Archive for நவம்பர் 19, 2010
சோலே[செனாமஸாலா]
வேண்டியவைகள்
வெள்ளை கொண்டைக் கடலை—-2கப்காபூலிச்செனா]
அரைக்க.வெங்காயம்—-பெறியதாகஒன்று
பூண்டு—-4 இதழ்கள்
இஞ்சி–அரை அங்குலத் துண்டு
தக்காளி–பெறியதாக 1
வேண்டிய பொடிகள்—தனியாப்பொடி–2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி—1டீஸ்பூன்
மஞ்சள்பொடி–அரை டீஸ்பூன்
ஏலப்பொடி–சிறிது
பொடிக்க-லவங்கம்–8
மிளகு—1 டீஸ்பூன்
பட்டை—சிறு துண்டு
தாளிக்க,எண்ணெய்—-4டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை–1
ருசிக்கு—உப்பு
கெட்டியாகக் கரைத்த புளி ஜலம்—-3 டேபிள்ஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி—–சிறிதளவு
செய்முறை.—-கடலையை 5, 6,மணிநேரத்திற்குக் குறையாமல்
தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
கேஸ்ரோலில் சூடான தண்ணீர் விட்டு கடலையைப் போட்டு மூடி-
-வைத்து ஊறவைத்தால் அவசர சமயங்களில் சீக்கிரமாகவே
ஊறும்.
தக்காளியைத் தனியாகவும், பூண்டு,வெங்காயம்,இஞ்சி இவைகளைச்
சேர்த்துத் தனியாகவும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
பட்டை,லவங்கம், மிளகு இவைகளைப் பொடிக்கவும்.
ஊறவைத்த கடலையை நான்கு கப் ஜலம் சேர்த்து ப்ரஷர்
குக்கரில் நன்றாக வேகவைக்கவும். இரண்டு மூன்று விஸில்
வந்த பிறகு ஸிம்மில் வைத்து 4 ,அல்லது 5 நிமிஷங்கள்வைத்து
இறக்கவும்.
சற்று பெறிய வாணலியிலோ, அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்திலோ
எண்ணெயைக் காய வைத்து, அரைத்த வெங்காய இஞ்சி,பூண்டு
விழுதைச் சேர்த்து நிதான தீயில் நன்றாக க் கிளறிக் கொடுத்து
வதக்கவும்.
எண்ணெய் பிறிந்து வருமளவிற்கு வதக்கி எல்லாப் பொடிகளையும்
சேர்த்துக் கிளறி, தக்காளி விழுதைச் சேர்த்துத் திரும்பவும்
வதக்கவும். எண்ணெய் போதாவிட்டால் சிறிது விடவும்.
மஸாலா சேர்ந்து வரும்போது, பிரிஞ்சி இலையைச் சேர்த்து
வெந்த கடலையையும் , ஜலத்துடனேயே சேர்த்துக் கொதிக்க விடவும்.
உப்பு, கடலையை வேக வைக்கும் போதும் சேர்க்கலாம்..
இப்போதும் சேர்க்கலாம். கொதிக்கும் போதே புளி ஜலத்தைச்
சேர்க்கவும்.
நனறாகக் கொதித்து கலவை வேண்டிய அளவிற்கு கூட்டுப்
பதம் வரும் போது இறக்கி கொத்தமல்லியைத் தூவவும்.
நெகிழ வேண்டுமானால் வேண்டிய அளவிற்கு கொதிக்கும் போதே
ஜலத்தைக் கூட்டவும்.
கலவை பிரகு கூட கெட்டியாகும் வாய்ப்பு உள்ளது.
இரண்டு ஸ்பூன் வெந்த கடலையை எடுத்து மசித்தும்
சேர்க்கலாம்.
கரம் மஸாலா பிடிக்காதவர்கள் அதை நீக்கி வெங்காயத்தை
அதிகம் சேர்த்தும் தயாரிக்கலாம்.
ரொட்டி, பூரிவகைகளுடனும், சாதத்துடனும், சமோசாக்களுடனும்
சேர்த்துச் சாப்பிட ருசியானதுதான்.
வழக்கம்போல உப்பு, காரம் உங்கள் கையில்.