Archive for ஒக்ரோபர் 31, 2010
மிக்சர்
வேண்டியவைகள்
முதலில் இதற்கு பூந்தி தயாரிப்போம்.
ஒருகப் கடலைமாவு, கால்கப், அரிசி மாவு, 1சிட்டிகை பேக்கிங்ஸோடா
ருசிக்கு உப்பு பெருங்காயம் சேர்த்து துளி கேஸரி பவுடரும் சேர்த்து
ஜலம் விட்டு தோசைமாவு பதத்தில் கரைத்து க் காயும் எண்ணெயில்,
பூந்திகளாக செய்து எடுத்து வைப்போம்.
அடுத்துஓமம் போடாத ஓமப்பொடி செய்வோம்.
வேண்டியவைகள்.
1கப் கடலைமாவு, கால்கப் அரிசி மாவு, உருக்கிய வெண்ணெய்ஒரு
டேபிள் ஸ்பூன், 2ஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயம்
சேர்த்து, ஜலம் விட்டுப் பிசைந்து, காயும் எண்ணெயில் ஓமப்பொடி
அச்சில் மாவை இட்டுப் பிழிந்து கரகர பக்குவத்தில் ஓமம் போடாத
ஓமப் பொடி தயாரித்து வைத்துக் கொள்வோம்.
மேலும் வேண்டியவைகள்.
கால்கப் பொட்டுக் கடலையை லேசாக சூடு படுத்தி வைத்துக்
கொள்வோம்.
வேர்க் கடலை ஒருகப் வறுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்வோம்.
இஷ்டத்திற்கு வேண்டிய முந்திரியும் வறுத்துக் கொள்வோம்.
கறிவேப்பிலையும் ஒரு அரைகப் வறுத்துக் கொள்ளலாம்.
எண்ணெயில்தான்.
கடைசியாக அவலுக்கு வறுவோம்.
ஒரு கப் அவல்.
கொஞ்சம் எண்ணெயைக் காய வைத்து அகலமான டீ
வடிக்கட்டியை எண்ணெயில் வைத்து, வடிக்கட்டியில்
சிறிது அவலைப் போட்டு வறுக்கவும். அவல் பொரிந்ததும்
வடிக் கட்டியை மேலே தூக்கி சுலபமாக எண்ணெயை
வடிக்கட்டி அவலை எடுத்து விடலாம்.
இப்படியே அவலைப் பொறித்து டிஷ்யூ பேப்பரில் போட்டு
எண்ணெய் நீக்கவும்.
கடைசியில் 1டீஸ்பூன் மிளகாய்ப் பொடி, உப்பு, பெருங்காயப் பொடி
கால் டீஸ்பூன் நெய்யில் கலந்து பிசறி யாவற்றையும், ஒரு பெறிய
தாம்பாளத்தில் சேர்த்துக் செய்தவைகள் யாவற்றையும் சேர்த்துக்
கலக்கவும்.
ருசி பார்த்து உப்பு காரம் சேர்க்கவும்.
அரிசி மிட்டாய், குச்சியாக நறுக்கி வறுத்த உருளை வறுவல்
யாவும் சேர்க்கலாம்.
பொதுவாக கடலைமாவு, அரிசி மாவு, எண்ணெய், உப்பு, நெய்
பேக்கிங் ஸோடா, பொட்டுக் கடலை,வேர்க் கடலை, முந்திரி
அவல்,,கறிவேப்பிலை, மிளகாய்ப் பொடி, பெருங்காயம்
இவைகள் முக்கியமாக வேண்டும்.
எதிரில் யாரிடமோ சொல்வது போல எழுதிவிட்டேன் போல இருக்கிரது.
சீரகமோ, பெருஞ்சீரகமோகூட வறுத்துப் போடலாம்.
ஓம்ப் பொடி
வேண்டியவைகள்.
சலித்த கடலைமாவு—–ஒருகப்
சலித்த அரிசி மாவு——கால்கப்
வெண்ணெய்—-ஒரு டேபிள் ஸ்பூன், சற்றே உறுக்கியது
எண்ணெய்—–ஒரு ஸ்பூன், நன்றாக சூடாக்கியது
ருசிக்கு உப்பு—-வேண்டிய அளவு
ஓமம்—-ஒரு டீஸ்பூன், பொடித்து சிறிது ஜலத்தில் கறைத்து வடிக்கட்டவும்.
ஓம்ப் பொடி, பொறிப்பதற்கு—–வேண்டிய எண்ணெய்
செய்முறை.
இரண்டு மாவுகளுடன்,எண்ணெய், வெண்ணெய், உப்பு ப் பொடி கலக்கவும்.
வடிக்கட்டிய ஓம ஜலத்தைவிட்டு மேலும் வேண்டிய ஜலம்
விட்டு மாவை மிருதுவாகப் பிசையவும்.
ஓமப்பொடி அச்சில் எண்ணெயைத் தடவவும்.
மாவு சற்று சுலபமாக பிழியும் அளவிற்கு தளர்வாக
இருந்தால்தான் பிழிவதற்கு சுலபமாக இருக்கும்.
இதற்காகவே ஒரு ஸ்பூன் காயும் எண்ணெயை மாவில்
அதிகமாக விடவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து ,,பிசைந்த மாவை
அச்சிலிட்டு, நெறுக்கமான வட்ட மாக மா வைப் பிழியவும்.
வேகும் சலசல ஓசை அடங்கும் போது திருப்பிவிட்டு கரகரப்பான
பதத்தில் அக்கரையுடன் எடுத்து வடிக்கட்டியில் டிஷ்யூ பேப்பர்
வைத்து வடிக்கட்டி, எடுத்து வைக்கவும். மிகுதி மாவையும்
இப்படியே செய்து எடுக்கவும்.
அதிகம் செய்வதானாலும், மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகவே
பிசைந்து செய்வது நல்லது.
கலராக இருக்க வேண்டுமானால் துளி மஞ்சள் கேஸரி பவுடர்,
விருப்பமானால் சேர்க்கலாம். ஓமப் பொடி ரெடி, சொல்வது
ஓம்ப் பொடிதானே_?
காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைக்கவும்.