Archive for ஜூலை 22, 2010
திடீர் தோசை
எண்ணினால் உடனே செய்ய முடியும்.
வேண்டியவைகள் அரிசி மாவு—1 கப்
மைதா அல்லது கோதுமை மாவு—-1கப்
மோர்—அரை கப்பிற்கு அதிகம் விருப்பப்படி
ருசிக்கு உப்ப
பச்சைமிளகாய்-1 நீளமாகக் கீறிக் கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் –கால் கப்பிற்கு குறையாமல்
வேண்டிய அளவு—–எண்ணெய்
செய் முறை—-மாவுகளை மோர்,உப்பு ஜலம் சேர்த்து
தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
மிளகாய் வெங்காயத்தை லேசாக வதக்கி ஆற வைத்து
மாவுடன் கலக்கவும்.
நானஸ்டிக் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி மிதமான
சூட்டில், தோசையை வார்க்கும் போதே பரவலாக மாவை
வீசிவிட்டு வார்க்கவும். .ஸாதா தோசையைப் போல் பரப்புவது
சரிவராது.
சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு நன்றாக
வேகவைத்து எடுக்கவும்.
சற்று முறுகலாக எடுத்தால் கூடுதலான டேஸ்டுதான்.
மிகுந்த தோசைமாவு [அறைத்தது] போதாது போனால்
இம் முறையில் மாவுகளைச் சேர்த்தும் வார்க்கலாம்.
ஸாதா தோசையைவிட மாவு சற்று நீர்க்க இருக்கலாம்.
துணைக்கு எது வேண்டுமோ அதைச் சேர்த்துச் சாப்பிடுவது
உங்கள் விருப்பம்.
மாம்பழக் குழம்பு.
வேண்டியவைகள் ——துவரம் பருப்பு—1கப்
புளி—சின்ன எலுமிச்சை அளவு
ஸாம்பார் பொடி–3 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்—2
கடுகு–1டீஸ்பூன்
வெந்தயம்–அரைஸ்பூன்
வாஸனைக்கு–பெருங்காயம்
ருசிக்குஉப்பு
தாளிக்க எண்ணெய்—3டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
நாட்டு மாம்பழம்—5,6
செய்முறை—–பருப்பைக் களைந்து மஞ்சள் பொடி சேர்த்து
திட்டமான தண்ணீருடன் குக்கரில் வேக வைக்கவும்.
புளியை ஊறவைத்து 4கப் தண்ணீரைச் சிறிது சிறிதாகச்
சாறெடுக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் புளி ஜலத்துடன் 5,6 சின்ன
மாம்பழங்களைச் சேர்த்து உப்பு, ஸாம்பார்ப் பொடி சேர்த்து
கொதிக்க விடவும்.
பழங்கள் சுருங்கி வெந்து குழம்பின் பச்சை வாஸனை போனபின்
வெந்த பருப்பைக் கலக்கிக் கொட்டி கொதிக்க விடவும்.
மிளகாய் கடுகு, வெந்தயம் பெருங்காயத்தை எண்ணெயில்
பொரித்துக் , கொட்டி 1டீஸ்பூன் அரிசி மாவைச் சிறிது ஜலத்தில்
கரைத்துவிட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி உபயோகிக்கவும்.
இது கிராமங்களில் கிடைக்கும் சாதாரணமான நாட்டு மாம்பழத்தில்
செய்வது வழக்கம். சாம்பார் ருசியாக இருக்கும். பழம் ருசியாக
இருக்காது.
கிளிமூக்கு மாம் பழத்தில் [ஒட்டு மாம்பழம்] செய்தால் புளியை
குறைத்து சேர்த்து பழத்தைத் துண்டுகளாக வெட்டிக் கலந்து
உப்புகாரம் சேர்த்து கொதிக்கவிட்டு ,வெந்த பருப்பைச் சேர்த்து
தாளித்துக் கொட்டலாம்.
1 டீஸ்பூன் தனியாவையும், சிறிது தேங்காயையும் வறுத்துஅறைத்து
சேர்த்தால் ருசி கூடும்.
சற்று புளிப்பும், இனிப்புமான குழம்பு இது.
மாம்பழ மணத்துடன் ருசியாக இருக்கும். கொத்தமல்லி
கறி வேப்பிலை சேர்த்து மணத்தை அதிகப் படுத்தலாம்.