய்முறை——வெறும் வாணலியில் எள், பருப்பு முதலானவற்றை ,
தனித் தனியாக, சிவக்க வறுத்துக் கொள்ளவும் .
துளி உப்புப்பொடி சேர்த்து காம்பு நீக்கிய மிளகாயை.
வெறும் வாணலியில் வறுத்தால் கமராமல் இருக்கும்.
புளியையும் பிய்த்துப் போட்டு வெறும் வாணலியில்
சற்றே வறுத்துக் கொள்ளவும்.
யாவும் ஆறிய பின் வேண்டிய உப்பு சேர்த்து ,புளி,
எள், நீங்கலாக, யாவையும் ஒன்று சேர்த்து மிக்ஸியிலிட்டு
பொடிக்கவும். சற்று பொடித்த பின் எள்ளைச் சேர்க்கவும்.
ஒரு சுற்று சுற்றி புளியையும் சேர்த்து கரகர என்ற
பக்குவத்தில் அரைத்து சுத்தமான பாட்டில்களில் எடுத்து
வைத்து உபயோகிக்கவும்.
இட்லி, தோசை என எல்லாவற்றிற்கும், நல்லெண்ணெய் சேர்த்துச்
சாப்பிட அவசரத்திற்கும் , அவசியத்திற்கும் ருசியானதுமான உற்ற
தோழனிது. வேர்க்கடலை, அல்லது பொட்டுக் கடலை சேர்த்தும்
உப்புக் காரத்தைக் கூட்டிக் குறைத்தும் செய்யலாம்.
Entry filed under: பொடி வகைகள்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed