Archive for ஒக்ரோபர், 2010
மிக்சர்
வேண்டியவைகள்
முதலில் இதற்கு பூந்தி தயாரிப்போம்.
ஒருகப் கடலைமாவு, கால்கப், அரிசி மாவு, 1சிட்டிகை பேக்கிங்ஸோடா
ருசிக்கு உப்பு பெருங்காயம் சேர்த்து துளி கேஸரி பவுடரும் சேர்த்து
ஜலம் விட்டு தோசைமாவு பதத்தில் கரைத்து க் காயும் எண்ணெயில்,
பூந்திகளாக செய்து எடுத்து வைப்போம்.
அடுத்துஓமம் போடாத ஓமப்பொடி செய்வோம்.
வேண்டியவைகள்.
1கப் கடலைமாவு, கால்கப் அரிசி மாவு, உருக்கிய வெண்ணெய்ஒரு
டேபிள் ஸ்பூன், 2ஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயம்
சேர்த்து, ஜலம் விட்டுப் பிசைந்து, காயும் எண்ணெயில் ஓமப்பொடி
அச்சில் மாவை இட்டுப் பிழிந்து கரகர பக்குவத்தில் ஓமம் போடாத
ஓமப் பொடி தயாரித்து வைத்துக் கொள்வோம்.
மேலும் வேண்டியவைகள்.
கால்கப் பொட்டுக் கடலையை லேசாக சூடு படுத்தி வைத்துக்
கொள்வோம்.
வேர்க் கடலை ஒருகப் வறுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்வோம்.
இஷ்டத்திற்கு வேண்டிய முந்திரியும் வறுத்துக் கொள்வோம்.
கறிவேப்பிலையும் ஒரு அரைகப் வறுத்துக் கொள்ளலாம்.
எண்ணெயில்தான்.
கடைசியாக அவலுக்கு வறுவோம்.
ஒரு கப் அவல்.
கொஞ்சம் எண்ணெயைக் காய வைத்து அகலமான டீ
வடிக்கட்டியை எண்ணெயில் வைத்து, வடிக்கட்டியில்
சிறிது அவலைப் போட்டு வறுக்கவும். அவல் பொரிந்ததும்
வடிக் கட்டியை மேலே தூக்கி சுலபமாக எண்ணெயை
வடிக்கட்டி அவலை எடுத்து விடலாம்.
இப்படியே அவலைப் பொறித்து டிஷ்யூ பேப்பரில் போட்டு
எண்ணெய் நீக்கவும்.
கடைசியில் 1டீஸ்பூன் மிளகாய்ப் பொடி, உப்பு, பெருங்காயப் பொடி
கால் டீஸ்பூன் நெய்யில் கலந்து பிசறி யாவற்றையும், ஒரு பெறிய
தாம்பாளத்தில் சேர்த்துக் செய்தவைகள் யாவற்றையும் சேர்த்துக்
கலக்கவும்.
ருசி பார்த்து உப்பு காரம் சேர்க்கவும்.
அரிசி மிட்டாய், குச்சியாக நறுக்கி வறுத்த உருளை வறுவல்
யாவும் சேர்க்கலாம்.
பொதுவாக கடலைமாவு, அரிசி மாவு, எண்ணெய், உப்பு, நெய்
பேக்கிங் ஸோடா, பொட்டுக் கடலை,வேர்க் கடலை, முந்திரி
அவல்,,கறிவேப்பிலை, மிளகாய்ப் பொடி, பெருங்காயம்
இவைகள் முக்கியமாக வேண்டும்.
எதிரில் யாரிடமோ சொல்வது போல எழுதிவிட்டேன் போல இருக்கிரது.
சீரகமோ, பெருஞ்சீரகமோகூட வறுத்துப் போடலாம்.
ஓம்ப் பொடி
வேண்டியவைகள்.
சலித்த கடலைமாவு—–ஒருகப்
சலித்த அரிசி மாவு——கால்கப்
வெண்ணெய்—-ஒரு டேபிள் ஸ்பூன், சற்றே உறுக்கியது
எண்ணெய்—–ஒரு ஸ்பூன், நன்றாக சூடாக்கியது
ருசிக்கு உப்பு—-வேண்டிய அளவு
ஓமம்—-ஒரு டீஸ்பூன், பொடித்து சிறிது ஜலத்தில் கறைத்து வடிக்கட்டவும்.
ஓம்ப் பொடி, பொறிப்பதற்கு—–வேண்டிய எண்ணெய்
செய்முறை.
இரண்டு மாவுகளுடன்,எண்ணெய், வெண்ணெய், உப்பு ப் பொடி கலக்கவும்.
வடிக்கட்டிய ஓம ஜலத்தைவிட்டு மேலும் வேண்டிய ஜலம்
விட்டு மாவை மிருதுவாகப் பிசையவும்.
ஓமப்பொடி அச்சில் எண்ணெயைத் தடவவும்.
மாவு சற்று சுலபமாக பிழியும் அளவிற்கு தளர்வாக
இருந்தால்தான் பிழிவதற்கு சுலபமாக இருக்கும்.
இதற்காகவே ஒரு ஸ்பூன் காயும் எண்ணெயை மாவில்
அதிகமாக விடவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து ,,பிசைந்த மாவை
அச்சிலிட்டு, நெறுக்கமான வட்ட மாக மா வைப் பிழியவும்.
வேகும் சலசல ஓசை அடங்கும் போது திருப்பிவிட்டு கரகரப்பான
பதத்தில் அக்கரையுடன் எடுத்து வடிக்கட்டியில் டிஷ்யூ பேப்பர்
வைத்து வடிக்கட்டி, எடுத்து வைக்கவும். மிகுதி மாவையும்
இப்படியே செய்து எடுக்கவும்.
அதிகம் செய்வதானாலும், மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகவே
பிசைந்து செய்வது நல்லது.
கலராக இருக்க வேண்டுமானால் துளி மஞ்சள் கேஸரி பவுடர்,
விருப்பமானால் சேர்க்கலாம். ஓமப் பொடி ரெடி, சொல்வது
ஓம்ப் பொடிதானே_?
காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைக்கவும்.
பூந்தி லட்டு
வேண்டியவைகள் புதியதாக அரைத்த கடலை மாவு—2கப் சர்க்கரை—இரண்டரைகப் நெய்—–1டேபிள்ஸ்பூன் முந்திரிப் பருப்பு—–10 விருப்பம் போல் லவங்கம்—–6 திராட்சை—–15 ஏலக்காய்—–6 பொடித்துக் கொள்ளவும் பூந்தி பொரிக்க —–வேண்டிய எண்ணெய் கேஸரி பவுடர்—-ஒரு துளி குங்குமப்பூ—சில இதழ்கள் பச்சைக் கற்பூரம் —-மிகச் சிறிய அளவு செய்முறை சர்க்கரையை அமிழ ஒருகப் ஜலம் சேர்த்து அகன்ற பாத்திரத்தில் நிதானமான தீயில் வைக்கவும். பாகு கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் பாலைச் சேர்த்தால் அழுக்கு ஓரமாக ஒதுங்கும். கரண்டியால் அதை எடுத்து விடவும். […]
Continue Reading ஒக்ரோபர் 27, 2010 at 12:31 பிப 5 பின்னூட்டங்கள்
ஆலு தாம்
இதுவும் ரொட்டி, பூரி, ஏன் தோசையுடன் கூட சேர்த்துச்
சாப்பிட நல்லதொரு ஜோடி.
வேண்டியவைகள்
சிறியவகை பேபி பொடேடோ—-அரைகிலோ
பொடிக்க மிளகு–1 டீஸ்பூன்,லவங்கம் 6, சின்ன துண்டுபட்டை
அறைக்க–வெங்காயம்.—-2 திட்டமான அளவு
பூண்டு—4 இதழ்,, இஞ்சி சிறிய துண்டு
தக்காளிப்பழம்–2
வேண்டிய பொடிகள்
தனியா பொடி—2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி—–1 டீஸ்பூன்
கரம் மஸாலா பொடி—அரை டீஸ்பூன்
மஞ்சள்பொடி—அரை டீஸ்பூன்
பிரி்ஞ்சி இலை–ஒன்று
உருளைக்கிழங்கு பொரிக்க —வேண்டிய எண்ணெய்
மஸாலா வதக்க– 4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
செய்முறை—–உருளைக் கிழங்கை வேகவைத்து தோலை
உறிக்கவும். அதிகமாக வேக வேண்டாம்.
பொடிக்கக் கொடுத்திருப்பதை பொடித்துக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியாக அரைக்கவும்.
இஞ்சி பூண்டு வெங்காயத்தைத் தனியாக அரைக்கவும்.
எணெ்ணெயைக் காயவைத்து ஜீரகம் தாளித்து, வெங்காய
இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு நிதான தீயில் வதக்கவும்.
விழுது ப்ரவுன் கலராக மாறியதும், பொடிகளைச் சேர்த்துப்
பிரட்டி,தக்காளி விழுதைச் சேர்க்கவும்.
எண்ணெய் பிறியுமளவிற்கு வதக்கிப் பிறகு 2 கப்பிற்கு
சற்று அதிகமாகவே தண்ணீரைச் சேர்த்து வேண்டிய
உப்பைப் போட்டு கொதிக்க விடவும்.
வேறு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து
உறித்து வைத்திருக்கும் முழு உருளைக் கிழங்கை
சிறிது சிறிதாகப் போட்டு சற்று சிவக்கப் பொரித்து
கொதிக்கும் கலவையில் சேர்த்து கொதிக்கவிட்டு
சேர்ந்தாற்போல் ஆகும்போது இறக்கி கொத்தமல்லி
தூவி உபயோகிக்கவும். வேண்டிய அளவு காரம் கூட்டிக்
குறைக்கவும்.
