Archive for திசெம்பர், 2010
வாழ்த்துக்கள்
2011 ஆம் ஆங்கில வருஷத்தை வருக வருக என்று அன்புடன் வரவேற்று உலகத்து மக்கள் யாவருக்குமே அன்பு கலந்த வாழ்த்துக்களை பரஸ்பரம் சொல்லி வரவேற்போம். அன்புடன் நல் வாழ்த்துகள் . சொல்லுகிறேன்.காமாட்சி…அட்வான்ஸான பகிர்வு.
வெந்தயக்கீரைப் புலவு
இதுவும் சுலபமாகச் செய்யக் கூடிய ஒன்றுதான்.
வேண்டியவைகள்
மெல்லியரக பாஸ்மதி அரிசி—1 கப்
தேங்காய்த் துருவல்—-2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்—–2 டேபிள் ஸ்பூன்
நெய்—–1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம்—-1 சிறியதாக நறுக்கவும்
பூண்டு—–2 இதழ்கள் தட்டிக் கொள்ளவும்
பச்சைப் பட்டாணி—அரைகப்
பச்சை மிளகாய்—2 கீறிக் கொள்ளவும்
சற்று பெறியதாக தக்காளிப் பழம்—1 நறுக்கியது
சுத்தம் செய்து நறுக்கிய வெந்தயக் கீரை—-ஒன்றறை கப்
இஞ்சி—-வாஸனைக்குத் துளி
லவங்கம்–2, ஏலக்காய் 1 , பட்டை வெகு சிறியத் துண்டு
இஷ்டத்திற்கிணங்க முந்திரி, திராட்சை
ருசிக்கு—உப்பு
சீரகம்—சிறிது
செய்முறை—- அரிசியைக் களைந்து தண்ணீரை இறுத்துவைக்கவும்
ஒரு கப் செய்ய ப்ரஷர் பேனே போதுமானது.
பட்டை,லவங்கம், ஏலக்காயை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்.
பேனில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து சீரகம் தாளித்து
நறுக்கிய மிளகாய், வெங்காயம்,பூண்டு இஞ்சியை வதக்கவும்
.மசாலாவைச் சேர்க்கவும்
தேங்காயைச் சேர்த்துப் பிரட்டி கீரையைச் சேர்த்து வதக்கி
கீரை வதங்கியபின் பொடியாக நறுக்கிய தக்காளி,பட்டாணி
சேர்த்துக் கிளறி நிதான தீயில் வைத்து அரிசியையும்
சேர்த்து ப் பிரட்டி உப்பும் கால் டீஸ்பூன் சர்க்கரையும்
சேர்த்து ஒன்றறைக் கப் தண்ணீர் விட்டுக் கிளறி மூடி
ப்ரஷர் குக் செய்யவும் ஒரு விஸிலே போதும்.
ஸிம்மில் 2, 3 நிமிஷங்கள் வைத்து இறக்கவும்
முந்திரி, திராட்சையை யும் தாளிப்பிலேயே சேர்க்கவேண்டும்.
தேங்காய்க்குப் பதில் தேங்காய்ப் பால் சேர்க்கலாம்.
சர்க்கரை சேர்ப்பது கலர் மாறாதிருக்க வேண்டியே.
என்ன இஷ்டமோ பச்சடி செய்து ஜோடி சேர்க்கவும்.
கீரையை நறுக்காமலும் வதக்கலாம்
உங்களின் குக்கர் நேரம் உங்களுக்குத் தெறியும்
அதை அனுசரிக்கவும்.
ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும் என்று எழுதினால்
சுருக்கமாக முடிந்திருக்கும்.
டில்லியில் வெந்தயக்கீரை பச்சென்று அவ்வளவு நன்றாக இருக்கும்.
தயிரில் தக்காளி, ப.மிளகாய்,வெங்காயம், கொத்தமல்லி பொடியாக
நறுக்கிச் சேர்த்து உப்பு கலந்தால் பச்சடியும் ரெடி. ஸிம்பிள்
திருவாதிரைக் குழம்பு
களியுடனான குழம்பு இது.
Continue Reading திசெம்பர் 20, 2010 at 6:27 முப 5 பின்னூட்டங்கள்
திருவாதிரைக் களி.
திருவாதிரை ஒருவாக் களிதின்னாதவா நரகக்குழி
இப்படி ஒரு வசனம் சொல்வார்கள் பழைய காலத்தில்.
நாம் களியை செய்து பார்த்து விடலாம்.
வேண்டியவைகள்—பச்சரிசி—1 கப்
துவரம் பருப்பு—2டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு—2 டேபிள் ஸ்பூன்
வெல்லப்பொடி—-ஒன்றறைக் கப்
நெய்—2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துறுவல்—அரைகப்
முந்திரி திராட்சை—-விருப்பம்போல்
ஏலப்பொடி—-சிறிது
இருந்தால்—ஒருஸ்பூன் தேன்
செய்முறை.——அரிசியைக் களைந்து உலர்த்தி சிவக்க வறுத்து
மிக்ஸியில் ரவை போல் பொடித்துக் கொள்ளவும்.
