Archive for ஜூலை 29, 2010
கோஸ் கறி
மிகவும் சுலபமாகச் செய்யக் கூடியது.
வேண்டியவைகள்–—-கோஸ்—அரைகிலோ
பச்சை மிளகாய்—– 2
காரட்–1
பச்சை பட்டாணி—–ஒரு கைப்பிடி
அல்லது—-பச்சை கேப்ஸிகம்—-1
நசுக்கிய இஞ்சி—அரை டீஸ்பூன்
கடுகு–1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்–அரைகப் [விருப்பத்திற்கு]
எண்ணெய்——–2 டேபிள் ஸ்பூன்
ருசிக்கு—உப்பு
செய்முறை——-கோஸைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தண்ணீரில் அலம்பி வடிக்கட்டியில் போட்டு நீரை வடிக்கவும்.
கேரட்டையும் தோல் சீவி நறுக்கவும்..
மிளகாயை நீளவாட்டில் கீறிக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய்விட்டு காய்ச்சி,கடுகு
உளுத்தம்பருப்பைத் தாளித்து, இஞ்சி பச்சை மிளகாயை
வதக்கி கோஸ்,கேரட்,பச்சைப் பட்டாணியைப் போட்டுக் கிளறி
வதக்கி மூடி நிதான தீயில் கிளறிவிட்டு வதக்கவும்.
சற்று வதங்கியதும், வேண்டிய உப்பு சேர்த்துக் கிளறவும்..
நீர் வற்றியதும் தேங்காயைச் சேர்த்து வதக்கவும். கீழிறக்கி
நறுக்கிய கொத்தமல்லியைத் தூவவும்,. பட்டாணி இல்லாவிட்டால்
காப்ஸிகம் சேர்க்கவும்.
3 கலரில் பார்க்கவும். நன்றாக இருக்கும்.
ரொட்டிக்காக செய்யும் போது தனியா,மிளகாய்ப்பொடிகள்,
சேர்த்து, உருளைக்கிழங்கு துண்டங்களையும் கலந்து எண்ணெய்
அதிகம் விட்டு வதக்கலாம்.