தக்காளி அறைப்பதற்குப் பதில் 150 கிராம் டொமேடோ
ப்யூரியை சேர்த்தும் கொதிக்க விடலாம்.
கலர் சிவப்பாக நன்றாக இருக்கும்.
ப்ரி்ஞ்சி இலையைச் சேர்க்கவும்.
அவல் புட்டு
இதுவும் சுலபமாகச் செய்யலாம்.
வேண்டியவைகள்——கெட்டி அவல்—–1 கப்
பொடித்த பாகு வெல்லம்—–முக்கால் கப்
தேங்காய்த் துருவல்—–5 டேபிள்ஸ்பூன்
நெய்—–1டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்—-4 பொடித்துக் கொள்ளவும்.
குங்குமப்பூ அல்லது கேஸரி பவுடர்—-ஒரு துளி
துவரம்பருப்பு——-4, 5 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு——விருப்பத்திற்கு தக்கபடி
செய்முறை——வெறும் வாணலியில் மிதமான சூட்டில் அவலை சிவக்க
வறுத்து கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
லேசாக கை பொருக்கும் வென்னீரில் சிறிது தெளித்து பொடித்த அவலைப்
பிசறி ஊற வைக்கவும். பிடித்தால் பிடிக்கவும் விட்டால் உதிரும்படியும்
இருக்க வேண்டும்.
துவரம் பருப்பை நெத்து பதத்தில் [முக்கால் வேக்காடு] வேகவிட்டு
பருப்பைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
குங்குமப்பூ,சற்றே வருத்த தேங்காய், ஏலப்பொடி, பருப்பு
இவைகளை பொடித்த அவலுடன் கலக்கவும்.
வெல்லம் நினைய, ஜலம் சேர்த்து நல்ல முதிர்ந்த பாகாகக்
காயவைக்கவும்
ஒரு தாம்பாளத்தில் அவலைக் கொட்டி , பாகை அதன் மேல்
கொட்டிக் கலக்கவும்.
முந்திரியை வறுத்துச் சேர்த்து நெய்யுடன் கலக்கவும்.
ஆறின பிறகு உபயோகிக்கவும்.
துவரம் பருப்பிற்கு பதில் பயத்தம் பருப்பையும் வறுத்து
முக்கால் பதம் வேகவிட்டுப் பிழிந்தும் சேர்க்கலாம்.
ஷீலா நீ கேட்டதை எழுதிவிட்டேன்.
ஜெவ்வரிசி கிச்சடி
என்னுடைய மருமகள் சுமன் செய்யும் விசேஷமான
சிலவகைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வேண்டியவைகள்——ஜெவ்வரிசி(பெறியவகை)-1கப்
வேர்க் கடலை—-1கப்
எண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்.
நறுக்கிய பச்சை மிளகாய்—-2
ஜீரகம்—–அரை டீஸ்பூன
பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்கு-முக்கால்கப்
நல்லமோர்—அரைகப்
நறுக்கிய கொத்தமல்லி– ஒரு டேபிள் ஸ்பூன்
ருசிக்கு—உப்பு, அரை டீஸ்பூன் சர்க்கரை
செய்முறை——தயாரிப்பதற்கு 5, 6 மணிநேர முன்பே
ஜவ்வரிசியை நன்றாகக் களைந்து தண்ணீரை ஒட்ட
வடித்துவிட்டு மோரைக் கலந்து ஊற விடவும்.
ஊறின ஜெவ்வரிசி உதிர், உதிராகவும்,நன்றாக
ஊறியும் இருக்க வேண்டும்.
வேர்க் கடலையை சிவக்க வறுத்து தோல் நீக்கி
ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி ஜீரகத்தைத்
தாளித்து, பச்சைமிளகாய் ,கிழங்குத் துண்டங்களைச்
சேர்த்து வதக்கவும்.
கிழங்கு வதங்கியதும், ஊறின ஜெவ்வரிசியை
சேர்த்து உப்பும் சர்க்கரையும் கலந்து வதக்கவும்.
தீ மிதமாக இருக்கட்டும்.
நன்றாகச் சூடேறி வதங்கியபின் வேர்க்கடலைப்
பொடியை சேரத்துக் கிளறி சூடாக இறக்கவும்.
விருப்பத்திற்கு ஏற்ப எலுமிச்சை சாறு சேர்த்து
பச்சைக் கொத்தமல்லியைத் தூவவும்.
விரத நாட்களில் அன்னம் சேராத உணவாக இதைக்
கருதி உண்பதால் வெங்காயம் சேர்ப்பதில்லை..
எண்ணெய் வேண்டுமானால் அதிகம் சேருங்கள்.
காரமும் அப்படியே.