பருப்புக்களையும் வறுத்து ரவைபதத்தில் பொடிக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் இரண்டரைகப் ஜலத்தைநன்றாகக்
கொதிக்க விடவும். சிறிது நெய் சேர்க்கவும்.
தீயை நிதானப்படுத்தி கொதிக்கும் ஜலத்தில் உடைத்த ரவை,பருப்புக் கலவையைக்
கொட்டிக் கிளறவும். ஒரு துளி உப்பு சேர்க்கலாம்.
உப்புமா வேக வைப்பதுபோல் தட்டினால் மூடி நன்றாக வேக
வைக்கவும்.
வெல்லத்தை அமிழ ஜலம் விட்டுக் கரைத்து ஒரு கொதிவிட்டு
வடிக்கட்டி அதைப் பாகாகக் காய்ச்சவும்.
காய்ச்சிய பாகை வெந்த அரிசி ரவைக் கலவையில் கொட்டி
கலவை கெட்டியாகச் சேரும்வரைக் கிளறவும்.
நெய்யில், முந்திரி, திராட்சையை வறுத்து, தேங்காயைச்
சேர்த்துப் பிரட்டி கலவையில் சேர்க்கவும்.
ஏலப்பொடி, தேன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
களி ரெடி. பருப்பு உடைத்து சேர்ப்பதற்கு பதில்
முக்கால் பதம் வேக வைத்த பருப்பைக் கொஞ்சம்
பிழிந்தும் சேர்க்கலாம். நான் தற்போது டில்லி
வந்திருப்பதால் படம் எடுத்துப் போட சௌகரியப்
படவில்லை.
கொதிக்கும் ஜலத்திலே யே வெல்லத்தைப் போட்டு
கொதிக்கவிட்டு, ரவைக் கலவையைச் சேர்த்து,வேகவைத்துச்
செய்வதும் உண்டு.
நல்ல கலரான பாகு வெல்லமாக இருந்தால் களியும் நல்ல
நிறமாக வரும்.
விருப்பப்படி நெய் விடவும்.
கடுகுக்கீரை வதக்கல்.
குளிர் சீஸனில் இந்தக் கீரை மிகவும் நன்றாக இருக்கும்.
வட இந்தியாவில் சர்வ சாதாரணமாக இதை உபயோகிப்பார்கள்.
க்ரோட்டன்ஸ் மாதிரி பெறிய இலைகளுடன் ஒரு வகையும்,
சிறிய இலைகளுடன் மஞ்சள் பூவுடன் ஒரு வகையும் கிடைக்கும்.
இரும்புச் சத்து அதிக முள்ளது இக்கீரை.
ஸரஸோங்கி ஸாக்.மக்கைகா ரோடி .ஜோடி ப்ரபலமானது.
முதலில், கீரையைச் செய்ய வேண்டிய சாமானைப் பார்ப்போம்.
வேண்டியவைகள்—–பெரிய இலை கடுகுக் கீரை 2 கட்டு
சுமார் 20 இலைகள்.
எண்ணெய்——2 டேபிள் ஸ்பூன்
சீரகம்—-அரை டீஸ்பூன்
கடலைப் பருப்பு—-1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு—-1டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல்—–2
பெருங்காயம்—–சிறிது
பூண்டு—4 இதழ் தோல் நீக்கி மெல்லியதாக நறுக்கியது
தேங்காய்த்துறுவல்—-கால்கப்
ருசிக்கு—உப்பு.
செய்முறை—–.கீரையைச் சுத்தம் செய்து, அதன் பருமனான
அடிபாகக் காம்பையும், நரம்புகளையும் நீக்கி, பொடியாக
நறுக்கித் தண்ணீரில் அலசி வடிய வைக்கவும்.
அடிக் கனமான காய்கள் வதக்கும் பாத்திரத்தில் எண்ணெயைக்
காயவைத்துமிளகாய், சீரக, பருப்பு வகைகளை சிவக்க வறுத்து,
பூண்டு பெருங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
தாளிப்பு வதங்கியதும், கீரையைச் சேர்த்து, ஒரு கால்சிட்டிகை
சர்க்கரை சேர்த்துக் கிளறி மூடவும்.
நிதான தீயில் கீரை நன்றாக வெந்து வதங்கும் வரை அடிக்கடி
கிளறி மூடவும்.
ஈரப் பதம் குறைந்தால் சிறிது ஜலம் தெளித்து வதக்கவும்.
கீரை வதங்கியதும், உப்பு, தேங்காய் சேர்த்து வதக்கி
இறக்கவும்.
துளி சர்க்கரை சேர்ப்பது கீரை பச்சென்று நிறம் மாறாமல்
இருப்பதற்காக.
சாதாரணமாக நம் சமையலில்தான், தேங்காய்,
பருப்புகள் உபயோகம்அதிகம்.
வெந்தயம்,மிளகாய், பெருங்காயம் மட்டிலும் சேர்த்து
வதக்குவதும் ருசியாகத்தான் உள்ளது.
மிருதுத் தன்மைக்காக வெந்தயம் சேர்ப்பது.
