Archive for ஜூலை 28, 2010
உருளைக்கிழங்கு காரக்கறி
வேண்டியவைகள்—-கால்கிலோ—-உருளைக் கிழங்கு
எண்ணெய்——5 டேபிள்ஸ்பூன்
மிளகாய்ப் பொடி——2 டீஸ்பூன்
சீரகப்பொடி——2 டீஸ்பூன்
மஞ்சள்பொடி—-1டீஸ்பூன்
ருசிக்கு—உப்பு
கடுகு—-1 டீஸ்பூன
பச்சை கறிவேப்பிலை—-கால்கப்
தோல் உறித்த பூண்டு இதழ்கள்—–10
செய்முறை———கிழங்குகளைத் தோலுடன் நன்றாக வேக வைத்துத்
தோலை உறித்து திட்டமான துண்டங்களாகச் செய்து கொள்ளவும்.
பூண்டை மென்மையாக நசுக்கிக் கொள்ளவும்.
கிழங்குடன் உப்பு, காரம், மஞ்சள் பொடியைக் கலக்கவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக்,
கடுகை வெடிக்க விட்டு ,கறிவேப்பிலையைச் சேர்த்து வறுக்கவும்.
தீயைக் குறைத்து பூண்டு விழுதைக் கூட்டி வதக்கவும்.
வதங்கியவுடன் கிழங்கைச் சேர்த்து நன்றாக திருப்பி விட்டு
வதக்கவும். சற்று ஈரப் பசைபோக வதங்கியவுடன் சீரகப்
பொடியைத் தூவிக் கலந்து இறக்கவும்.
பூண்டு வேண்டாமென்றால் இஞ்சியைச் சேர்த்துத் தயாரிக்கலாம்.
காரப் பொடியுடன், தனியாப் பொடி, கரம் மஸாலா, சிறிது
மாங்காய்ப் பொடியும் தேவையான அளவு சேர்த்துத் தயாரிக்கலாம்.
வறுத்த கறிவேப்பிலையும், பூண்டு, சீரகப் பொடியும் தனித்த
ருசியைக் கொடுக்கும்.