வதங்கிய கீரையில் லேசாக புளிப்பு ருசியும் இருக்கும்.
அதனால் வெந்தயம் வறுத்துச் சேர்த்தாலும் கசப்பு இருக்காது.
ஏறக்குறைய ஆத்திக் கீரையின் ருசிதான் என்று எனக்குத்
தோன்றுகிறது. குளிர்காலத்துக்கு ஏற்ற கீரை.
ஜெனிவாவில் கூடகடுகு கீரை வகையைச் சேர்ந்த cima di rapa
என்ற italie வகைக் கீரை கிடைக்கிறது. அதே ருசி.
பார்ப்பதற்கும் அப்படியே இருக்கிறது.
மட்டர் பரோட்டா
மட்டர் பரோட்டா செய்ய ப்ரோஸன் பட்டாணியை உபயோகித்தால்
சீஸன் இல்லாத சமயத்திலும் செய்ய முடிகிறது.
டிபன் டப்பாவில்லெடுத்துப்போக , மிருதுவாக இருக்கும்.
நான் சின்ன அளவில் செய்ய கணக்கு கொடுக்கிறேன்.
ஒரு 6, 7 செய்து பாருங்கள்.
வேண்டியவைகள்
பிசைவதற்கு.——கோதுமைமாவு—ஒன்றறைகப்
2 டீஸ்பூன்—எண்ணெய், துளி உப்பு
பூரணம் தயாரிக்க—-பச்சைப் பட்டாணி —-ஒன்றறைகப்
பச்சை மிளகாய்–2
சீரகப்பொடி, கரம் மஸாலாப்பொடி வகைக்கு கால் டீஸ்பூன்
தனியாப் பொடி, மாங்காய்ப்பொடிவகைக்கு அரை டீஸ்பூன்
எண்ணெய்–பூரணம் கிளற—3 டீஸ்பூன்
பரோட்டா செய்ய—வேண்டிய அளவு-எண்ணெய்,அல்லது, நெய்
ருசிக்கு உப்பு, ஒரு இதழ் உரித்த பூண்டு,
2 உறித்த ஸாம்பார் வெங்காயம்
செய்முறை.—
மாவுடன்,எண்ணெய், உப்பு கலந்து பிசறி சிறிது சிறிதாக
தண்ணீர் சேர்த்து ரொட்டி இடும் பதத்திற்கு மாவை மென்மையாகப்
பிசைந்து ஊரவிடவும்.
ப்ரோஸன் பட்டாணியைச் சுடு தண்ணீரில் சுத்தம் செய்து
வடிக்கட்டி வைக்கவும்.
வெங்காயம்,பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வடித்த பட்டாணியை
மிக்ஸியிலிட்டு ஜலம் விடாமல் நைஸாக அரைத்து எடுக்கவும்.
நான்ஸ்டிக் கடாயில் எண்ணெயைச் சூடாக்கி அரைத்த விழுதைச்
சேர்த்துக் கிளறவும்.அடி கநமான வாணலி நல்லது.
நிதான தீயில், விடாது கிளறி கலவை கெட்டியாகும்போது,பொடி
வகைகளையும், உப்பையும் சேர்க்கவும்.
கையில் ஒட்டாத பதம் வரும்படி கிளறி இறக்கவும்.
இம்மாதிரி, பூரணம் செய்து, ப்ரிஜ்ஜில் வைத்து எப்போது வேண்டுமோ
எடுத்தும் உபயோகிக்கலாம்.
இப்போது பரோட்டா தயாரிக்கலாம்
ஆறின கலவையை சமனாக உருட்டி வைக்கவும்.
மாவைச் சற்று பெறியதாக உருட்டி வைப்போம்.
மாவைச் சிறு வட்டமாக குழவியினால் இட்டு ,சிறிதுஎண்ணெயைத்
தடவி, அதன் மேல் பூரணத்தைச் சிறியவில்லையாகத் தட்டி வைத்து
வட்டத்தின் விளிம்பினால் பூரணத்தை மூடுவோம்.
ஆலுபரோட்டா, போளி செய்வது போல இதுவும் அதே முறைதான்
மேல் மாவில் உருண்டைகளைப் பிரட்டி, குழவியின் உதவியால்
பரோட்டாக்களாகச் செய்யவும்.
காயும், கல்லில் பரோட்டாவைப் போட்டு ,மேலே ஈர பதம் குறையும்
போதே திருப்பிப் போடவும். விளிம்பில் சற்று அழுத்தம் கொடுத்து,
நெய்யோ, எணெணெயோ மேலே ஸ்பூனினால் தடவி திருப்பவும்.
.நன்றாக உப்பிக் கொண்டு மேலெழும்பும்.
இப்பாகத்திலும் நெய் தடவி, திருப்பியினால் சற்று அழுத்தம் கொடுத்து
சிவக்க பரோட்டாக்களைச் செய்து எடுக்கவும்.
தயிர்,சட்னி கூட்டு கறி, ஊறுகாய், டால், ரொட்டியின் ஜோடி வகைகள்
என எதனுடனும் ருசிக்கலாம்.